Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை

Featured Replies

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை

 

 
முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம்
முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம்

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணத் தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக் டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, கடந்த 2-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். கடந்த 5-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவமனைக்கு வந்தனர். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து கேட்ட றிந்த குழுவினர் தேவையான ஆலோ சனைகளை வழங்கினர். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தக் கட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.

அவர்களின் பரிந்துரைப்படி டாக்டர் கள் குழுவினர் முதல்வருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று சென்னை வருவ தாக சொல்லப்படுகிறது. சென்னையில் 5 நாட்கள் தங்கி முதல்வருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சைகளை ஆராய்ந்து, அடுத்தக் கட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மீண்டும் லண்டன் டாக்டர் வருவதால், முதல்வர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வருக்கு-சிகிச்சை-அளிக்க-லண்டன்-டாக்டர்-இன்று-மீண்டும்-சென்னை-வருகை/article9213790.ece?homepage=true

  • தொடங்கியவர்

அப்போலோவில் நீதா அம்பானி

 

nita_19067.jpg

அப்போலோவில் இருக்கும் முதல்வரின் உடல்நிலையை விசாரிக்க நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சென்னைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலையை குறித்து விசாரிக்க தொழிலதிபர்  முகேஸ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சற்று முன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் ஜெ., உடல்நிலை குறித்து அவர் கேட்டறிகிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/69554-nita-ambani-visits-apollo-hospital-to-know-about-jayalalaithaas-health.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13.10.2016 at 3:52 PM, நவீனன் said:

ஜெயலலிதா உடல்நிலையை குறித்து விசாரிக்க தொழிலதிபர்  முகேஸ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சற்று முன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் ஜெ., உடல்நிலை குறித்து அவர் கேட்டறிகிறார்.

இதென்ன கோதாரியப்பா...

உள்ளதையும் வெளியிலை சொல்லுறாங்களில்லை....

உள்ள பெரிய பெரிய தலைகள் எல்லாம் வந்து போகுதுகள்......

ஒரே பித்தலாட்டமாய் இருக்குதப்பா.:unsure:

  • தொடங்கியவர்

'மிக மெதுவாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா!'  -அப்போலோ அப்டேட்ஸ்

apollo%20hospital_11201.jpg

ப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 22 நாட்கள் கடந்துவிட்டன. ' தற்போது அவர் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் வீடு திரும்புவார்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வருகிறார். கோட்டையில், கடந்த ஒரு மாதமாக முடங்கிக் கிடந்த பணிகளை வேகப்படுத்தினாலும், கோப்புகள் நகர்வதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள். 

'முதல்வரின் உடல்நிலையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?' என்றோம் கார்டன் உதவியாளர்களிடம். " கடந்த மூன்று நாட்களாக முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று பூங்குன்றனை சைகையால் அழைத்தார். இதுவே, எங்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது" என விவரித்தவர்கள், "முதல்வருக்கு மூச்சுத் திணறல், நீர்ச்சத்து குறைபாடு தொடர்ந்து இருந்ததால் நீண்டநாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நுரையீரல் தொற்று பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த பத்து நாட்களாக எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்னானி தலைமையிலான குழுவினரும் ரிச்சர்ட் பெயலும் தொடர் சிசிச்சைகளை அளித்து வருகின்றனர். அதற்கான பலன் கிடைத்து வருகிறது. முதல்வர் தொண்டையில் போடப்பட்டுள்ள துவாரம்(Tracheostomy) வழியாகவே சுவாசித்து வருகிறார். அவ்வப்போது சின்னச் சின்ன வார்த்தைகளில் மெதுவாகப் பேசினார்.

திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் இன்னமும் வெண்டிலேட்டரில்தான் இருக்கிறார். டாக்டர்.சிவக்குமார், சசிகலா உள்ளிட்டவர்களிடம் மிக மெதுவாக ஓரிரு வார்த்தைகளை பேசினார். நேற்று மதியம் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் முதல்வருக்கு சிசிச்சை அளித்தனர். மாலை நேரத்தில் கிளம்பிச் சென்ற மருத்துவர்கள், இரவு மீண்டும் முதல்வரின் உடல்நிலையைக் கண்காணித்துவிட்டுச் சென்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டுக்கு ஓர் அவசர வேலை இருந்ததால், வெளிநாடு திரும்பிவிட்டார். இன்று மாலை முதல் அவரும் சிகிச்சை அளிக்க இருக்கிறார். முதல்வருக்கு கை, கால்களில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளை சரி செய்வதற்காக, தொடர்ந்து பிஸியோதெரபி சிசிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் வந்து சென்ற பிறகு, பிஸியோதெரபி சிசிச்சையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். விரைவில் முதல்வர் வீடு திரும்புவார்" என நம்பிக்கையோடு தெரிவித்தார். 

 

 

முதல்வரை சந்திப்பதற்காக முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி உள்பட அரசியல் கட்சி பிரமுகர்களின் வருகை, தொண்டர்களின் பிரார்த்தனைகள் என தலைமைச் செயலக சாலையின் பரபரப்போடு, கிரீம்ஸ் சாலை காட்சியளிக்கிறது. தலைமைச் செயலகத்துக்கும் அப்போலோவுக்கும் மாறி மாறிப் பயணிக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வரின் வருகைக்காக காத்துக் கிடக்கிறது போயஸ் கார்டன்.  

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்...!

http://www.vikatan.com/news/tamilnadu/69580-chief-minister-jayalalithaa-speaks-slowly-apollo-updates.art

  • தொடங்கியவர்

அப்போலோவில் ராஜாத்தி அம்மாள்...!

apollo%201_11276.jpg

கிரீம்ஸ் ரோடு அப்போலோ கடந்த மாதம் வரை புகழ்பெற்ற மருத்துவமனையாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்று தமிழக அரசியல் சூழலைத் தீர்மானிப்பது போயஸ் கார்டனோ, கோபாலபுரமோ இல்லை; அப்போலோதான். எல்லாம் ஒரே நாள் இரவில் தலைகீழாக மாறிவிட்டது. 


செப்டம்பர் 22-ம் தேதி, முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது, இந்த மாதிரியான சூழல் ஏற்படும் என்பது யாருக்குமே தெரியாத ஒரு விஷயம். தொடர்ந்து அறிக்கைகள் வெளிவந்த நிலையில் திருமாவளவன் சென்று ஆரம்பித்து வைத்தார். அவரைத் தொடர்ந்து சிறிதும், பெரிதுமாக அரசியல் தலைவர்கள் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அக்டோபர் மாதம் முதல் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்து பார்த்து போனபின்தான் அப்போலோ அரசியல் களமாக மாற ஆரம்பித்தது.


அன்று தொடங்கி இன்று வரை அகில இந்திய தலைவர்கள், பக்கத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என வரிசையாக முதல்வரை நலம் விசாரிக்க வந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள். உச்சகட்டமான எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும் நேரில் வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். 

rasathi_11518.jpg


13-ம் தேதியான நேற்றும் தலைவர்களின் வருகை தொடர்ந்தது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அப்போலோ வந்தார். இப்படி தினம் தினம் தலைவர்கள் வருகையால் அப்போலோதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட்-டாபிக். 
இந்நிலையில் நேற்று முதல்வர் உடல்நிலை பற்றி அறிய அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதியின் துணைவியாரான ராஜாத்தி அம்மாள். நேற்று இரவு 9.30 மணியளவில் சி.ஐ.டி காலனியில் இருந்து அப்போலோ வந்தவர், அங்கு சசிகலாவைச் சந்தித்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் 45 நிமிடங்கள் விவாதித்து இருக்கிறார்கள்.  

இந்த திடீர் சந்திப்பு அப்போலோ வட்டாரத்திலும், அரசியல் சூழலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/69577-dmk-leader-karunanithis-spouse-rajathi-ammal-visits-apollo.art

  • தொடங்கியவர்

நான்கு நாட்களாக செய்திக் குறிப்பு அனுப்பாத அப்போலோ

 

 
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராக வேண்டி பிரார்த்தனை நடந்தது | படம்: எம்.வேதன்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராக வேண்டி பிரார்த்தனை நடந்தது | படம்: எம்.வேதன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கடந்த 4 நாட்களாக அப்போலோ மருத்துவமனை சார்பில் எவ்வித செய்திக் குறிப்பும் வெளியிடப்படவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் தேதிக்குப் பின்னர் அப்போலோ மருத்துவமனை சார்பில் செய்திக் குறிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சான் திர்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், கடந்த 10-ம் தேதிக்குப் பின்னர் அப்போலோ மருத்துவமனை சார்பில் செய்திக் குறிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

ரோசய்யா, ரமேஷ் சென்னிதாலா நலம் விசாரித்தனர்:

முன்னதாக தமிழக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு முதல்வர் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துச் சென்றனர்.

ரோசய்யா கூறும்போது, "நான் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சிகிச்சை இன்னும் சில தினங்களில் முடிந்து அவர் விரைவில் பூரண குணமடைவார் என நான் நம்புகிறேன். இது எனது பிரார்த்தனை மட்டுமல்ல அயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும்கூட" என்றார்.

இதேபோல் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, "மருத்துவமனையின் தலைவர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்தேன். அவர் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். கேரள மக்கள் சார்பில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/நான்கு-நாட்களாக-செய்திக்-குறிப்பு-அனுப்பாத-அப்போலோ/article9223457.ece?homepage=true

  • தொடங்கியவர்

தரை தளத்தில் ஜெயலலிதாவுக்கு ஸ்கேன்! அப்போலோ அப்டேட்

14_13317.jpg

 

அப்போலோ ஆஸ்பத்திரியின் இரண்டாவது மாடியில் அட்மிட் ஆகியிருக்கும் ஜெயலலிதா நேற்று மாலை மூன்றாவது முறையாக தரை தளத்திற்கு அழைத்துவரப்பட்டார். உடலின் முக்கிய உள்பாகங்களை துள்ளியமாக படமெடுத்துக்காட்டும் சி.டி. ஸ்கேன் மிஷின் உள்ள ரேடியாலாஜி அறையானது தரைத்தள லிஃப்ட்டுக்கு அருகில் உள்ளது. இந்த ஸ்கேன் மிஷினை வேறு எங்கும் கொண்டுபோகமுடியாது. நோயாளியை அந்த அறைக்கு அழைத்து வந்துதான் ஆகவேண்டும். அந்தவகையில், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜெயலலிதாவின் படுத்திருக்கும் பெட்டுடன் அப்படியே தரைத்தளத்திற்கு அழைத்துவந்தார்கள். அந்த நேரத்தில், ஆஸ்பத்திரி லிஃப்ட் மற்றும் தரைத்தளம்...ஆகியவை போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வெளியாட்கள் யாரையும் அந்த வளாகம் பக்கமே அனுமதிக்கவில்லை. ஸ்கேன் எடுத்து முடித்தும், அதன் விவரங்களை டாக்டர்கள் பார்த்தனர். திருப்திகரமாக இருக்கிறது என்று கருத்துச் சொன்னார்களாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/69697-jayalalithaa-is-fineapollo-update.art

  • தொடங்கியவர்

“கழுத்து வலிக்கிறது” - டாக்டர்களிடம் பேசிய ஜெ.

 

p16a.jpg

ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, சில நாட்களுக்கு முன்பு கண் விழித்துள்ளார். அப்போது, அவரது கழுத்துக்குக் கீழ் பொருத்தப்பட்டுள்ள டியூப்களால் வலி இருப்பதாகச் சன்னமான குரலில் மருத்துவர்களிடம் சொல்லியுள்ளார். இத்தனை நாட்களுக்குப் பிறகு, முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா என்ற தலைப்பில் ஜூனியர் விகடனின் முந்தைய (அக்.16) இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதில், “அக்டோபர் 9-ம் தேதி காலை, ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இதயத் துடிப்பு சீரற்ற முறைக்குப் போனது. அதை, அரை மணிநேரம் போராடி டாக்டர்கள் சரிசெய்தனர். நுரையீரல் சுவாசப் பிரச்னையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்ததால், அவரை மூன்றாவது தளதுக்கு மாற்றலாமா என்று டாக்டர்கள் யோசனை செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி, அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “முதல்வருக்குத் தேவையான செயற்கை சுவாசம், ஆன்டிபயாட்டிக், நுண்ணூட்ட சத்துக்கள், பாசிவ் பிசியோதெரபி சிகிச்சைகள் தரப்படுகின்றன என்று சொல்லப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜி.கில்மானி, அக்டோபர் 9-ம் தேதியும், 10-ம் தேதியும் முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ மருத்துவர்கள் குழுவுடன் விவாதித்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்வருக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் தொற்று, தொடர் சிகிச்சையின் விளைவாக, பெருமளவில் குறைந்திருக்கிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்போது, முதல்வர் ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு முறை கண்விழித்துப் பார்க்கிறார். சோர்வின் காரணமாக மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறார். திரவ உணவு வழங்குவதற்காகத் தொண்டையில் மட்டும் இப்போது டியூப் வைக்கப்பட்டுள்ளது. கை, கால்களுக்கு உணர்வு திரும்புவதற்கான ‘பாஸிவ் பிசியோதெரபி’ (passive physiotherapy) சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை அப்போலோ வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், முதல்வரின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். அதன்படிதான் முதல்வருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் சென்றுவிட்ட ரிச்சர்ட் பியெல் அங்கிருந்தபடியே டெலி மெடிசன் முறையில் ஆன்லைனில் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தார். இப்போது, மீண்டும் மூன்றாவது முறையாக கடந்த 13-ம் தேதி மதியம் ரிச்சர்ட் பியெல் அப்போலோ வந்திருக்கிறார். தொடர்ந்து சில நாட்களுக்கு முதல்வரின் உடல் நிலையை ரிச்சர்ட் கண்காணிப்பார் என்று அப்போலோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.vikatan.com/juniorvikatan

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அங்கு சசிகலாவைச் சந்தித்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் 45 நிமிடங்கள் விவாதித்து இருக்கிறார்கள்.  

 

10687188_760724107328250_2881565376592543568_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.