Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவு- செலவுத்திட்டத்துக்கு முன்னர் அறிக்கை சாத்தியமா?

Featured Replies

வரவு- செலவுத்திட்டத்துக்கு முன்னர் அறிக்கை சாத்தியமா?

 

ரொபட் அன்டனி

எ ன்ன நடக்­கப்­போ­கின்­றது? எவ்­வாறு தீர்­வுத்­திட்டம் வரப்­போ­கின்­றது? வரவு–செல­வுத்­திட்­டத்­துக்கு முன்னர் தீர்­வுத்­திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­டுமா என்­பன பலரும் விவா­தித்­துக்­கொண்­டி­ருக்கும் விட­யங்­க­ளாகும். ஆனால் அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் போக்கை பார்க்­கும்­போது மிக விரை­வாக இவை அனைத்தும் சாத்­தி­யமா என்­பது முன்வைக்கப்படும் வாதமாகும்.

விசேட­மாக இரண்டு விட­யங்கள் குறித்து மக்கள் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். அதா­வது எப்­போது அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வரைபு முன்­வைக்­கப்­படும்? மற்றும் அதில் உள்­ள­டங்­கப்­போகும் அர­சியல் தீர்வு எவ்­வாறு அமையும் என்ற இரண்டு விட­யங்கள் குறித்தே பாரிய அவ­தானம் தமிழர் தரப்பில் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. மிக நீண்­ட­கா­ல­மாக அர­சியல் தீர்வு ஒன்­றுக்­காக காத்­தி­ருக்கும் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தற்­போ­தைய நிலை­மையில் தீர்­வுத்­திட்டம் ஒன்று கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் மேலோங்­கி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் எவ்­வாறு இடம்­பெ­று­கின்­றன என்­பது குறித்தும் அக்­க­றை­யுள்ள தரப்­பினர் ஆர்வம் காட்­டி­வ­ரு­கின்­றனர்.

ஆனால் சூழ்­நி­லைகள் எவ்­வாறு அமையும் என்­பதும் முடி­வுகள் எவ்­வாறு தீர்­மா­னிக்­கப்­படும் என்­பதும் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. இந்­நி­லையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வரவு–செல­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அதற்கு முன்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நகல்­திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­டுமா? அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ள பிர­தான வழிநடத்தல் குழுவின் செயற்­பா­டுகள் தொடர்­பான அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்­கப்­ப­டுமா? அல்­லது பிர­தான வழிநடத்தல் குழு இடைக்­கால அறி­க்கை ஒன்றை முன்­வைக்­க­வுள்­ளதா என்­பவை தெளி­வற்ற தன்­மையில் காணப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில் எதிர்­வரும் வரவு–செல­வுத்­திட்­டத்­துக்கு முன்­ன­தாக என்ன திட்டம் முன்­வைக்­கப்­படும் என்­பது குறித்து நாம் முதலில் அர­சாங்­கத்தின் பதில் அமைச்­ச­ரவை பேச்­சாளர் கருணாரத்ன பர­ண­வி­தா­ன­விடம் கேள்­வி­யெ­ழுப்­பினோம்.

அவர் இவ்­வாறு குறிப்­பி­டு­கிறார்... அதா­வது தற்­போது அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது விட­யங்­களை ஆராய்ந்து வரு­கி­றது. அவ்­வாறு விட­யங்கள் ஆரா­யப்­பட்டு வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு– செல­வுத்­திட்­டத்­திற்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அதன் பின்­னரே அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யா­னது அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபை உரு­வாக்கும். மாறாக வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபு சபையில் முன்­வைக்­கப்­பட மாட்­டாது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­க­ப்படவேண்­டு­மென நாட்டின் அனைத்து அர­சியல் கட்­சிகள் மத்­தி­யிலும் ஒரு இணக்­கப்­பாடு உள்­ளது. இது தொடர்­பாக தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 9 ஆவது சரத்தில் மாற்றம் ஏற்­ப­டாது. இதனை இந்து மதத் தலை­வர்­களோ, கிறிஸ்­தவ மதத்­த­லை­வர்­களோ, எதிர்க்­க­வில்லை. எவ்­வா­றெ­னினும் இறுதி முடிவை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையே எடுக்கும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் பின்னர் அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்­டு­மாயின் அதனை நாங்கள் செய்வோம். தேவை­யில்­லை­யெனின் செய்­யமாட்டோம். ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை விட மக்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக ஆழ­மான பரந்­து­பட்ட கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­வதே அவ­சி­ய­மாகும். எவ்­வா­றெ­னினும் தேவை­யான சட்ட ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும். என அர­சாங்­கத்தின் சார்பில் பர­ண­வி­தான குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றெ­னினும் வரவு செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு இன்னும் 25 நாட்­களே உள்­ளன. அந்­த­வ­கையில் வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு முன்னர் பிர­தான வழி நடத்தல் குழுவின் அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்­கப்­ப­டு­மாயின் அதன் அர்த்தம் இன்னும் 25 நாட்­க­ளுக்குள் வழி நடத்தல் குழுவின் அறிக்கை முன்­வைக்­கப்­படும் என்­ப­தாகும்.

ஆனால் அதற்கு கால அவ­காசம் சாத்­தி­ய­மா­குமா என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மா­க­வுள்­ளது. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆறு உப நிறை­வேற்றுக் குழுக்­களும் தமது விடயம் சார்ந்த அறிக்­கை­களை பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு சமர்ப்­பித்­துள்­ளன.

பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது மூன்று முக்­கிய விட­யங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கின்ற நிலையில் அதன் கீழ் நிய­மிக்­கப்­பட்ட ஆறு நிறை­வேற்று உப குழுக்­க­ளுக்கும் ஏனைய விடய தானங்கள் பகிர்ந்து வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

விசே­ட­மாக அடிப்­படை மனித உரிமை, நிதி மற்றும் நீதித்­துறை உள்­ளிட்ட ஆறு விட­ய­தா­னங்கள் குறித்து ஆராயும் பொறுப்பு இந்த உப குழுக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதன்­படி இந்த விட­ய­தா­னங்கள் குறித்து ஆராய்ந்த ஆறு நிறை­வேற்றுக் குழுக்­களும் தமது அறிக்­கை­களை பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு சமர்ப்­பித்­துள்­ளன.

தற்­போது குறித்த ஆறு நிறை­வேற்றுக் குழுக்­களின் அறிக்­கை­களை பெற்றுக் கொண்­டுள்ள பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த மூன்று விட­யங்கள் தொடர்­பா­கவும் ஆராய்ந்து விட்டு இறுதி அறிக்­கையை தயா­ரிக்­க­வுள்­ளது.

இந்­நி­லையில் தேர்தல் முறை மாற்றம், தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் போன்ற மூன்று விட­யங்கள் குறித்து பிர­தான வழிநடத்தல் குழு ஆராய்ந்­து­வ­ரு­கின்­றது.

பிர­தான வழிநடத்தல் குழுவின் கீழ் செயற்­ப­டு­கின்ற ஆறு உப நிறை­வேற்றுக் குழுக்­களும் தற்­போது தமது விட­ய­தா­னங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­களை சமர்ப்­பித்­துள்­ளன. எனினும் இந்த அறிக்­கை­களை பிர­தான வழிநடத்தல் குழு­வா­னது இன்னும் ஆய்வு செய்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

அதனால் ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களை ஆராய்தல், தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த மூன்று விட­யங்கள் குறித்து ஆராய்தல் மற்றும் லால் விஜே­நா­யக்­கவின் அறிக்­கை­யை ஆராய்தல் ஆகி­ய­வற்றை செய்­து­விட்டு முழு­மை­யான அறிக்­கையை பிர­தான வழிநடத்தல் குழு­வினால் வரவு–செல­வுத்­திட்­டத்­துக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க முடி­யுமா என்ற கேள்வி எழு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க கூட்டு எதி­ரணி தொடர்ச்­சி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை விமர்­சித்த வண்­ணமே உள்­ளது. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அர­சாங்கம் நாட்டை பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும் அதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்றும் கூட்டு எதி­ரணி குறிப்­பிட்­டு­வ­ரு­கின்­றது.

இது தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் விமல் வீர­வன்ச கீழ்க்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அதா­வது "" சிறு­பான்­மை­யின அடிப்­ப­டை­வாத கோரிக்­கை­களை நிறை­வேற்றும் நோக்கில் கொண்­டு­வ­ரப்­படும் அர­சிய­ல­மைப்பை நாம் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்குச் செல்ல வேண்­டு­மாயின் அதன் படி­முறை எவ்­வா­றா­ன­தாக இருக்க வேண்டும் என்­பது குறித்து தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதிலும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையும் சர்­வ­ஜன வாக்­கு­ரி­மையும் அவ­சியம் என்­பதே வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

 புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜன வாக்­கு­ரி­மைக்கு விடப்­ப­டா­விடின் அதனை ஏற்க முடி­யாது. அர­சாங்­கத்தின் இந்தச் செயற்­பா­டுகள் சிறு­பான்­மை இனத்துக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் சிறு­பான்மையின உரி­மை­க­ளுக்­காக இந்­நாட்­டிற்கு உரித்­து­டைய பெரும்­பான்மை மக்­களின் அடிப்­படை உரி­மைகள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றன"" என விமல் வீர­வன்ச கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்ளார்.

விமல் வீர­வன்ச மட்­டு­மல்ல, கூட்டு எதி­ர­ணியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் தொடர்ச்­சி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாட்டை கடு­மை­யாக விமர்­சித்து­ வ­ரு­கின்­றனர். இந்­நி­லையில் இந்த அனைத்து சவால்­க­ளுக்கும் மத்­தி­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி நடத்தல் குழு­வா­னது தமது அறிக்­கையை வரவு – செல­வுத்­திட்­டத்­துக்கு முன்னர் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் பிர­தான வழிநடத்தல் குழு­வா­னது மூன்று முக்­கி­ய­வி­ட­யங்கள் குறித்து ஆராய்ந்­து­வ­ரு­கின்ற நிலையில் தேர்தல் முறை மாற்றம் குறித்து பேசி­யுள்­ளது. தற்­போ­துதான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பாக ஆராய ஆரம்­பித்­துள்­ளது. இன்னும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்றம் தொடர்­பா­கவும் பேச­வேண்­டி­யுள்­ளது.

அந்­த­வ­கையில் இன்னும் 25 நாட்­களில் மூன்று விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்து பிர­தான வழிநடத்தல் குழு அறிக்­கையை சமர்ப்­பிக்­குமா என்­பது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­ன­தா­கவே உள்­ளது. என­வேதான் முழு­மை­யான அறிக்­கைக்கு பதி­லாக பிர­தான வழி நடத்தல் குழு­வா­னது இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிக்கும் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு எவ்­வாறு அமையும் என்­பது தொடர்பில் அனைத்து தரப்­பி­னரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக எவ்­வா­றான தீர்வு முறை குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்தும் என்­பது ஆரா­யப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக சமஷ்டி மற்றும் ஒற்­றை­யாட்சி ஆகிய இரண்டு சொற்­பி­ர­யோ­கங்­களும் பாரிய சர்ச்­சையை தோற்­று­வித்­து­வ­ரு­கின்ற நிலையில் புதிய முறைமை ஒன்­றுக்கு செல்லும் வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் மிகவும் சம­யோ­சி­த­மா­கவும் இரா­ஜ­தந்­திர ரீதி­யிலும் செயற்­பட்­டு­வ­ரு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது.   

அதா­வது இந்த விடயம் மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விடயம் என்­பதால் மிகவும் அவ­தா­ன­மாக கையா­ளப்­ப­ட­வேண்­டி­ய­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. தென்­னி­லங்­கையின் இன­வா­தி­களை குழப்­பி­வி­டாமல் இந்த உணர்­வு­பூர்­வ­மிக்க அர­சியல் தீர்வு செயற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வேண்டும். இல்­லா­விடின் அனைத்தும் குழம்­பிய குட்­டை­யா­கிப்­போய்­விடும்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே தேசிய பிரச்­சினை குறித்தும் ஆராயும் வழிநடத்தல் குழு­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு யோச­னையை முன்­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது பிரி­ப­டாத மற்றும் பிரிக்­கப்­பட முடி­யாத இலங்­கைக்குள் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோச­னையை பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள இந்த யோசனை தொடர்பில் அர­சிய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது எதிர்­வரும் நாட்­களில் கலந்­து­ரை­யாடும் என்று அர­சியல் கட்­சி­யொன்றின் பிர­தி­நி­தி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்று வரும்­போது சமஷ்டி முறை­மையை வடக்கு, கிழக்கு மக்கள் கோரி வரு­கின்­றனர். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சி முறைமையை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான நெருக்கடியான நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்வாறான யோசனையை முன்வைத்திருக்கிறது.

இது சமநிலையை பேணும் வகையிலான ஒரு யோசனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் சாணக்கியமாக செயற்படவேண்டிய தேவை காணப்படுகின்றது. ஏதாவது ஒரு பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமாயின் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு செல்ல முடியுமாயின் அது தொடர்பில் திருப்தியடைய முடியும்.

அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய எண்ணக்கரு ஒன்றை முன்வைத்துள்ளதாக கருதப்படுகின்றது. இத தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேசப்படலாம். எது எப்படியிருப்பினும் தற்போதைய நிலைமையில் பிரதான வழிநடத்தல் குழுவானது மும்முரமாக செயற்பட்டுவருகின்றது. எனவே வரவு– செலவுத்திட்டத்துக்கு முன்னர் ஏதாவது ஒரு அறிக்கை பாராளுமன்றத்துக்கு வரப்போவது நிச்சயமாகின்றது. குறைந்தபட்சம் பிரதான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையாயினும் பாராளுமன்றம் வரும் நிலைமை உள்ளது.

தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் விடயங்கள் தற்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் சாணக்கியமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-10-15#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.