Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன?

Featured Replies

காணாமல் போனோர் விடயத்தில் ஐ. நா. கூறுவது என்ன?

 

இலங்­கைத்­தீவில் அர­சியல் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் காணாமல் போவோர் என்­பது இன்று நேற்று அல்ல குறைந்­தது, கடந்த 45 வரு­டங்­க­ளாக, அதா­வது தெற்கில் சேகு­வ­ரா க்கள் என அன்று கூறப்­பட்ட ஜே.வி.பி.யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. 

அன்று தெற்கின் சிங்­கள இளைஞர், யுவ­தி­க­ளுடன் ஆரம்­ப­மா­கிய காணாமல் போகும் விடயம், 1972 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கில் தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போவது ஆரம்­ப­மா­கி­யது. அன்று வடக்கு– கிழக்கில் காணாமல் போனோ­ர் அர­ச­ப­டை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்டு, அவர்களது உடல்கள் தமி­ழர்­க­ளது தாயக பூமியின் நாலா­பக்­கமும் அநா­த­ர­வாக கைவி­டப்­பட்ட நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 

காலங்கள் புரண்டு ஓடி, இலங்­கை உல­கி­லேயே காணாமல் போவோர் விட­யத்தில் முதன்மை வகிக்கும் நிலையில், வடக்­கு–­கி­ழக்­குடன் தெற்கு உட்­பட ஆயிரம் ஆயிரம் இளை­ஞர்கள் யுவ­திகள், பெரி­யோர்கள், குடும்பத் தலை­வர்கள், தலை­விகள், கல்­வி­மான்கள், மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளென பட்­டியல் நீண்டு கொண்டே போகும் அள­விற்கு மனி­தர்கள் காணாமல் போனார்கள். 

 போய்­கொண்டும் உள்­ளார்கள். எதிர்­கா­லத்­திலும் போவார்கள் என்ற நிலையில் இலங்­கை­தீவின் நிலை இன்று மாறி­யுள்­ளது. ஆரம்­பத்தில், காணாமல் போவோர் விட­யத்தில் அலட்­சி­ய­மா­க­வி­ருந்த சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்­களும் மேற்கு நாடு­களும் காலப்­போக்­கி­லேயே இலங்­கைத்­தீவின் உண்மை நிலையை அறிந்து தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­தன. 

இவ்­வி­ட­யத்தில் அன்றும் இன்றும் செயற்­பட்ட, படு­கின்ற மனித உரிமை செயற்­பாட்­டா­ளரின் அணு­கு­மு­றைகள் மிகவும் துணிச்­ச­லாக இருந்த பொழுதும், இவை மிகவும் அபாயம் நிறைந்­த­தா­கவும் காணப்­பட்­டன. இவ்­வி­ட­யத்தில் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்த மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களும் உள்­ளனர்.  

இவ் விட­யங்­களில் அன்று முன்­னின்று உழைத்து தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்த ரிச்சர்ட் டி சொய்சா, குமார்­பொன்­னம்­பலம், தராகி சிவராம், ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், ரவிராஜ், லசந்த விக்­கி­ர­ம­துங்க போன்ற பலரை நாம் இவ்­வே­ளையில் நினை­வு­கூர கட­மைப்­பட்­டுள்ளோம்.

இவர்கள் போன்ற பலரின் செயற்­பா­டு­க­ளினால், சர்­வ­தே­சத்தில் இலங்­கையில் காணாமல் போனோர் பற்றி கவ­னத்தில் கொண்­டுள்ள பல அமைப்­புக்­களில், முக்­கி­ய­மான ஒன்­றாக, ஐக்­கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு (UN working Group on Enforced or Involuntary Disappearances) காணப்­ப­டு­கி­றது. 

இக்­குழு காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிப்­ப­தற்­காக நான்கு தட­வைகள், அதா­வது 1991ஆம் ஆண்டு ஒக்­டோபர் , 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர், 1999 ஆம் ஆண்டு இறு­தி மற்றும் கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைத் தீவிற்கு விஜயம் செய்­துள்­ளது.

இவ்­வே­ளை­யி­லேயே, வடக்­கு, ­கி­ழக்கில் காணாமல் போனோர் விட­யத்தில், சில ஆதா­ர­பூர்­வ­மான விட­யங்­களை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் விட­யத்­திற்கு முக்­கிய கார­ணி­க­ளாக இலங்கை அரச படைகள், இவர்­க­ளுடன் உற­வா­டிய ஒட்­டுக்­கு­ழுக்கள் இவற்­றுடன் சில ஆயுத குழுக்­களும் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வை­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுடன் 1987 ஆம் ஆண்டு இலங்­கை க்கு அமை­திப்­ப­டை­க­ளாக வருகை தந்த இந்­திய இரா­ணு­வமும் கார­ணி­யா­க­வுள்­ளது.

போர் முடி­வுற்­றதும், அதா­வது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஆயிரம் ஆயிரம் தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள், முதி­யோர்கள் என எண்ணில் அடங்­கா­த­வாறு வடக்கு, கிழக்­கி­லி­ருந்து காணாமல் போயுள்­ளனர்.

போர் முடி­வுற்­றதும், இவ்­வி­ட­யத்தில் அக்­கறை கொண்டு உலகம் பூரா­கவும் உள்ள புலம் பெயர் வாழ் அமைப்­புகள் தமது நாடு­களில் உள்ள தமி­ழர்கள் கூடும் தேவா­ல­யங்கள், கோயில்கள், தமிழ் பாட­சா­லைகள் போன்ற இடங்­களில் நின்று வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் பற்­றிய விப­ரங்­களைத் திரட்­டி­னார்கள். ஆனால் இன்று வரை இவ்­வி­ப­ரங்­க­ளிற்கு என்ன நடந்­தது என்­பதை யாரும் அறி­ய­வு­மில்லை.

“தமிழர் மனித உரி­மைகள் மையத்­தி­ன­ரா­கிய” நாம் ஐ.நா.விற்கு மனித உரிமை மீறல் விட­யத்தில் தகவல் சமர்ப்­பிப்­பதில் இரு தசாப்­தங்கள் கொண்ட அனு­ப­வத்தின் கார­ணத்­தினால், இவ் அமைப்­புக்கள் திரட்­டிய தக­வல்­களை எம்­மிடம் கொடுத்தால் இவற்றை உரிய முறையில் ஐ.நா.விற்கு சமர்ப்­பிக்க முடி­யு­மென வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தும், இன்று ஏழு வரு­டங்­க­ளா­கியும் திரட்­டிய தக­வல்கள் எங்கு சென்­றன என்­பதை யாரும் அறி­ய­மாட்­டார்கள்.

இவற்றை மிக சுருக்­க­மாக கூறு­வ­தானால், அன்­றி­லி­ருந்து இன்று வரை வடக்கு, கிழக்­கி­லி­ருந்து காணாமல் போனோ­ரு­டைய புள்ளி விப­ரங்­களோ அல்­லது தக­வல்­களோ இன்று வரை சரி­யாக நேர்த்­தி­யாக திரட்­டப்­ப­டவும் இல்லை. இவை சரி­யான முறையில் ஐ.நா.வின் காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வு­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐ.நா.அறிக்கை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்­துள்ள ஐ.நா.குழு­வினர் காணாமல் போனோர் விட­யத்தில் பல உண்­மை­க­ளையும், தக­வல்­க­ளையும் கண்­ட­றிந்­துள்­ளனர். இவர் கள் தாம் இலங்­கைத்­தீவில் அறிந்­த­வற்­றையும் அர­சிற்கு சில சிபார்­சு­க­ளையும் தொகுத்து ஓர் அறிக்­கை­யாக, நடந்து முடிந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்து இருந்­தனர்.

இவ் அறிக்­கையின் கோவை­ இ­லக்கம் A/HRC/33/51/Add.2 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை இரு­பத்­தி­ரண்டு பக்­கங்­க­ளையும் எண்­பத்தி ஐந்து பெரிய உப பந்­தி­களை உள்­ள­டக்­கிய அறிக்­கை­யாக காணப்­ப­டு­கி­றது. இவ் அறிக்­கையின் முன்­னு­ரையில் ஐ.நா.காணாமல் போனோர் பற்றி ஆராயும் குழு, இலங்கைத் தீவில் யார் யாரை சந்­தித்தது. தாம் எந்த எந்த இடங்கள், நக­ரங்­க­ளிற்கு விஜயம் செய்தது என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.  

தாம் விஜயம் செய்­த­தாக குறிப்­பிடும் இடங்­களில் மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, மன்னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. தாம் சந்­தித்­த­தாக கூறும் நபர்­களில், வடக்கு, கிழக்கு முத­ல­மைச்­சர்­களை குறிப்­பிட்­டுள்­ளனர்.

இவ்­வ­றிக்­கையின் 7ஆவது பந்­திக்கு அமைய, ஐ.நா. காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு, கடந்த காலங்­களில் பன்­னி­ரா­யிரம் பேர் காணாமல் போயுள்ளோர் பற்­றிய விப­ரங்­களை அர­சிடம் சமர்ப்­பித்து இருந்­த­தா­கவும், இவற்றில் ஐயா­யி­ரத்து எழு­நூற்று ஐம்­பது பேர் தொடர்பில் இன்னும் அர­சினால் சரி­யான விளக்கம் கொடுக்கப் பட­வில்லை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை­யாவும் பெரும்­பா­லாக 1980–1990 இல் ஜே.வி.பி.யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவை உண்­மையில் வடக்கு, கிழக்கு வாழ் மக்­க­ளிற்கு மிகவும் கவலை தரும் செய்­தி­யாகும். இன்று வரை ஆயிரம் ஆயிரம் தமி­ழர்கள் காணாமல் போயுள்ள நிலையில் ஐ.நா.வின். காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் பிரி­விடம், வடக்கு, கிழக்கு பற்­றிய புள்ளி விப­ரங்கள் மிகவும் குறைந்தே காணப்­ப­டு­கி­ன்றன.

 இதனைத் தொடர்ந்து எட்­டா­வது, ஒன்­ப­தா­வது பந்­தியில் வெள்ளை வேன் கடத்­தல்கள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்ள அதே­வேளை, தமி­ழீ­ழ­வி­டு­தலைப் புலி­க­ளி­னாலும் ஆட்கள் காணாமல் போயுள்­ளனர் என்­பது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையின் 13ஆவது பந்­தியின் பிர­காரம், ஐ.நா.காணாமல் போனோர் பற்றி பரி­சீ­லிக்கும் குழு­வினர் இலங்கை சர்­வ­தேச குற்றவியல் நீதி­மன்­றத்தின் பிர­க­ட­னத்தில் தம்மை ஓர் அங்­கத்­த­வர்­க­ளாக இணைத்துக் கொள்ள வேண்­டு­மென அறி­வுரை கூறப்­பட்­டுள்­ள­துடன் மற்­றைய சர்­வ­தேச மனித உரிமை பிர­க­ட­னங்­க­ளிலும் கையெ­ழுத்­திட வேண்­டு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது.

இத­னது 17ஆவது பந்­தியில் தமது விஜ­யத்தின் பொழுது தாம் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மிற்குச் சென்­றி­ருந்த வேளையில், நிலத்­திற்குக் கீழ்­உள்ள பதி­னொரு ரக­சிய தடுப்பு முகாம்­களை தாம் பார்த்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத­னது 18ஆவது பந்­தியில் கடந்த ஆண்டு 2015, பெப்­ர­வரி மாதம் சாட்­சி­களின் பாது­காப்பு பற்­றிய சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தும் இவற்றில் சில குறைகள் காணப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பந்­திகள் 24, 25க்கு அமைய 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனா­தி­பதி ராஜபக் ஷவினால் காணாமல் போனோர் பற்றி ஆராய்­வ­தற்கு ஓர் புதிய ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ் ஆணைக்­கு­ழுவை “பர­ண­கம ஆணைக்­குழு” என அழைப்­ப­தா­கவும் இது ஆரம்­பத்தில் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை காணாமல் போனோர் பற்றி ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும், இறு­தியில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை காணாமல் போனோர் பற்றி ஆராய வேண்­டப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையில் 27 ஆவது பந்­தியில் குறிப்­பி­டு­வது மிகவும் வேடிக்­கை­யா­னது. பர­ண­கம ஆணைக்­கு­ழுவில் மக்கள் நம்­பிக்கை கொள்­ள­வில்லை என்றும் அப்­ப­டி­யி­ருந்தும் பர­ண­கம ஆணைக்­குழுவுக்கு இரு­ப­தா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்ற பொழுதும் நூற்று ஐம்­பது முறை­பா­டு­களே விசா­ர­ணைக்கு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கி­றது.  

பர­ண­கம என்­பவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு நெருக்கமானவர் என்­பதும் இவர் ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் போர்க்­குற்­றங்­களை மூடி­ம­றைக்க நிய­மிக்­கப்­பட்­டவர் என்­பதை உல­க­றியும் என்­பது எனது கருத்து.

புதை­கு­ழிகள்

இவ் அறிக்­கையின் 38ஆவது பந்­திக்கு அமைய 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகு­தியில் மன்­னாரில் 83 பெண்கள், பிள்­ளை­க­ளது எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் இவை பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவை பற்­றிய தக­வல்கள் விளக்கம் அற்று காணப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையின் 41ஆவது பந்­திக்கு அமைய இலங்கையில்ல் காணப்­படும் புதை­கு­ழிகள் யாவும் காணாமல் போனோ­ருடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தமக்கு சகல இடங்­க­ளிற்கும் விஜயம் செய்து பார்­வை­யிட முடி­ய­வில்­லை­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

44ஆவது பந்­திக்கு அமைய தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போரா­ளிகள் இலங்கை இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் காணாமல் போயுள்­ள­தா­கவும் சில சம­யங்­களில் இப் போரா­ளி­களின் பெற்­றோர்­களும் காணாமல் போயுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரிவை சார்ந்­த­வர்­களும் யுத்­தத்தில் ஈடு­ப­டா­த­வர்­களும் பாது­காப்பு படை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. காணாமல் போக கார­ணமாய் இருந்தோர் தண்­டிக்­கப்­ப­டாது அலட்­சியம் செய்­யப்­ப­டு­வது ஓர் முக்­கிய பிரச்­சி­னை­யாகக் காணப்­ப­டு­வ­தாக அறிக்கை கூறு­கி­றது.

இலங்கையின் விசா­ர­ணை­களை ஆதா­ரங்­க­ளுடன் பார்க்கும் பொழுது நீதி விசா­ர­ணை­களில் நிச்­சயம் சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­குத்­தொ­டு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­பது தெளி­வா­கி­ற­தாக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையில் காணாமல் போயுள்­ளோரின் உற­வி­னர்கள் இம்­சிக்­கப்­ப­டு­வது பற்றி தாம் மிகவும் அக்­கறை கொண்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நஷ்­ட­ஈடு

காணாமல் போனோர் என்ற அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வது ஓர் முக்­கி­ய­மான விட­ய­மாக தாம் எண்­ணு­வ­தாக அறிக்கை கூறு­கி­றது. காணாமல் போனோரின் தாய், மனைவி, பிள்­ளைகள் எந்­த­வித பொரு­ளா­தார உத­வி­களும் இல்­லாது காணப்­ப­டு­வ­தா­கவும் காணாமல் போனோர் எனக் கூறப்­ப­டுவோர், இல்­லாத கார­ணத்­தினால் அவர்­களை நம்பி வாழ்க்கை நடத்­திய குடும்­பங்கள் பெரி­தாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­றிக்­கையின் 61ஆவது பந்­திக்கு அமைய ஐ.நா.குழு­வினர் தாம் நூற்­றுக்­க­ணக்­கான காணாமல் போனோரின் உற­வி­னர்­களை, விசே­ட­மாக தாய், மனைவி, சகோ­த­ரிகள், மகள்­மாரை, மகன்­மாரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ள­தா­கவும் இவர்­களில் சில­ரது குடும்­பங்­களில் பலர் காணாமல் போயுள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட பலர் தாம் தமது உற­வி­னர்­களை தேடும்­வே­ளையில் பாலியல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் இவர்கள் அவர்­க­ளது சமு­தா­யத்தில் உள்­ள­வர்­க­ளினால் பாகு­பாட்­டிற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

காணாமல் போன சில­ரது பிள்­ளைகள், தாய் தகப்பன் இரு­வ­ரையும் இழந்து காணப்­ப­டு­வ­தா­கவும் சில சந்­தர்ப்­பங்­களில் பெற்­றோ­ருடன் சிறு பிள்­ளை­களும் காணாமல் போயுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கி­றது.

அறிக்­கையின் 64ஆவது பந்­திக்கு அமைய காணாமல் போனோ­ரது உற­வினர் எந்­த­வித நஷ்­ட­ஈடும் பெற­மு­டி­ய­வில்­லை­யென்றும் தமக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமைய பாதிக்­கப்­பட்டோர் ஒரு இலட்சம் ரூபாவை பெற முடியும் என்­பது 1988 ஆம் ஆண்டின் விதி முறை­க­ளிற்கு அமைய கூறப்­பட்­டுள்­ள­தாக அறிக்கை கூறு­கின்­றது. இந்த நஷ்­ட­ஈட்டை இறப்பு சான்­றி­தழைச் சமர்ப்­பிப்­பதன் மூலமே பெற முடி­யு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 இங்கு கூறப்­பட்­டுள்ள நஷ்­ட­ஈடு என்­பது இது­வ­ரையில் மாற்றம் அடை­யா­வி­டினும் சில­ரது உற­வி­னர்கள் இரண்டு இலட்சம் ரூபா­வரை பெற்­றுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கி­றது. இவ் இரண்டு இலட்சம் நஷ்­ட­ஈடு என்­பதை நிச்­சயம் தெற்கில் காணாமல் போன சிங்­க­ள­வர்­க­ளது உற­வி­னர்­களே பெற்­றி­ருக்­கலாம் என்­பது எனது கருத்து.

ஐ.நா குழு அறிந்­த­வ­ரையில் இந் நஷ்­ட­ஈடு என்­பது இறப்பு அல்­லது மர­ணச்­சான்­றி­தழை ஏற்கும் காணாமல் போனோ­ரது குடும்­பங்­க­ளுக்கும் தொடர்ந்து காணாமல் போனவர் பற்­றிய தேடு­தலை நிறுத்திக் கொள்­ப­வர்­க­ளுக்கும் மட்­டுமே. இதன் காரணம் ஐ.நா. குழு வற்­பு­றுத்­து­வது என்­ன­வெனில் இறப்புச் சான்­றி­தழைப் பெறும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போனவர் பற்­றிய உண்­மை­களை அறிய உரித்­து­டை­யவர். இவ் அடிப்­ப­டையில் அண்­மையில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தற்­க­மைய காணாமல் போனோர் விட­யத்தில் மரணச் சான்­றி­த­ழுக்கு பதி­லாக “ஆள் இல்லை” (Certificates of Absence) என்ற விடயம் வர­வேற்­கத்­தக்­க­தாக அறிக்கை கூறு­கி­றது.

67ஆவது பந்­திக்கு அமைய வடக்கு, கிழக்கில் இரா­ணுவம் தொடர்ந்து அதி­க­மான தனியார் நிலங்­களை அப­க­ரித்து உள்­ளமை தம்மை அதிர்ச்சி கொள்ள வைத்­துள்­ள­தாக ஐ.நா. குழு கூறு­கி­றது. காணாமல் போனோ­ருக்கும் இடம் பெயர்ந்தோர் விட­யங்­க­ளிற்கும் இடையில் நெருங்­கிய தொடர்­புகள் காணப்­ப­டு­வ­தா­கவும் காணாமல் போனோரின் உற­வுகள் இடப்­பெ­யர்வால் மிகவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்கை கூறு­கின்­றது.

இதே­வேளை 1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு அரசு எந்தவித ஆக்­க­பூர்­வ­மான வேலை­க­ளையும் செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டை ஐ.நா. குழு­வினர் அறிந்­துள்­ள­தா­கவும் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் காணாமல் போனோரை நினை­வு­கூரும் நினை­வுச்­சின்­னங்­களோ அல்­லது வேறு நினைவு கூரக்­கூ­டிய விட­யங்­களோ அங்கு பெரி­தாகக் காணப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இவற்­றிற்கு அரசின் ஆத­ர­வுகள் பெரி­தாக காணப்­ப­ட­வில்­லை­யெ­னவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்பொழுது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டும் இராணுவ வெற்றிதின கொண்டாட்டங்கள் பெயர் மாற்றப்பட்டிருந்த பொழுதும் இராணுவம், அவர்களது குடும்பத்தினருக்கும் புகழ்ந்து விழாக்கள் எடுத்த பொழுதும் போர்க்காலங்களில் உயிரிழந்த பொது மக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையென அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை காணாமல் போனோர் விடயத்தில் முன்னேற்றம் காண்பதற்கும் இவற்றை அங்கு அறவே இல்லாமல் செய்வதற்கான பல ஆலோசனைகளை விசேடமாக சட்டத்துடனான மாற்றங்கள் பற்றி ஐ.நா. குழு இலங்கைக்கு சிபார்சு செய்துள்ளது.

முக்கிய குறிப்பு

01. வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் ஆகிய விடயங்களில் சரியான தெளிவான பெயர்பட்டியலோ விபரங்களோ இன்றுவரை யாரிடமும் இல்லை. இவற்றைப்பட்டியலிட நாம் முன்வர வேண்டும்.

02. காணாமல் போனோர், படுகொலை செய்யப்பட்டோரது சகல விபரங்களையும் ஐ.நா.வில் உள்ள அவற்றிற்குரிய பிரிவுகளிற்கு உரிய முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களிற்கு நடந்தவை, நடப்பவை யாவும் ஓர் இனஅழிப்பு என்பதை எம்மால் சர்வதேசத்திற்கு நிரூபிக்க முடியும்.

1990 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வேலைகளையே பிரதானமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொண்டிருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலம் பெயர் தேசங்களில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட சில கோடரிக் காம்புகளினால் ஐ.நா. வேலை திட்டங்கள் யாவும் நீர்மூலமாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் கவலை தரும் விடயம்.

ச.வி.கிரு­பா­கரன் –பிரான்ஸ்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-10-22#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.