Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவசேனா எதனைச் சாதிக்கப் போகிறது?

Featured Replies

சிவசேனா எதனைச் சாதிக்கப் போகிறது?

SAMAKALAM221016-PG09-R1-47d7755cd393e7e601e22cc03677fa76797d2252.jpg

 

அண்­மையில் வவு­னி­யாவில் சிவ­சேனா என்ற அமைப்பு தொடங்­கப்­பட்ட விவ­காரம், தமிழ் அர­சியல் அரங்கில் பெரும் விவாதப் பொரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.

எழுக தமி­ழுக்குப் பின்னர் தமிழர் அர­சியல் அரங்கில் சிவ­சேனா தான் கூடுதல் பர­ப­ரப்பைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

நீண்­ட­கால தமிழ்த் தேசிய செயற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வரும், தமிழ்ப்­பற்­றா­ளரும், தமி­ழ­றி­ஞ­ரு­மான மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்தம் இதன் அமைப்­பா­ள­ராக இருக்­கிறார்.

அவ­ரது ஏற்­பாட்டில் வவு­னி­யாவில் நடந்த சிவ­சேனா ஆரம்ப நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வ­ரனும் பங்­கேற்­றி­ருந்தார்.

வடக்கு அர­சி­யலில் சிவ­சேனா ஆரம்­பிக்­கப்­பட்ட விடயம் இரண்டு வித­மான விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றது.

முத­லா­வ­தாக, உள்­நாட்டில் தமி­ழர்­களின் ஒற்­று­மைக்குச் சவா­லான விட­ய­மாக முன்­னி­றுத்தி விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

அடுத்து, இந்­தி­யாவில் உள்ள சிவ­சே­னா­வுடன் தொடர்­பு­ப­டுத்தி விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையில் இந்து மதத்­துக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தல்­களில் இருந்து பாது­காப்புத் தேடு­வ­தற்கே தாம் சிவ­சேனா அமைப்பைத் தொடங்­கி­யுள்­ள­தாக மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்தம் தெரி­வித்­துள்ளார்.

இந்தப் பின்­ன­ணியில் வைத்துப் பார்க்கும் போது, சிவ­சேனா அமைப்பு தொடங்­கப்­பட்­டது தொடர்­பாக எந்த மாற்றுக் கருத்­தையும் முன்­வைக்க முடி­யாது.

காரணம், இந்து மதம் இப்­போது பல்­வேறு வித­மான நெருக்­க­டி­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் முகம் கொடுத்­தி­ருக்­கி­றது. ஒவ்­வொரு மதமும், தம்மை விரி­வு­ப­டுத்தும் முயற்­சி­களை முன்­னெ­டுக்கும் போது, அது இந்து மதத்­தையே பெரும்­பாலும் பாதிக்­கி­றது. அதில் உள்ள நியா­யங்­களை யாரும் குறை­கூற முடி­யாது.

வடக்கில் பௌத்த மய­மாக்­க­லுக்கு எதி­ராக குரல் கொடுத்­த­வர்கள் யாரும், இந்து மதத்­துக்கு ஏற்­பட்­டுள்ள இந்த நெருக்­க­டிக்கு ஆத­ர­வாக குரல் கொடுக்கத் தயா­ராக இல்லை. அதற்குக் காரணம் அர­சியல்.

தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை அடை­வ­தற்­கான பய­ணத்­துக்கு மத­ரீ­தி­யான பிள­வுகள் பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடும் என்ற அச்சம் இருந்­தது.

தமி­ழரின் அர­சியல் இலக்­கு­களை அடை­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்­களில், அது அகிம்சைப் போராட்­டத்­தி­லாக இருக்­கட்டும், ஆயுதப் போராட்­டத்­தி­லாக இருக்­கட்டும், இரண்­டி­லுமே தமிழ்ப்­பேசும் இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், இஸ்­லா­மி­யர்கள் பங்­கெ­டுத்­தி­ருக்­கி­றார்கள்.

அகிம்சை வழியில் தமி­ழரின் போராட்­டத்­துக்குத் தலைமை தாங்கி முன்­னெ­டுத்த தந்தை செல்வா எனப்­படும் எஸ்.ஜே.வி.செல்வ­நா­யகம் ஒரு கிறிஸ்­தவர் தான். ஆயுதப் போராட்ட காலத்தில், கிறிஸ்­தவ சபை­களும், கிறிஸ்­தவ மக்­களும் போராட்­டத்­துக்குப் பெரும் பல­மாக இருந்­தி­ருக்­கி­றார்கள்.

அது­போ­லவே, முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியில் இருந்­தவர் தான். இப்­போது கூட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இஸ்­லா­மி­யர்­களும் இணைந்து செயற்­ப­டு­கின்­றனர்.

ஆயுதப் போராட்ட காலத்­திலும் இஸ்­லா­மி­யர்கள் பலரும், தமிழ்த் தேசிய விடு­த­லைக்­காக பல்­வேறு அமைப்­பு­க­ளிலும் இருந்து போரா­டி­யி­ருக்­கி­றார்கள். பலர் தமது உயி­ரையும் கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.

தமி­ழர்கள் தமது அர­சியல் அபி­லா­ஷைக­ளையும் உரி­மை­க­ளையும் அடை­வ­தற்­கான போராட்­டத்தில், மத ரீதி­யாக பிள­வு­பட்டு நிற்­காமல் ஒன்­றி­ணைந்து நின்­ற­மை­யா­னது, எப்­போ­துமே சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­துக்கு சவா­லாக விளங்கி வந்­தி­ருக்­கி­றது.

அதனால் தான், தமி­ழரின் போராட்­டத்தில் இருந்து இஸ்­லா­மி­யர்­களை பிள­வு­ப­டுத்தும் முதல் சதி அரங்­கேற்­றப்­பட்­டது. கிழக்கில் அதற்­கான விதை தூவப்­பட்ட போது, வடக்கில் இருந்து புலி­களால் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர்.

அதன் விளைவு, தமி­ழர்­களின் விடு­தலைப் போராட்­டத்தில் இருந்து கிட்­டத்­தட்ட முற்­று­மு­ழு­தா­கவே முஸ்­லிம்கள் பிரித்­தெ­டுக்­கப்­பட்­டனர்.

இந்தச் சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னால் புல­னாய்வுச் சதித் திட்­டங்கள் இருந்­தன. அர­சி­யல்­வா­திகள் பலரும் இதற்குத் துணை­யாக இருந்­தனர். விடு­தலைப் புலி­களும் விரும்­பியோ விரும்­பா­மலோ, ஒரு­பக்கச் சார்­பான முடிவை எடுக்க வேண்­டிய நிலைக்கு உள்­ளாக்­கப்­பட்­டனர். வடக்கு- கிழக்கு தமிழ்ப்­பேசும் இந்து, இஸ்­லா­மிய, கிறிஸ்­தவ மக்­களின் தாயகப் பிர­தேசம் என்ற கோட்­பாட்டின் மீது சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம், போடப்­பட்ட உச்சி அடி அது.

இப்­போதும், தமி­ழர்­களின் உரிமைப் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக இஸ்­லா­மி­யர்கள் இருந்­தாலும், அது முழு­மை­யா­ன­தல்ல. அதை­விட, தமி­ழர்­களால் முன்­வைக்­கப்­படும், வடக்கு- கிழக்கு இணைப்பு என்ற தாயகக் கோட்­பாட்­டையும் அவர்கள் அச்­சு­றுத்­த­லா­கவே நோக்­கு­கி­றார்கள்.

இதற்குக் காரணம், மத ரீதி­யாக தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு இடையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் பிளவு. இந்தப் பிளவை சரிப்­ப­டுத்தும் ஆற்றல் இப்­போ­துள்ள தமிழ், முஸ்லிம் தலை­மைத்­து­வங்­க­ளுக்கு இல்லை என்று உறு­தி­யா­கவே கூறலாம்.

அவ்­வாறு சரிப்­ப­டுத்த முயன்­றாலும், சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம், அதற்கு இட­ம­ளிக்­காது, என்ன விலை­கொ­டுத்­தேனும், அதனைக் கெடுப்­ப­தற்­கான சூழ்ச்­சி­களைச் செய்யும்.

1990இல் முஸ்­லிம்கள் அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர், தமிழ்ப்­பேசும் மக்­களின் போராட்டம் என்­பது, தனியே தமி­ழர்­களின் போராட்­ட­மாக மாறி­யது. அது­மாத்­தி­ர­மன்றி, தமிழைப் பேசி­னாலும், தாம் தமி­ழர்கள் அல்ல என்று முஸ்­லிம்கள் கூறு­கின்­றனர். இதன் மூலம் தமிழ்ப் பேசும் மக்­களின் தாயகப் பிர­தேசம் இரண்­டாக பிள­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இப்­போ­துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அர­சியல் முன்­னெ­டுப்­பு­களில், இந்து மற்றும் கிறிஸ்­தவ மதங்­களின் பின்­னணி மாத்­தி­ரமே இருக்­கி­றது. இரண்டு மதங்­க­ளையும் பின்­பற்­று­ப­வர்கள், அர­சியல் நகர்­வு­களில் மதத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­காமல் தமிழ்த் தேசி­யத்­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்தே செயற்­ப­டு­கின்­றனர்.

மத­மாற்றம் உள்­ளிட்ட பிரச்­சி­னைகள் தமிழர் பகு­தி­களில் இருந்­தாலும், தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில், மதம் என்­பது பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாக இருக்­க­வில்லை. தமிழ்த் தேசிய விடு­தலைப் போராட்டம் மதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தாக முன்­னெ­டுக்­கப்­பட்டால் தான், வெற்­றியை நோக்கி நகர முடியும் என்­பதில் தமிழர் தலை­மைகள் உறு­தி­யாக இருந்­தன. விடு­தலைப் புலி­க­ளுக்கு முன்­னரும் அப்­ப­டி­யான நிலையே இருந்­தது. புலி­களின் காலத்­திலும் அப்­ப­டியே இருந்­தது. அதற்குப் பின்­னரும் அவ்­வாறே தொடர்­கி­றது.

மத ரீதி­யாக தமி­ழர்கள் பிள­வு­ப­டுத்­தப்­பட்டால்,தமி­ழரின் தாயகக் கோட்­பாடு உள்­ளிட்ட அடிப்­படை உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான அத்­த­கைய முயற்­சி­களும் தோற்­க­டிக்­கப்­படும் ஆபத்து இருக்­கி­றது.

அதனால் தான் தமிழ்த் தேசிய விடு­தலைப் போராட்­டத்தில், மதம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ­ரவர் நம்­பிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றாக இல்­லாத வகையில் அது முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இப்­போது சிவ­சேனாவின் உரு­வாக்கம் அந்த ஒற்­று­மைக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தி விடுமோ என்ற கலக்­கத்தை பல­ரி­டமும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மத ரீதி­யாக தமி­ழர்கள் பிள­வு­ப­டு­கின்ற சந்­தர்ப்­பத்தை சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். எதிர்­பார்த்­தி­ருக்­கி­றது. ஏனென்றால், அப்­போது தான் தமி­ழர்கள் மேலும் பல­வீ­னப்­ப­டு­வார்கள் என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சிவ­சேனா உரு­வாக்­கத்தை விரும்­ப­வில்லை என்­பதை அதன் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் ஊடகம் ஒன்­றிடம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியம் பேசு­ப­வர்கள் இதனை ஆபத்­தான விவ­கா­ர­மாக பார்க்­கின்­றனர். இதில் உண்மை இருக்­கி­றது. ஏற்­க­னவே தமி­ழர்­களின் பலம் அர­சியல் ரீதி­யாக கொஞ்சம் கொஞ்­ச­மாக பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற ஒரு கட்­டத்தில் மத ரீதி­யா­கவும் தமி­ழர்கள் இரண்­டு­ ப­டுத்­தப்­பட்டால், அதன் விளை­வு­களை கற்­பனை செய்து கொள்­வது கடி­ன­மா­னது.

அதனால் தான் சிவ­சே­னாவை பலரும் ஆபத்தின் அறி­கு­றி­யாகப் பார்க்­கின்­றனர், எச்­ச­ரிக்­கின்­றனர். இந்­த­ள­வுக்கும், சிவ­சேனா என்­பது வலு­வான ஒரு அமைப்­பாக கட்­டி­யெ­ழுப்­பப்­படும் சாத்­தியம் உள்­ளதா என்று யாரும் கரு­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை. அதற்­கான வாய்ப்­புகள் எந்­த­ள­வுக்கு இருக்­கின்­றன என்று அல­சவும் தயா­ராக இல்லை.

இலங்­கையில் பல்­வேறு இந்து அமைப்­புகள் இருக்­கின்­றன. ஆனால் அவை சிலரின் கெள­ரவப் பத­வி­க­ளுக்­காக மாத்­தி­ரமே இயங்­கு­கின்­றன. அதற்கு அப்பால் அவை மக்கள் மத்­தியில் எடு­ப­டு­வ­தில்லை.

அது­போன்ற ஒரு அமைப்­பாக இந்த சிவ­சேனா இருக்கப் போகி­றதா அல்­லது பெரி­ய­ளவில் வளர்ச்சி பெறுமா என்று இப்­போது அனு­மா­னிக்க முடி­யாது.

என்­றாலும், சிவ­சேனா என்று பெயர் சூட்­டப்­பட்­டதால் தான் இந்­த­ளவு ஆர்ப்­ப­ரிப்பும் ஆர­வா­ரமும் இருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. அதற்குக் காரணம், இந்­தி­யாவில் குறிப்­பாக, மகா­ராஷ்­டி­ராவில் செல்­வாக்குப் பெற்ற அமைப்­பாக இருக்கும் சிவ­சேனா அமைப்பின் பெய­ருடன் ஒத்துப் போவது தான்.

மும்­பையில் மறைந்த பால் தாக்­க­ரே­யினால் தொடங்­கப்­பட்ட சிவ­சேனா, தீவிர இந்து வல­து­சாரி அமைப்­பாகும். இதன் நிறு­வு­ன­ரான பால் தாக்­கரே ஒரு­போதும் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­தில்லை. ஆனால் சிவ­சேனா தேர்­தலில் போட்­டி­யிட்டு ஆட்­சி­யிலும் இருந்­தி­ருக்­கி­றது.

சிவ­சேனா என்­றாலே இந்­தி­யாவில் இந்து தீவி­ர­வாத அமைப்பு என்ற கருத்துத் தான் உள்­ளது. அதே­பெ­ய­ருடன் வவு­னி­யாவில் சிவ­சேனை ஆரம்­பிக்­கப்­பட்­டதால் தான், இதனை பலரும் இந்­தி­யாவின் இர­க­சியத் திட்டம் என்­கின்­றனர்.

ஆனால் மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்­தமோ இந்­தி­யாவில் உள்ள சிவ­சே­னா­வுக்கும் இதற்கும் தொடர்­பில்லை என்று கூறி­யி­ருக்­கிறார். அதே­வேளை, இலங்­கையில் தொடங்­கப்­பட்ட சிவ­சே­னைக்கு தாம் ஆத­ரவு அளிப்­ப­தாக, மும்­மையில் உள்ள சிவ­சேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்து அமைப்பு என்ற வகையில் இந்த ஆத­ரவு அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அதற்கு அப்பால் இந்த இரு அமைப்­பு­க­ளுக்கும் இடையில் தொடர்­புகள் இருக்­கி­றதா என்று தெரி­ய­வில்லை. எவ்­வா­றா­யினும், மும்­பையில் உள்ள சிவ­சே­னா­வுக்கும், இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சிவசேனைக்கும் இடையில் வலுவான தொடர்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டலாம்.

இந்துத்துவ பொது நோக்கில் செயற்படும் இரண்டு அமைப்புகளும் அவ்வாறு இணைந்து செயற்பட முனைந்தால் அது ஆச்சரியப்பட முடியாத விடயம்.

அவ்வாறான இணைவு தமிழரின் உரிமைக்கான போராட்டத்தில் எந்தளவுக்கு வலுச்சேர்க்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் வடக்கு, கிழக்கில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், போரில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டு ஆலயங்கள் அழிக்கப்பட்ட போதும், இந்தியாவில் உள்ள சிவசேனாவோ அல்லது ஏனைய தீவிர இந்துத்துவ அமைப்புகளோ அதனைத் தடுக்க முனையவில்லை.

வெறும் அறிக்கைகளைத் தாண்டி சிவசேனா எந்த ஆதரவையும் தமிழரின் போராட்டத்துக்கு வழங்கியதும் இல்லை.

இந்தநிலையில், சிவசேனையின் உருவாக்கத்தின் மூலம், இந்தியாவின் ஆதரவைத் தமிழர்களின் பக்கம் திருப்பலாம் என்ற கருத்தோ, எதிர்பார்ப்போ நிராசையான விடயமாகத் தான் இருக்கும்.

இதனால் தான், சிவசேனையின் உருவாக்கம் தமிழரின் அரசியல் அபிலாசைகளை அடையும் முயற்சிகளுக்கு எந்த வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பமுடியாதுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-23#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.