Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயருக்கு சமஷ்டிமுறையையும் செயலில் ஒற்றையாட்சி முறையையும் கொண்ட ஆஸ்திரிய அரசியல் அமைப்பு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்கு சமஷ்டிமுறையையும் செயலில் ஒற்றையாட்சி முறையையும் கொண்ட ஆஸ்திரிய அரசியல் அமைப்பு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகுமா?

Tour_Aust_1

– தத்தர்

இனப்பகைமை அற்ற ஆஸ்திரியாவில் உருவான அதிகாரமற்ற சமஷ்டி முறையை…

இனப்பகைமை கொண்ட இலங்கையின் அரசியலுக்கு தீர்வாக்க முடியாது.

ஆஸ்திரியாவில் காணப்படும் சமஷ்டிமுறை ஆட்சித் தீர்வை இலங்கையின் இனப்பிரச்சனைகக்கு தீர்வாக பரிசீலிக்கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது. இத்தகைய ஆஸ்திரிய சமஷ்டிமுறையின் மீது தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவ்வாறான ஒரு தீர்வைக்காண அது தமிழ்த் தலைவர்களுடன் உள்ளுர உரையாடி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரிய அரசியல யாப்பைப் பற்றிய புரிதல் இங்கு அவசியமானது.

ஆஸ்திரியா ஒரு சமஷ்டிமுறை அரசியல்  யாப்பைக் கொண்ட நாடாக உள்ளது.

(Austrian Federal Constitution – German: Österreichische Bundesverfassung)  உண்மையில் இது எழுத்து வடிவில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் இது ஓh; ஒற்றையாட்சி முறையைக் கொண்ட நாடாகவே விளங்குகிறது.

பார்வைக்கு இது அமெரிக்காவை ஒத்த சமஷ்டிமுறை அமைப்பைக் கொண்ட நாடு போல தோன்றினாலும் இங்குள்ள மாநில அரசுகளுக்கு மிகச் சிறிதளவு சுயாட்சியே உண்டு.

ஒற்றையாட்சிமுறை அரசியல் யாப்பைக் கொண்ட நாடுகளில் பிரதேச சுயாட்சிமுறை கொண்ட அரசியல் முறைகள் உண்டு. இதற்கு பிரித்தானியா ஒரு முக்கிய உதாரணமாகும். அதேவேளை தெளிவான சமஷ்டியும் அல்லாத, முற்றிலும் ஒற்றையாட்சியும் அல்லாத ஆனால் நடைமுறையில் அரை சமஷ்டிமுறை (Quasi Federal) கொண்ட நாடுகளும் உண்டு. இதற்கு இந்தியா ஒரு முக்கிய உதாரணமாகும். ஆனால் அரசியல் யாப்பில் முற்றிலும் தெளிவாக சமஷ்டிமுறையைக் கொண்ட நாடு என்று எழுதப்பட்டு அதேவேளை அது நடைமுறையில் பெரிதும் ஒற்றையாட்சிமுறையைக் கொண்ட நாடாக இருப்பதற்கு சிறந்த உதாரணம் ஆஸ்திரியாவாகும்.

ஆஸ்திரியா நிலப்பரப்பில் இலங்கையைவிட சற்று பெரியது. ஆனால் ஜனத்தொகையில் அது இலங்கையைவிட இரண்டரை மடங்கு சிறியது. ஆஸ்திரியாவின் தற்போதைய மக்கள்தொகை சுமாராக 86 இலட்சம். இலங்கையின் தற்போதையை மக்கள்தொகை  2 கோடியைத் தாண்டியுள்ளது.

ஆஸ்திரியாவில் மொத்தம் 9 மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் உள்ளன. இங்கு 80 இலட்சம் மக்கள் ஆஸ்திரியன்-ஜேர்மன் மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளனார். மீதி 6 இலட்சம் பேரும் 8 மொழிகளை தனித்தனியே தாய்மொழிகளாகக் கொண்டவர்களாவர்.

இவர்களில் அலமேனிக் (Alemannic),  ஆஸ்த்ரோ-பாவோரியன் (Austro-Bavorian) அடுத்த மட்ட முக்கிய மொழி பேசுபவர்களாக விளங்குகின்றனா;. மேலும் சிறுபான்மை மொழிகளாக 6 மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 3 பிராந்திய மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன மொத்தம் 1000 பேரைக் கொண்ட அங்கேரியன் மொழி பேசுவோரும், 2.5 விதத்தினரைக் கொண்ட பூர்ஜியன்லேண்ட் கோஸியன் மொழி பேசுவோரும், 0.3 வீதத்தினரைக் கொண்ட ஸ்லோவின் மொழி பேசுவோரும் உள்ளனர். இவர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் தமது தாய்மொழி உத்தியோக மொழியாக பயன்படுத்த முடியும். இது மேற் கூறப்பட்ட 5 மொழிகளுக்கும் பொருந்தும்.

ஆனால் ஆஸ்திரிய-ஜேர்மன் மொழியே நாடு தழுவிய உத்தியோக மொழியாகவும் தேசிய மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் ; (Lingua-Franca) செயல்பூர்வ இரண்டாம் மொழியாகவும் உள்ளது.

ஆஸ்திரியாவில் வயது முதிர்ந்த மிகச் சிறு தொகையினரைத் தவிர அனைவரும் ஆஸ்திரிய- ஜேர்மன் மொழியை பேசவும் அநேகமாக எழுதவும் கற்றவர்களாக உள்ளனர். இவ்வகையில் பார்க்கும் போது ஆஸ்திரியா மொழிரீதியில் ஒரு மொழித் தன்மை கொண்ட நாடாகவே உள்ளது. மேலும் இங்கு வாழும் மொத்த மக்கள் தொகையில் 2001ஆம் ஆண்டுவரை 74 வீதத்தினர் ரோமன் கத்தோலிக்கர்களாகக் காணப்பட்டனர். ஆனால் தற்போது ரோமன் கத்தோலிக்கர் 60 வீதத்தினராகவும், பழையான கிறிஸ்தவர்கள் 6 வீதத்தினராகவும், இஸ்லாமியர் 6 வீதத்தினராகவும், லூத்தரன்ஸ் கிறிஸ்தவர்கள் 4 வீதத்தினராகவும் ஏனைய கிறிஸ்தவ கிளையினர் அனைவரும் சேர்ந்து 24 வீதத்தினராகவும் உள்ளனர். இங்கு இஸ்லாமியரைத் தவிர ஏனைய அனைவருமே அடிப்படையில் கிறிஸ்தவர்களாவார்.

2001ஆம் ஆண்டுவரை இங்கு இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 3 வீதத்தினராக இருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகாலமாக ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோர் குடியேறியதன் மூலமாக இஸ்லாமிய மக்கள் தொகை 3 வீதம் அதிகரித்தது. அதேவேளை ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து மற்றைய கிளை கிறிஸ்தவ சபைகளுக்கு மக்கள் மதம் மாற்றம் பெற்றதன் மூலம் ரோம் கத்தோலிக்கரின் மக்கள் தொகை 14 வீதம் மதரீதியில் குறைந்தது.

எப்படியோ மொழிரீதியாக மிகப்பொpய அளவு ஆஸ்திரிய-ஜேர்மன் மொழி பேசுவோரைக் கொண்ட நாடாகவும் மதரீதியாக 6 வீத இஸ்லாமியர்களைத் தவிர அதுவும்; சிதறுண்டு வாழும் இவர்களைத் தவிர ஏனையோர் அடிப்படையில் கிறிஸ்தவர்களாக காணப்படுவதால் ஆஸ்திரியாவை ஓரினத்தன்மை (Homogeneous)  கொண்ட நாடு என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏறக்குறைய ஓரினத்தன்மை கொண்ட இந்த நாட்டில் சமஷ்டிமுறையானது இனப்பிரச்சனைக்குத் தீர்வாக உருவாக்கப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து இங்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட சமஷ்டிமுறைக்கான தோற்றத்தை இனங்காணலாம். ஆனால் உண்மையில் இந்த 9 மாகாண பிரிப்புக்களும் பிரதேச ரீதியான நிh;வாகத் தன்மை கொண்டவையாக உள்ளனவேதவிர அரசியல் தன்மை கொண்டவையாக இல்லை. அவற்றிற்கு அவ்வாறான தேவையும் இல்லை.

பாதுகாப்பு, வெளிவிவகாரம், குற்றவியல் சட்டம், பொருளாதாரம் சாh;ந்த சட்டம், கல்வி, ஆய்வியல், சமூக நலன், தொலைதொடர்பு, சுகாதார சேவை, நீதித்துறை என்பன முற்றிலும் மத்திய அரசாங்கத்தின் கையில் இருக்கும்.

அத்துடன் காவல்துறை அதிகாரம் அடிப்படையில் மத்திய அரசாங்கத்திற்கு உரியது. அது சமஷ்டி காவல்துறை (Federal Police – Bundespolize) என அழைக்கப்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புலனாய்வுத்துறையானது சமஷ்டி குற்றவியல் காவல்துறை (Federal Criminal Police Office- Bundeskriminal amp) பிரிவின் பொறுப்பில் உள்ளது. அதேவேளை சில மாநகர சபைகள் தமது மாநகர எல்லைக்குள் மாநகர காவல்துறை (Municipal Police – Sladpolize) பிரிவைக் கொண்டிருக்க முடியும். இதன்படி எந்தோரு மாநில அரசாங்கத்திற்கும் காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை, நீதிமன்றங்களை வைத்திருக்கும் அதிகாரங்கள் என்பன இல்லை.

ஆஸ்திரியாவின் அரசியல் யாப்பின் படி மத்திய அரசாங்கம் இருசபைகளைக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டிருக்கும். அவை தேசிய அவை (National Council), மாநிலங்கள் அவை (Federal Council) என்ற இரு அவைகளைக் கொண்ட மத்திய நாடாளுமன்றமாக (Federal Assembly) விளங்கும்.

இங்கு தேசிய அவை 183 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அந்த உறுப்பினர்கள் நாடுதழுவிய விகிதாசார தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயும் அமைவர். மாநிலங்கள் அவை 64 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அந்த உறுப்பினர்கள் மாநிலங்களின் சட்டசபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும் அமைவர். மாநிலங்களின் மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்குமான மாநிலங்கள் அவை உறுப்பினர்களின் தொகை நிர்ணயிக்கப்படும். ஆகப்பெரிய மாநிலம் 12 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், ஆகச்சிறிய மாநிலம் 3 உறுப்பினர்களைக்; கொண்டதாகவும் இதன் அளவு வேறுபாடுகள் உண்டு.

இதில் தேசிய அவையில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் கட்சியின் தலைவர்  சான்சிலராக (Chancellor) ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். இவரே அமைச்சரவையின் தலைவராகவும் விளங்குவார். அதேவேளை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி 6 ஆண்டுக்காலம் பதவி வகிப்பார். இவர் ஆகக்கூடியது இவ்வாறு இரண்டு முறை பதவியில் இருக்க முடியும். இவரே அரசின் தலைவராகவும் விளங்குவார். ஆனால் நடைமுறையில் பெரிதும் அதிகாரமற்ற ஒரு சம்பிரதாயபூர்வ தலைவராகவே இருப்பார்.

மத்திய அரசின் இருசபைகளில் தேசிய சபையே பலமான அதிகாரத்தைக் கொண்டிருக்கும். மாநிலங்கள் அவை அதிகாரங்கள் அற்ற ஒன்றாகவே உள்ளது. சட்டங்களை முன்மொழிவதில் நடைமுறை ரீதியாக அமைச்சரவையே அதிகாரம் உள்ளதாக விளங்குகிறது. அமைச்சரவை முன்மொழியும் சட்டமூலங்கள் தேசிய அவைக்கு முதலில் சமர்ப்பிக்கப்படும். அங்கு நடைமுறையில் ஒரு சம்பிரதாயபூர்வ விவாதம் நிகழுமே தவிர செயலில் அமைச்சரவையின் சட்டமூலத்தை எப்போதும் தேசிய அவை ஏற்றுக்கொள்வதே வழக்கமாக உள்ளது. பின்பு இது மாநிலங்கள் அவைக்கு சமர்ப்பிக்கப்படும் போது அதனை மாநிலங்கள் அவையால் ஆகக்கூடியது 8 வாரங்கள் தாமதிக்க முடியுமேதவிர அதனை அவர்களால் தடுக்க முடியாது.

மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்களில் 3ல் ஒரு பங்கினரின் ஆதரவுடன் ஒரு சட்டமூலத்தை மாநிலங்கள் அவையால் முன்மொழிய முடியுமானாலும் 1945ஆம் முதல் இன்றுவரை அப்படியொரு சட்டமூலந்தானும் அதனால் முன்மொழியப்படவில்லை. ஏனெனில் சட்டமூலத்தை நிறைவேற்றும் அதிகாரம் நடைமுறையில் முற்றிலும் தேசிய அவையின் கையிலேயே உள்ளது.

மாநிலங்கள் அவையால் ஒரு சட்டமூலம் நிராகரிக்கப்படுமிடத்து அவை வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச கொர எண்ணிக்கையைக் கொண்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றினால் அது இறுதியில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் சட்டமாகிவிடும். ஜனாதிபதி இதில் ஒரு சம்பிரதாயபூர்வ கையெழுத்திடும் அதிகாரம் கொண்டவர் மட்டுமே.

பொருளாதாரம், கலாச்சாரம், மொழி சம்பந்தமான அனைத்திலும் மத்திய அரசாங்கமே தனிப்பெரும் அதிகாரம் மிக்கதாக உள்ளது. இந்தவகையில் ஒருத்தன்மையான மத்திய அரச மைய்ய ( Unipolar ) அதிகாரம் கொண்டதாக ஆஸ்திரிய அரசியல் யாப்பின் நடைமுறை காணப்படுகிறது.

இத்தகைய மத்திய அரசின் கீழ் மொத்தம் 9 மாநிலங்கள் உள்ளன. இம்மாநிலங்கள் ஒரு சபை ஆட்சிமுறையைக் (Unicameral) கொண்டவையாகும்.  ஒவ்வொரு மாநிலமும் தமக்கென சொந்த அரசியல் யாப்பை உருவாக்க முடியும். இம்மாநிலங்கள் கண்டிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவையாக விளங்க வேண்டும் என்பது யாப்பின் விதியாகும்.

அமெரிக்க யாப்பின்படி அங்கு மாநில அரசுகள் தமக்கென யாப்புக்களை உருவாக்கலாம் என்று இருப்பதுபோல ஆஸ்திரிய யாப்பில் மாநிலங்களின் அதிகாரம் காணப்பட்டாலும் இந்த மாநிலங்கள் நடைமுறையில் வெறும் நிh;வாக பிரிவுகள் போல் காணப்படுகின்றனவே தவிர அரசியல் அதிகாரத்திற்கு வாய்ப்பில்லை. மத்திய அரசு தன் கையில் அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துக்கொண்டு அவை தவிர்த்த ஏனைய விடயங்களில் மாநிலங்கள் தமக்கென யாப்புக்களை உருவாக்கலாம் என்று இருப்பது மாநகர சபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்ததாகவே உள்ளது.

பொருளாதாரம், கலாச்சாரம், மொழி, கல்வி, நீதி, காவல்துறை அதிகாரம், தகவல் தொடர்பு என அனைத்தும் மத்திய அரசின் கையில் இருக்கும்போது மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரம் என்பது உளவியல் ரீதியான ஒரு திருப்த்தியையும், நிர்வாக ரீதியான அதிகாரங்களையும் தவிர அது வேறெதனையும் கொண்டிருக்கவில்லை.

ஆதலால்தான் பெயருக்கு சமஷ்டியும், நடைமுறையில் வலுவான ஒற்றையாட்சி முறையையும், அதிகாரமற்ற பெயரளவிலான மாநிலங்களையும் கொண்ட ஓர் ஆட்சிமுறையைப் பற்றி தமிழ்த் தரப்பினருக்கு ஆளும் சிங்கள தரப்பினர் உபதேசிக்கத் தொடங்கியுள்ளனா; போல் தெரிகிறது.
நன்றி : ஈழநாடு – கனடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.