Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம்

Featured Replies

அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம்

Ava3-04ac15d0308165bafe3b74ab00588bfaf426eb39.jpg

 

வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளதோ இல்­லையோ தெற்கில் அதனை வைத்து தாரா­ள­மா­கவே அர­சியல் நடத்­தப்­பட்டு வரு­கி­றது.

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரால் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, சுன்­னா­கத்தில் தேசிய புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கினர்.

அந்தச் சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்று ஆவா குழு வெளி­யிட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் தான், இப்­போது தென்­னி­லங்கை அர­சி­யலில் பர­ப­ரப்­பாக பேசப்­படும் ஆகப் பிந்­திய விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஆரம்­பிக்கும் புதிய கட்சி தொடர்­பான செய்­தி­க­ளையும் கூட இந்த ஆவா குழு விழுங்­கி­விட்­டது.

ஆவா குழுவின் உரிமை கோரல் துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் வெளி­யா­ன­துமே, “அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலி­யாகும்” என்று காத்­தி­ருந்­த­வர்கள் போன்று, மஹிந்த ஆத­ரவு அர­சியல் தலை­வர்கள் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்று அபாயச் சங்கு ஊதத் தொடங்கி விட்­டனர்.

மஹிந்த ராஜபக் ஷ தொடக்கம், அவ­ரது அணியில் உள்­ள­வர்கள் அத்­தனை பேரும் இந்த விவ­கா­ரத்தை தேசிய பாது­காப்­புக்கு ஏற்­பட்­டுள்ள பாரிய அச்­சு­றுத்தல் போலவே வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இன்­னொரு பக்­கத்தில், பொது­ப­ல­சேனா, இரா­வண பலய போன்ற சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களும், ஆவா குழு பற்­றிய பிர­சா­ரங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து வரு­கின்­றன.

ஆவா குழுவை எதிர்­கொள்ள தாமும் ஒரு குழுவை ஆரம்­பிக்கப் போவ­தாக இரா­வண பலய அமைப்பின் தலைவர் சத்­தா­திஸ்ஸ தேரர் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஒரு சாதா­ரண வாள்­வெட்டுக் குழுவை, மிகப் பெரி­ய­ள­வி­லான அச்­சு­றுத்­த­லாக காட்­டு­வ­தற்கு தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் எடுத்த பெரும் பிர­யத்­தனம், இந்த விவ­கா­ரத்தை வைத்து அவர்கள் எந்­த­ள­வுக்கு குளிர்­காய முனை­கி­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யது.

தேசிய பாது­காப்பு என்ற விட­யத்தின் ஆழ, அக­லத்தை தெரி­யாத சுத்­த­சூ­னிய சிங்­களத் தலை­மை­களும், அர­சி­யல்­வா­தி­களும் தான், ஆவா குழு­வினால் அதற்கு ஆபத்து ஏற்­பட்­டி­ருப்­ப­தாக பிர­சா­ரங்­களை செய்து கொண்­டி­ருந்­தனர்.

அர­சாங்கத் தரப்பில் இருந்த சம்­பிக்க ரண­வக்க போன்ற அமைச்­சர்­களும் கூட, புலி­களை அழித்த படை­யி­னரால் ஆவா குழுவை அழிக்க முடி­ய­வில்லை என்­பது போன்ற கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்­தனர்.

இந்­த­நி­லையில் தான், கடந்த புதன்­கிழமை அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்குப் பதி­ல­ளித்த அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷவே ஆவா குழுவை உரு­வாக்­கினார் என்று குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

தனக்குத் தெரிந்த முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான பிரி­கே­டியர் ஒரு­வரே வடக்கில் இந்தக் குழுவை செயற்­ப­டுத்­தி­ய­தா­கவும், அவர்­க­ளுக்­கான தங்­கு­மிடம், மோட்டார் சைக்­கிள்கள், ஆயு­தங்­களை வழங்­கி­ய­தா­கவும் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருந்தார்.

போர்க்­கா­லத்தில் புலி­களை ஒடுக்­கு­வ­தற்கு பயன்­ப­டுத்­து­வ­தற்கு இந்தக் குழு தேவைப்­பட்­டி­ருக்­கலாம் என்றும், தற்­போது அந்தக் குழு மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளதை ஏற்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதை­விட அவர் வெளி­யிட்ட ஒரு தகவல் என்­ன­வென்றால், வடக்கில் ஆவா குழு­வி­னரைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்­துக்கு எதி­ராகச் செயற்­பட்­ட­வர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டது என்­ப­துதான்.

இரா­ணு­வமே ஆவா குழுவை இயக்­கு­கி­றது என்­ப­தையும், முன்­னைய அர­சாங்­கமே அதனை உரு­வாக்­கி­யது என்­ப­தையும், அமைச்­ச­ர­வையின் சார்பில் பேசும் அதி­காரம் படைத்த அமைச்சர் ஒருவர் ஒப்­புக்­கொண்­டது முக்­கி­ய­மான விடயம். அதுவும், முன்­னைய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ஒரு­வரே, தாமும் அந்த அர­சாங்­கத்தில் தான் பதவி வகித்தேன் என்­ப­தையும், இது­போன்ற செயல்­க­ளுக்குத் தாமும் பொறுப்பு என்­ப­தையும் மறந்து, அது­பற்­றிய எந்தக் கூச்­சமும் இல்­லாமல் இதனை ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

மஹிந்த ஆத­ரவு கூட்டு எதி­ர­ணி­யி­னரும், சிங்­கள அர­சி­யல்­வா­திகள் சிலரும், ஆவா குழு, விடு­தலைப் புலி­களின் பிரதி விம்­பமே என்று பிர­சாரம் செய்து வந்த நிலை­யில்தான் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, இரா­ணு­வமே அதனை உரு­வாக்­கி­யது என்­பதை போட்டு உடைத்­தி­ருந்தார். முன்­ன­தாக, விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளி­களே செயற்­ப­டுத்­து­வ­தா­கவும், புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட 12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­க­ளையும் கைது செய்ய வேண்­டு­மென்று அர­சாங்­கத்தில் உள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் பேச்­சாளர் நிசாந்த சிறி வர்­ண­சிங்க கோரி­யி­ருந்தார்.

அது­போ­லவே பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பி­லவும், ஆவா குழு­வுக்குப் பின்னால் புலி­களும், புலம்­பெயர் தமி­ழர்­க­ளுமே இருப்­ப­தாகக் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். 

எனினும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கோ, விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளி­க­ளுக்கோ ஆவா குழு­வுடன் தொடர்­பில்லை என்­பதை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மாத்­தி­ர­மன்றி, முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­யான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவும் கூட உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவே ஆவா குழுவை உரு­வாக்­கினார், அதனை இரா­ணுவ அதி­கா­ரிகள் சிலரே இயக்­கினர் என்­பதை அமைச்சர் ஒருவர் வெளிப்­ப­டுத்­திய பின்னர், அப்­படி நடந்­தி­ருக்கக் கூடும் என்று தனது முன்­னைய சுரு­தியை மாற்றிக் கொண்­டி­ருக்­கிறார் நிசாந்­த­சிறி வர்­ண­சிங்க.

வடக்கில் நடக்­கின்ற எல்லா சம்­ப­வங்­க­ளு­டனும் விடு­தலைப் புலி­க­ளு­டனும், தேசிய பாது­காப்­பு­டனும் முடிச்சுப் போட்டுப் பழ­கி­விட்ட சிங்­கள அர­சியல் தலை­மைகள், ஆவா குழு விவ­கா­ரத்தை தமது வழ­மை­யான பிர­சா­ரங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்திக் கொண்­டது ஆச்­ச­ரி­ய­மல்ல.

எனினும், ஆவா குழு பற்­றிய பாரிய மாயை ஒன்றை உரு­வாக்க முனைந்து இப்­போது அம்­ப­லப்­பட்டு நிற்­ப­வர்­களும் அவர்­கள்தான்.

இப்­போது, ஆவா குழுவின் பின்­னணி என்ன- அது எங்­கி­ருந்து, யாரை நோக்கி ஏவி­வி­டப்­பட்­டது என்­பது பற்றி ஓர­ள­வுக்கு விளங்கிக் கொள்ளக் கூடிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவே ஆவா குழுவை உரு­வாக்­கினார் என்ற அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் குற்­றச்­சாட்டை, முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

எனினும், முன்­னைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­தவர் என்ற வகை­யிலும், தற்­போ­தைய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் என்ற வகை­யிலும், ராஜித சேனா­ரத்­னவின் இந்தக் குற்­றச்­சாட்டை, சாதா­ர­ண­மாக ஒதுக்­கி­வி­ட­மு­டி­யாது. அவ­ரது வழக்­க­மான அர­சியல் வேட்­டுக்­க­ளாக இதனைக் கருத முடி­யாது.

ஏனென்றால், தனக்குத் தெரிந்த பிரி­கே­டியர் ஒரு­வரே இந்தக் குழுவை வழி­ந­டத்­தினார் என்­ப­தையும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், இதன் ரிஷி­மூலம் என்ன என்­பது அர­சாங்­கத்­தி­லுள்ள அமைச்­சர்­க­ளுக்கும் நன்­றா­கவே தெரிந்­தி­ருக்­கி­றது. ஆவா குழுவை அடக்கும் முயற்­சி­களை அர­சாங்கம் உண்­மை­யா­கவே மேற்­கொள்­கி­றது என்றால், இது­போன்ற தக­வல்­களைக் கொண்டே அதனைச் சுல­ப­மாகச் செய்­து­வி­டலாம்.

அதை­விட, போர்க்­கா­லத்தில் புலி­களை அழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைக்கும், ஆவா குழுவை உரு­வாக்­கிய செயற்­பாட்­டுக்கும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன போட முனைந்த முடிச்சு, மொட்­டந்­த­லைக்கும் முழங்­கா­லுக்கும் இடையில் போட முயன்ற முடிச்­சா­கவே தெரி­கி­றது.

ஆனாலும், அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­ன­வர்­க­ளையும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் தாக்­கு­வ­தற்கு இது­போன்ற குழுக்­களை முன்­னைய அர­சாங்கம் பயன்­ப­டுத்­தி­யது என்­பதை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அமைச்சர் ஒருவர் இத்­த­கைய தக­வல்­களை அறிந்து வைத்­தி­ருந்தும் கூட, வடக்கில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் அர­சுக்கு எதி­ரான கருத்­து­டையோர் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு பற்றிய இத்தனை தகவல்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால், அது ஒன்றும் வடக்கு மக்களின் மீது கொண்ட கரிசனையால் அல்ல.

அரசியல் நோக்கம் கருதியே இத்தனை தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

ஆவா குழு மீண்டும் செயற்படத் தொடங்கிய பின்னர், அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. இதனை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக காண்பித்து, மஹிந்த அணியினரும் சிங்கள அரசியல் தலைமைகளும் அரசியல் இலாபமீட்ட முயற்சித்தனர்.

இதனைத் தடுப்பதற்காகவே, அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு பற்றிய இரகசியங்களை அவிழ்த்து விட்டார்.

ஆக மொத்தத்தில் வடக்கு மக்களை அடங்கும் நோக்கத்துக்காக மாத்திரமன்றி, தெற்கின் அரசியல் நலன்களுக்காகவும் ஆவா குழு பயன்படுத்தப்படுகிறது.

இதில் மகிந்த அணி- மைத்திரி அணி என்று எந்த வேறுபாடும் இல்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.