Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எங்கள் ஆதரவு விஜயகாந்துக்கே....!' - வைகோவை ஓரம் கட்டுகிறதா மக்கள் நலக் கூட்டணி?

Featured Replies

'எங்கள் ஆதரவு விஜயகாந்துக்கே....!' - வைகோவை ஓரம் கட்டுகிறதா மக்கள் நலக் கூட்டணி?

 

 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைப் பற்றி வைகோ தெரிவித்த கருத்துக்கள் மக்கள் நலக் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. 'மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் விஜயகாந்த் கேட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம்' என்கின்றனர் வி.சி.க மற்றும் இடதுசாரிகள். 

தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. ' தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம்' என சி.பி.எம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தாலும், மக்கள் நலக் கூட்டணியின் இதர தலைவர்களிடம் இதற்கு ஆதரவு இல்லாததால், போட்டியில் இருந்து சி.பி.எம்.மும் விலகிக் கொண்டது. இதனை சி.பி.எம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ரசிக்கவில்லை. 'போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வது தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கும். ம.தி.மு.க.வுக்குத்தான் வைகோ பொதுச் செயலாளரே தவிர, மக்கள் நலக் கூட்டணிக்கு அல்ல' எனக் கொந்தளித்தனர். இந்நிலையில், 'சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தை முன்மொழிந்தது தவறு' என வைகோ பேட்டியளிக்க, மீண்டும் மக்கள் நலக் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 'வைகோ கருத்து ஏற்படையது அல்ல' என நேரடியாகவே விமர்சனம் செய்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பேட்டியளித்த பிரேமலதாவும், வைகோவை கடுமையாக விமர்சித்தார். விவகாரம் திசைமாறுவதைக் கண்ட வைகோ, 'என்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது' என விளக்கம் அளித்தார். 

makkal%20aliance%202a_11561.jpg

"சட்டமன்றத் தேர்தலில் இருந்தே கூட்டணிக்குள் பலவித குழப்பங்கள் உருவாவதற்கு முக்கியக் காரணமாக வைகோ இருந்தார். மற்ற கட்சிகளின் விவகாரங்களிலும் அவருடைய தலையீடு அதிகரித்தே வந்திருக்கின்றது. தற்போது மூன்று தொகுதிகளுக்கான தேர்தலைப் புறக்கணிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்" என விவரித்த சி.பி.எம் நிர்வாகி ஒருவர், "மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நாங்கள் விருப்பப்பட்டாலும், கூட்டணியின் மற்ற தலைவர்கள் விரும்பாததால் போட்டியிடவில்லை. அதேநேரம், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடாமல், அந்த தொகுதிகளில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். கட்சி நிர்வாகிகளின் கருத்துப்படி, ' விஜயகாந்த் விரும்பினால், மூன்று தொகுதிகளிலும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது' என முடிவு எட்டப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளன. சட்டமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுத்தோமோ, அதே கருத்தில் உறுதியாக இருக்கிறோம். அதையொட்டியே தே.மு.தி.க.வை ஆதரிக்கிறோம். தற்போது ம.தி.மு.க நேரடியாகவே தே.மு.தி.க.வுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து வருகிறது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வை ஆதரிப்பதற்கு வைகோ தயாராக இருப்பாரா என்பது குறித்து தெரியவில்லை" என்றார் விரிவாக. 

சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். "எங்களைப் பொருத்தவரையில் போட்டியிடுவதில்லை என்றுதான் அறிவித்திருக்கிறோம். புறக்கணிக்கிறோம் என்று சொல்லவில்லை. அந்தந்த தொகுதிகளில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதைப் பற்றி பரிசீலிப்போம். காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து, அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரைவில் அறிவிப்போம்" என்றார். 

'மக்கள் நலக் கூட்டணியின் மூன்று கட்சிகள் தே.மு.தி.க.வை ஆதரிக்கும்போது, ஒருங்கிணைப்பாளர் வைகோ என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரிந்துவிடும்' என்கின்றனர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/71599-did-mnk-isolates-vaiko-from-its-alliance.art

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க காமடி தங்க முடியல...

வடிவேலு ரேஞ்சுக்கு சிரிப்பு காட்டுறாங்க 

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டமணி : நாட்டில இந்த முதல்வர் வேட்பாளர்கள் தொல்லை தாங்கலடா..!!
செந்தில் : ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்க..?
கவுண்டமணி : ஆமாண்டா மண்டையா.. அரிதாரம் பூசுபவனெல்லாம் அரியணை ஏறணும்னு நினைக்குறாங்குடா..

டிஸ்கி :

சரி ஒரு பேச்சுக்கு திரு.விஜயகாந்த் முதல்வராக ஆகிவிட்டார் என்று வைத்து கொள்ளுவம் அங்கிட்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் போது .. காலாண்டு.. அரையாண்டு.. முழு ஆண்டு என்று வைத்து கொள்ளுவம். அதில் ஒரு குறிப்பிட்ட வகை வரி முழுமையாக குறிப்பிட்ட காலபகுதியில் வரவில்லை என்று நிதி நிலை அதிகாரிகள் சொல்கிறார்கள் ..அதை ஆங்கிலத்தில் சொன்னால் அவரின்ட ரியாக்சன் எந்த மாதிரி இருக்கும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.