Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நௌரு , மனுஸ் தீவில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?

Featured Replies

நௌரு , மனுஸ் தீவில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?
 
 
நௌரு , மனுஸ் தீவில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?
அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் மீள்குடியேற்ற உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
இதற்கமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஸ்,ஈராக் நாடுகளைச் சேர்ந்த அகதி கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
 
இவர்களில் ஒரு பகுதியினரே அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.
 
வரும் 2017ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி யேற்பதற்கு முன்னதாக, இந்தக் குடியேற்றம் இடம்பெறலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.onlineuthayan.com/news/20093

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம்: டார்ன்புல்

 

பசிபிக் தீவுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள், அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல்

ஏற்கனவே தனது அகதிகள் பரிசீலனை மையங்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் "ஒரு முறை ஒப்பந்தம்" என டார்ன்புல் இதனை விவரித்துள்ளார்.

 

அகதிகள் எண்ணிக்கை குறித்தும், எப்போது நடைபெறும் என்ற கால அட்டவணை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

 

பப்புவா நியு கினியா மற்றும் நவ்ருவில் இருக்கும் ஆஸ்திரேலிய முகாம்களில் உள்ள அகதிகள், இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்; இருப்பினும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதை ஒப்புக்கொள்வாரா என்பது உடனடியாக தெரியவில்லை.

http://www.bbc.com/tamil/global-37965877

  • கருத்துக்கள உறவுகள்

nauru_ci.jpg

அவுஸ்திரேலியாவில்.... அடைக்கலமான ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த ஒப்பந்தம்.

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடைக்கலமான ஈழத் தமிழர் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். 

ஈழத் தமிழர்கள், ஆப்கான், ஈரான் நாட்டவர்கள், ஆப்பிரிக்கர்கள் என பலரும் சட்டவிரோதமாக மீன்பிடி படகுகள் மூலமாக உயிரை பணயம் வைத்து அகதிகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவது தொடர்ந்து வருகிறது.

இந்த ஆபத்தான கடல் பயணத்தில் உயிரிழந்தவர்களும் ஏராளம். தமிழகத்தில் ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இருந்து இப்படி வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்களும் உண்டு. இப்படி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகள் அனைவரும் பாபுவாநியூ கினியாவின் நவரு தீவு மற்றும் மனுஸ் தீவு ஆகியவற்றில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த அகதிகளில் ஒரு பகுதியினரை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் டர்ன்புல் கூறியுள்ளார். 

ஆனால் எத்தனை பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகதிகள் குடியமர்த்துவது என்பது பரிசீலிக்கப்படும் என்றார். 

இருப்பினும் இந்த ஒப்பந்தம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆஸ்திரேலிய அரசு குறிப்பிடவில்லை. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேரை வெளியேற்றுவேன் என அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இப்புதிய ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நன்றி தற்ஸ் தமிழ். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.