Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி

Featured Replies

நல்­லி­ணக்க செயற்­பாட்டின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் ஜனா­தி­பதி

 

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்றார். நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்துவரு­கின்ற போதிலும் அதனை குழப்பும் வகை­யி­லான செயற்­பா­டு­களில் இன­வாத சக்­திகள் தொடர்ந்தும் முயற்­சித்து வரு­கின்­றன.

அர­சாங்­க­மா­னது அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைத்து பிரச்சி னைக்கு தீர்­வு­காண்­ப­தற்­கான முன்­மு­யற்­சி­களை எடுத்து வருகின்­றது. ஆனால் இந்த முயற்­சி­களைக் கூட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் உட்பட இன­வாத அமைப்­புக்கள் கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்றன.

இந்த நிலையில் நாட்டில் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­டாதுவிடின் தேசிய அழி­வொன்­றுக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார். கொழும்பில் இடம்­பெற்ற நல்­லி­ணக்க செய­ல­ணியின் 2016 ஆம் ஆண்­டுக்­கான 'நம்­பிக்­கைக்­கான சிற­க­டிப்பு' என்ற நிகழ்ச்சித் திட்­டத்தின் இறு­திநாள் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை ஏற்­க­னவே நாம் தாம­தித்­து­விட்டோம். அதனால் தற்­போ­தைய அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. 

இத்­த­கைய சந்­தர்ப்­பத்தில் சிலர் நல்­லி­ணக்­கத்தை அடை­வது பாரிய சவால் என்­பதை அறி­யாது அதனை சமஷ்டி என விமர்­சிக்­கின்­றனர். இவ்­வாறு தொடர்ந்தும் நல்­லி­ணக்­கத்தை வேடிக்­கை­யாகப் பார்ப்­போ­மானால் தேசிய அழி­வொன்­றுக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

நாட்டில் பல வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற யுத்­தத்­தினால் நாட்டு மக்கள் வேறு­பட்டு கிடந்­தனர். இன்று அந்­த ­நி­லை­மையில் மாற்றம் செய்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் பாரிய சவா­லுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் முகம் ­கொ­டுத்­துள்­ளது. இந்த நிலையில் எம­து ­நாட்­டி­லுள்ள சில­ருக்கு நல்­லி­ணக்கம் என்­பது வேடிக்­கை­யாகத் தெரி­கின்­றது. 

 அதனால் அவர்கள் அந்தச் சொல்லை நிந்­தனை செய்­கின்­றனர். அரசின் நல்­லி­ணக்கச் செயற்­பாட்­டினை எதிர்த்­த­ரப்­பினர் சமஷ்­டிக்­கான செயற்­பாடு என்று அவ­ம­திக்­கின்­றனர். இவ்­வாறு நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தொடர்ந்தும் நிந்திப்­பார்­க­ளாயின் அவர்கள் மீண்டும் கண்ணீர் சிந்­த­வேண்­டிய நிலைமை ஏற்­படும் என்­ப­துடன் அது பேர­ழி­வையும் உரு­வாக்­கி­விடும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட கடந்­த­ வாரம் இந்­தி­யாவின் ‘இந்து’ பத்­தி­ரி­கைக்கு பேட்­டி­ய­ளித்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ பால சிறி­சேன, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண ­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்த்துவைப்­பது எனது பொறுப்பு மட்­டு­மல்ல. அது மிகப்­பெ­ரிய கட­மை­யு­மாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக சமூ­கங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்த எதிர்­பார்க்­கின்றோம். தெற்கு மக்கள் சமஷ்டி என்­றதும் அச்­ச­ம­டை­கின்­றனர்.

 வடக்கு மக்கள் ஒற்­றை­யாட்சி என்­றதும் அச்சம் கொள்­கின்­றனர். நாம் இந்த வார்த்­தை­களைக் கொண்டு மோதிக்­கொண்­டி­ருக்­கக்­ கூ­டாது. அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­ கூ­டிய ஒரு வடி­வத்தை நாம் கொண்­டு­வ­ர­ வேண்டும். பர­வ­லாக்­கத்தை புரிந்­து­கொள்ள பக்­குவம் தேவைப்­ப­டு­கின்­றது. வடக்­கிலோ, தெற்­கிலோ இன­வா­தி­களை நாம் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது. எது நல்­லது? அதிக மக்­களால் எது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யதோ அத­னையே நாம் செய்­ய­ வேண்டும் என்று ஜனா­தி­பதி இந்­தப்­பேட்­டியில் கருத்துக் கூறி­யுள்ளார்.

வடக்கில் 90 வீத­மான தமிழ் மக்கள் எனக்கு வாக்­க­ளித்­தனர். அவர்­களின் பிரச்­சி­னை­களை நான் தீர்ப்பேன் என்று என்­மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர். எனவே தமிழ் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்த்துவைப்­பது எனது பொறுப்பு மட்­டு­மல்ல, அது மிகப்­பெரிய கட­மை­யுமாகும். எமது நல்­லி­ணக்க முயற்­சி­களை சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­ வேண்டும். இது இல­கு­வான விட­ய­மல்ல. ஆனாலும் சவால்­க­ளுக்கு மத்­தியில் இதனை நாம் செய்­து­வ­ரு­கின்றோம் என்றும் ஜனா­தி­பதி எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

உண்­மை­யி­லேயே நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்­பான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்கள் வர­வேற்­கத்­தக்­க­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. 2009 ஆம்­ ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. தமிழ் மக்கள் பேரி­ழப்­புக்­களை சந்­தித்­தி­ருந்­தனர். யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்வைக் காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். ஆனால் முன்­னைய அர­சாங்­க­மா­னது இதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

வெறும் கண்­து­டைப்­புக்­காக அர­சி­யல்­ தீர்வு குறித்து தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் பேசு­கின்றோம் என்று காட்­டு­வ­தற்­காக சுமார் ஒரு­வ­ரு­ட ­காலம் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. 2011 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வரை தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் முன்­னைய அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. 16 சுற்றுப் பேச்­சுக்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து பேச்­சு­வார்த்தை மேசை­யி­லி­ருந்து அர­சாங்கம் வில­கிக்­கொண்­டது.

பேச்­சு­வார்த்­தையை முறித்­துக்­கொண்ட அர­சாங்கம் பின்னர் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியே பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் அர­சாங்­கத்தின் சார்பில் பேச்­சுக்கள் இடம்­பெ­ற­வில்லை என்றும் கருத்­துக்­களை தெரி­வித்­தது. உண்­மை­யி­லேயே இத­ய­சுத்­தி­யுடன் முன்­னைய அர­சாங்கம் பேச்­சுக்­களை நடத்­த­வில்லை என்­ப­தற்கு நல்ல உதா­ர­ண­மாக அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடு அமைந்­தி­ருந்­தது.

யுத்­தத்தில் பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்த நிலை­யில்தான் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றது. இந்த தேர்­தலில் பொது எதி­ரணி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தமிழ் மக்கள் பேரா­த­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். 

 இதனால் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்றார். அன்று யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்பில் தமிழ்க் கட்­சிகள் தடு­மா­றிக்­கொண்­டி­ருந்த நிலையில் தமிழ் மக்கள் தமக்குள் ஒரு தீர்ப்பை எடுத்­துக்­கொண்­டனர். தமிழ் மக்­களின் இந்தத் தீர்ப்பை அறிந்த பின்­னரே தமிழ்க்­கட்­சிகள் தமது முடிவை அறி­விக்கும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு சிறு­பான்மை மக்கள் பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நம்­பிக்கை வைத்து தமது தீர்ப்பை வழங்­கி­யி­ருந்­தனர். அந்த நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மாக தான் செயற்­பட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளமை அவ­ரது கருத்­துக்­க­ளி­லி­ருந்து புல­னா­கின்றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண முயற்சி எடுத்து வரு­கின்­றது. ஆனால் அந்த முயற்சி எந்­த­ள­வுக்கு வெற்­றி­ய­ளிக்கும் என்ற கேள்வி தற்­போது எழு­கின்­றது.

ஏனெனில் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்­கத்­திற்­கான இந்த முயற்­சிக்கு தென்­ப­கு­தியில் கடும் எதிர்ப்­புக்­களும் தெரி­விக்­கப்­பட்டு வருகின்­றன. அர­சாங்­க­மா­னது சிறு­பான்மை மக்­க­ளிடம் நாட்டை தாரை­வார்க்கப் போகின்­றது என்று இனவாத சக்திகள் குற்றஞ் சுமத்தி வருகின்றன. இவ்வாறான இனவாத சக்திகளின் கை ஓங்குமானால் அரசாங்கமானது எந்தளவு தூரத்திற்கு நல்லிணக்க முயற்சியினை கொண்டுசெல்லும் என்ற வினா தற்போது எழுப்பப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இனவாதிகளின் செயற்பாடுகளுக்காக சிறுபான்மையின மக்களை நடுவீதியில் அரசாங்கம் விட்டுவிடக்கூடாது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே சிறுபான்மையின மக்கள் அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர். எனவே அதற்கேற்றவகையில் தீர்வுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

உண்மையிலேயே சிறுபான்மை மக்கள் தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையை கொண்டுள்­ளனர். எனவே அந்த நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அரசாங்கம் செயற்படவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-15#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.