Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோகி, புதுவை, பாப்பா, எழிலன், மலரவன் உள்ளிட்ட 41 பேருக்கு என்ன நடந்தது

Featured Replies

யோகி, புதுவை, பாப்பா, எழிலன், மலரவன் உள்ளிட்ட 41 பேருக்கு என்ன நடந்தது

 

சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி; உறவினர்கள் திண்டாடுவதாகவும் தெரிவிப்பு
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

யுத்தத்தின் போதும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த மற்றும் அசா­தா­ரண சூழலின் போதும் காண­ாமல்­போ­ன­வர்கள் மீண்டும் வரு­வார்கள் என அவர்­க­ளது உற­வி­னர்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்­கப்­போ­கின்ற பதில் என்ன என கேள்வி எழுப்­பிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் நேற்று சபையில் கேள்வி எழுப்­பினார்.  

இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் 41 முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்­களை சபையில் பிரஸ்­தா­பித்து அவர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென பதி­ல­ளிக்­கு­மாறும் அவர் கோரினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வசிப்பு மீதான நான்காம் நாள் விவா­தத்தை ஆரம்­பித்து உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில் இறுதி யுத்­தத்தில் பலர் தமது குடும்­பத்­தி­னரால் பாது­காப்புப் படை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது பற்றி எந்தத் தக­வலும் இல்லை. இவர்கள் உயி­ருடன் மீண்டும் வரு­வார்கள் என்ற எதிர்­பார்ப்­புடன் காணாமல் போன­வர்­களின் பெற்றோர் மனை­விமார் மற்றும் பிள்­ளைகள் காணப்­ப­டு­கின்­றனர்.  

கணவன் வருவார் என்ற எதிர்­பார்ப்­புடன் பல மனை­விமார் நெத்­தியில் உள்ள குங்­குமப் பொட்­டு­களை அழிக்­காலும் தாலியைக் கழற்­றா­மலும் இருக்­கின்­றனர். இவர்­க­ளுக்­கான பதில் எப்­பொ­ழுது கிடைக்­கப்­போ­கி­றது.

குறிப்­பாக யோக­ரத்­தினம் யோகி, புதுவை இரத்­தி­ன­துரை, பாப்பா, இளந்­தி­ரையன், எழிலன், மல­ரவன் உள்­ளிட்ட 41பேரும் அவர்­களின் சிலரின் குடும்ப உறுப்­பி­னர்­களும், மனை­வி­மாரும், பிள்­ளை­களும் இரா­ணு­வத்­திடம் நேர­டி­யாக சர­ண­டைந்­தார்கள். அதற்­கான சாட்­சிகள் உள்­ளன. அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தற்கு பதி­ல­ளிப்­பது யார்? அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது எனக் கூறப்­போது யார்?

காண­மல்­போனோர் காரி­யா­லயம் காலத்தைக் கடத்தும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே அமைந்­துள்­ளது. யுத்தம் நிறை­வ­டைந்து ஏழு­வ­ரு­டங்­களின் பின்னர் சர்­வதே அழுத்­தங்­களால் இக்­கா­ரி­யா­லயம் திறக்­கப்­பட்­டுள்­ளது. இன்னும் அம்­மக்கள் பற்றி எவ்­வ­ளவு காலத்தின் பின்னர் தக­வல்­களை அக்­கா­ரி­யாலம் தரப்­போ­கின்­றது. இதற்­கான விசா­ர­ணை­களை விளக்­கங்­களை யார் வழங்­கப்­போ­கின்­றார்கள்.

அண்­மையில் பொறுப்புக் கூறல் பொறி­மு­றையில் வெ ளிநாட்டு நீதி­ப­தி­களை ஏற்க முடி­யாது என ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். உள்­ளக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என வும் அவர் கூறி­யுள்ளார். இவ்­வா­றான நிலையில் தமி­ழர்­க­ளுக்கு எப்­படி நீதி கிடைக்கும்? எவர் குற்­றங்­களை இழைத்­தார்­களோ அவர்­களே விசா­ர­ணை­களை நடத்­து­வது எப்­படி நீதியை வழங்கும். இதனால் தான் சர்­வ­தேச நீதி­ப­தி­களைக் கொண்­ட­தாக விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட வேண்டும் என நாம் கோரு­கின்றோம். 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு அர­சாங்­கமும் இணங்­கி­யி­ருந்­தது. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அத்­தீர்­மா­னங்கள் அனைத்தும் ஏற்­றுக்­கொள்­வ­தாக பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்தார். உறு­தி­மொ­ழி­யையும் வழங்­கி­யி­ருக்­கின்ற போதும் இது­வரை எதுவும் நடக்­க­வில்லை.

தமிழர் தாயகப் பகு­தி­களில் நிறு­வப்­பட்­டி­ருக்கும் இர­ணு­வத்தின் வெற்றிச் சின்­னங்கள் எமது மக்­க­ளுக்கு அவர்­களின் இழப்­புக்­க­ளையே எந்த நேரமும் நினைவு படுத்­து­கின்­றன. தாம் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கிறோம் என்ற எண்­ணப்­பாட்­டையே தோற்­று­விக்­கி­றது. தமிழ் மக்கள் பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­களை விட்டுக் கொடுத்­துள்­ளனர்.

சமா­தா­னத்­துக்­காக உயிரைக் கேட்­டாலும் கொடுக்கும் நிலையில் தமிழ் மக்கள் இருக்­கின்­றனர். நல்­லி­ணக்­கமும் சமா­தா­னமும் ஏற்­பட வேண்­டு­மாயின் மனங்­களில் மாற்றம் ஏற்­பட வேண்டும். தமி­ழர்­களின் விடு­தலைப் போராட்­டத்தை தொடர்ந்தும் பயங்­க­ர­வா­த­மாக சித்­த­ரிக்கக் கூடாது. பயங்­க­ர­வாதம் என்ற பதத்­தினை அர­சாங்கம் நீக்க வேண்டும். உரி­மைக்­கா­கவே எமது இளை­ஞர்கள் ஆயு­தங்­களை எடுத்­தார்கள். அவ்­வாறு உரி­மைக்­காக போரா­டி­ய­வர்­களை எவ்­வாறு பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்­கலாம்.

தற்­போது வரையில் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த தமது பிள்­ளை­களின் படங்­களை வீட்டில் வைத்து நினைவுகூர முடியாத நிலை காணப்படுகிறது. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினமாகும். தமிழர்கள் தங்களுடைய பிள்ளைளின் ஆத்மா சாந்திக்காக அவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்துங்கள். தமது பிள்ளைகளுக்காக விளக்கேற்றுங்கள். குறிப்பாக உயிரிழந்தவர்களுக்காக துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுங்கள் என்ற செய்தியை இந்த நாடு, இநத அராங்கம் சொல்லுமாயின் நல்லிணக்கத்தில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். இது முடியக்கூடிய காரியமா? எனக்கேள்வியெழுப்பினார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்

http://globaltamilnews.net/archives/7252
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – அரசாங்கம்

Image may contain: 1 person , eyeglasses

 

 

-------------------------------------------------------------------------------------------------------

இந்த லட்சணத்தில் வெளியில்  உள்ளவர்களையும் வரட்டாமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.