Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே விவகாரம் தொடர்பில் ஒன்பது பேரை அமைச்சர்களாக நியமித்து எந்த விவகாரம் எவரது பொறுப்பில் இருக்கின்றது - மனோ கணேசன் எம்.பி. விசனம்

Featured Replies

[Tuesday January 30 2007 09:52:34 PM GMT] [virakesari.lk]

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் இது வரையில் 103 அமைச்சர்களை பதவியில் அமர்த்தியிருப்பதன் மூலம் எமது நாட்டில் இன்று அரசாட்சிக்கு பதிலாக வேடிக்கையான கண்காட்சியே நடைபெறுகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரே விவகாரம் தொடர்பில் ஒன்பது பேரை அமைச்சர்களாக நியமித்து எந்த விவகாரம் எவரது பொறுப்பில் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்வதற்கு அரசாங்க அதிகாரிகளே தடுமாறும் ஒரு விசித்திரம் இன்று நமது நாட்டில் நிலவுகின்றது.

உலகத்திலேயே மிக அதிகமான அமைச்சர்கள் தொகையை நடைமுறையாக்கியதன் மூலம் எமது நாட்டை உலகம் கைகொட்டி சிரிக்கும் நிலைமைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளார்கள். அதேவேளையில் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்கான ஒருமித்த அணுகுமுறையை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி ஐ.தே.க. உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணைந்து கொண்டதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு தாம் தயாராக இல்லை என்ற செய்தியையும் ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஆளுந்தரப்பிற்கு தாவியுள்ள எம்.பி. க்கள் ஒரே நாடக வசனத்தையே மீண்டும், மீண்டும் பேசுகிறார்கள். தங்களது இனத்தின் வெற்றிக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் ஜனாதிபதியின் கரங்களை தாம் பலப்படுத்துவதற்காகவே அரசாங்கத்தில் இணைவதாக இவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்து வருகிறார்கள்.

இவர்கள் சொல்வது உண்மையானால் அதற்கு அமைச்சர்களாக பதவியேற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இவர்கள் ஆளும் தரப்பில் அமர்ந்து ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தலாம். ஆனால் பதவி அதிகாரங்கள் இல்லாமல் வெறுமனே அரசாங்கத்தில் இணைவதற்கு இவர்களில் ஒருவருமே தயாராக இல்லை. தேசிய ஐக்கியம், ஒருமைப்பாடு என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இவர்கள் போடும் தேசபக்த நாடகம் ஒரு பித்தலாட்டம் என்பதை புரிந்து கொள்வது சுலபமானதாகும்.

இத்தகைய தேசபக்தர்கள் தான் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்கள்தான் சிங்கள மக்களை வழிகாட்டி அழைத்துச் சென்று தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என அடையாளப்படுத்துகின்றார்கள். தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் இடதுசாரி கட்சிகளையும் ஜாதிக ஹெல உறுமய என்ற அதி தீவிர சிங்கள பௌத்த கட்சியையும் ஒருசேர வைத்துக்கொண்டு ஒற்றையாட்சி முறைமையின் கீழ் இனப்பிரச்சினைக்கு இவர்கள் காணப்போகும் தீர்வு எத்தகையதாக இருக்க முடியும்?

இத்தகைய ஒரு வேடிக்கையான ஆட்சியை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் நாம் காணவில்லை. இந்த ஆட்சி தனது உள்ளக சிக்கல்களின் மூலமாகவே விரைவில் முடிவிற்கு வரும். இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வந்த சிங்கள மக்களே விரைவில் ஒரு புதிய மாற்றத்திற்கு வழிகோலுவார்கள்.

நன்றி : Tamilwin.com

மனோகணேசனுக்கு விசனம் மட்:மல்ல

விசர்பிடித்தால்தான் நமக்கென்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.