Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல சாகிறதா பொறிமுறை ?

Featured Replies

மெல்ல சாகிறதா பொறிமுறை ?

 

ரொபட் அன்­டனி

தற்­போ­தைய நிலையில் தென்­னி­லங்­கையில் உரு­வெ­டுத்­துள்ள அர­சியல் அதி­காரப் போராட்­ட­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா என்ற கேள்­வியை எழுப்பி நிற்­கின்­றது. நியா­ய­மான கேள்­வி­யா­கவே இது அமைந்­துள்­ளது. தென்­னி­லங்­கையில் அர­சி­யல்­வா­தி­களும் தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்த பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தை ஒரு சுய­லாப அர­சியல் கரு­வி­யாக பயன்­ப­டுத்­து­வதை காண முடி­கி­றது. 

நாட்டில் இடம்­பெறும் அர­சியல் நகர்­வுகள், அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை பார்க்­கும் ­போது எங்கே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் செயற்­பாடு வலு­வி­ழந்­து­ போய்­வி­டுமா என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டு­கின்­றது. நீதி வழங்கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டுமா என்ற சந்­தேகம் கூட ஏற்­ப­டு­கின்­றது.

அதா­வது எதிர்­வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நடை­பெ­ற­வுள்ள 34 ஆவது கூட்டத் தொட­ருக்கு முன்னர் அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தயா­ரித்து விடும். அதனை ஜெனிவா மனித உரிமைப் பேர­வையும் சர்­வ­தே­சமும் ஏற்றுக் கொள்­ளுமா என்­ப­துவே தற்­போது பர­ப­ரப்­பாக காணப்­ப­டு­கின்ற விட­யங்­க­ளாகும்.

மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொட­ரா­னது இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் மிகவும் தீர்க்­க­மா­னதும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­து­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. காரணம் இலங்கை உறு­தி­ய­ளித்ததன் பிர­காரம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வாறு நீதியைப் பெற்றுக் கொடுக்கப் போகின்­றது என்­பது தொடர்­பான திட்டம் இந்தக் கூட்டத் தொடரில் அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­படும்.

இந்த இடத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அர­சாங்கம் அதிகம் பேசி­வ­ரு­கின்ற நிலையில் அர­சி­ய­ல­மைப்பு வரைபு என்ற விட­யத்தை முன்­வைத்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் வலு­வி­ழக்கச் செய்­து­வி­டுமா என்ற விட­யமும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கிய உரிமைப் பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கமும் ஒரு அறிக்­கை­யினை வெ ளியிட விருக்­கி­றது. அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது மார்ச் மாத கூட்டத் தொட­ரா­னது இலங்­கையைப் பொறுத்­த­வரை பர­ப­ரப்­பா­ன­தா­கவே இருக்­கப்­போ­கின்­றது.

ஆனால் தற்­போ­தைய நிலையில் தென்­னி­லங்­கையில் உரு­வெ­டுத்­துள்ள அர­சியல் அதி­காரப் போராட்­ட­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா என்ற கேள்­வியை எழுப்பி நிற்­கின்­றது. நியா­ய­மான கேள்­வி­யா­கவே இது அமைந்­துள்­ளது.

காரணம் படை­யினர் தொடர்­பாக நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலையா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­குமா என்­பது குறித்த கரி­ச­னையை எழுப்­பு­கின்­றது. பொறுப்­புக்­கூறல் என்று வரும்­போது அது அனைத்துத் தரப்­பினர் மத்­தி­யிலும் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். இதில் பாது­காப்புத் தரப்­பினர் என்­ப­வர்­களும் விதி­வி­லக்­கல்ல.

விசே­ட­மாக பாது­காப்பு தரப்­பி­ன­ரி­டமும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் விசா­ர­ணைகள் நடத்­தப்­படும். ஆனால் தற்­போது தென்­னி­லங்­கையில் இரா­ணுவ விவ­காரம் தொடர்பில் முன்­வைக்­கப்­படும் விட­யங்கள் எங்கே இரா­ணுவ வீரர்­க­ளிடம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் விசா­ரணை நடத்­தி­னாலே பாரிய பிரச்­சினை ஏற்­பட்டு விடுமா என்ற எண்ணம் ஏற்­ப­டு­கின்­றது.

காரணம் தென்­னி­லங்­கையில் அர­சி­யல்­வா­தி­களும் தமது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்த பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தை ஒரு சுய­லாப அர­சியல் கரு­வி­யாக பயன்­ப­டுத்­து­வதை காண முடி­கி­றது. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை என்­றாலே அது நாட்டை மீட்­டெ­டுத்த இரா­ணு­வத்­திக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்ற கோணத்தில் தென்­னி­லங்கை கடும் போக்­கு­வா­திகள் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

அதனால் தான் தற்­போ­தைய அர­சியல் சூழலில் பொறுப்­புக்­கூறல் என்­பதும் நீதி வழங்கும் செயற்­பாடும் சந்­தே­கத்­துக்­கு­ரிய விட­யங்­க­ளாக மாறி வரு­கின்­றன. முன்­னைய அர­சாங்கம் இருக்கும் காலத்தில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நீதி வழங்கும் செயற்­பாட்­டையும் எதிர்­பார்க்க முடி­யாத நிலைமை காணப்­பட்­டது.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் இந்த பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் ஓர­ளவு குறிப்­பி­டத்­தக்க நம்­பிக்கை மக்கள் மத்­தி­யிலும் சர்­வ­தே­சத்தின் மத்­தி­யிலும் ஏற்­பட்­டது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட இலங்­கையின் புதிய அர­சாங்­கத்தில் நம்­பிக்கை வைத்து கால அவ­கா­சத்­தையும் வழங்­கி­யுள்­ளது.

 தென்­னி­லங்­கையில் தற்­போது உரு­வெ­டுக்கும் அர­சியல் ரீதி­யான போட்டி நிலை­மை­யா­னது பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை வலு­வி­ழக்கச் செய்­து­ வி­டுமா என்ற கரி­சனை ஏற்­ப­டு­கின்­றது. காரணம் இந்த பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு என்­பது மிகவும் ஒரு உணர்­வு­பூர்­வ­மான பாதிக்­கப்­பட்ட மக்கள் உரிமை சார்ந்த நீதிப் பிரச்­சி­னை­யாகும்.

எனவே இந்த விட­யத்தில் நிதா­னமும் பொறுப்­பு­டமை தன்­மையும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஒரு சிறிய சிக்கல் ஏற்­பட்­டாலே தீ பற்றி எரிந்து விடக்­கூ­டிய உணர்­வு­பூர்­வ­மான விட­ய­மாக இது காணப்­ப­டு­கின்­றது. ஆகவே இந்த விட­யத்தில் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

உலக நிய­திகள் எப்­போ­துமே விசித்­தி­ர­மா­ன­தா­கவே அமைந்­து­வி­டு­வ­துண்டு. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெறு­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் அச்­ச­ம­டைந்து கொண்டு இருக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அத­னால்தான் உலக நிய­திகள் விசித்­தி­ர­மா­னது என கூறப்­ப­டு­கின்­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் நீதியை நோக்­கிய பய­ணத்தில் மக்கள் தொடர்ந்தும் எதிர்­பார்ப்­புடன் இருக்­கின்­றனர். அதனை நிறை­வேற்ற வேண்­டி­யது பத­வி­யி­லி­ருக்­கின்ற நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 30 வரு­ட­கால கொடூர யுத்தம் முடி­வுக்கு வந்­தது. யுத்தம் முடிந்­ததும் ஐ.நா. செய­லாளர் பான்கீ மூன் இலங்­கைக்கு விஜயம் செய்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து கூட்­ட­றிக்­கை­யொன்றை வெளி

யிட்டார். அதில் பல்­வேறு முக்­கிய விட­யங்கள் இடம்­பெற்­றிந்­த­போதும் அவை இறு­தியில் மறக்­க­டிக்­கப்­பட்டு விட்­டன.

பின்னர் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றப்­பட்­டது. அதில் நம்­ப­க­ர­மான உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அப்­போ­தைய அர­சாங்கம் அந்தப் பிரே­ர­ணையை முழு­மை­யாக நிரா­க­ரித்­தது.

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த பிரே­ர­ணை­யிலும் இலங்­கை­யா­னது நம்­ப­க­ர­மான விசா­ர­ணையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட்ட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அப்­போ­தைய அர­சாங்கம் அத­னையும் முற்­றாக நிரா­க­ரித்­தது.

தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணை­யா­னது வழ­மைக்கு மாறாக இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டிருந்­தது.

ஆனால் அத­னையும் இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­த­துடன் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் இந்த விசா­ர­ணைக்கு எக்­கா­ரணம் கொண்டும் ஒத்­து­ழைப்பு வழங்கமாட்டோம் என்றும் விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்கை வரு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­படமாட்­டாது என்றும் கூறி­யது. எனினும் இலங்கை வரா­ம­லேயே இலங்­கையின் எதிர்ப்­புக்கு மத்­தியில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் இலங்கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தி­யது.

அந்த விசா­ரணை அறிக்கை 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தயா­ராகிக் கொண்­டி­ருந்­த­போது இலங்­கையில் யாரும் எதிர்­பா­ராத வகையில் ஆட்சி மற்றம் ஏற்­பட்­டது. ஒரு கனம் அனைத்தும் தலை­கீ­ழாக மாறி­யது என்று கூறலாம். புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க ஆகியோர் இந்த விவ­கா­ரத்தில் உட­ன­டி­யா­கவே வித்­தி­யா­ச­மான அணு­கு­மு­றை­யினை வெளிக்­காட்­டினர்.

எவ்­வா­றெ­னினும் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­க­மா­னது இலங்கை தொடர்­பான தனது விசா­ரணை அறிக்­கையை கடந்த செப்­டெம்பர் மாதம் வெ ளியிட்­டது. அதில் இலங்­கையில் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் எனவே கலப்பு நீதி மன்­றத்தை கொண்டு விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஆனால் கலப்பு நீதி­மன்றம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் எந்தக் கருத்­தையும் வெ ளியி­டாத நிலையில் கடும் போக்­கு­வா­திகள் அதற்கு எதிர்ப்பு வெ ளியிட்­டி­ருந்­தனர். இந் நிலையில் அமெ­ரிக்­கா­வா­னது இலங்கை தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாத அமர்வில் மற்­று­மொரு பிரே­ர­ணையை கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது.

அந்த பிரே­ர­ணைக்கு ஆச்­ச­ரியம் அளிக்கும் வகையில் இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. 20 பரிந்­து­ரை­களைக் கொண்ட இந்த பிரே­ரணை முழு­மை­யாக அமு­லாக்­கு­வ­தாக அர­சாங்கத் தரப்பில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. அதில் இடம்­பெற்­றுள்ள முக்­கிய சில விட­யங்­களை இங்கே பார்ப்போம்.

பிரே­ர­ணையில் 6, 16, 18 மற்றும் 20 ஆவது பரிந்­து­ரைகள் கீழ் கண்­ட­வாறு வலி­யு­றுத்­து­கின்­றன.

"6. பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யா­ளர்கள் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் உள்­நாட்டு நீதித்­துறை கட்­ட­மைப்­புடன் கூடிய விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­ வேண்டும்.

16.அர­சியல் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்கக் கூடிய வகையில் அதி­காரப் பகிர்வு திட்­ட­மொன்றை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிப்­பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்­தொ­கை­யி­னரும் மனித உரி­மை­களை அனு­ப­விக்க முடியும். 13 ஆம் திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் உள்­ளிட்ட அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

18. பிரே­ரணை அமு­லாக்கம் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடரில் போது வாய்­மொழி மூல அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சமர்ப்­பிக்க வேண்டும். பரிந்­து­ரைகள் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து 34 ஆவது கூட்­டத்

தொடரில் முழு அளவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு தீர்­மானம் நிறைவேற்­றப்­படும்.

20. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் விசேட அறிக்­கை­யா­ளர்கள் ஆணை­யா­ளர்கள் இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆலோ­ச­னை­க­ளையும் தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் வழங்­க­வேண்டும்" இவ்­வாறு இந்த பரிந்­து­ரைகள் வலி­யு­றுத்­து­கின்­றன.

அந்த வகையில் பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள் சட்டத்தர­ணிகள் விசா­ர­ணை­யா­ளர்கள் மூலம் விசா­ரணைப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்ட போதிலும் எக் காரணம் கொண்டும் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இடம் இல்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார்.

அதன் பின்னர் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசேன் சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்­கமே தீர்­மானம் எடுக்க வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணைக்கு அமை­வாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் நோக்கில் அர­சாங்­க­மா­னது பொது மக்கள் மத்­தியில் ஆலோ­ச­னை­க­ளையும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் நடத்தி முடித்­துள்­ளது. அந்த ஆலோ­சனை செயற்­பாட்டின் இறுதி அறிக்கை அர­சாங்­கத்­திடம் விரைவில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத­னை­ய­டுத்து இறுதிப் பொறி­முறை வரைபு அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்துடன் பொறுப்புக்கூறல் பொறிமுறை வரைபானது ஜெனிவாவுக்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது நாட்டில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை பார்க்கும்போது எங்கே பொறுப்புக்கூறல் பொறிமுறை சாத்தியமற்றுப் போய்விடுமா என்று எழுகின்ற சந்தேகம் நியாயமாகவே அமைந்துள்ளது.

எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. ஒருவேளை தென்னிலங்கையில் ஏற்படும் அரசியல் நிலைமைகளின் காரணமாக பொறுப்புக்கூறல் பொறிமுறையை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது போய்விடின் அது அரசாங்கத்துக்கு பாரிய களங்கம் ஏற்படுத்துவதாக அமையும். எனவே இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி தற்போதைய நிலைமையில் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனை வைத்து பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கோட்டைவிட்டுவிடுமா என்ற நியாயமான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஆனால் அரசாங்கமானது பொறுப்புக் கூறல் செயற்பாட்டின் ஊடாக நீதியை வழங்கும் என்ற நம்பிக்கையிலும் எதிர் பார்ப்பிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அந்த மக்களின் எதிர்பார்ப்பினை அரசாங்கம் சிதறடித்துவிடக்கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-26#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.