Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!!

Featured Replies

வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!!

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், செலவுக்கு பணமில்லாமலும் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-மையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதும் பணமில்லாமல் ஏமாற்றம் அடைவதுமான நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் நிலை என்ன?

தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தை கடுமையாக எதிர்த்ததோடு, போராட்டத்தையும் நடத்த உள்ளன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்தநிலையில், ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகவும், இதனை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோ இப்படி கூறியிருப்பதால், அந்த கூட்டணியில் என்ன நடக்கிறது? என்று அரசியல்வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர். வைகோவின் இந்த கருத்து குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் என்னசொல்கிறார்? என்று அவரிடம் கேட்டோம்.

ஒரே கருத்தை முன்மொழிந்த மூன்று தலைவர்கள் ! 

"வைகோ கூறியிருப்பது மக்கள் நலக்கூட்டணியின் முடிவல்ல. இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இதில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு உடன்பாடு இருப்பதால் நாங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ம.தி.மு.கவைப் பொறுத்தவரை, கறுப்புப் பண ஒழிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை. வைகோவின் இந்த கருத்தால் மக்கள் நலக்கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை.
 
கேள்வி: தி.மு.க எதிர்க்கிறது என்பதற்காக வைகோ ஆதரிக்கிறாரா? 

திருமாவளவன் பதில்: தி.மு.க-வைப் பொறுத்தவரை, பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்கிறோம், ஆனால், மக்களின் சிரமத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை, இந்த நடவடிக்கையே ஏமாற்றுவேலை என்று சொல்கிறோம். கறுப்பு பொருளாதார நடவடிக்கைகளை எதிர்க்காத இந்திய அரசு, ஏழை எளியோரிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ள இந்த நடவடிக்கையை வெறும் நாடகமாகவே பார்க்கிறோம்.

கே: காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க அழைப்பு விடுத்த போது, நீங்களும் இடதுசாரிகளும் ஆதரித்தீர்கள். அப்போதும் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோன்று ரூபாய் நோட்டு விஷயத்தில் அவர் ஆதரிக்கிறார். நீங்கள் எதிர்க்கிறீர்கள். கூட்டணிக்குள் கருத்தொற்றுமை இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது ? 

ப: உடன்பாடு உள்ள பிரச்னைகளில் இணைந்திருப்போம் என்பதுதான் அடிப்படையான விதி. முரண்பாடுகள் பற்றிப் பேச வேண்டிய தேவையில்லை. உடன்பாடு உள்ள பிரச்னைகளில் இணைந்திருப்போம். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. நான்கு பேரும் ஒரே கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருடைய நிலைப்பாட்டை நாங்கள் அனுமதிக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டை அவர் அனுமதிக்கிறார்" என்று தெரிவித்தார் திருமாவளவன்.

ஜி.ராமகிருஷ்ணன்வைகோ கருத்து தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி .ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

"ஒருமித்த கருத்துள்ள பிரச்னைகளில் கூட்டுஇயக்கம் நடத்துவோம். கருத்து வேறுபாடு உள்ள பிரச்னைகளில் தனித்தனியாக இயக்கம் நடத்துவோம். இதுவும் ஒரு கருத்தொற்றுமைதான். கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான் மற்ற காலங்களில் கூட்டு இயக்கம்தான்" என்று அவர் குறிப்பிட்டார்.

Muttharasan_08262.jpgஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறுகையில், "வைகோ தெரிவித்தது அவரது நிலைப்பாடே தவிர, மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு அல்ல. பல பிரச்னைகளில் எங்களுக்குள் ஒரே கருத்து உள்ளது. சில பிரச்னைகளில் கருத்தொற்றுமை இல்லாமல் இருக்கிறது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்த நிலைப்பட்டில் ம.தி.மு.க மாறுபட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. அந்த கட்சியின் கருத்துக்கும் மக்கள் நலக்கூட்டணிக்கும் எந்தத்  தொடர்பும் இல்லை" என்றார்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் கூட்டத்தை தி.மு.க கூட்டியபோது, அந்த கூட்டத்தில் பங்கேற்க, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருப்பம் தெரிவித்த நிலையில், 'மக்கள் நலக்கூட்டணி அந்தக் கூட்டத்தில் பங்கேற்காது' என்று அறிவித்தார் வைகோ. அதேபோன்று, தமிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதிகளுக்கான தேர்தலில், இடதுசாரிகள்  போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கும் வைகோ எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
 
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த நிலைப்பாடும் வைகோவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர தலைவர்கள், மோடிக்கு ஆதரவாக வைகோ தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்று, மழுப்பலான பதிலையே சொல்லி முடித்துக் கொண்டனர். 

வைகோவின் கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை, மக்கள் நலக் கூட்டணிக்குள்  குழப்பத்தை உருவாக்கியுள்ளதா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

http://www.vikatan.com/news/politics/73619-vaiko-comment-on-demonetisation-makes-difference-of-opinion-in-pwa.art

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தனிப்பட்ட கருத்து !!

ஒரு காலத்தில் இவரின்ட் மேல் ஒரு  ஈர்ப்பு இருந்தது செஞ்சி ராமசந்திரனை  வெல்லதற்கு முதற்கொண்டு இவன்ரின்ட முதல்படி திமுக எதிர்ப்பு அரசியல் அதற்கு அப்புறம் தான் தெரியுது  . மக்களின்ட பக்கம் நிற்கின்ற அரசியல்வாதிகள் தான் வெற்றி பெறுகிறார்கள் அவர்கள் ஊழல்வாதிகள் ஆனாலும் சரி. இன்று திமுக ஒர் நிலைப்பாட்டை எடுக்கிறது...அதற்கு எதிர் நிலைப்பாட்டை  திரு. வை.கோ அவர்கள் எடுத்தே  ஆக வேண்டுமா ? ஆயிரம் ஊழல்கள் செய்திருக்கலாம் மாற்று கருத்தில்லை ஆனால் நீங்கள் ஏன் மக்கள் பிரச்சனைகளை மறந்துவிடுகிறீர்கள் ...!!


டிஸ்கி :
வடிவேலு போல் அரசியல்வாதி ஆகாமல் இருக்க வாழ்த்துவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.