Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்களின் காணிகளை மீளவழங்க வேண்டியதன் அவசியம்

Featured Replies

பொது­மக்­களின் காணி­களை மீளவழங்க வேண்­டி­யதன் அவ­சியம்

 

வடக்கு, கிழக்கில் படை­யி­னரின் தேவைக்­கென சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணிகள் முற்­று­மு­ழு­தாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று தொடர்ந்தும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் ஆகப்­போ­கின்ற நிலையில் கூட இன்­னமும் பொது­மக்­களின் காணிகள் படை­யி­னரின் தேவைக்­கென பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றமை ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­பாடு அல்ல. பொது­மக்­களின் காணிகள் அதி­பா­து­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அந்­தப்­ப­குதி மக்கள் தொடர்ந்தும் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளா­கவே தங்­கி­யி­ருக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் வர­வு-­–செ­ல­வுத்­திட்­டம் ­மீ­தான குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்­றிய இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா இந்த விவ­காரம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். யுத்தம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் ஆகின்­ற­போதும் மக்­களின் காணிகள் படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. அவை உட­ன­டி­யாக விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். எமது மக்கள் தமது சொந்த நிலங்­களில் மீளவும் குடி­யே­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தொடர்ந்தும் தாம­திக்­காது எடுக்­க ­வேண்டும். மூன்று தசாப்­த­கால யுத்­தத்தால் எமது மக்கள் தமது சொந்த இடங்­களை இழந்து முகாம்­க­ளிலும் நண்­பர்­களின் வீடு­க­ளிலும் வாழ்­கின்­றனர். அவர்­களின் எதிர்­பார்ப்பை புரிந்­து­கொள்­ளுங்கள், அவர்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்­துங்கள் என்று மாவை சேனா­தி­ராஜா எம்.பி. சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வடக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஒரு இலட்­சத்து 30 ஆயிரம் வீடுகள் அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அந்த மக்­க­ளுக்கு ஒரே சமச்­சீ­ரான வீடு­களே அமைத்­துக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்டும். 65 ஆயிரம் பொருத்­து­வீட்டுத் திட்­டத்தை முழு­மை­யாக நாம் எதிர்க்­கின்றோம். எம்­முடன் கூட்­டு­ற­வுடன் பணி­யாற்­ற­வேண்­டிய மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் மீது நாம் தற்­போது நம்­பிக்கை வைக்­க­மு­டி­யா­த­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமி­ழர்­க­ளாக இருந்­தாலும் சரி முஸ்­லிம்­க­ளாக இருந்­தாலும் சரி அவர்­க­ளுக்கு வாழ்­வா­தாரம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்டும். எமது மக்­களின் கட­லோரப் பிர­தேசம் மற்றும் விவ­சாயக் காணிகள் இன்­னமும் பாது­காப்புத் தரப்­பி­னரின் ஆக்­கி­ர­மிப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றன. இதனால் எமது மக்கள் தங்­க­ளது வாழ்­வா­தாரம் தொடர்பில் பெரும் சிக்­கலில் சிக்கித் தவிக்­கின்­றனர் என்றும் அவர் சபையில் விசனம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் வடக்கு, கிழக்கில் படை­யினர் வச­முள்ள காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். வலி. வடக்கில் தனி­யா­ருக்கு சொந்­த­மான 6000 ஏக்கர் காணிகள் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக படை­யி­னரின் பிடியில் உள்­ளது. அவற்றை மக்­க­ளிடம் கைய­ளிக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். வலி. வடக்கில் ஆல­யங்கள், தேவா­ல­யங்கள், பள்­ளி­வா­சல்கள் பூட்­டப்­பட்ட நிலையில் உள்­ளன. இதனால் மக்கள் அங்கு செல்­லவோ அல்­லது வழி­பாட்டில் ஈடு­ப­டவோ முடி­யாது உள்­ளது. கிளி­நொச்சி இர­ணை­தீவு பகுதி கடற்­ப­டை­யினர் வச­முள்­ளது. அந்­தப்­ப­குதி மக்கள் அங்கு மீள­கு­டி­யேறி மீன்­பி­டித்­தொ­ழிலை மேற்­கொள்­வ­தற்கு விரும்­பு­கின்­றனர். கிளி­நொச்சி பர­விப்­பாஞ்சான் பகு­தி­யிலும் தனியார் காணிகள் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­டாமல் உள்­ளன. எனவே பொது­மக்­களின் காணி­களை விரை­வாக அவர்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று இரா­ஜாங்க அமைச்சர் சபையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இத­னை­விட வடக்­கி­லுள்ள துயிலும் இல்­லங்­களை இரா­ணு­வத்­தினர் தமது வசம் வைத்­தி­ருக்­கின்­றனர். அந்த துயிலும் இல்­லங்­களை பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைப்­ப­தற்கு அர­சாங்­க­மா­னது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

மூன்று தசாப்­த­கால யுத்­தத்தின் போது வடக்கு, கிழக்கில் பொது­மக்­களின் பெரு­ம­ள­வான நிலங்கள் படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்­தன. பாது­காப்பு என்ற போர்­வையில் அதி­பா­து­காப்பு வல­யங்­க­ளாக அவை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு படை­யி­னரின் பாவ­னையில் இருந்து வந்­தது. யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடி­வ­டைந்த பின்­னரும் வலி­கா­மம் ­வ­டக்கில் இரா­ணு­வத்­தி­னரால் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டன.

கடந்த 2015 ஜன­வரி மாதம் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பத­வி­யேற்­ற­பின்னர் பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் படிப்­படி­யாக எடுக்­கப்­பட்­டன. ஜனா­தி­பதி தேர்தல் காலத்­திலும் கடந்த வருடம் ஆகஸ்ட்­மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் வடக்கு, கிழக்கில் இரா­ணுவ வச­முள்ள பொது­மக்­களின் காணிகள் மீளவும் வழங்­கப்­படும் என்ற வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மார்ச் மாதம் அளவில் வலி­காமம் வடக்கில் 2750 ஏக்கர் காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதனைத் தொடர்ந்து படிப்­ப­டி­யாக காணி­களை பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இது­வரை 5ஆயிரம் ஏக்கர் அள­வி­லான காணிகள் பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. கிழக்­கிலும் சம்பூர் பகு­தியில் 800 ஏக்கர் காணிகள் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

இதேபோல், இன்­னமும் பெருந்­தொ­கை­யான காணிகள் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்­டிய நிலையில் உள்­ள­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கை­யா­னது மிகுந்த மந்­த­க­தி­யி­லேயே இடம்­பெற்று வரு­கின்­றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தேசிய நத்தார் தின நிகழ்­விற்கு யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இடம்­பெ­யர்ந்து முகாம்­களில் தங்­கி­யுள்ள மக்­களை சந்­தித்து அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் நேர­டி­யாக கேட்­ட­றிந்தார். தம்மை தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யேற்­று­மாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

அவர்­க­ளது கஷ்ட துன்­பங்­களை நேரில் கண்­ட­றிந்த ஜனா­தி­பதி தேசிய நத்தார் தின நிகழ்வில் உரை­யாற்­றும்­போது எதிர்­வரும் ஆறு­மா­த­கா­லத்­திற்குள் முகாம்­களில் உள்ள மக்­களை மீளக்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை எடுப்பேன் என்று வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார். இந்த வாக்­கு­று­தி­யா­னது கடந்த ஜூன் ­மாதம் முடி­வ­டைந்து விட்­டது. ஆனால் மக்­களின் காணி­களை முழு­மை­யாக மீளக்­கை­ய­ளித்து அவர்­களை மீளக்­கு­டி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் இன்­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அந்த மக்கள் இன்­னமும் முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர்.

அண்­மையில் மயி­லிட்­டிப்­ப­கு­தியில் இரா­ணு­வத்­தி­னரால் அமைக்­கப்­பட்ட 150 வீடுகள் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்­டி­ருந்தார். மயி­லிட்­டிப்­ப­கு­தி­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து பெரு­ம­ள­வான குடும்­பத்­தினர் முகாம்­களில் பல வரு­டங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர். இவ்­வாறு வாழும் மக்கள் தமது சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­யே­றவே விரும்­பு­கின்­றனர். ஆனால் மயி­லிட்­டிப்­ப­கு­தியில் பெரு­ம­ள­வான இடங்கள் இன்­னமும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அங்­குள்ள மீன்­பிடி துறை­முகம் கூட விடு­விக்­கப்­ப­டாத நிலையில் உள்­ளது. இதனால் அந்த மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கமானது பதவிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வந்திருக்கின்றது. ஆனாலும் தற்போது அந்த நடவடிக்கையானது மிகுந்த மந்த நிலையினை அடைந்திருக்கின்றது. யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் ஆகப்போகின்றபோதிலும் இன்னமும் அதிபாதுகாப்பு வலயங்கள் வடக்கில் நீடிப்பது என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.

எனவே, பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைத்து அவர்களை சொந்த இடங்களில் சகல வசதிகளுடனும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும். இந்த விடயத்தில் இனியும் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டால் புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழலையே ஏற்படுத்தும். இவ்விடயத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.