Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசுக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபரின் உதவியை நாடிய மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபரின் உதவியை நாடிய மகிந்த

- பண்டார வன்னியன் Wednesday, 31 January 2007 12:16

ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டதால் சிரேஷ்ட அமைச்சர்களால் அரசாங்கத்துக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபர் ஒருவரின் உதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் குறிப்பிட்ட தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, தேசிய மரபாண்மை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க மற்றும் துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட அமைச்சர்கள் மங்கள சமரவீரவின் வீட்டில் கூடியமை தொடர்பாகக் கலந்துரைடியதுடன், அரசில் பிழவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு நடுநிலைமையாளராகச் செயற்பட வேண்டுமெனக் கோரியதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டவர்களை உள்ளடக்கிய அமைச்சரவை மாற்றத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செய்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் கூடிக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த நிலையில் தனக்கும், தனது அரசாங்கத்துக்கும் எதிராக துறைமுக அமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவை இணைந்துகொள்ள வேண்டாமெனக் கூறுமாறு ஜனாதிபதி, அந்த தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான அனுரா பண்டாரநாயக்க, ஆறுமுகம் தொண்டமான், அதாவுல்லா மற்றும் சிறிபதி சூரியாராய்சி ஆகியோர் உட்பட 15 பேர் அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் கூடி அமைச்சரவை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி குறித்துக் கலந்துரையாடியதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் சதி வலையில் வீழ்ந்துவிடாமல் அமைச்சர் பண்டராநாயக்கவை எச்சரிக்குமாறு அந்தத் தொழிலதிபரிடம் கூறிய ஜனாதிபதி, அமைச்சர் பண்டராநாயக்கவை கவனித்துக்கொள்வதாகக் கூறியதாகவும் தெரியவருகிறது.

http://sankathi.org/news/index.php?option=...23&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.