Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’

Featured Replies

‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’
 
 

article_1480563760-Sumanthiran.jpgஅழகன் கனகராஜ்

“ஆட்சிமுறைமை தொடர்பில், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பிளவு படுத்தப்பட முடியாத ஒரேநாடு என்ற ஏற்பாடு அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன், ஒரே நாட்டுக்குள் நிர்வாக அதிகாரங்களைப் பகிரமுடியும் என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. 

புதிய அரசியலமைப் பொன்றை இயற்றுவதற்கான எமது ஆதரவை, அதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் யுத்தத்தின் விளைவான ஏனைய விடயங்களை தட்டிக்கழித்து விடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியது. 

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,  

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அணுசரனை வழங்கியுள்ளது. இன்று உலகில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்கனவே வழங்கியுள்ள உறுதிமொழிகளில் இருந்துதப்பித்துவிடலாம் என்று கருதினால் அது தப்பாகிவிடும். ஏனெனில், மேற்படி தீர்மானமானது எம்மீது திணிக்கப்பட்டதல்ல. நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு விடயங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நாமே அதற்கு இணை அணுசரணை வழங்கியுள்ளோம்.  

கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களின் மீள்நிகழாமையை உறுதிபடுத்த கடந்தகால விடயங்கள் பற்றிய மீளாய்வு தேவையாக இருக்கிறது. அந்தவகையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பானசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை வரவேற்கிறோம். எனினும், அடுத்த நகர்வில் தாமதம் நிலவுகிறது. இவ்வாறான தாமதங்களை காலத்தை கடத்தி தப்பிப்பதற்கான வழியாக சிலர் கருதுகின்றனர்.  

சகல மக்களும் சம உரிமை மற்றும் அந்தஸ்த்துடன் வாழ்வதற்கான நல்லிணக்கம் அவசியமாகும். எனினும், அனைத்தும் உடனடியாக நடந்துவிடும் என்று கூற முடியாது. தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. முதலாவதாக அதற்கு அரசியலமைப்பொன்றை இயற்றவேண்டும். அதன் பின்னர் யுத்தத்தின் விளைவாக உருவான பல விடயங்களை தீர்க்கப்படவேண்டியுள்ளன.  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்ற நாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம். அந்தவகையில், அரசியலமைப்பு இயற்றல் நடவடிக்கையை தற்போதுமைய ஸ்தானத்தை அடைந்துள்ளது. இதுவரை 44 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 6 உப- குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  

இந்தநாட்டில் யுத்தம் உருவானமைக்கான அடிப்படை காரணங்கள் தீர்க்கப்படவேண்டும். புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டிய ஏனைய விடயங்களும் இருக்கின்றன. அரசியலமைப்பு நடவடிக்கையின் மூலம் ஏனைய விடயங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிடலாம் என்று அர்த்தப்படுத்துவதற்கோ அல்லது தட்டிக்கழிப்பதற்கோ எமது ஆதரவைபயன்படுத்த முயற்சிக்கக்கூடாது. 

13 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கத்திலும் இவ்வாறான விடயங்கள் தான் இடம்பெற்றிருந்தன. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான எமது மக்கள் பலியானது 13 ஆவது அரசியலமைப்புதிருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னரே தவிர அதற்கு முன்னரல்ல. 13 ஆவது திருத்தத்தை முழுமையாகநடை முறைப்படுத்தியிருந்தால் இந்த இழப்புஏற்பட்டிருக்காது.  

பிரச்சினை என்பது விடுதலைப் புலிகள் கிடையாது. விடுதலைப் புலிகள் என்பது இந்த பிரச்சினையின் வெளிப்படாக இருந்தது. ஆகையால், அவர்கள் தற்போது இல்லாமையினால் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக அர்த்தம் கிடையாது. பிரச்சினையின் வெளிப்பாடுமட்டுமே அதன்மூலம் இல்லாமல் போயுள்ளது. பயங்கரவாதம் மட்டுமே பிரச்சினை கிடையாது. அதுமுடிந்துவிட்டது என்று அர்த்தப்படுத்தினால் அதுதவறாகும்.  

நாம் விட்டுக்கொடுப்புகளைசெய்கிறோம். எனினும்,அடிப்படையில் மக்களின் அபிலாiஷகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இணக்கப்பாடொன்றுஅவசியம் என்பதனாலேயேநாம் இந்தவிட்டுக்கொடுப்புகளைசெய்கிறோம். தைபலவீனமாகஎடுத்துக்கொண்டால் அதுதவறாகும்.  

கடந்தகாலங்களில் இடம்பெற்றவிடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு அவற்றுக்குதீர்வு காணப்பட வேண்டும். அதைசெய்யாவிட்டால் எதிர்காலத்தில் அவை மேலும் கடுமையான விடயமாகிவிடும். அரசியலமைப்பு இயற்றும் நடவடிக்கையானது நேர்மையானதாக இருக்க வேண்டுமேதவிர, ஏமாற்றும் நோக்கிலானதாக இருக்கக்கூடாது’என்று தெரிவித்தார்.   

- See more at: http://www.tamilmirror.lk/187213/-வ-ட-ட-க-க-ட-ப-ப-கள-பலவ-னமல-ல-#sthash.D4cv16cS.dpuf
  • தொடங்கியவர்

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – TNA

sumanthiran_CI

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமானது என  தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாடு பிளவுபடாதிருப்பதனையும் புதிய அரசியல் சாசனம் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/8843

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.