Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எம்.எல்.ஏக்கள், மா.செக்களுக்கு அவசர அழைப்பு ஏன்?' -விடிய விடிய ஆலோசித்த சசிகலா

Featured Replies

'எம்.எல்.ஏக்கள், மா.செக்களுக்கு அவசர அழைப்பு ஏன்?'  -விடிய விடிய ஆலோசித்த சசிகலா

apollo_cm_11584.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ' கழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் எம்.எல்.ஏக்களும் அப்போலோ வருமாறு ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன' என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள். 

காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலிலதா. ' கார்டன் திரும்புவதை முதல்வரே உறுதி செய்வார்' என அப்போலோ நிர்வாகமும் தெரிவித்து வந்தது. இதுகுறித்து நேற்று மீடியாக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், 'முதல்வர் பூரண உடல்நலம் பெற்றுள்ளார். விரைவில் வீடு திரும்புவார்' என்றார். ஆனால், மதியத்திற்கு மேல் வந்த தகவல்கள் அனைத்தும் அ.தி.மு.க தொண்டர்களை நிலைகுலைய வைத்துள்ளன. மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவலால் அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பதற்றமடைந்தனர். 'ஆளுநர் அப்போலோ விரைவு; மத்திய துணை ராணுவப் படை வருகை' போன்ற தகவல்கள் பரவியதால், அப்போலோ முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் திரண்டனர். நள்ளிரவு 11 மணிக்கு தலைமைச் செயலாளருடன் தீவிரமாக விவாதித்தார் நிதிமையச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு, ஓ.பி.எஸ் தரப்பில் இருந்தே எம்.எல்.ஏக்களுக்கு போன் கால் பறந்தது. ' மருத்துவமனைக்கு 11 மணிக்குள் வந்துவிடுங்கள்' என்ற தகவல் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. 

sasi1_11407.jpg"மருத்துவமனையில் முதல்வர் உடல்நிலை குறித்து தகவல் வெளியான நேரத்தில், மன்னார்குடியில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. ' யார் எங்கு சென்றிருந்தாலும் உடனடியாக சென்னையில் ஒரே இடத்தில் கூடுமாறு' தகவல் சொல்லப்பட்டது. நேற்று மதியம் உறவினர் ஒருவரின் திருமணத்தில் இருந்த திவாகரனுக்கு, அவருடைய மகள் டாக்டர்.ராஜமாதங்கி தகவல் அனுப்பினார். நேற்று இரவு சென்னை வந்த திவாகரன், விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டார். போயஸ் கார்டனின் பாதுகாப்பு குறித்துத்தான் மன்னார்குடி உறவுகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சுதாகரன் முதற்கொண்டு சசிகலாவின் உறவுகள் அனைவரும் கூடிவிட்டனர். அடுத்தகட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்" என விவரித்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஒருவர், " முதல்வர் உடல்நிலையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், கூடுதல் படைகளைக் கேட்டதாக அதிகாரிகள் சொல்கின்றனர். அதேவேளையில், இன்று காலை அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஆதரவு கடிதம் எழுதி வாங்கும் வேலைகள் நடக்க இருக்கிறது. முதல்வர் உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல்கள் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி விரும்பத்தகாத விஷயங்கள் நடந்துவிடக் கூடாது எனவும் அவர் அச்சப்படுகிறார்" என்றார் விரிவாக.

"அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில், கட்சி தொடர்பாக எந்த முடிவையும் முதல்வர்தான் எடுக்க முடியும். ஆட்சிக்கும் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழல்களை எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திவிடக் கூடாது என்பதால், காவல்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ' ஓர் எம்.எல்.ஏவுக்கு ஓர் இன்ஸ்பெக்டர்' என்ற முறையில் தீவிர பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ' இந்தப் பணிக்கு இதைவிட பெரிய பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தலாம்' என விவாதிக்கப்பட்டது. இறுதியில், 'இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு வழங்கலாம்' என்ற முடிவுக்கு வந்தார்கள். இன்று எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் கடிதம் வாங்கிவிட்டு, அவர்களை கார்டனின் முழுக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிலைமை சுமூகமாகும் வரையில், எந்த எம்.எல்.ஏவும் சொந்த ஊருக்குத் திரும்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/74196-why-ops-urges-all-mlas-to-assemble-at-apollo-hospital.art

  • தொடங்கியவர்

அப்போலோவில் கதறி அழுத ஓ.பி.எஸ்..! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

 

முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் அமைச்சர் ஓ.பி.எஸ். கதறி அழுததாகவும், 2 நிமிடத்திற்கு மேல் அவரால் பேச முடியாமல் அமர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

P%E0%AE%B8%E0%AF%8D_13005.jpg

முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 நாள் சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வந்த ஜெயலலிதாவுக்கு, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. விடிய, விடிய அப்போலோ மருத்துவமனை முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு லேசான தடியடி வரை சென்றது. இருப்பினும் தொண்டர்கள் கூட்டம் கலைந்து செல்லவில்லை.

அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மட்டும் அப்போலோவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அடுத்து, இன்று காலை 11 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டம் நடத்தப்படுவதாக தலைமை கழகத்திலிருந்து அறிவிப்பு போன் மூலம் சொல்லப்பட்டது. இதனால் வெளியூர்களிலிருந்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் அனைவரும் நேற்று இரவு முதல் அப்போலோ மருத்துவமனையில் ஆஜராகினர். 136 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வந்ததும், அவர்களிடமிருந்த செல்போன்கள் பெறப்பட்டு, கூட்டம் நடந்த அப்போலோ மருத்துவமனையின் மெயின் பிளாக் தரைத்தளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, அவர்களிடம் அமைச்சர் ஓ.பி.எஸ் பேசினார்.

அப்போது, "அம்மா, பூரண குணமடைய அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அம்மா விரைவில் குணமடைவார். இக்கட்டான இந்த சூழ்நிலையில் அம்மாவின் உடல்நலம் குறித்த வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று பேசி கொண்டு இருந்தபோதே அவரது நாவு தழுதழுத்தது. தொடர்ந்து அவரால் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். இதனால் கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. இதன்பிறகு இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதாவது, ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களின் பேச்சை யாரும் கேட்க வேண்டாம். தலைமை கழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் உங்களுக்கு தகவல் சொல்லுவார். அதற்கு மட்டுமே அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்னொரு கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சித் தாவும் படலத்தில் ஈடுபடக் கூடாது என்பதில் அ.தி.மு.க தலைமை உறுதியாக இருக்கிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள், அனைவரும் நம்பிக்கைக்குரிய ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போலோவில் நடக்கும் கூட்டம் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாக உள்விவரங்கள் சொல்கின்றன.

http://www.vikatan.com/news/coverstory/74207-sources-reveal-the-happenings-of-mla-meeting-held-today.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா?

 

400_14303.jpg

 

முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாரிசாக சசிகலாவை கைகாட்டியதாக ஆதாரம் உள்ளது என அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிக்கொள்கிறார்கள். சசிகலாவுக்கு முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகக் கேட்கிறார்களாம். 

http://www.vikatan.com/news/politics/74215-sasikala-to-be-successor-to-jayalalithaa-in-admk.art

  • தொடங்கியவர்

சசிகலா பொதுச்செயலாளர்?

 

400_16329.jpg

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்கிறது அதிமுக வட்டாரம். ‛கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என அனைத்து எம்எல்ஏக்களும் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனராம். ராஜாஜி ஹால் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏக்களை சென்னையைவிட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவு.

http://www.vikatan.com/news/politics/74229-sasikala-to-become-admks-general-secretary.art

  • தொடங்கியவர்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் எம்..எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

 

 
admk_office

அதிமுக எம்..எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் தொடங்கியது.  

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்
இடைக்கால முதல்வர் தேர்வு?
 
 
 
Tamil_News_large_166369220161205132626_318_219.jpg
 

சென்னை: இடைக்கால முதல்வரை தேர்வு செய்ய சென்னை அப்பல்லோவில் அதிமுக., எம்எல்ஏ.,க்கள் ஆலோசனை நடத்தினர்.

 

இடைக்கால முதல்வர்?

 

முதல்வர் ஜெ., தீவிர சிகிச்சையில் இருப்பதால் இடைக்கால முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள், இன்று சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். 73 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருப்பதால், முதல்வராக ஒருவர் எடுக்க வேண்டி அதிகாரங்களை வேறு யாரும் செய்ய முடியவில்லை. எனவே இடைக்கால முதல்வரை தேர்வு செய்ய, கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.


 

அரசியல் நோக்கர்கள்:

 

 

நேற்று இரவு முதல்வரை பார்த்த கவர்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. செய்திக்குறிப்பும் வெளியிடவில்லை. ‛முதல்வர் இல்லாமல் ஒரு மாநிலம் இருக்கக் கூடாது. அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும்; எனவே கவர்னர் மூலம் இடைக்கால முதல்வர் நியமனம் அறிவுறுத்தல் வந்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனையடுத்து சீனீயராக உள்ள ஓ.பி.எஸ்., அல்லது சசிகலாவின் நெருங்கிய உறவினர் யாராவது தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

நடந்தது என்ன?

 

ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, ‛‛கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்'' என அனைத்து எம்எல்ஏக்களும் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அவர்கள் கவர்னரிடமும் தெரிவிப்பர் என்றும் தெரிகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1663692

  • தொடங்கியவர்

நள்ளிரவில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது.

 
 
நள்ளிரவில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது
 
சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்களும் இன்று காலையில் சென்னை வந்து சேர்ந்தனர்.

அதன்பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.

அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மாலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று இரவு 10 மணிக்கு மேல் அல்லது நாளை நடைபெறலாம் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமை அலுவலகத்திற்கு இதற்காக புறப்பட்டு வந்துள்ளனர்.

முன்னதாக, தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் 135 எம்.எல்.ஏ-க்கள் தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/05232646/1054587/Admk-MLAs-meet-starts-in-its-party-office.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா?

 

400_14303.jpg

 

முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாரிசாக சசிகலாவை கைகாட்டியதாக ஆதாரம் உள்ளது என அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிக்கொள்கிறார்கள். சசிகலாவுக்கு முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகக் கேட்கிறார்களாம். 

http://www.vikatan.com/news/politics/74215-sasikala-to-be-successor-to-jayalalithaa-in-admk.art

1627925.jpg

எம்ஜிஆர்....அம்மா ஜெ.ஜெ எனும் பெயர்களை வைத்து சூதாட்டம் நடத்தப்போகும் பெண்மணி இவர்தானா?  :cool:

  • தொடங்கியவர்

சசிகலாவிடம் சமரசம் பேசிய வெங்கய்ய நாயுடு!  -முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்ற பின்னணி 

ops_cm_13092.jpg

.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. ' புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே நியமிக்கப்பட வேண்டும் என்ற மோடியின் கோரிக்கை நிறைவேறிவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் மத்திய அரசின் கரங்கள் வலுப்பெற்றுவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்துவிட்டார். இப்படியொரு சூழல் ஏற்படலாம் என்பதை அறிந்து முதல் நாள் இரவே அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னை வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டது. நேற்று காலையில் அப்போலோ மருத்துவமனையின் தரைத்தளத்தில் அதிகாரப்பூர்வமற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் உடல்நிலையின் கவலைக்கிட சூழல் பற்றி கண்ணீர் மல்க விவரித்தனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இதன் பின்னர் மாலை 6 மணிக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அதிகாரப்பூர்வ கூட்டம் நடைபெற்றது. 

 naidu_13295.jpg"முதல்வர் இறப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியான பிறகு, ஆளுநர் மாளிகையில் நள்ளிரவு 1.30 மணியளவில் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து அதிகாலை 3.30 மணியளவில் உறங்கச் சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். எந்த உடன்பாடும் இல்லாமல்தான், ஓ.பி.எஸ் பதவியேற்புக்கு சம்மதித்தார் சசிகலா" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், " அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல்கள் இருந்ததால், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சசிகலா.

மத்திய அரசின் கவனத்திற்கு நிலைமைகள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட, அவசரமாக சென்னை திரும்பிய ஆளுநர், அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று நிலைமைகளை கவனித்தார். இதுகுறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். 'முதல்வருக்குப் பிறகு புதிய முதல்வராக யாரை நியமிப்பது' என்ற பேச்சு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்படுவதை சசிகலா விரும்பவில்லை. ஆனால், 'அவை முன்னவர் என்ற அடிப்படையிலும் இரண்டு முறை முதல்வராக இருந்தவர் என்பதாலும் ஓ.பி.எஸ் தொடரட்டும்' என மத்திய அரசின் பிரநிதிகள் தெரிவித்தனர். 

இதை ஏற்காத சசிகலா, 'அமைச்சரவையில் உள்ள வேறு யாராவது வரட்டும்' எனக் கூறியிருக்கிறார். தம்பிதுரை பெயர் கடைசி வரையில் பரிசீலனையில் இருந்தது. ஆனால், டெல்லியின் சாய்ஸாக ஓ.பி.எஸ் மட்டுமே இருந்தார். முதல்வருக்கான சிகிச்சைகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், வெளியில் ஆட்சி அதிகாரம் குறித்த பஞ்சாயத்து நீண்டு கொண்டிருந்தது. மாலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வந்ததும், அவரிடம் விரிவாக விவாதித்தார் சசிகலா. ' இப்படியொரு இக்கட்டான சூழலில் இதுகுறித்து தேவையற்ற விவாதங்களை வளர்க்க வேண்டாம். இப்போதைக்கு ஓ.பி.எஸ் தொடரட்டும். ஜெயலலிதாவின் விருப்பமாகவும் ஓ.பி.எஸ் இருந்தார். எனவே, தொண்டர்கள் மத்தியிலும் பிரச்னை வராது' என விளக்கியிருக்கிறார் நாயுடு. ஒருகட்டத்தில், ' மத்திய அரசின் விருப்பமாக ஓ.பி.எஸ் இருக்கிறார். இப்போதுள்ள சூழலில் இந்த நிலை தொடரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என சசிகலா உறவினர்கள் அமைதியாகிவிட்டனர். ' நாம் சொல்வதை ஓ.பி.எஸ் கேட்பார்' என உறுதியாக நம்புகிறார் மோடி. ஆளுநர் மூலமாக அனைத்து காய் நகர்த்தல்களையும் செய்து முடித்துவிட்டது மத்திய அரசு" என்றார் ஆதங்கத்தோடு. 

www.yarl.com/forum3/topic/185635-எம்எல்ஏக்கள்-மாசெக்களுக்கு-அவசர-அழைப்பு-ஏன்-விடிய-விடிய-ஆலோசித்த-சசிகலா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.