Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்டார் போகொல்லாகம

Featured Replies

Friday February 02 2007 07:31:50 AM GMT] [thinakkural.com]

இனநெருக்கடிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அதிகாரப்பகிர்வு யோசனையை முன்வைக்குமாறு இந்தியா மீண்டும் இலங்கைக்கு தெரிவித்துள்ள அதேவேளை, பயங்கரவாதிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்றும், அவர்கள் நல்ல பயங்கரவாதிகளாக இருக்க முடியாதெனவும் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போகொல்லாகம புதன்கிழமை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்தார். அதன்பின்னர் புதுடில்லியில் வெளிநாட்டு நிருபர்கள் கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில்; விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், இனநெருக்கடிக்கு இராணுவத்தீர்வு ஒரு போதும் சாத்தியமானதல்ல என்பதை இலங்கை ஞாபகத்தில் கொள்ள வேண்டுமென்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாக ரோகித்த போகொல்லாகமவிடம் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திசேவை தெரிவித்தது.

வன்செயல்கள் மீண்டும் இடம்பெற்று வருவதும் பதிலுக்கு பதில் நடவடிக்கைகள் ஆரம்பித்திருப்பதும் இதனால் அப்பாவித் தமிழ் பொது மக்கள் பாதிக்கப்படுவதையிட்டும் இந்தியா கவலை கொண்டுள்ளது.

அத்துடன், சமஷ்டி அரசியலமைப்பு முறைமையை ஏற்படுத்துவதற்கு இலங்கையில் எதிர்ப்பு அதிகரித்து வருவதையிட்டும் இந்தியா கவலை கொண்டுள்ளது.

ஆயினும், தமது பங்குக்கு இந்தியாவுக்கு உறுதிமொழியை வழங்கியுள்ளார் ரோகித்த பொகொல்லாகம. இலங்கையில் பரந்தளவிலான அரசியல் கருத்தொருமைப்பாட்டை கொண்ட அதிகாரப்பகிர்வுப் பொதியை முன்வைக்க கொழும்பு உறுதியுடன் இருப்பதாக அவர் இந்தியத் தரப்புக்கு உறுதியளித்திருக்கிறார்.

ஆனாலும், புதுடில்லியிலிருந்து ஜேர்மனிக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்கள் மத்தியில் கேட்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பதை அவர் தவிர்த்துக் கொண்டுள்ளார். சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளும் பங்குதாரர்களாக இருப்பதை கொழும்பு விரும்புகின்றபோதும் பயங்கரவாதத்தை நசுக்குவது தொடர்பாக திரும்பத் திரும்ப தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.

அத்துடன், அதிக எண்ணிக்கையான ஐ.தே.க. எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணைந்ததால் சமாதான நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க. - சு.க. இணைந்த அணுகுமுறை முடிவுக்கு வந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றதென்பதை அமைச்சர் போகொல்லாகம நிராகரித்துள்ளார்.

இரு கட்சி கருத்தொருமைப்பாடு தொடரும் என்பது நிச்சயம். தான் தனிமைப்படுத்தப்படுவதை ஐ.தே.க. விரும்பும் என்றும் தான் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வையே அரசாங்கம் நாடி நிற்பதாக கூறியிருக்கும் அவர், புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாக இருந்தால் அதனை ஊக்குவிக்கக்கூடாது. அது அழித்தொழிக்கப்படவேண்டும். எமது அரசாங்கம் பயங்கரவாதத்தை அழிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது வழியில் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் புலிகள் பேச்சுக்கு வர வேண்டும். விடுதலைப் புலிகளையும் சமாதான நடவடிக்கைகளில் பங்குதாரர்களாக நாம் கருதுகிறோம். ஆனால், புலிகள் பயங்கரவாதத்தை கைக்கொண்டால் அதனை சகித்துக் கொள்ள முடியாது என்றும் போகொல்லாகம கூறினார்.

கிழக்கில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் எவ்வளவு வலிமையுடன் இருக்கின்றார்கள் என்பதை எம்மால் பார்க்க முடிகிறது. கிழக்கில் எவ்வளவு வலிமையுடன் அவர்கள் இருந்தார்கள்? இன்று நிலைமை மாறிவிட்டது என்றும் போகொல்லாகம தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் ஆசீர்வாதத்தை இலங்கை பெற்றிருப்பதாக கூறியுள்ள அவர், இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு குறித்து புதுடில்லி மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வருவதை முன்னிலைப்படுத்தி சுட்டிக்காட்டினார். ஆனாலும், பொது மக்கள் படுகொலைகள், இராணுவத்தீர்வை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று இந்தியா அடிக்கடி விடுக்கும் கோரிக்கைகள் தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை.

இலங்கையில் பொது மக்களின் துன்பங்கள் குறித்து தமிழ்நாட்டில் விசனமும் கவலையும் அதிகரித்து வருவது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, யதார்த்தத்துக்கு புறம்பாக அதிகளவு திரிபுபடுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை ஒற்றையாட்சி முறையையா தொடர விரும்புகின்றது? சமஷ்டியை எதிர்க்கின்றதா? என்று கேட்கப்பட்டபோது, இது ஒரு விவகாரமல்ல. எந்தவொரு பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடும் இலங்கைக்கேயுரிய பாணியில் அமைந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

நன்றி: Tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.