Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படை குவிப்புக்கு புதிய நியாயம்

Featured Replies

படை குவிப்புக்கு புதிய நியாயம்

Page-01-image-5187ed3029600cd37cdb100166a2ed6e1ddba57f.jpg

 

2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பாக கடந்­த­வாரம் நடந்த குழு­நிலை விவா­தத்தின் போது, பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

உள்­நாட்டு, வெளி­நாட்டு பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் இல்­லாத சூழ­லிலும், முப்­ப­டை­க­ளையும் பலப்­ப­டுத்தும் திட்­டத்தில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பது இதன் மூலம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­ றது.

அடுத்த ஆண்டு பாது­காப்­புக்கு, 284 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய போர் விமா­னங்­களின் கொள்­வ­னவு, ஆழ்­கடல் கண்­கா­ணிப்புக் கப்­பல்கள் கொள்­வ­னவு, இரா­ணு­வத்தை மறு­சீ­ர­மைக்கும் திட்­டங்கள் என்­பன அடுத்த ஆண்டின் பாது­காப்புச் செல­வின ஒதுக்­கீட்டில் முக்­கிய இடத்தைப் பிடிக்­க­வுள்­ளது. போர் முடி­வுக்கு வந்த பின்னர், முப்­ப­டை­க­ளையும் பலப்­ப­டுத்தி, நவீ­ன­ம­யப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை தற்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

சீனா­விடம் இருந்து, வை-20 எனப்­படும் இராட்­சத இரா­ணுவப் போக்­கு­வ­ரத்து விமா­னங்­களைக் கொள்­வ­னவு செய்யும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த வகை விமா­னங்கள் அண்­மைக்­கா­லத்தில் தான் பயன்­பாட்­டுக்கு வந்­தி­ருப்­பவை.

அது­போ­லவே, விமா­னப்­ப­டைக்கு போர் விமா­னங்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சுவீடன் போன்ற நாடுகள் இலங்­கைக்கு போர் விமா­னங்­களை விற்­ப­தற்கு ஆர்வம் காட்­டு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் கூறி­யி­ருந்தார்.

எந்த நாட்டின் போர் விமா­னத்தைக் கொள்­வ­னவு செய்­வது என்று இன்­னமும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கடந்த வாரம், கொழும்பில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த ரஷ்யத் தூதுவர், அலெக்­சான்டர் கச்­சாவா, இலங்­கைக்கு பாது­காப்புத் தள­பா­டங்­களை விற்­ப­தற்கு தமது நாடு தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

தமது நாட்டின் இரா­ணுவத் தள­பா­டங்­களை பிரதி செய்து தயா­ரிக்­கப்­பட்­ட­வற்றை கொள்­வ­னவு செய்­வதை விட, தமது நாட்டின் மூலத் தயா­ரிப்­பு­களை வாங்­கு­வது சிறந்­தது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

இலங்­கை­யுடன் நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நாடு­க­ளுக்­கி­டையில், தமது நாட்டின் இரா­ணுவத் தள­பா­டங்­களை இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்யும் ஓர் இர­க­சியப் போட்டி நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

பாகிஸ்தான், சீனா, இந்­தியா போன்ற நாடுகள் மாத்­தி­ர­மன்றி, தாமும் இந்தப் போட்­டியில் இருக்­கிறோம் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ரஷ்யா.

கடற்­ப­டைக்கும் கூட சீனா, இந்­தியா, ஜப்பான், அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளிடம் இருந்து பாரிய ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்­களை வாங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆழ்­கடல் கண்­கா­ணிப்புத் திறனைப் பெருக்கும் இலக்­குடன் தான் இந்தக் கப்­பல்­களின் கொள்­வ­னவில் நாட்டம் காட்­டப்­ப­டு­கி­றது. இதன் மூலம் உள்­நாட்டுப் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் திட்டம் இல்லை. சர்­வ­தேச கடல் வழிப்­பாதைப் பாது­காப்புத் திட்­டத்தில் இணைந்து கொள்ளும் நோக்­கமே அர­சாங்­கத்­திடம் இருக்­கி­றது.

அதே­வேளை, வடக்கில் படை­களைக் குறைப்­ப­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் எத்­த­கைய நட­வ­டிக்­கை­யையும் எடுக்கத் தயா­ராக இல்லை என்­பது, பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்தின் போது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

தாம் படை­யி­னரை மேலும் பலப்­ப­டுத்தப் போவ­தா­கவும், அவர்­களைப் பல­வீ­னப்­ப­டுத்த ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் என்றும் தேசிய பாது­காப்பு விட­யத்தில் எந்த விட்டுக் கொடுப்­புக்கும் இட­மில்லை என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன கூறி­யி­ருந்தார்.

அதே­வேளை, பாது­காப்பு அமைச்­சுக்­கான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற் ­றிய அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, வடக் கில் இருந்து படை­யி­னரைக் குறைக்க முடி­யாது என்­ப­தற்கு புதி­ய­தொரு கார ­ணத்தைக் கூறி­யி­ருந்தார். போரின் முடி வில் சர­ண­டைந்த 12 ஆயிரம் விடு­தலைப் புலிகள், சரி­யாகப் புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டாமல் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­க வும், அதனால் வடக்கில் படை­யி­னரைக் குறைக்க முடி­யாது என்றும் அவர் வாதிட்­டி­ருந்தார். 

இன்­னமும் விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும், புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­ட­வர்கள் ஆயு­த­மேந்தும் வாய்ப்­பு­களை நிரா­க­ரிக்க முடி­யாது என்றும் முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ மட்டும் தான் முன்னர் கூறி­வந்தார்.

இப்­போ­தைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருக்கும், மஹிந்த சம­ர­சிங்­கவும் அதே கார­ணத்தைக் கையில் எடுத்துக் கொண்­டி­ருக்­கிறார்.

முறை­யாகப் புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டாத 12 ஆயிரம் விடு­தலைப் புலிகள் இருப்­ப­தா­கவும், அவர்கள் இப்­போது எங்கே என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று தெரி­யாத நிலையில், படை­களை விலக்க முடி­யாது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

அதை­விட இன்­னொரு விட­யத்­தையும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். எங்கு எந்­த­ளவு படை­களை நிறுத்த வேண்டும் என்­பதை பாது­காப்புச் சபை மாத்­தி­ரமே தீர்­மா­னிக்கும். அதனை வெளியார் எவரும் தீர்­மா­னிக்க முடி­யாது என்­பதே அவர் குறிப்­பிட்ட விடயம்.

இதனைச் சொல்­வ­தற்­காகத் தான், 12 ஆயிரம் முன்னாள் போரா­ளிகள் முறை­யாக புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டாமல் விடு­விக்­கப்­பட்­டனர், அவர்­களால் அச்­சு­றுத்தல் இருக்­கி­றது என்ற தொனியில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார் மஹிந்த சம­ர­சிங்க.

வடக்கில் இருந்து படை­களை குறைப்­ப­தற்கு இப்­போ­தைய அர­சாங்­கமும் விரும்­ப­வில்லை. அது தொடர்­பாக அமெ­ரிக்­காவோ, இந்­தி­யாவோ, ஐ.நாவோ அழுத்தம் கொடுப்­ப­தையும் அர­சாங்கம் விரும்­ப­வில்லை.

நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளிலும், இரா­ணு­வத்­தி­னரை சம அளவில் நிறுத்­து­வ­தற்­கான ஒரு பாது­காப்புத் திட்­டத்தை செயற்­ப­டுத்த தற்­போ­தைய அர­சாங்­கமும் தயா­ராக இல்லை.

வடக்கில் தற்­போது பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏதும் இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்றுக் கொள்­கின்­றனர். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் கூட அதனைக் கூறி­யி­ருந்தார்.

ஆனாலும், வடக்கில் இருந்து படை­யி­ன­ரையும் முகாம்­க­ளையும் குறைக்கும் திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்கு அவரும் கூட எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்தார்.

வடக்கில் அதி­க­ளவில் குவிக்­கப்­பட்­டி­ருக்கும் படை­யி­னரைக் குறைக்­கு­மாறு தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில், தமது நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே முன்னாள் போரா­ளிகள் 12 ஆயிரம் பேருக்கு சரி­யான புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்தை அர­சாங்கம் கூற முற்­பட்­டுள்­ளது.

சமூக மயப்­ப­டுத்­தப்­பட்ட முன்னாள் போரா­ளிகள், அமை­தி­யாக வாழ்ந்து வரு­வ­தா­கவும், அவர்­களால் எந்த பிரச்­சி­னையும் இல்லை என்றும் கூறி வந்த தற்­போ­தைய அர­சாங்கம், இப்­போது திடீ­ரென, அவர்­க­ளுக்கு சரி­யாகப் புனர்­வாழ்வு அளிக்­க­வில்லை என்று கூற முற்­பட்­டுள்­ளது.

வடக்கில் படை­களை நிறுத்தி வைப்­ப­தற்­கான புதிய நியா­யங்­களைத் தேடிக் கொள்­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்­கமும் புதிய புதிய உத்­தி­களைக் கையாளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

விடு­விக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் எங்கே இருக்­கின்­றனர் என்ன செய்­கின்­றனர் என்ற விபரங்கள் எல்லாம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விரல் நுனியில் இருக்கின்றன. அவர்கள் இன்னமும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்படுகின்றனர்.

இருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாதுள்ளது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பது, பாதுகாப்பு கொள்கை சார்ந்த விடயத்தில் முன்னைய அரசாங்கத்தின் அணுகுமுறையில் இருந்து வேறுபடப் போவதில்லை என்பதையே தற்போதைய அரசாங்கமும் உணர்த்த முற்படுகிறது.

இத்தகையதொரு நிலையில், வடக்கின் படைக்குவிப்பு விவகாரத்துக்கு இப்போதைக்கு தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

வடக்கின் படைக்குவிப்புக்கு தற்போதைய அரசாங்கம் எப்போது நொண்டிச்சாட்டுக் கூற ஆரம்பித்ததோ, அப்போதே அதற்கான வாய்ப்புகள் அருகத் தொடங்கி விட்டன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.