Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுக்கு வர புலிகளை அமெரிக்கா வற்புறுத்த வேண்டும் அந்நாட்டுத் தூதரிடம் ஹெல உறுமய கோரிக்கை.

Featured Replies

ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுக்கு வர புலிகளை அமெரிக்கா வற்புறுத்த வேண்டும் அந்நாட்டுத் தூதரிடம் ஹெல உறுமய கோரிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுக்கு வருவதாகவிருந்தால் வன்முறைகளைக் கைவிட்டு அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டே வரவேண்டும் என்ற அழுத்தத்தை அமெரிக்கா புலிகளுக்கு வழங்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பிக்கள் நேற்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக்கை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினர். அப்போதே இவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அச்சந்திப்பின்போது அமெரிக்கத் தூதரிடம் அவர்கள் மேலும் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி நாடு முழுவதிலும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமாதானத்தின் மீது சிறிதளவேனும் அவர்களுக்கு அக்கறையில்லை என்பதை அவர்கள் தெளிவாக உணர்த்தி வருகின்றனர்.

கிழக்கிலே உள்ள மூவின மக்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அம்மக்கள் அனைவரும் எம் நாட்டுமக்கள் என்றபடியால் அவர்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கவேண்டிய கடப்பாடு இந்த அரசுக்கு இருந்தது. அந்தக் கடப்பாட்டை அரசு சரியான முறையில் நிறைவேற்ற முற்பட்டதன் காரணமாகவே கிழக்கில் இருந்து பயங்கரவாதத்தை அரசு படையினரால் விரட்டியடிக்க முடிந்தது.

நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால், பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அதை அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தில் அரசு சரியான முறையில் செயற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இந்த அரசின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு இருப்பதனாலேயே நாம் இந்த அரசுடன் இணைந்தோம். அரசின் சமாதானம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

அரசுடன் நாம் இப்போது இணைந்துள்ளதால் இதுபற்றி அதிகம் பேசவேண்டிய மற்றும் இதற்கு ஆதரவு வழங்கவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதை நாம் சரிவரச் செய்வோம். ஆனால், புலிகள் அமைதிப்பேச்சுக்கு வருவதாகவிருந்தால் அவர்கள் அவர்களின் வன்முறை நடவடிக்கைகளை முற்றாகக் கைவிட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத்தான் வரவேண்டும். இதற்கான அழுத்தத்தை அமெரிக்கா புலிகளுக்கு வழங்க வேண்டும்என்று கூறினார்.

இச்சந்தர்ப்பதில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க அமெரிக்கா உதவும் எனக் கூறியுள்ளார்.

-Sudaroli-

ஆயுதங்கள் இவர்களை என்ன செய்யப்போகிறது. பேச்சுவார்த்தைக்குப்

போகும்படிதானே எல்லோரும் கேட்கின்றனர். இது காவியுடைப் பயங்கர

வாதிகளுக்கு விளங்கவில்லையா? முதலில் பேரினவாதம் என்ற ஆயுதத்தை

இவர்கள் கீழே வைக்கும்படி அமெரிக்கா இவர்களிடம் சொல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.