Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாராளுமன்றத்தில் இடம்பிடித்த மலையக மக்களின் காணி விவகாரம்

Featured Replies

பாராளுமன்றத்தில் இடம்பிடித்த மலையக மக்களின் காணி விவகாரம்

 

Parliament is nothing but talking என்று சொல்­வார்கள். அதா­வது பாரா­ளு­மன்­றத்­தினால் பாரிய விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. ஆனாலும் அங்கு பேச்­சுக்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் என்­பதே இதன் அர்த்­த­மா­க­வுள்­ளது. ஊட­க­வி­ய­லா­ள­ராக செய்தி சேக­ரிக்க பல தடவைகள் பாரா­ளு­மன்றம் சென்­ற­துண்டு.எனினும் ஒரு ஊட­க­வியல் மாண­வ­ராக கடந்த வாரம் பாரா­ளு­மன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்­தது. அதன்­போது சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் சந்­திப்பை மேற்கொள்வதற்கான ஒழுங்கும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதன்­போது மாண­வர்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பதி­ல­ளித்­தனர்.

இந்த சந்­திப்பு 'குழு அறையில்' இடம்­பெற்­றது. இளம் ஊடக பயி­லு­நர்­களை அழைத்துச் சென்­றி­ருந்த விரி­வு­ரை­யா­ளரும் மூத்த பத்­தி­ரி­கை­யா­ள­ரு­மான அமீன் நாட்டின் பல்­வேறு தலை­யெ­ழுத்­துக்­களை தீர்­மா­னிக்கும் அறை என குழு அறை­களை குறிப்­பிட்டார். இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாத்­தி­ர­மல்­லாது, ஊட­க­வியல் பாட­நெ­றியின் பழைய மாண­வ­ராக இருந்­த­வ­ரு­மான எம். தில­க­ராஜா 'நிலை­யியற் குழுக்கள்', 'துறைசார் மேற்­பார்வை குழுக்கள்', பற்றி எமக்கு விளக்கம் அளித்தார். அதன்­போது பாரா­ளு­மன்ற உரைகள் இடம்­பெறும் சபை மண்­ட­பத்­திற்கு அப்பால் ((chamber) இந்த குழு அறைகள் வகிக்கும் முக்­கிய வகி­பாகம் குறித்த விளக்கம் கிடைத்­தது. அதே­போல பாரா­ளு­மன்ற சபா மண்­டபம் 'பாரா­ளு­மன்­ற­மாக' இயங்­கு­வது மற்றும் குழு­நி­லையில் அல்­லது சபை­யாக இயங்­கு­வது பற்­றியும் திலகர் எம்.பி. குறிப்­பிட்டார்.

செங்கோல் வைக்­கப்­பட்­டி­ருக்கும் இடம் அதனைத் தீர்­மா­னிக்­கின்­றது எனும் விளக்கம் மாண­வர்­க­ளுக்கு புதி­ய­தாக கூட அமைந்­தது எனலாம். அத்­துடன் 'அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக' பாரா­ளு­மன்றம் செயற்­படும் எனும் அண்­மைய தீர்­மா­னமும் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயற்­பா­டுகள் குறித்த உரை­யாடல் கூட இட­ம்­பெற்­றது. அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாண­வர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்தார். நிலை­யியல் குழுக்கள், துறைசார் மேற்­பார்வை குழுக்கள் பற்றிக் கூறிய திலகர் எம்.பி இவற்றுள் பல­வற்­றுக்கு எதிர்க்­கட்­சி­யினர் தலை­வர்­க­ளாக இருந்து செயற்­ப­டு­வது தற்­போ­தைய எட்­டா­வது பாரா­ளு­மன்றில் ஏற்­பட்­டி­ருக்கும் ஜன­நா­யக முன்­னேற்றம் என தெரி­வித்தார். அமெ­ரிக்­காவில் கூட துறைசார் மேற்­பார்வை குழுக்கள் அனைத்திலும் ஆளும் கட்­சி­யி­னரே அங்கம் வகிப்­ப­தா­கவும் தெரி­வித்­த­துடன் இது தொடர்பில் பல தக­வல்­களும் இதன்­போது கலந்­து­ரை­யாடக் கிடைத்­தது.

பாரா­ளு­மன்றம் அங்கு இடம்­பெறும் பேச்­சுக்கள் தொடர்­பாக பல்­வேறு விமர்­ச­னங்கள் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நில­வு­கின்­ற­போதும் கூட அங்கு இடம்­பெறும் மிக முக்­கிய விடயம் அங்கு 'சட்டம்' உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது என்­பதும் அங்கு உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளோரின் 'பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்' ஆயினும் அவர்­க­ளது விஞ்­ஞான பெயர் 'சட்­ட­வாக்­கு­நர்கள்'(law makers) என்­பது அவ­தா­னிக்­கப்­பட வேண்­டி­யது.

ஆம், இது இவ்­வா­றி­ருக்க எனது பத்­தியின் நோக்­கத்­திற்கு வரு­கின்றேன்

கடந்­த­வாரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனுர குமார திஸா­நா­யக்க பாரா­ளு­மன்றில் மலை­யக மக்கள் தொடர்பில் அனு­தாப அலை­களை வீசி­யி­ருந்தார். இது பற்றி ஊட­கங்கள் உட்­பட சமூக வலைத்­த­ளங்கள் என்­ப­வற்றில் பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. பாரா­ளு­மன்றில் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா எனும் கேள்­வியும் இதன்­போது முன்­வைக்­கப்­பட்­டது. இவ்­வி­டயம் தொடர்பில் அன்­றைய தினம் நாம் பல விட­யங்­களை தெரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அதனை வெளிப்­ப­டுத்­து­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

மலை­யக மக்கள் 1947 க்கு முன்­பி­ருந்தே பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வத்தை கொண்­டி­ருந்­தனர். கோ.நடே­சய்­யரின் உரைகள் முக்­கிய பங்கு வகித்­த­தாக அறிய முடி­கின்­றது. எழுத்­தாளர் அந்­தனி ஜீவா, அந்த உரை­களின் ஹன்சாட் பதி­வு­களை வைத்­தி­ருப்­ப­தா­கவும் யாரா­வது வெளி­யிட முன்­வந்தால் தான் அதற்கு தயா­ரென்றும் சொல்­லி­யி­ருக்­கிறார். 1947–-1952 காலப்­ப­கு­தியில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்த எட்­டுப்­பேரில் சி.வி. வேலுப்­பிள்­ளையின் சில முக்­கிய உரைகள் மாத்­திரம் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன. ஏனையோர் உள்­ளிட்ட அந்த எட்டுப் பேரின், அதா­வது சௌமியமூர்த்தி தொண்­டமான், சி.வி வேலுப்­பிள்ளை, எஸ்.எம்.சுப்­பையா, வி.குமா­ரவேல், ஆர்.மோத்தா, டி.ராமா­னுஜம், கே.ராஜ­லிங்கம், ஏ.ஏ.அஸீஸ் ஆகி­யோரின் உரைகள் கூட நூலு­ரு­வாக்கம் பெற­வேண்­டி­ய­வையே.

1977 க்குப்­பின்னர் அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் உறுப்­பி­ன­ராக இருந்து வந்­துள்ள வேளை அவ­ரது உரைகள் நூலு­ரு­வா­கி­யி­ருக்­கின்­ற­னவா என தெளி­வான தகவல் இல்லை. எனினும் அமரர் பெ.சந்­தி­ர­சே­க­ரனின் உரை­களை எச்.எச். விக்­கி­ர­ம­சிங்க தொகுத்து நூலாக்­கி­யுள்ளார். அவ­ருக்­குப்­பின்னர் மலை­யக மக்கள் குறித்த பிரச்­சி­னைகள் பாரா­ளு­மன்றில் பெரி­தாக பேசப் ­ப­டு­வ­தில்லை எனும் குற்­றச்­சாட்டு பர­வ­லாக இருந்து வந்­துள்­ளது. இது குறித்து பாரா­ளு­மன்­றத்­தி­லேயே உரை­யாற்றி திலகர் எம்.பி 2016 ஆம் ஆண்டு வரவு–செலவு திட்ட விவா­தங்­க­ளின்­போது ஹன்சாட் விப­ரங்­களை வெளி­யிட்டு பேசி­யி­ருந்தார். அதே­போல இந்த முறையும் கூட அவ­ரது உரை பர­ப­ரப்பு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அந்த உரை சிங்­க­ளத்தில் அமைந்­தி­ருந்­தமை சிறப்­பம்சம்.

இந்த சந்­தர்ப்­பத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி இந்த வருட ஆரம்­பத்தில் ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்றை முன்­வைத்து ஆற்­றிய உரையும் இந்த முறை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு அமைச்சு மீதான விவா­தத்தில் ஆற்­றிய உரையும் கூட மிகுந்த முக்­கி­யத்­து­வத்­தையும் கவ­னத்­தையும் கூட பெற்­றது. மன­ச்சாட்­சி­யுடன் அந்த உரை­களை கேட்கும் எவ­ருக்கும் அனு­ர­கு­மார மீது ஒரு மதிப்பு ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யாது.

'மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை மிகத்­தெ­ளி­வாக புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் முன்­வைத்து அவர் பேசு­கின்ற விதம் உண்­மையில் கவர்ச்­சி­க­ர­மா­னது. சிங்­க­ளத்­த­லை­வ­ருக்கு தலை­வ­ணங்­கு­கிறேன்' என ஒரு தமிழ் ஊட­க­வி­ய­லாளர் முகநூலில் இட்ட பதிவு பல பகிர்­வு­களைக் கண்­டது. இதே பாணி­யி­லான உரையை இந்த வரவு செல­வுத்­திட்ட விவா­தங்­க­ளின்­போதும் அனு­ர­கு­மார உரை ஆற்­றினார். கிட்­டத்தட்ட இந்த ஆண்டு ஆரம்­பத்தில் ஆற்­றிய அதே­உரை என்று கூட சொல்­லலாம். அதுவும் கேட்­டுக்­கொ­ண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது. அனு­ரவின் கருத்­துக்­களை விவா­தித்து திலகர் எம்.பி. அதே நாளில் ஆற்­றிய சிங்­கள உரை பல்­வேறு மாற்று சிந்­த­னை­களை தோற்­று­வித்­துள்­ளது.

இங்கு முக்­கி­ய­மாக குறிப்­பிட்­டுக்­கூ­ற­வேண்­டிய விடயம் என்­ன­வெனில் மலை­யக மக்­களின் அவல நிலைமை எனும் பெயரில் பாதிக்­கப்­பட்ட பல­த­ரப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் தர­வு­களை மாத்­திரம் அடிப்­ப­டை­யாகக் கொண்டு விட­யப்­ப­ரப்­புக்­களை முன்­வைப்­பதால் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்ந்­துப்­போய்­வி­டு­வ­தில்லை. மாறாக அதற்­கான தீர்­வையும் பெற்­றுத்­தரக் கூடி­ய­தாக அமை­வது தான் சிறப்பு. அவ்­வாறு நடக்­கின்­றதா? மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை முன்­வைப்­பது மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை முன்­வைப்­பது என்­ப­தாக இந்த முறை விவாதம் திசை திரும்­பி­யது.

 அதன் பின்­னதாக அனு­ரவின் உரை மீதான பார்­வையை செலுத்­தினால். இது குறித்து பல கேள்­விகள் எழு­வதை தவிர்க்க முடி­யா­துள்­ளது. 1994 முதல் பாரா­ளு­மன்றில் அங்­கத்­துவம் வகிக்கும் இவர் ஏன் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளா­கத்தான் மலை­யக மக்கள் பற்­றி பேசு­கிறார். மலை­யகத் தலை­வர்கள் எனச் சொல்­லிக்­கொள்வோர் ஒன்றும் பேசு­வ­தில்லை எனக் குற்­றச்­சாட்டும் இவர்கள் கட்­சியின் சார்பில் மலை­யக மக்­களின் பிர­தி­நி­தி­யாக தேசிய பட்­டியல் உறுப்­பு­ரிமை பெற்­றி­ருந்த ராம­லிங்கம் சந்­தி­ர­சே­கரன் (2015–-2010) காலப்­ப­கு­தியில் ஏன் இந்த பிரச்­சி­னை­களைப் பேச­வில்லை எனும் கேள்வி எழு­கின்­றது.

தவி­ரவும் அனு­ரவின் ஆண்டு ஆரம்­பத்­தி­லான உரை­யிலும் இறு­தி­யி­லான உரை­யிலும் ஒரே விடயம் பேசப்­பட்­டது. புள்­ளி­வி­ப­ரங்கள் சில மாறி இருக்­க­லாமே தவிர பேசப்­பட்ட விடயம் ஒன்­றுதான். ஆக மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை பேசிக்­கொண்­டி­ருந்தால் ஒவ்­வொரு வரு­டமும் ஒரே­மா­தி­ரி­யான விச­யம்தான் பேசப்­படும்.

அன்­றைய நாளில் கூட திலகர் எம்.பி. இந்த விவா­தப்­புள்­ளி­யி­லேயே அவ­ரது உரையை அமைத்­தி­ருந்தார். மலை­யக மக்­களின் இந்­திய வம்­சா­வளி அடை­யாளம் குறித்த கேள்­வியை தனது இரண்டு உரை­யிலும் அனுர முன்­வைத்தார். அதற்­காக அவர் வழங்கும் தீர்­மா­ன­மான 'இலங்கைத் தமிழர்' என அழைப்­பதில் உள்ள உள்­ளக அர­சியல் நிலை­மைகள் குறித்து அனுர அறிந்­தி­ருப்­ப­துபோல் தெரி­ய­வில்லை. அதனை திலகர் தனது உரையில் விரி­வாக விப­ரித்து தாங்­ளுக்கு (மலை­யக மக்­க­ளுக்கு) இலங்கைத் தமிழர் எனும் சொல்­லாடல் பொருந்­தாது என விவா­தித்­தி­ருக்­கிறார். அதே­நேரம் மலை­யக மக்­களின் தனி­வீட்டுத் திட்டம் தொடர்பில் அனு­ரவின்; பார்வை தவ­றா­னது என்றும் 'நாடு முழுக்க வீடாக இருந்தால்.. காணி­களின் நிலைமை என்ன ஆவது' எனும் அனு­ரவின் கேள்வி எந்­த­வ­கையில் நியா­ய­மா­னது என்ற கேள்­வியும் எழு­கின்­றது. உண்­மையில் அனு­ரவின் உரையின் அனு­தாபப்பக்கம் தீர்வு முன்­வைப்பில் இல்லை என்­பதை தெளி­வாகத் தெரி­கின்­றது. மொத்த பெருந்­தோட்ட நிலத்தில் 5 சத­வீதம் மாத்­தி­ரமே மக்­களின் தனி­வீட்­டுத்­திட்­டத்­திற்கு பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும் என்றும் இதனை யோசிக்­காத அனுர மலை­யக மக்­களின் காணி­யு­ரி­மையை மறுக்கும் வகையில் மாடி­வீட்­டுத்­திட்­டத்தை பரிந்­து­ரைப்­பதை ஒரு பேரி­ன­வாத அதி­கார மன­நி­லையில் அவ­தா­னிப்­ப­தாக பாரா­ளு­மன்றில் திலகர் குற்றஞ் சாட்­டி­யி­ருந்தார்.

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பேசப்­ப­ட­வேண்­டி­யவை மாத்­திரம் அல்ல அவை தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­ய­வையும் ஆகும் என அந்த மக்கள் மன்றில் திலகர் குற்றஞ் சாட்டியி­ருந்தார். ஆம் உண்மை தான்! மலையக மக்கள் மீது அனுதாபப்படுவதனால் மட்டும் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை. எனினும் கடந்த ஓராண்டு காலமாக மலையக மக்களின் குறிப்­பிட்­டுக்­கூ­டிய பிரதிநிதிகளின் குரல் ஒலிக்கச் செய்­துள்­ளமை மறுப்­ப­தற்­கில்­லை.

 அனுரகுமாரவின் உரையை ஆகா..ஓகோ .. என புகழ்ந்து கொண்டிருந்த அடுத்த மணித்தியாலத்தில் அதே சபையில் அவரது உரையை விமரசன பூர்வமாக எதிர்த்து வாதிட்டு அதுவும் சிங்கள மொழியில் பேசி சபையின் கவனத்தைப்பெற்ற திலகரின் உரையில் இருந்த உணர்வின் மேலீடு அனுரவின் அனுதாபப் பார்வையை சற்றே சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மலையக மக்களின் பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் பேசப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு மிக நீண்டகாலமாக இருந்து வந்­­துள்ள நிலையில் இந்த அனு­தா­பமும் உணர்வும் எதிர்­கா­லத்தில் என்ன சொல்லப்­போ­கின்­றன என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.

-ஜீவா சதா­சிவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-17#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.