Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிளேமோர் கொண்டொன்ரை கொழும்பில் இன்று சனி காலை மீட்கப்படுள்ளது.

Featured Replies

பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிளேமோர் கொண்டொன்ரை கொழும்பில் இன்று சனி காலை மீட்கப்படுள்ளது.

[saturday February 03 2007 08:13:57 AM GMT] [pathma]

மீட்கப்பட்ட இக்குண்டு பழுதுபார்ப்பதற்காக கராஜ் ஒன்றில் விடப்பட்டிருந்த ஆட்டோவில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது .மாளிகாவத்தை பிரதேச வாசி யொருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ ஸ்தலத்திற்கு விரந்து கிளேமோர் குண்டினை மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்த்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Tamilwin

250 ம் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொழும்பில் கைது செய்வதற்கு ஏதாவது விளக்கம் கொடுக்க வேண்டுமே அதுதான் இப்படி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கும்தான். படிப்பறிவில்லாத சிங்கள சனங்களுக்கு தங்களுடைய காவற்துறை பலமாக இருக்கிறது என பொய் சொல்லி ஏமாற்றுவதற்கும்தான்..

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கிளைமோரில் "எதிரியின் பக்கம்" என்று தமிழில் தான் பெரும்பாலும் எழுதியிருக்கும். இது அப்படித் தெரியவில்லை. அதை விட பகிடி என்னவென்றால், கெகலிய ரம்புக்வெலவை கண்டியில் கொல்ல என்று சிங்கள தேசம் கதை விட்ட, கிளைமோரில் சிங்களத்தில் எழுதியிருந்தது. தமிழ் சனத்தை சித்திரவதை செய்ய வேண்டும் என்று தீர்மானிச்சு நடத்துற கூத்தில், கொஞ்சமாவது புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டாமா?

250 ம் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொழும்பில் கைது செய்வதற்கு ஏதாவது விளக்கம் கொடுக்க வேண்டுமே அதுதான் இப்படி!

இருநாட்களில் மொத்தமாக 600க்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொட்டகெனாப் பகுதியில் மட்டும் கைது செய்துகொள்ளப்பட்டுளார்கள். அவ்விடத்திலேயே இப்படி என்றால் தமிழர்கள் அதிகம் வாழும் வெள்ளவத்தையில்???

விரைவில் வெள்ளவத்தையிலும், கிளைமோரோ, துப்பாக்கியோடு கண்டு பிடிக்க கூடும் என்று தான் நினைக்க வேண்டியிருக்கின்றது.

தமிழில எழுதினதும் போன வருடம் பம்பலபிட்டியோ வெள்ளவத்தையில எடுத்தவங்கள். அதுவும் வைச்சிருக்கிறாங்கள். கண்டியில இருக்கிற தமிழருக்கு சிங்களம் வாசிக்கத் தெரியும் எண்டதாலை அப்படி செய்திருக்கலாம்.

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி எண்டால் தமிழிலா எழுதினதை குடுத்ததாத்தான் சரியான பக்கம் வைக்க தெரியும் எண்டு நினைக்கிறாங்கள் போல. அதன் வளைந்த வடிவத்தின் காரணம் தெரியாத தமிழரும் இருப்பினம் தானே.

அது கிடக்க...

தாயகத்தில் போர் முழு அளவில் வெடித்தால் தாயகத்திற்கு வெளியில் இருக்கும் தமிழர்களின் நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்து கருத்தாடுறது பொருத்தமாக இருக்கும். ஊடகங்களும் இதைப்பற்றி கவனம் செலுத்தவில்லை.

2002 இற்கு முன்னர் ஈழப் போர் 3 இன் உச்சத்தில் இருந்த கெடுபிடிகள் போல் இருப்பதோடு நின்று விடும் என்று நினைக்கிறார்களா?

வெளியக சுயநிர்ணய உரிமையை நோக்கி போராட்டம் நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கைத் தீவில் தாயகத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது எதிர்காலம் பற்றி எப்படியான எதிர்பார்ப்பை அடுத்து வரும் 2...3 வருட காலப்பகுதிக்கு வைத்திருக்கிறார்கள்?

முக்கியமாக வேலை வீடு முதலீடுகள் என்று தம்மை ஓரளவு நிலையாக்கி அங்கு இருப்பவர்கள்.

சிறீலங்காவிற்கு வெளியில் இருப்பவர்களிற்கு இது ஒரு பிரச்சனை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு வாசிக்கத் தெரியும், தெரியாது பிரச்சனையல்ல. கிளைமோர் குண்டுகளை புலிகள் தான் வைத்தார்கள் என்று சிங்கள அரசு சொல்லும் பொய் வலிதற்றது என்பதையே நான் சொல்லவந்தது.

சந்திரிக்கா ஆட்சியில் 2000ம் பேருக்கு மேலே கைது செய்யப்பட்டு, களுத்துறை, மற்றும் இதர சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தார்கள். மகிந்த அதை விடக் கடுமையாக இருப்பதால் இந்த்த தொகை மேலும் அதிகரிக்கலாம். தமிழீழத்துக்கு வெளியே, சிங்களப் பிரதேசங்களில், முக்கியமாக கொழும்பு, போன்ற முக்கியமான இடங்களில் வசிப்பவர்கள் சிந்திப்பது நல்லது.

சரி தமிழருக்கு வாசிக்கத் தெரியாட்டி என்னெண்டு சிங்கள அரசாங்கம் பொய் சொல்லுது என்று சொல்லலாம்? கடசியாக எப்ப சிங்கள அரசு பொய் சொன்னது? ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு பொய் சொல்லுது என்று குற்றம் சாட்டுவது எவ்வளவு பிழையானது?

அது கிடக்க...

சரி சந்திரிக்காவை விட மகிந்த கடுமையாக இருக்கிறார் அப்ப 2000 மேல கைதுசெய்வார் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். அதை விட வேறு என்ன நடக்கு?

ஜெயசுக்குரு மாதிரி ஒண்டு நடக்கும்...

ஓயாத அலைகள் -4 மாதிரி ஒண்டு நடக்கும்...

தீச்சுவாலை மாதிரி ஒண்டு நடக்கும்...

கட்டுநாயக்கா மாதிரி ஒண்டு நடக்கும்...

பிறகு 2002 மாசி புரிந்துணர்வு ஒப்பந்தம் மாதிரி ஒண்டு நடக்கும்...

தமிழர் சிறீலங்காவில தொடர்ந்து இருக்கலாம்?

இது தான் எமதுபோராட்டத்தை தீவிரப்படுத்தப் போகிறோம், பிரிந்து செல்வதை விட வேறு வழியில்லை என்றதற்கான அடுத்து வரும் வருடங்களிற்கான செயல்வடிவமாக இருக்குமா? அதாவது முந்தி நடந்த மாதிரி ஆனால் எல்லாம் கொஞ்சம் கடுமையாக இருக்குமோ?

முன்னர் போல் இல்லாது இந்த முறை இறுதி யுத்தம் ஒன்றை நோக்கி செல்கிறோம் என்றால் அது எப்படியான சூழ்நிலையை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்திற்கு வெளியில் வாழும் தமிழர்களிற்கு ஏற்படுத்தும்?

  • கருத்துக்கள உறவுகள்

நீர் இப்படி எழுதித் தான், பலர் ஆதரவாக எழுதுகின்றீரா, எதிராக எழுதுகின்றீரா என்று தெரியாமல் குழம்பி வாக்குவாதப்படுகின்றவை.

கடைசியாக எப்பபோது மெய் சொன்னது என்று கேட்டால், ஏதோ, வரலாறுகளைத் தேடிப்பார்த்து; சொல்லலாம். பொய் எப்ப என்றால் எப்படிக் கணிக்கின்றது?

பிறகு 2002 மாசி புரிந்துணர்வு ஒப்பந்தம் மாதிரி ஒண்டு நடக்கும்...

தமிழர் சிறீலங்காவில தொடர்ந்து இருக்கலாம்?

இது தான் எமதுபோராட்டத்தை தீவிரப்படுத்தப் போகிறோம், பிரிந்து செல்வதை விட வேறு வழியில்லை என்றதற்கான அடுத்து வரும் வருடங்களிற்கான செயல்வடிவமாக இருக்குமா? அதாவது முந்தி நடந்த மாதிரி ஆனால் எல்லாம் கொஞ்சம் கடுமையாக இருக்குமோ?

நிச்சயமாக நல்லதொரு கேள்வி. நாங்கள் அதற்காக என்ன செய்திருக்கின்றோம் என்றால் அது பூச்சியம் தான். இறுதி யுத்தம் என்று வாயால் சொல்லிக் கொள்கின்றோமே தவிர, அதை மனதளவில் ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா?

இறுதி யுத்தம் என்று சொல்லி புறப்பட்டோம் என்றால் அதற்கான ஆயத்தங்களில் மக்களாகிய நாம் எவ்வளவு தூரம் செய்திருக்கின்றோம். வெற்றி பெற்ற பின்னர் ஆக வேண்டிய பணிகள் குறித்து எவ்வளவு தூரம் சிந்தித்திருக்கின்றோம்.

நாம் என்னும் நிறையவே செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால் அதைப் பற்றிய தெளிவில்லாத போக்குத்தான் மேலோங்கி நிற்கின்றது.

அரோகரா

தென் இலங்கையில இருக்கிறவை இறுதி யுத்தத்திற்கு எப்படி பங்களிக்கப் போறியள் என்று ஊடகங்கள் ஆய்வு செய்யேல்லை கடசி யாழ்களத்திலாவது ஆய்வு செய்வம் எண்டது அல்ல நான் கேக்கவாறது.

தென் இலங்கையில் வாழும் தமிழர்;களின் எதிர்காலம் என்ன? அங்கு அவர்கள செய்துள்ள முதலீடுகளின் எதிர்காலத் என்ன? முன்னர் போல் அல்லாது இந்த முறை இறுதிப் போர் பிரிந்து செல்வதற்கான போர் என்று மூச்சுப் பெறும் என்பது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு. அது வந்து முன்னய ஈழப்போர்களை விட முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையைத்தானே தோற்றுவிக்கும் இலங்கைத் தீவு முழுவதும். அதை எப்படி மகிந்த சந்திரிக்காவை விட கடுமையாக இருக்கிறார் ஆனபடியால் 2000 விட கூடப்பேரை கைது செய்வார் கவனமாக இருக்க வேணும் என்று சிறுமைப்படுத்தலாம்?

நான் உங்களின் தனிப்பட்ட திட்டங்களைக் கேக்கவில்லை. ஆனால் அங்குள்ளவர்களிடம் பொதுவாக எப்படியான எதிர்பார்ப்பு அடுத்து 2...3 வருடங்கள் பற்றி இருக்கிறது?

போராட்டத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது எதிரானவர்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் என்ன என்று கடுமையாக யோசிக்கத் தேவையில்லை. ஆனால் அதரவானவர்கள் என்னத்தை எதிர்பார்க்கிறார்கள் தென் இலங்கையில் அவர்களது இருப்பைப் பொறுத்தவரை?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்னவோ பிரியோசனமாகச் சிந்திக்கின்றீர் என்று நினைச்சன்.

கொழும்பில் முதலிட்டுள்ள, குடிமனைகள் வாங்குகின்ற மக்கள் தான் இது பற்றிச் சிந்திக்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை எத்தனை பேர் போராட்ட சிந்தனையோடு இருக்கின்றார்கள் என்று அறிய முடியவில்லை. தொலைக்காட்சியில் நாடகங்கள் பார்க்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அதில் இதைப் பற்றி என்ன சிந்திக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.