Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'திராவிட இயக்கமே ஸ்டாலின்தான்!' - நாஞ்சில் சம்பத்தின் 'நள்ளிரவு தூது'

Featured Replies

'திராவிட இயக்கமே ஸ்டாலின்தான்!'  - நாஞ்சில் சம்பத்தின் 'நள்ளிரவு தூது'

sampath_madurai_10173.jpg

.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். 'தி.மு.கவில் இணைவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார். நேற்று இரவு முழுக்க தீவிர ஆலோசனையில் இருந்தார். ஜனவரி முதல் வாரத்தில் இணைப்புப் பணி நடைபெறும்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'முதலமைச்சர் பதவியையும் அவர் ஏற்க வேண்டும்' என ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசி வருகின்றனர். சசிகலா தலைமையை ஏற்காத சீனியர்கள்கூட, அன்றாடம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் மிஸ்ஸிங். " உடல் நலமில்லாமல் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே, கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார் சம்பத். அவர் இறந்தபிறகு, சசிகலா தலைமையை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை என்று தகவல் தந்தியடித்தது. ஆனாலும், அவரிடம் பேசிய அவருடைய ஆதரவாளர்கள், ' ம.தி.மு.கவில் இருந்து விலகி வந்த நமக்கு, அ.தி.மு.கவில் நல்ல களம் அமைத்துக் கொடுத்தார் ஜெயலலிதா. உடல் நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் நீங்கள் அனுமதிக்கப்பட்டபோது, 50 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்தார். உங்கள் மகனுக்கு மருத்துவப் படிப்பிற்கான சீட்டையும் வாங்கித் தந்தார். கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நேரத்தில் நீங்கள் செல்வது நன்றாக இருக்காது' எனத் தெரியப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை முழுமனதாக நாஞ்சில் சம்பத் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. நேற்று காலை முதலே, 'அரசியலிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகுகிறார் என செய்தி வெளியானது. இதை மறுத்த நாஞ்சில் சம்பத் தரப்பினர், 'அரசியல் கூட்டங்களைவிட இலக்கியக் கூட்டங்களே மேல்' என்று கூறியதை, தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்' என விளக்கினர். 

nanjil_11073.jpg

 

"ஆனால், உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக தி.மு.கவில் இணைவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் சேகர் பாபு எம்.எல்.ஏ மூலமாக ஸ்டாலினிடம் விரிவாகப் பேசியிருக்கிறார். 'திராவிட இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றப் போவது நீங்கள் மட்டும்தான். உங்களால் மட்டும்தான் இந்த இயக்கம் உயிர் பெறும். என்னுடைய இறுதிக் காலம் வரையில் உங்களோடு பயணிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். கார்டன் தரப்பில் இருந்து என்னைச் சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்களிடம் நான் எதுவும் பேசவில்லை. இதுவரையில் சசிகலாவை சந்திக்க நான் கார்டன் செல்லவில்லை' என உருக்கமாகப் பேசியிருக்கிறார். அவர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்" என விவரித்த அறிவாலய நிர்வாகி ஒருவர்,

kasi_10596.jpg" நாஞ்சில் சம்பத் உறுதியாகத்தான் சொல்கிறாரா என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ம.தி.மு.கவில் இருந்து பிரிந்தபோதும், 'தி.மு.கவிற்கு வருகிறேன்' என தூது விட்டார். ஆனால், அ.தி.மு.கவில் இணைந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வாங்கினார். பிறகு, முதல்வர் ஜெயலலிதா பற்றியும் அ.தி.மு.க பொதுக்குழு பற்றியும் விமர்சித்த காரணத்திற்காக, கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அப்போதும் தூது அனுப்பினார். ஆனால், கட்சியில் சேரவில்லை. தேர்தல் நேரம் என்பதால், அவரை அ.தி.மு.க பயன்படுத்திக் கொண்டது.  இப்போது மூன்றாவது முறையாக நேரடியாகவே வந்து பேசுகிறார். தி.மு.க தரப்பில் இருந்து அவருக்கு எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. ஒருவேளை நிலைமையில் முன்னேற்றம் இருந்தால் ஜனவரி முதல் வாரத்தில் முறைப்படி அவர் தி.மு.கவில் இணையலாம்" என்றார் விரிவாக. 

நாஞ்சில் சம்பத்துடன் அ.தி.மு.கவில் இணைந்த வழக்கறிஞர் காசிநாத பாரதியிடம் பேசினோம். "அவர் தி.மு.கவில் இணையப் போகிறார் என்ற தகவல் எங்களுக்கும் கிடைத்துள்ளது. ' இப்போதுள்ள சூழலில் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டாம்' என அவரிடம் வலியுறுத்தினோம். அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ம.தி.மு.கவில் இருந்து வந்த எங்களுக்கு, அ.தி.மு.கவில்தான் நல்ல முகவரி கிடைத்தது. தி.மு.கவில் அவர் சேராமல் இருப்பதே நல்லது என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் கருத்து. அவருடைய முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்றார் உறுதியாக. 

"இப்போதைக்கு அவரைத் தொடர்பு கொள்ள முடியாது. விரைவில் பேசுவார்" என்ற ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டார் நாஞ்சில் சம்பத்தின் மகள் மதிவதனி. 

எப்போது தொடர்பு கொண்டாலும் எந்தக் கேள்வி என்றாலும் சற்றும் தயக்கம் இல்லாமல் அடுக்குமொழியில் அருவி போல கொட்டுவார் நாஞ்சில் சம்பத். இப்போது அருவி அமைதியாக இருப்பதன் பின்னணி என்ன? சம்பத் மனம் திறந்து பேசினால்... அதையும் பதிவு செய்யக் காத்திருக்கிறோம்!

http://www.vikatan.com/news/tamilnadu/75522-nanjil-sampath-likely-to-join-dmk.art

  • கருத்துக்கள உறவுகள்
Quote

nanjil_11073.jpg

 

இனோவா சம்பத் : கழகத்தின் கொள்கைகளை பரப்பவும் திராவிட இயக்கத்தின் கருத்துகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பவும் எனக்கு ஒரு பென்ஸ் 7 சீட்டர் கார் பரிசாக தர இயலுமா ?
ஸ்டாலின் : நானே கட்ட வண்டியில்தான் போறன்.!
இனோவா சம்பத் : கட்சியில் சேருவதை யோசித்து சொல்கிறன்..
ஸ்டாலின் : டொயொட்ட்டா பார்சுனர் பரவாயில்லையா..?
டிஸ்கி :
ஸ்டாலின் மைன்வாய்ஸ் : சாமியே சைக்களில் போறார்... பூசாரிக்கு பூல்லட் கேட்குதாம்!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

“அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன!”

 

அதிர வைக்கும் நாஞ்சில் சம்பத்

 

“அ.தி.மு.க-வில் நான் இணைந்த உடனே எனக்குப் பொறுப்பும் கொடுத்து, காரும் வழங்கியவர் புரட்சித் தலைவி. அவர் இல்லாத இந்த இயக்கத்தில் எனது இயக்கம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை” என தழுதழுக்கிறார் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மரணத்துக்குப் பின், சசிகலாவின் அரசியல் என்ட்ரி குறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம்.

p34a.jpg

“ஜெயலலிதா இல்லாத இந்த வெற்றிடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“சூன்யமாகப் பார்க்கிறேன். ஒருவர் இறந்த பின் ‘யாரும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம்’ என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. எனக்குத் தெரிந்து இப்போதுதான் அது உண்மையாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. இந்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரும் இல்லை”.

“பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்களே?’’

“அதை பொதுக்குழுதான் தீர்மானிக்க வேண்டும். ‘இதற்கு எதிராகவும் நான் இல்லை, யாருக்கு ஆதரவாகவும் நான் இல்லை’ என்பதுதான் என் மனநிலை.’’

“ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு போட்டுள்ளாரே?’’

“இந்த மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அம்மாவை யார் பார்த்தார்கள் என்ற விவரங்கள்கூட தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்கு என அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, படிப்படியாக நோய் வந்தது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். அதன் பிறகு ‘தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் சரியாக தெரிந்துகொள்கிறார், வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், திடீரென அம்மா இந்த நிலைக்கு ஏன் ஆளானார் என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்கு எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளும் எழுகின்றன. சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா வழக்கு போட்டிருப்பதன் மூலம்,  உண்மைகள் ஊர்வலம் வருமானால் எனக்கு மகிழ்ச்சிதான்.’’

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி உள்ளது?’’

“லட்சக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் அன்பைப் பெற்ற இயக்கம் அ.தி.மு.க. அதைச் சரியாக வழிநடத்திச் சென்றால் எக்காலத்திலும் அந்தக் கட்சிக்கு ஊனம் ஏற்படாது. அது வழி நடத்தக் கூடியவர்களின் வல்லமையைப் பொருத்தது.’’

“தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வில் குரல்கள் எழுகின்றனவே?’’

“அவர் பேட்டியை நான் பார்த்தேன். வார்த்தைகளை அளந்து பேசுகிறார். அவரிடத்தில் முதிர்ச்சி தெரிகிறது. அவருக்கும் முதல்வராக இருந்த அம்மாவுக்கும் இருந்த உறவு முறை ரத்த சம்பந்தம் உடையது. அ.தி.மு.க என்ற இயக்கத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இருப்பது எனக்கே கொஞ்சம் வருத்தத்தை  ஏற்படுத்துகிறது. சிலர் வெளிப்படையாக இறங்கிவிட்டார்கள். என்னைப்போன்று பொறுப்பில் இருப்பவர்கள் அப்படி செய்ய முடியாது.’’

p34.jpg

“கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோ மீது தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தியுள்ளார்களே?’’

“ஜெயலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபோது, கலைஞர் மீது கணைகளை வீசியிருந்தார் வைகோ. ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலின்போது, ஒரு மலிவான விமர்சனத்தை கலைஞர் மீது வைத்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். இப்போது அ.தி.மு.க-காரர்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார். சம்மன் இல்லாது ஆஜராகும் மனிதராகத் தன்னை அவரே தாழ்த்திக்கொண்டார். தமிழக அரசியலில் அவர் கேலிப் பொருளாகிவிட்டது வேதனையைத் தருகிறது. அந்த தி.மு.க தொண்டர்களின் உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால், அந்த அசம்பாவிதம் அரங்கேறி இருக்கக்கூடாது. அதன் பிறகு தி.மு.க-வின் பொருளாளர், செய்தி தொடர்பாளர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்த பிறகும் வைகோ இதைக் கண்டித்து பேட்டி கொடுப்பது அநாகரிகத்தின் உச்சம். ஒரு அருவருக்கத்தகுந்த அரசியல்வாதியாக மாறிப்போனார் வைகோ என்பது துரதிர்ஷ்டவசமானது.’’

‘’ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும்போதே, சசிகலாவை முதல்வராக சிலர் முன்மொழிகிறார்களே?’’

‘’ஓ.பி.எஸ் அவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த அன்றே, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அமைச்சர் கருத்து சொல்கிறார். ஒரு அமைச்சரவை என்பது கூட்டுபொறுப்புள்ளது; அதை மறந்துவிட்டு அந்த அமைச்சர் பேசுகிறார். முதல்வர் டெல்லி சென்ற அன்றைக்கு இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்திருப்பது முதல் அமைச்சருக்குப் பின்னடைவு. மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை சக அமைச்சரே இப்படி மட்டம் தட்டுவது இதுவரைக்கும் எங்கேயும் நிகழ்ந்தது இல்லை. உதயகுமார் ஆசையை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமாக இருக்கவேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.’’

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.