Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசியின் பஞ்ச தந்திரம்!

Featured Replies

சசியின் பஞ்ச தந்திரம்!

 

 

‘சசியின் பஞ்ச தந்திரம்... ரேப்பர் ரெடி செய்யவும்’ - கழுகார் அனுப்பி வைத்த வாசகம் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. தலைப்பை லே அவுட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த நேரத்தில் கழுகார் வந்து அமர்ந்தார்.

p44a.jpg‘‘ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டன. சூழ்ச்சிகள், வீழ்ச்சிகள் என எதுவும் இல்லாமல் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாமே சசிகலாவின் தந்திரம்தான். அவர் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்ச தந்திரம் பற்றித்தான் இப்போது ஹாட் டாபிக்’’ எனச் சொல்லி குறிப்பு நோட்டை புரட்ட ஆரம்பித்தார். ‘‘பி.ஜே.பி-க்கு தலையாட்டுதல், தி.மு.க-வுக்கு அனுசரணை, கட்சியினர் ஆதரவு மாயை, மீடியாக்கள் தயவு, மக்கள் தலைவி அவதாரம் என ஐந்து அஸ்திரங்களை கையில் வைத்து பஞ்ச தந்திரம் ஆடிக்கொண்டிருக்கிறார் சசிகலா.’’

‘‘ஒவ்வொன்றாக சொல்லும்.’’

‘‘தந்திரம் 1.

தான் முதல்வராக இருந்த காலத்தில்கூட கருணாநிதியிடம் நட்பு பாராட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், ஜெயலலிதா வசம் அ.தி.மு.க வந்த பிறகு கருணாநிதியை வசை பாடிக்கொண்டே இருந்தார் ஜெயலலிதா. கருணாநிதி வீட்டு நல்லது கெட்டதுகள் எதிலுமே அக்கறை காட்டமாட்டார் ஜெயலலிதா. ஒரு வாழ்த்தோ அல்லது இரங்கலோ கருணாநிதி குடும்பத்தினருக்காக ஜெயலலிதா வெளியிட்டதில்லை. முரசொலி மாறன் மறைந்தபோதுகூட ஜெயலலிதாவிடம் இருந்து இரங்கல் செய்திகூட வரவில்லை. அந்த அளவுக்கு கருணாநிதி மீதும் தி.மு.க மீதும் கடும் கோபத்தில் இருந்தார். அது அவருடைய இறப்பு வரையிலும் தொடர்ந்தது. ஜெயலலிதாவிடம் இல்லாத அந்தப் பண்பாடு... அரசியல் நாகரிகம் அவரது தோழியான என்னிடம் இருக்கிறது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சசிகலா.’’

‘‘ம்...’’

‘‘உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்
குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். ‘அ.தி.மு.க சார்பிலும், எங்களை எல்லாம் வழி நடத்த இருக்கின்ற சசிகலா சார்பிலும் கருணாநிதி உடல்நலம் விசாரித்தோம். கருணாநிதி உடல் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறோம்’ என தம்பித்துரை மீடியாவிடம் சொல்லியிருக்கிறார். அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபோது ஸ்டாலினும் மற்ற தி.மு.க நிர்வாகிகளும் வந்து பார்த்தது போல இது பதில் மரியாதை எனப் பொதுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தி.மு.க-வையும் கருணாநிதியையும் எதிர்ப்பதே கொள்கை மூச்சாகக்கொண்ட ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நலம் விசாரிப்பு நடந்திருக்குமா? இன்னும் நாலரை ஆண்டு ஆட்சிக் காலத்தை காப்பாற்றிக்கொள்ள போடப்பட்ட சமரச ஏற்பாடுதான் இந்த சந்திப்பு என்கிறார்கள். அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தவர்களில் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பற்றித்தான் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்துப் பேசியதில் அரசியல் புதைந்து கிடந்தது. அப்போதே ‘முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு தி.மு.க-வால் எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எங்களால் எந்தத் தொந்தரவும் இருக்காது’ என ராஜாத்தி அம்மாளிடம் சசிகலா சொன்னாராம்.’’

44p21.jpg

‘‘தந்திரம் 2 என்ன?’’

‘‘மீடியாக்கள் தயவு. ஜெயலலிதாவின் மறைவு கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ஜெயலலிதாவின் உடல்நிலை இனியும் தேறாது என்பது எல்லோரையும்விட அப்போலோவில் அவர் பக்கத்தில் இருந்த சசிகலாவுக்குத் தெரிந்திருக்கும். அப்போதே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற பிளான் போடப்பட்டிருக்கும். அதன் ஒரு அங்கம்தான் ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் இருந்தபோது அவசர அவசரமாக நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பதவியேற்றது. அஞ்சலி செலுத்த இரண்டு நாட்கள்கூட தராமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது எல்லாம் அரங்கேறியது. இது எல்லாம் அவசர அவசரமாக செய்யப்பட்ட ஏற்பாடுகள் அல்ல. இது ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. அந்தத் திட்டங்களின் இன்னொரு அம்சம்தான் மீடியாக்களின் ஆதரவு தனக்கு இருப்பது போன்ற தோற்றத்தை சசிகலா உருவாக்கியிருப்பது. பத்திரிகைகளின் முதலாளிகள் எல்லோரும் சசிகலாவை சந்தித்துவரும் செய்திகளையும் போட்டோக்களையும் அ.தி.மு.க தலைமை ரிலீஸ் செய்துகொண்டே இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்த பத்திரிகையாளர்கள்கூட சந்திக்க முடிந்தது கிடையாது. இப்போது சசிகலா எல்லா பத்திரிகையாளர்களையும் பார்ப்பது எதற்காக என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.’’

44p11.jpg

‘‘தந்திரம் 3 பற்றி சொல்லும்?’’

‘‘பி.ஜே.பி-க்கு தலையாட்டுதல். புரோட்டோகாலை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வந்துபோனார். சில ஆண்டுகள் முன்பு இது நடந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கைகள் என ஒரு பெரிய ஃபைலை மோடியிடம் நீட்டினார் ஜெயலலிதா. அதில் ஜெயலலிதா கேட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேறவில்லை. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனபிறகு பி.ஜே.பி-யின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற ஆரம்பித்தது அ.தி.மு.க. ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எல்லாம் பி.ஜே.பி சொன்னதற்காக தலையாட்ட ஆரம்பித்தது அ.தி.மு.க ஆட்சி. உதய் திட்டம், மதுரவாயல் பறக்கும் சாலை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., காவிரி விவகாரம் என அனைத்திலும் பல்டி அடித்தது. ஜெ ‘NO’ சொன்ன திட்டங்களுக்கு ‘YES’ சொல்ல ஆரம்பித்தார்கள். காரணம், மத்திய அரசின் தயவு தேவை என்பதுதான். ரோசய்யா கவர்னராக இருந்தவரையில் ஜெயலலிதா ஆட்சிக்கு தலை ஆட்டிக்கொண்டிருந்தார். மகாராஷ்டிரா கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. அடக்கி வாசித்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனபிறகு முதல்வரின் துறைகளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றியது, சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை என கவர்னரே சொன்னது எல்லாவற்றிலுமே வித்யாசாகர் ராவ் தலையீடு அப்பட்டமாக வெளிப்பட்டது. நாடாளுமன்ற லோக் சபாவில் பி.ஜே.பி-க்கு மெஜாரிட்டி இருந்தும் ராஜ்ய சபாவில் போதிய எண்ணிக்கை இல்லை. அதனால், அ.தி.மு.க ராஜ்ச சபா எம்.பி-க்கள் மீது கண் பதித்தது பி.ஜே.பி. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. தங்கள் நாலரை ஆண்டு ஆட்சிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா காட்டிய ஆர்வம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதன் வெளிப்பாடுதான் உதய் திட்டம், மதுரவாயல் பறக்கும் சாலை, நீட் தேர்வு ஆகியவற்றுக்கு இதுவரை காட்டிய எதிர்ப்புப் பாதையில் இருந்து திசை மாறியது.’’

44p41.jpg

‘‘தந்திரம் 4. கட்சியினர் ஆதரவு மாயைதானே?’’

‘‘கககபோ... ‘சசிகலாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். வழிநடத்திச் செல்ல வேண்டும்’ என கிளிப்பிள்ளைப் போல கட்சிக்காரர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லிவைத்து நடத்தப்படும் இந்த நாடகம் இப்போதுவரையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தலைவி இருந்தபோது சசிகலா பற்றி பேசவே தயங்கியவர்களுக்கு இப்போது எங்கிருந்து தைரியம் வந்தது எனத் தெரியவில்லை. சசிகலா பிறந்தநாளுக்கு ஃபிளக்ஸ் வைத்தவர்களையும் அவருக்காகப் பேரவை ஆரம்பித்தவர்களையும் கட்சியில் இருந்தே கட்டம் கட்டினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத விஷயத்தை அவர் இறந்தபிறகு பிடிக்கும் வகையில் மாற்றி வருகிறார்கள். ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகமாக இது இருந்தாலும் பரவாயில்லை என சசிகலாவைத் தலைமையேற்க நிர்வாகிகள் வறுபுறுத்துகிறார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா. ஐந்தாண்டுகள் தொடர்ந்து கட்சியில் இருந்தால் மட்டுமே கட்சியின் பொறுப்புக்கு வர முடியும் என்பது கட்சியின் சட்டதிட்ட விதி. 2011 டிசம்பரில் நீக்கப்பட்டு 2012 ஏப்ரலில் கட்சிக்கு வந்த சசிகலா அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக முடியாது. ‘அதற்காக விதிகளை திருத்துவோம்’ என சொல்லியிருக்கிறார் செய்தித் தொடர்பாளர் பொன்னையன். அதோடு ‘ஏழு லட்சம் பணத்தை நிதிசேமிப்பு திட்டத்தில் போட்டு, அதற்கு வாரிசாக சின்னம்மாவை அம்மா நியமித்துள்ளார்’ என சொல்லி ஒரு ஆதாரத்தைக் காட்டி சின்னம்மா அம்மாவின் வாரிசு என சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ‘சின்னம்மா முதல்வர் ஆக வேண்டும்’ என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் முழங்கத் தொடங்கியிருக்கிறார். இது எல்லாம் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் சசியின் தந்திரம்.’’

44p61.jpg

‘‘தந்திரம் 5 பற்றி பொழிப்புரை என்ன?’’

‘‘ ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ என்பதுதான் ஜெயலலிதாவின் தாரக மந்திரம். அதுபோல நானும் ‘மக்கள் தலைவி’தான் என அவதாரம் படைக்க ஆரம்பித்திருக்கிறார் சசிகலா. இதுதான் ஐந்தாவது தந்திரம். கட்சியில் சேரும் நிகழ்ச்சி, அம்மாவிடம் ஆசி, தேர்தல் வெற்றி ஆகிய தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் போயஸ் கார்டனுக்குள் கட்சிக்காரர்களோ பொது மக்களோ நுழைய முடியாது. அதையும் தகர்த்திருக்கிறார் சசிகலா. அம்மா வாழ்ந்த வீட்டை பார்க்க அனுமதி என சொல்லி சாரை சாரையாக அங்கே கட்சிக்காரர்கள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு ஆறுதல் கூறுவதோடு சசிகலாவை தலைமையேற்க வலியுறுத்துகிறார்கள். இதுவும் சசிகலாவின் ஏற்பாடுதான். ஜெயலலிதா அமரும் சீட்டில் அமர்ந்துதான் போயஸ் கார்டனில் வி.ஐ.பி-களையும் சந்திக்கிறார் சசிகலா. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் படலத்தையும் தொடங்கியிருக்கிறார். தேனியை சேர்ந்த ஒரு தம்பதியின் பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டி அது மீடியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாமே மக்கள் தலைவி என்கிற அவதாரத்தைக் காட்ட செய்யப்படும் முயற்சி. இவைதான் சசியின் பஞ்ச தந்திர காட்சிகள். அடுத்து என்ன அவதாரங்களை எடுப்பார் என கட்சிக்காரர்கள் காத்துக் கிடக்கிறார்கள்’’ என்றபடியே எழுந்த கழுகார் இதழ் முடிக்கும் இந்த 19-ம் தேதி முக்கியமான நாள் தெரியுமா? சசிகலா உட்பட அவரது உறவினர்களை கட்சியில் இருந்து 2011-ம் ஆண்டு இதே டிசம்பர் 19-ம் தேதிதான் கட்டம் கட்டினார்’’

44p51.jpg

``இந்த மாத இறுதியில் தமிழக சட்டமன்ற கூட்டம் நடக்கலாம். ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது முக்கிய அஜெண்டாவாக இருக்கும். கவர்னர்-முதல்வர் சந்திப்பின்போது இதுபற்றி பேசப்பட்டதாம் என்று சொல்லியபடியே ஜூட் விட்டார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி


மல்லிகா மாறன்...
பழனிவேல் சிகிச்சை!44p81.jpg


மறைந்த முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவுக்கு வயிற்றில் சிறு பிரச்னை. அமெரிக்காவுக்கு அழைத்துப்போய் அங்கே சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவுசெய்து அங்குள்ள ஸ்பெஷலிஸ்டுகளுடன் பேசியிருக்கிறார்கள். ‘இங்கே ஏன் வருகிறீர்கள்? வயிறு, குடல், ஜீரண உறுப்புகளில் லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சையில் டாக்டர் சி. பழனிவேல் பெஸ்ட். இரண்டு முறை பி.சி.ராய் விருது பெற்றவர். அவர்தான் கோவையில் இருக்கிறாரே?’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இவரிடம் யாரும் சிகிச்சை எடுக்கவேண்டுமானால், கோவைக்குத்தான் வரவேண்டுமென்பது பழனிவேலின் கன்டிஷன். இதைக் கேள்விப்பட்ட தயாநிதி மாறன், பழனிவேலிடம் வேண்டுகோள் வைத்து சென்னை ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாராம்.


உளவுத்துறையில் உறவு!44p72.jpg

போலீஸ் உளவுத் துறையின் புதிய கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப் பட்டிருக்கிறார் ஜெயச்சந்திரன். அந்த இடத்தில் இருந்த அதிகாரி டம்மியான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 2012-ம் வருடம் திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் விசாரணை அதிகாரியாக ஆரம்பத்தில், ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். பிறகு, வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது வேறுவிஷயம். இடையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகள் ராஜ மாதங்கிக்கு தனது மகன் விக்ரமை திருமணம் செய்து கொடுத்து சம்பந்தி ஆனார் ஜெயச்சந்திரன். சசிகலாவையும் அவரது உறவினர்களையும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா கட்டம் கட்டினார். அதில் ஜெயச்சந்திரனும் மாற்றப்பட்டார். அவருக்கு மறைமுக அரசியல் தொந்தரவுகள் அதிகமாகின. ஒருவழியாக, எல்லாம் ஓய்ந்த நிலையில் இப்போது உளவுத்துறையின் கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

http://www.vikatan.com

யாரப்பா எங்க மேடத்தை சசி என்று மரியாதை இல்லாமல் எழுதுவது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.