Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன்

Featured Replies

இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன்

 

ரொபட் அன்டனி

நீதி­ வ­ழங்கும் செயற்­பாட்டில் எவ்­வா­றான பொறி­மு­றையை இலங்கை முன்­வைக்கப் போகின்­றது என்­பதே சர்­வ­தே­சத்தின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்­வைக்கப்போகும் அறிக்கை ஆர்­வத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யுள்­ளது. அதா­வது ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கப்­போ­கி­றாரா? அல்­லது இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ர­ணை­கொண்­டு­வ­ரு­வ­தற்­கான வழியை  ஏற்­ப­டுத்தப் போகி­றாரா?

மிகவும் பர­ப­ரப்­பாக இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­படும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திக­தி­யி­லி­ருந்து மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் மிகவும் பர­ப­ரப்­பான விட­யங்கள் இம்­முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அமர்வில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசைன் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெ ளியி­ட­வி­ருக்­கின்­றமை இலங்கை விட­யத்தில் ஒரு தீர்க்­க­மான அம்­ச­மாக காணப்­ப­டு­கி­றது.

அதா­வது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நடை­பெற்ற 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு நிறை­வேற்­றி­யது என்­பது தொடர்­பா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசைன் இம்­முறை கூட்டத் தொடரில் எழுத்து மூல அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

 அந்­த­வ­கையில் செயிட் அல்­ஹு­சைனின் அறிக்கை எவ்­வாறு அமையப் போகி­றது? இலங்­கையை விமர்­சிக்கப் போகி­றாரா அல்­லது இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள செயற்­பா­டுகள் தொடர்பில் திருப்தி வெளி­யி­டு­வாரா அல்­லது எவ்­வா­றான பரிந்­து­ரை­களை முன்­வைக்கப் போகி­றாரா்? அறிக்கை காட்­ட­மாக அமையப் போகி­றதா? போன்ற விட­யங்­களே ஹுசைனின் அறிக்கை தொடர்பில் தற்­போது பேசப்­பட்டு வரு­கின்­றன.

அந்த வகையில் இலங்­கையில் இந்த செயற்­பா­டுகள் தொடர்­பான செயிட் அல்­ஹு­சைனின் அறிக்கை குறித்தே தற்­போது அனைத்துத் தரப்­பினர் மத்­தி­யிலும் எதிர்­பார்ப்­புக்கள் எழுந்­துள்­ளன. அதா­வது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹு­சைனின் அறிக்கை எவ்­வாறு அமையும் என்­பது அனைத்துத் தரப்­பி­ன­ராலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற விட­ய­மாகும்.

அதற்கு ஏது­வாக தற்­போது இலங்கை குறித்த அறிக்­கையை வெளி­யிடும் திக­தி­யையும் ஆணை­யாளர் வெளியிட்­டுள்ளார். எதிர்­வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அறிக்கை வெளியா­க­வுள்­ளது. அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது ஜெனிவா விவ­காரம் மீண்டும் சூடு பிடித்­துள்­ளது என்று கூறலாம். கடந்த வருடம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்டு இலங்­கை­யினால் அனு­ச­ரணை வழங்­கப்­பட்ட பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்தே செயிட் அல் ஹுசைன் அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ளார்.

 முதலில் குறித்த பிரே­ர­ணையில் என்ன இருக்­கின்­றது என்று பார்ப்போம். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் அலு­வ­ல­க­மா­னது இலங்கை தொடர்பில் விசா­ர­ணை­யொன்றை நடத்­தி­யது. அந்த விசா­ர­ணைக்கு அப்­போ­தைய இலங்கை அர­சாங்கம் ஒத்­து­ழைப்பு வழங்­கா­ததன் கார­ண­மாக மனித உரிமை அலு­வ­ல­க­மா­னது இலங்­கைக்கு வெளியே இருந்­த­வாறே விசா­ரணை நடத்­தி­யது.

இறு­தியில் விசா­ரணை நடத்­தி­விட்டு நீண்ட அறிக்­கை­யொன்றை ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் வெளியிட்­டது. அந்த அறிக்­கையில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் கலப்பு நீதி மன்றம் ஒன்று அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்றும் அத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஐ.நா.வின் அறிக்கை வெளியா­னதன் பின்னர் கலப்பு என்ற சொற்­பி­ர­யோ­கத்­திற்கு இலங்­கையில் இருந்து அதி­ருப்தி வெளி யி­டப்­பட்­ட­மை­யினால் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெ­ரிக்கா மற்­று­மொரு பிரே­ர­ணையை கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது. அந்தப் பிரே­ர­ணையில் நீதிப் பொறி­முறை விட­ய­மா­னது கீழ் கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதா­வது பொது­ந­ல­வாய வெளிநாட்டு நீதி­ப­திகள், பிர­தி­வா­தி­களின் வழக்­க­றி­ஞர்கள், விசேட சட்­ட­வ­ரை­ஞர்கள், வழக்கு தொடு­னர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் போன்றோர் இலங்­கையின் நீதித்­து­றையின் பொறி­மு­றையின் ஊடாக இணைந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் பொறி­மு­றையை முன்­னெ­டுக்க வேண்டும். அத்­துடன் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்­துடன் இலங்கை இணைந்து செயற்­பட்டு தொழில்­நுட்ப உத­வி­களைப் பெற்று நீதிப் பொறி­மு­றையை முன்­னெ­டுக்க வேண்டும் என அந்த பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

 இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் அனைத்து உறுப்பு நாடு­களும் இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன. குறிப்­பாக இலங்­கையும் இந்தப் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­ய­மை­யா­னது சர்­வ­தே­சத்தின் மத்­தியில் பாரிய எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் இலங்­கைக்கு பாராட்டு வெளி­யிட்­டன. அதா­வது இலங்­கையே முன்­வந்து பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­மையின் கார­ண­மாக இலங்கை இந்த விட­யத்தில் பாரிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் என சர்­வ­தேசம் நம்­பி­யது.

 கடந்த ஒரு­வ­ருட கால­மாக அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசைன் மார்ச் 22 ஆம் திகதி எழுத்­து­மூல அறிக்­கையை வெளியி­ட­வுள்ளார்.

கடந்த ஒரு­வ­ருட காலத்தைப் பொறுத்­த­வரை ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மை­யி­லான தேசிய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் நீதியை நிலை­நாட்­டுதல் விட­யத்தில் எத­னை­யுமே செய்­ய­வில்லை என்று கூறி­விட முடி­யாது.

பொது­ந­ல­வாய வெளிநாட்டு நீதி­ப­திகள், பிர­தி­வா­தி­களின் வழக்­க­றி­ஞர்கள், விசேட சட்­ட­வ­ரை­ஞர்கள், வழக்கு தொடு­னர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் ஆகி­யோரை உள்­ளீர்த்து இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்று ஜெனிவா பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்ற நிலை­யிலும் அதற்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்ள சூழ­லிலும் அர­சாங்கம் இந்த சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு கோரிக்­கைக்கு நேர­டி­யாகப் பதி­ல­ளிக்­க­வில்லை.

மாறாக மக்கள் மத்­தியில் நடத்­தப்­படும் கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் ஆலோ­ச­னை­களின் பிர­காரம் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் வரைபு தொடர்பில் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றும் அதன்­போது சர்­வ­தேச நீதி­ப­திகள் குறித்து தீர்­மா­னிக்­கப்­படும் எனவும் அர­சாங்கம் அறி­வித்­தது. அந்­த­வ­கையில் மக்­களின் கருத்­துக்­களை இந்த நல்­லி­ணக்க பொறி­முறை விட­யத்தில் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் அர­சாங்கம் விசேட செய­லணி ஒன்­றையும் நிய­மித்­தது.

மேலும் அர­சாங்கம் நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் உள்­ளக பொறி­முறை திட்டம் ஒன்­றையும் முன்­வைத்­தது. அதா­வது உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நஷ்ட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­கா­ழ­மையை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகிய நான்கு விட­யங்­களைக் கொண்டே இந்த திட்­டத்தை அர­சாங்கம் முன்­வைத்­தது. இதனை வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஜெனி­வா­விலும் அறி­வித்­தி­ருந்தார்.

இதற்கு இடையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ளீர்க்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் உள்­நாட்டு நீதி­ப­தி­க­ளைக்­கொண்டே விசா­ரணைப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­ரடி அறி­விப்பை வெளியிட்டார். இது சர்­வ­தேச தரப்­பையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது.

ஆனால் உட­ன­டி­யாக அந்த விட­யத்தை சர்­வ­தேசம் சுதா­க­ரித்துக் கொண்­டது என்று கூறலாம். அதா­வது தென்­னி­லங்­கையில் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்கு பாரிய எதிர்ப்பு ஏற்­பட்டு வந்த நிலையில் ஜனா­தி­ப­தியின் அந்த கூற்று நிலை­மையை ஓர­ளவு தனித்­தது என்று கூறலாம். இதனை புரிந்­து­கொண்ட சர்­வ­தேசம் இந்த விட­யத்தில் ஆரம்­பத்தில் எதிர்ப்பைக் காட்­டி­னாலும் பின்னர் மௌன­மா­கி­யது.

அது மட்­டு­மன்றி இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்ப்­பதா இல்­லையா என்­பதை இலங்கை அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும் என்றும் கூறி­யி­ருந்தார்.

எவ்­வா­றெ­னினும் ஜனா­தி­ப­தியின் அறி­விப்பை தவிர்த்து இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­மாக இது­வரை எந்­த­வொரு நிலைப்­பாட்­டையும் வெளியி­ட­வில்லை. இதே­வேளை, அர­சாங்கம் உள்­ளக பொறி­மு­றையின் ஒரு ஆரம்ப கட்­ட­மாக உண்­மையை கண்­ட­றியும் பிரிவின் கீழ் காணாமல் போனோர் குறித்து ஆராயும் நிரந்­தர அலு­வ­ல­கத்தை அமைக்க நட­வ­டிக்கை எடுத்­தது.

இது தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் தற்­போது இந்த நிறு­வனம் அமைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. நல்­லி­ணக்க பொறி­முறை செயற்­பாட்டில் அர­சாங்கம் முன்­னெ­டுத்த ஒரு ஆக்­கப்­பூர்­வ­மான வர­வேற்­கத்­தக்க விட­ய­மாக இந்த காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை குறிப்­பிட முடியும். உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் இந்த நட­வ­டிக்­கைக்கு வெகு­வாக வர­வேற்­கப்­பட்­ட­துடன் பாராட்­டப்­பட்­டது. மறு­புறம் கடும்­போக்­கு­வா­திகள் இதனைத் தீவி­ர­மாக எதிர்த்து பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர்.

அதன் பின்னர் அர­சாங்கம் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்க உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. ஆனால், அந்த ஆணைக்­குழு இது­வரை நிறு­வப்­ப­ட­வில்லை. தென்­னா­பி­ரிக்­காவில் அமைக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வுக்கு சம­மான ஒரு குழு­வையே இலங்­கையும் நிய­மிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், இது­வரை உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

அதற்கு அடுத்­த­தாக அர­சாங்கம் நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டில் விசேட நீதி­மன்றம் ஒன்றை அமைக்க வேண்­டிய தேவை உள்­ளது. அந்த நீதி­மன்றம் தொடர்­பா­கவே சர்­வ­தேச நீதி­ப­தி­களா அல்­லது உள்­ளக நீதி­ப­தி­களா என்று கேள்வி எழுந்­துள்­ளது.

அது தொடர்­பாக தீர்­மா­னிக்கும் நோக்­கி­லேயே அர­சாங்கம் மக்கள் மத்­தியில் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தது. அது மட்­டு­மன்றி அடுத்த கட்­ட­மாக நஷ்­ட­ஈடு வழங்கும் பொறி­மு­றையும் அதற்கு அடுத்த கட்­ட­மாக மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அர­சியல் தீர்­வையும் முன்­வைக்க வேண்­டிய தேவை உள்­ளது.

இந்­நி­லையில் அர­சாங்கம் இது­வரை இந்த உண்­மையை கண்­ட­றிதல் நீதி வழங்­குதல் நஷ்ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­க­ழாமை ஆகிய நான்கு விட­யங்­களில் முத­லா­வது விட­யத்­திலும் நான்­கா­வது விட­யத்­திலும் ஓர­ளவு முன்­னேற்­றத்தைக் காட்­டி­யுள்­ளது. அதாவது உண்மையைக் கண்டறியும் பிரிவின் கீழ் சில நடவடிக்கைகளையும் மீள்நிகழாமையின் கீழ் சில நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது விடயங்களான நீதி வழங்குதல் மற்றும் நஷ்டஈடு வழங்குதல் ஆகிய விடயங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. நான்காவது விடயமான மீள் நிகழாமை விடயத்தில் அரசாங்கம் ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டை குறிப்பிடலாம்.

இந்நிலையில் மிக முக்கியமாக நீதிவழங்கும் செயற்பாட்டில் அரசாங்கம் எவ்வாறான பொறிமுறையை முன்வைக்கப் போகின்றது என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கப் போகும் அறிக்கை இவ்வாறு ஆர்வத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.

அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கப்போகிறாரா? அல்லது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணைகொண்டு வருவதற்கான வழியை ஏற்படுத்தப் போகிறாரா? என அனுமானிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. எது எப்படி இருப்பினும் மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கப் போகும் எழுத்து மூல அறிக்கையிலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றன என்பதே யதார்த்தமாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.