Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன சாதனங்களின் வருகையால் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது - பழைய புத்தக நிலைய உரிமையாளர் கோவை கணேஷ்

Featured Replies

நவீன சாத­னங்­களின் வரு­கையால் வாசிப்புப் பழக்கம் அருகி வரு­கி­றது - பழைய புத்­தக நிலைய உரி­மை­­யாளர் கோவை கணேஷ்
 

(சிலாபம் திண்­ண­னூரான்)


“முயற்­சியும் துணிவும் உழைப்பும் தான் ஒரு மனி­த­னுக்கு எப்­போதும் இன்­பத்தைத் தந்து கொண்­டி­ருக்­கின்­றன. சிறு வயது முதல் புத்­தக வாசிப்பில் பெரும் ஈடு­பா­டு­களைக் கொண்­டி­ருந்தேன்.

 

இதன் வளர்ச்சி எனக்குள் வேர்­விட்டு மர­மாகி படர்ந்து நல்ல கனி­களைக் கொடுத்­தது. அதன் அறு­வ­டை­யாக என் இரு­பத்தி மூன்­றா­வது வயதில் கோவை புத்­தக நிலையம் என்ற நாமத்தில் பழைய இலக்­கிய புத்­த­கங்­களை விற்­பனை செய்யும் வியா­பா­ரத்தை ஆரம்­பித்தேன்.

 

171DSCF4248.jpg

 

விளை­யாட்டுப் பருவ காலத்தில் பழைய இலக்­கிய புத்­த­கங்­களை கொள்­முதல் செய்து மிகவும் சிறு இலா­பத்­துடன் எனது வியா­பா­ரத்தைக் கட்டி எழுப்­பினேன்.

 

மிகவும் குறு­கிய கால எல்­லையில் இப் ­ப­ழைய புத்­தக வியா­பாரம் இந் ­நாடு முழு­வ­து­மாக என்னை தமிழ் பேசும் சமூ­கத்­தினர் மத்­தியில் அறி­முகம் செய்து வைத்­தது” என்­கிறார் பழைய புத்­தக வியா­பா­ரத்தில் பெயர் பெற்ற கோவை கணேஷ்.

 

கொழும்பு சென்ரல் வீதி­யி­லுள்ள கோவை புத்தக சாலையின் உரி­மை­யா­ளர் இவர். “எனது பள்­ளிக்­காலம் முதல் கவிதை, கட்­டுரை, பட்­டி­மன்றம், இலக்­கிய மேடைப்­பேச்­சாளர் என பல முகங்­களில் இலக்­கிய உல­குடன் வாழ்­வ­தற்கு பழ­கிக்­கொண்டேன்.

 

எம்.தர்­ம­லிங்கம் என்ற எனது இயற்­பெ­யரை கைவிட்டு கோவை கணேஷ் என்ற புனை பெயரில் இலக்­கியக் களத்தில் நுழைந்தேன். எனது புத்­தகத் தொழிலில் புதுப்­புது நுணுக்­கங்­களைக் கையாள சிந்­திக்கத் தொடர்ந்தேன்.

 

அத்­தோடு பெரும் பணத்தைக் கொட்டி தமி­ழ­கத்­தி­லி­ருந்து புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்­வோ­ருடன் தொழில் ரீதி­யாக மல்­லுக்­கட்ட வேண்­டிய நிலை உரு­வா­னது. நான் எனது பழைய புத்­தக வர்த்­த­கத்­திற்கு வெறும் முந்­நூறு ரூபா­வையே முத­லீ­டாகக் கொண்டிருந்தேன்.

 

அக்­ கா­லத்தில் இப்­ பணம் பெரும்­பலம் கொண்ட தொகை­யாகும். இருந்தும் துணி­வுடன் களத்தில் நின்றேன். பழைய ஆனந்த விகடன், குமுதம், கல்­கண்டு, அம்­பு­லி­மாமா என பல­த­ரப்­பட்ட சஞ்­சி­கை­களை மக்­க­ளுக்குக் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­காக நூல்­கட்டி அதில் தொங்க விடுவேன்.

 

பலர் எனது புத்­தக அலங்­கா­ரத்தைப் பார்த்து விட்டு நக்­க­லாகச் சிரித்து விட்டுச் செல்­வார்கள். இதைப் பார்த்து நான் ஆத்­திரம் கொள்­வ­தில்லை. அமைதி காப் பேன்.

 

சஞ்­ச­ல­மற்ற மனத்தின் மௌன­மாக வீதியில் நின்று அவர்­களை வேடிக்கை பார்ப்பேன். நான், கொழும்பு சென்ட்ரல் வீதியில் வியா­பாரம் ஆரம்­பித்த காலத்தில் இவ் ­வீதி முழு­வதும் குடி­யி­ருப்­புகள் பர­வி­யி­ருந்­தன.

 

அக் ­காலம் ஒரு இனிப்­பான கால­மாகும். சிறிது சிறி­தாக வியா­பாரம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­த­போது, தமி­ழ­கத்­தி­லி­ருந்து வார, மாத, இதழ்­களை இறக்­கு­மதி செய்யும் வர்த்­த­க­ரிடம் விற்­ப­னை­யா­காமல் தேங்கி நிற்கும் புத்­த­கங்­களை குறைந்த விலைக்குக் கொள்­முதல் செய்து சொற்ப ஆதா­யத்­தோடு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்வேன்.

 

இந்­நி­லையில், தமிழ் சினிமா பாடல் புத்­த­கங்­க­ளுக்கு பெரும் கிராக்கி நில­வி­யது. தனி சினிமாப் படத்தின் பாடல் புத்­தகம் ஒன்றின் விலை அன்று வெறும் ஐம்­பது சத­மே­யாகும்.

 

சினிமா பாடல் புத்­த­கங்­க­ளையும் பழைய புத்­தக விற்­ப­னை­யோடு இணைத்துக் கொண்டேன். சினிமாப் பாடல் புத்­த­கங்கள் மள­ம­ள­வென விற்கத் தொடங்­கின. அக்­கா­லத்து வரு­மானம் எனக்கு பெரும் நிறைவைக் கொடுத்­தது.” என தக­வல்­களை வழங்­கிய கோவை கணேஷின் பேச்சை நிறுத்தி கேள்வி வலையை வீசினோம்.

 

“மிகப் பழைய புத்­த­கங்கள் உங்­க­ளுக்கு எங்கு கிடைக்கும்? என கேள்­வியை நாம் எழுப்ப அவரே தனது தொழில் இர­க­சி­யத்தை வெளிப்­ப­டுத்­தினார். “சிலர் தாம் படித்த புத்­த­கங்­களை என்­னிடம் கொடுத்­து­விட்டு வேறு புத்­த­கங்­களைப் பெற்­றுக்­கொள்­வார்கள்.

 

புத்­த­கத்தின் தரத்­திற்­கேற்ற வகையில் விலை மதிப்­பீடு செய்­யப்­பட்டு கொடுக் கல் வாங்கல் இடம்­பெறும். கொழும்பு பகு­தியில் உள்ள பழைய போத்­தல்­களைக் கொள்­முதல் செய்யும் வர்த்­த­கர்­க­ளி­டமும் புத்­த­கங்­களைக் கொள்­முதல் செய்வேன்.

 

போத்தல் கடை­களில் பெறு­ம­தி­யான தமிழ், சிங்­கள, ஆங்­கில மொழி, சமய, சோதிட, மாந்­தி­ரிக, வைத்­திய, சட்டப் புத்­த­கங்கள் கிடைக்கும். சிலநேரங்­களில் எங்­குமே கிடைக்கப் பெற இய­லாத அரும்­பெரும் புத்­த­கங்­களும் கிடைக்கும்.
வார இதழ்­களில் தொட­ராக வெளி­வந்த தொடர்­க­தைகள் கட்­டப்­பட்ட (பைண்டிங்) நிலையில் பலர் எமக்குக் கொண்டு வந்து தரு­வார்கள்.

 

தமக்குப் பின்னர் இப்­புத்­த­கங்­களை பிள்­ளைகள் பாது­காக்க மாட்­டார்கள் என்ற எண்­ணத்தில் பல முதி­யோர்கள் பெரும் கவ­லை­யுடன் எம்­மிடம் கைய­ளித்து பணம் பெற்றுச் செல்­வார்கள்.

 

பல வரு­டங்கள் தூசி தட்டி கட்டிக் காத்த புத்­த­கங்கள் யாரோ ஒருவர் பயனடை­யட்டும் என்ற பெரும் சிந்­த­னை­யுடன் எம்­மிடம் வரு­கையில் அவர்­களின் முகத்தில் பெரும் சோகத்தின் தளும்­பு­களைக் காணலாம். எதையோ ஒன்றை இழந்­து­விட்ட எண்­ணத்தில் எங்­களின் இடத்­தை­விட்டு வெளி­யே­று­வார்கள். அவர்­களின் முது­மையின் சிந்­த­னையும் சோகமும் என்னை அதட்டும். நானும் கவ­லைக்குள் நுழைந்து விடுவேன்.

 

இவ் ­வி­யா­பா­ரமும் புத்­த­கங்கள் விற்­ப­னையும் எமக்கு தேர்ச்­சி­யான மொழி அறி­வையும் இலக்­கிய வளத்­தையும் பல­த­ரப்­பட்­ட­வர்­களின் சிநே­கி­தத்­தையும் வழங்­கு­கின்­றது. இவ்­வாறு வேக­மாக விப­ரங்­களைத் தொடுத்­த­வரின் பேச்­சுக்கு பிரேக் போட்டு நிறுத்­தினோம்.

 

“உங்­க­ளிடம் என்ன வகை­க­ளி­லான பழைய புத்­த­கங்கள் உள்­ளன” எனக் கேட்டோம். “எம்­மிடம் மனி­தனின் வாழ்­வி­ய­லுக்குத் தேவை­யா­ன அனைத்துக் கூறு­களின் புத்­த­கங்­களும் உள்­ளன. தமிழ் மொழி­யுடன் ஆங்­கில மொழி, சகோ­தர சிங்­கள மொழி மூல­மான புத்­த­கங்­களும் உள்­ளன.

 

ஒரு கால கட்­டத்தில் தமிழ் நாவல் இலக்­கி­யத்­திற்குப் பெரும் பணி­யாற்­றிய வீர­கே­சரி நிறு­வனம் வெளி­யிட்ட பெரும்­பா­லான அரு­மை­யான நாவல்கள் எங்கள் வசம் இன்றும் வாழ்­கின்­றன.

 

ஐம்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர்  வெளி­வந்த காதல், கலை­மகள், கல்கி, ஆனந்த விகடன், பேசும் படம், ரசிகன், சீரஞ்­சீவி ஆகிய இதழ்­களின் தீபா­வளி விசேட மலர்கள் எம்­மிடம் உள்­ளன.

 

இவ்­வா­றான மலர்­களை இக்­கா­லத்­திலும் இன, மத, அடை­யா­ளங்­களை அல்­லது ஆய்வு தேவை­க­ளுக்­காக பெரும்­பா­லானோர் தேடி வரு­கின்­றனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் கைப்­பட எழு­திய “நான் ஏன் தற்­கொலை செய்ய வேண்டும்?” என்ற நூலும் எம்மிடம் விற்­ப­னைக்­காகக் காத்­தி­ருக்­கின்­றது.

171DSCF4242.jpg

அதே­போன்று அறிஞர் சித்தி லெப்பை மரைக்கார் எழு­தி­யதும் இலங்கை தமிழ் இலக்­கிய உலகின் முதல் நாவ­லாக கரு­தப்­படும் (1885) இல் ‘அசன்­பேயின் சரித்­திரம்’ நாவலும் உள்­ளது.

 

எங்­க­ளுக்­கென ஒரு வாடிக்­கை­யாளர் குழுவை வைத்­துள்ளோம். எம்­மிடம் பாமர மக்கள் முதல் எழுத்­தா­ளர்கள், வைத்­தி­யர்கள், மாந்­தி­ரீ­கர்கள், சட்­டத்­த­ர­ணிகள், சோதி­டர்கள், அர­சி­யல்­வா­திகள் என பல தரப்­பி­னரும் வருகை தரு­கின்­றனர்.

 

இட­து­சாரி அர­சியல் கொள்­கையைக் கொண்ட பலர் எம்­மிடம் இட­து­சாரி கொள்கை கொண்ட தலை­வர்­களின் சரித்­திர தக­வல்­களைப் பெற அவ்­வா­றான புத்­த­கங்­களைப் பெற வருகை தரு­வார்கள்” எனக் கூறிய கோவை கணேஷ், சட்­டென விட்ட மழை போல தன் பேச்சை நிறுத்தி, தான் கலங்கித் தவிக்கும் தகவல் ஒன்றை எம்­மிடம் கூறத் தொடங்­கினார்.

 

நாமும் கலங்கிப் போய்­விட்டோம். “எழுத்­தா­ளர்கள் அனை­வ­ரி­டமும் ஒரு அரு­மை­யான பழக்கம் உண்டு. இன, மத, மொழி பாராது அனைத்து எழுத்­தா­ளர்­களின் புத்­த­கங்­க­ளையும் பெரும் பாது­காப்­புடன் தன் வீட்டில் சேக­ரித்து வைத்­தி­ருப்­பார்கள்.

 

இதில் ஏதோ ஒருவித சந்­தோஷமும் ஊக்­கமும் அவர்­க­ளுக்குக் கிடைக்­கின்­றன.
இவ்­வா­றான ஒரு எழுத்­தாளர் கால­மா­னதும் அவரின் குடும்ப அங்­கத்­த­வர்கள் எங்­க­ளிடம் வந்து மறைந்த எழுத்­தா­ளரின் சேமிப்­பான புத்­த­கங்­களை விலை கொடுத்து பெற்றுச் செல்­லு­மாறு தகவல் கொடுத்­தனர்.

 

ஒரு மாலை நேரத்தில் மறைந்த எழுத்­தா­ளரின் வீடு தேடிச் சென்றோம். அவ்­வீட்டார் எங்­களை வர­வேற்று வீட்டின் பின்­பு­றத்­திற்கு அழைத்துச் சென்­றனர்.

 

அங்கே நாம் கண்ட காட்சி எங்­களை ஆத்­தி­ரப்­பட வைத்­தது. ஒரு கொலைக்­க­ளத்தில் ஒரு மனித உடல் வாளால் வெட்டி சேதா­ரப்­ப­டுத்தி அங்கும் இங்கும் சதைகள் வீசப்­பட்டுக் கிடப்­பது போன்று, மேற்­படி எழுத்­தா­ளரின் உழைப்பால் சேமிக்­கப்­பட்ட புத்­த­கங்கள் கேட்பார், பார்ப்பார் இன்றி அநா­த­ர­வாக அங்கும் இங்கும் வீசப்­பட்டுக் கிடந்­தன.

 

கோபம் எமக்குள் கொப்­ப­ளித்­தது. வீசப்­பட்டுக் கிடந்த புத்­த­கங்கள் மீது கையை வைத்து புத்­த­கங்­களை வரி­சைப்­ப­டுத்த முனைந்­த­போது மழையில் தொப்பை தொப்­பை­யாக நனைந்து, வெயிலில் காய்ந்து அனைத்து புத்­த­கங்­களும் சுருங்­கிய நிலையில் துர்­நாற்­றமும் புழு­தியின் வாச­னையும் எம் மூக்­குக்குள் நுழைந்து எமக்கு தும்­மலை ஏற்­ப­டுத்­தி­யது.

 

அத்­துடன், புத்­த­கங்­களின் நிலைமை எம்மை ஆத்­திரம் கொள்ள வைத்­தது. அப்­போது எம் கண்­களில் கண்ணீர் முட்­டி­யது. மிக அரு­மை­யான அப்­ புத்­த­கங்­களின் பெருமை அக் குடும்­பத்­தா­ருக்குத் தெரி­யாமல் போனமை பெரும் கவலை தரும் விட­ய­மாகும்.

 

இதற்கு எதிர்­மா­றாக இன்­னு­மொரு சம்­பவம் இடம்­பெற்­றது. இவை­யெல்லாம் எம் வாழ்­வோடு இணைந்த சம்­ப­வங்­க­ளாகும். இச் சம்­ப­வங்­களே எமக்­கான அனு­ப­வமும் ஏனை­யோ­ரிடம் அதைப் பகிர்ந்து கொள்ளும் போது அவர்­க­ளுக்­கான பாட­மு­மாக மாற்றம் பெறு­கி­றது.

 

வெல்­லம்­பிட்டி பகு­தியில் வாடகை வீடொன்றில் தற்­கா­லி­க­மாக வசித்த வட பகுதி தமிழ்க் குடும்­பத்­தினர் 1983 கல­வ­ரத்தின் பின்னர் வெளி­நாடு சென்­று­விட்­டனர். அனைத்து தள­பா­டங்­க­ளையும் சொற்ப விலைக்கு விற்ற அக்­ கு­டும்­பத்­தினர், பெருந்­தொ­கை­யான தமிழ்­மொழி புத்­த­கங்­களை தனி­யா­னதோர் அறையில் பாது­காப்­பாக பொதி செய்து கைவிட்­டு­விட்டு சென்று விட்­டனர்.

 

அவ்­ வீட்டு உரி­மை­யாளர் அப்­புத்­த­கங்­களை பல வரு­டங்கள் பாது­காப்­பாக பாது­காத்து வாட­கைக்கு இருந்­த­வர்­களின் உற­வி­னர்கள் கேட்டு வந்தால் கொடுப்­ப­தற்­காக வைத்­தி­ருந்­துள்ளார்.

 

நாட்கள், மாதங்கள், வருடம் என காலம் வளர எவ­ருமே உரிமை கோராத நிலையில் எங்கள் வர்த்­தக நிலைய விலா­சத்தை எந்த வகை­யிலோ பெற்று எம்­மிடம் விற்று பணத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

 

புத்­த­கங்­களை மற்­று­மொ­ருவர் பயன்­ப­டக்­கூ­டிய வகையில் பாது­காத்து எங்­க­ளிடம் கொடுத்­தவர் ஒரு சகோ­தார சிங்­கள மொழி அன்­ப­ராவார். மாற்று மொழி புத்­த­கங்­க­ளுக்கும் கௌர­வமும் கண்­ணி­யமும் வழங்கும் மாற்று சிந்­த­னை யைக் கொண்­டோரும் எங்கோ ஒரு கிரா­மத்து மூலையில் எம்­மோ­டு தான் வாழ்­கின்­றனர்.

 

சத்தம் இல்­லாது என்­பது வெளியே வராத வெளிச்­ச­மாகும்” என்று சொல்லி கோவை கணேஷ் கண் சிலிர்த்து எம்மை ஆச்­சரியப்­பட வைக்­கிறார். “பழைய புத்­த­கங்­களை கொள்­முதல் செய்­கையில் பல்­வேறு ஆவ­ணங்கள் அதற்குள் முடங்கிக் கிடக்கும்.

 

171DSCF4250.jpg

வெளி­நாட்டுக் காசு, முத்­தி­ரைகள், குடும்பப் புகைப்­ப­டங்கள், தேசிய அடை­யாள அட்டை என பல வகை­க­ளி­லான ஆவ­ணங்­களும் புத்­த­கங்­களின் உள்ளே காணப்­படும்” எனவும் அவர் கூறினார்.

 

ஒரு காலத்தில் பழைய புத்­தக விற்­பனை சிறப்­பாக இருந்­தது. அன்று புத்­த­கங்­களை கொள்­முதல் செய்தால் ஐந்து நாட்­களில் அவைகள் விற்­ப­னை­யா­கி­விடும். இதனால் எமக்கும் பழைய புத்­த­கங்­களைத் தேடி கொள்­முதல் செய்­வதில் பெரும் ஊக்கம் இருந்­தது.

 

குடும்­பத்தை கொண்டு நடத்த நிர்­வ­கிக்­கக்­கூ­டிய பொரு­ளா­தாரம் இருந்­தது.
ஆனால், இன்று நிலை தலை­கீ­ழா­கி­விட்­டது. 2000 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் பழைய புத்­தக விற்­ப­னையில் பெரும் வீழ்ச்சி ஏற்­பட்டுவிட்­டது.

 

கை விரித்து செலவு செய்­யக்­கூ­டிய வகை­யி­லான வரு­மானம் இல்லை. இங்கு பலகை அடுக்குத் தட்­டு­களில் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான புத்­த­கங்கள் உள்­ளன. பல மாதங்­க­ளாக வைத்த இடத்­தி­லேயே சோம்­பே­றி­க­ளாக அப்­ புத்­த­கங்கள் அனைத்தும் தூசி­யோடு தூங்­கு­கின்­றன.

 

இதற்­கான காரணம் கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் கண­னியின் வரு­கை­யாகும். இவை அறிவை வளர்க்கும் சாதனங்களாக இல்லாது ஆடம்பரமான வாழ்க்கைக்கே இழுத்துச் செல்கின்றன.

 

இச் சாதனங்களின் வருகையினால் பல குடும்பங்கள் சீர்கெட்டுப் போய்விட்ட செய்திகளை பத்திரிகைகளில் கண்டுள்ளோம். இவ்­வா­றான சாத­னங்­களின் வரு­கை­யினால் இளம் சமூ­கத்தினரின் வாசிப்­புத்­தன்மை அரு­கி­விட்­டது.

 

டிஜிட்டல் அச்சு இயந்­திர வரு­கை­யினால் அன்று விளம்­பரப் பல­கைகள், வர்த்­தகப் பெயர் பல­கைகள், சுவ­ரொட்­டிகள் எழு­தி­ய­வர்கள் பிழைப்பை இழந்து, வாழ்­வ­தற்குப் பெரும் போராட்­டத்தை நடத்­து­கின்­றனர். அவ்­வாறே இன்று பழைய புத்­தக விற்பனை பூஜ்­ஜி­யத்தில் உள்­ளது.

 

புத்­தகம் என்­பது ஒரு மனி­தனை முழு மனி­த­னாக்கும் கரு­வி­யாகும். அவன் புத்­த­கங்­களைப் படிக்கப் படிக்க, மொழி­வளம் பெறு­வ­துடன் அவன் ஒரு அறி­வா­ளி­யாக பரி­ணாமம் பெறு­கிறான்.

 

சமூ­கத்தில் நல்ல கருத்­துக்­களை விதைக்­கிறான். இன்­றைய இளம் சமூகம் புத்­தக வாசிப்பில் இணை­ய­வேண்டும். அப்­போது நல்­லதோர் சிந்­தனைக்களம் உரு­வாகும்” என்­றவர், வாசிப்பு செழிக்கும் காலம் எப்­போது உருவாகும்? என எம்மிடம் கேடகிறார் கோவை கணேஷ் ஆதங்கத்தோடு.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=171&display=0#sthash.OqVtBx1F.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.