Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்

Featured Replies

காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்
 
 

article_1483081589-DSC08195.JPG

-க.அகரன்

“காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து,  வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம், மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் பொங்கலுக்கு பின்னராக காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ் உண்ணாவிரதப்போராட்டத்தில் “எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா வீடு தீரும்புவார்களா?, மைத்திரி - ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

article_1483081603-DSC08201.JPG

article_1483081615-DSC08203.JPG

 

- See more at: http://www.tamilmirror.lk/188930/க-ண-ல-ஆக-கப-பட-ட-ர-ன-உறவ-னர-கள-உண-ண-வ-ரதம-#sthash.gKe5j6iN.dpuf

article_1483081627-DSC08205.JPG


திருகோணமலை

-அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார்

தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம், இன்று (30) கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடைய உறவுகள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இன்று வரை நீதி நியாயம் வழங்கப்படவில்லையெனவும் நீதியை பெற்றுத்தருமாறும்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரனிடம் கையளித்தனர்.

article_1483082230-DSC_0062.JPG

article_1483082247-DSC_0063.JPG

article_1483082257-DSC_0068.JPG

- See more at: http://www.tamilmirror.lk/188930/க-ண-ல-ஆக-கப-பட-ட-ர-ன-உறவ-னர-கள-உண-ண-வ-ரதம-#sthash.q0ItZodL.dpuf
  • தொடங்கியவர்

சம்பந்தனின் உருவப்படத்தை எரித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்  (காணொளி இணைப்பு)

Published by MD.Lucias on 2016-12-30 17:10:02

 

D00f55ff.jpgசதீஸ்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்றுமாலை எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.D000000dddd.jpg

கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை வவுனியாவில் அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். 

இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரித்துள்னர்.

 

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் ஒப்பாரி வைத்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.Ddfdfdfdf.jpgD000f2f.jpg

 

 

http://www.virakesari.lk/article/14926

காணாமல் ஆக்கப்பட்ட “எங்கள்” உறவுகள் எங்கே? உறவினர்கள் உண்ணாவிரதம்:-

Vavuniya-Missing-People-Protest-04-720x4

காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெறுகின்றது.

தாயகப் பகுதியில் யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்டு,  மற்றும் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டறியும் சங்கம், ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெறுகின்றது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் பொங்கலுக்கு பின்னரான காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா?  வீடு தீரும்புவார்களா?, மைத்திரி ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://globaltamilnews.net/archives/12163

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருமலையிலும் போராட்டம்:-

Trinco-News..jpg

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அவர்களின் நிலையை கண்டறிவதற்கும், சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் சார்ந்து, காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளும் ஏனைய சாட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன் போது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் ஐ.நா இணைப் பங்காளியாக வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/12169

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரை உண்ணாவிரதம்-காணாமற்போனோரின் உறவுகள் அரசுக்கு எச்சரிக்கை
தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரை உண்ணாவிரதம்-காணாமற்போனோரின் உறவுகள் அரசுக்கு எச்சரிக்கை
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் ஜனவரி  20ஆம் திகதியிலிருந்து சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக வவுனியா வில்  இன்றையதினம்  அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டகாணாமற்போன மற்றும் காணாமற் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
 
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
வலிந்து கானாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளும் ஏனைய சாட்சிகளும் இவ்விடயம் சார்ந்து செயற்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் இன்று வவுனியாவிலும் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கடந்த பல காலமாக தமது உவுகள் காணாமல் ஆக்கப்பட்டபோதிலும் இதுவரை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கவில்லை என தெரிவித்தே இவ் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வவுனியா மாவட்ட செலயகத்திற்கு முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இவ் அடையாள உண்ணா விரதப்போரா ட்டம் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.
 
எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா வீடு திரும்புவார்களா?, மைத்திரி ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
 
நல்லாட்சி அரசாங்கம் தீர்வை பெற்றுதரும் என எதிர்பாரத்ததாகவும் எனினும் சிறுபான்மை இனம் என்பதால் தம்மை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

http://www.onlineuthayan.com/news/22025

  • தொடங்கியவர்

காணா­மல்­போ­னோ­ரது உற­வுகள் வவு­னியா, திரு­ம­லையில் உண்­ணா­வி­ரதம்

Sp10-8459176ba60f90311106c301d81e48391a628944.jpg

 

சம்­பந்­தனின் உரு­வப்­ப­டமும் எரி­யூட்­டப்­பட்­டது

(வவு­னியா ஓமந்தை, சேனையூர் நிரு­பர்கள)

காணாமல்போன தமது உற­வுகள் தொடர் பில் உறு­தி­யான முடி­வினை தெரி­விக்க வேண்டும் எனக்­கோரி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நேற்று உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­தப்­பட்டது. வவு­னி­யா­விலும் திரு­கோ­ண­ம­லை­யிலும் காணா­மல் ­போ­னோ­ரது உற­வுகள் இந்த உண்­ணா­ வி­ர தப் போராட்­டத்தை நடத்­தி­யி­ருந்தனர்.  

வவு­னியா செய­ல­கத்­திற்கு முன்­பாக உள்ள மாவீரன் பண்­டா­ர­வன்­னி­யனின் சிலைக்கு முன்­பாக ஒன்­று­கூ­டிய காணா­மல்­போ­னோ­ரது உற­வுகள் நேற்­றுக்­காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வரை அடை­யாள உண்­ணா­ வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். இந்தப் போராட்­டத்தில்

ஈடு­பட்­ட­வர்கள் எங்கே எங்கே எங்கள் பிள்­ளைகள் எங்கே? அவர்கள் நல­முடன் இருக்­கி­றார்­களா? வீடு திரும்­பு­வார்­களா? மைத்­திரி- , ரணில் கூட்டின் பங்­கா­ளி­க­ளாக மாறி­யதன் பலன் என்ன? போன்ற வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோக அட்­டை­களை தாங்­கி­யி­ருந்­தனர்.  

இதே­போன்று திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலு­வ­ல­கத்­திற்கு முன்­பாக நேற்­றுக்­காலை 9.30 மணி­ய­ளவில் ஒன்­று­கூ­டிய காணாமல் போனோ­ரது உற­வுகள் மாலை­வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடி கண்­ட­றியும் சங்­கத்தின் ஏற்­பாட்டில் இந்தப் போராட்டம் நடத்­தப்­பட்­டது.

இதே­வேளை காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்­களைக் கண்­டு­பி­டித்துத் தரு­மாறு கோரி நேற்று வவு­னி­யாவில் நடத்­தப்­பட்ட அடை­யாள உண்­ணா­வி­ர­தத்தின் முடிவில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்­தனின் உரு­வப்­படம் உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­க­ளினால் தீயிட்டுக் கொளுத்­தப்­பட்­டது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைக் கண்­ட­றிந்து அவர்­களை விடு­தலை செய்­வ­தற்கு கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து அதற்­கான பதில் கிடைத்­தி­ருக்கும். அவ்­வாறு அவர் செய்யத் தவ­றிய கார­ணத்­தி­னா­லேயே அவ­ரு­டைய உரு­வப்­படம் எரி­யூட்­டப்­பட்­டது என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் தெரி­வித்­தனர்.

அதே­வேளை, காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பாக அரசு உடன் பொறுப்பு கூற வேண்டும். தவ­றினால் வரும் ஜன­வரி மாதம் 21 ஆம் திகதி முதல் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் குதிக்கப் போவ­தாக காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

வடக்கு கிழக்கு பிர­தேச காணாமல் போனோரின் உற­வி­னர்கள் இந்தப் போராட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.முன்­னைய அரசைப் போலவே நல்­லாட்சி அரசும் இந்த விட­யத்தில் தங்­களை ஏமாற்றி வரு­வ­தாக அவர்கள் குற்றம் சாட்­டி­யுள்­ளனர். காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறையாக அது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக அரசாங்கம் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதற்குரிய அதிகாரிகளையும் நியமித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.