Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி சிலை உடைப்பு இளைஞர்களை பொலீசில் மாட்டிய சிவமோகன்?

Featured Replies

CVK-Sivagnanam1.jpg

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின்முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவில் நள்ளிரவு வேளையில் மூன்று இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இந்தியன் எக்ஸ்பிறஸ் இற்கு வழங்கிய நேர்காணலில் இதன் பின்னணி முழுமையாகவே தன்னுடையது என்பதை ஒத்துக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மறைமுகமாக இந்திய அரசின் செயற்பாடுகளுக்கு உள்ளூர் அரசியல்வாதியான ரவிகரன் மீது குற்றம்சாட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளின் போட்டிகளுக்கு அப்பாவி இளைஞர்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

தமிழர் தேசத்தின் இளைஞர்கள் மீதான அடக்குமுறை உயிர்ப்புடன் வைத்திருக்கப்படுகிறது என்பது நன்கு தெளிவாகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றிரவு 8 மணியளவில் எனக்கு அழைப்பொன்று வந்திருந்தது.

காவல் அலுவலர்கள் என கூறிக்கொண்டு இருவர் தன்னை முல்லைத்தீவு நகரில் உள்ள வீதியொன்றுக்கு வருமாறும் சந்திக்கவேண்டும் எனவும் கேட்டதாகவும் அதற்கு தான் இரவுநேரமாகையால் எதுவானாலும் நாளை காலை வருகிறேன் என்று கேட்க அதைமறுத்து இல்லை தற்போது தான் வரவேண்டும் என கேட்பதாகவும் தொலைபேசி வழியில் எனக்கு தெரிவித்தார்.

தனியே செல்லவேண்டாம் என அவருக்குக்கூறியதோடு சந்திக்க விரும்பின் எனது இல்லத்திற்கு அவர்களை வரச்சொல்லுங்கள் நீங்களும் இங்கு வாருங்கள் என பதிலளித்து அழைத்த இரு காவல் அலுவலர்களையும் எனது வீட்டுக்கு வரவழைத்திருந்தேன்.

வீட்டிற்கு வந்திருந்த காவல் அலுவலர்கள் இவ்விளைஞனை கட்டாயம் தற்போது காவல் நிலையத்திற்கு வருமாறு கூறவே இரவு நேரம் என்பதால் நானும் உடன் வருகின்றேன் எனக்கூறி அவ்விளைஞனோடு காவல் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நான்கு இளைஞர்களுள் மூவர் நேற்றிரவு எட்டுமுப்பது மணியில் இருந்து பதினொன்றரை மணி வரையில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் மூவரையும் விசாரிக்கும் வரையில் காவல் நிலையத்தில் அவர்களுடன் நானும் இருந்தேன். விசாரிப்பின் நிறைவில் அவர்களிடம் கேட்டபோது, பிரதேச சபையின் அனுமதியின்றி பிரதேசசபைக்கு உரித்தான காணியில் அண்மையில் எழுப்பப்பட்ட சிலையானது வீழ்ந்திருப்பதற்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்ற வகையிலேயே தாம் விசாரிக்கப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். முல்லைத்தீவு நகரில் காந்தி சிலையை வைப்பதற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் இவர்கள் கருத்துகளை பதிவு செய்ததாகவும் அதனால் இவர்கள் தான் சிலையை வீழ்த்தியிருப்பார்கள் என சந்தேகிப்பதாகவும் முறைப்பாடு பதியப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.

அனுமதியின்றி சிலை எழுப்பப்படுவது பொருத்தமற்றது எனவும் தமிழினம் சாராத-இம்மண்ணைச்சாராத ஒருவரின் சிலை முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் தேவையற்றது என்ற பொருள்படும் நிலையில் தமது கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்ததாகவும் சிலை வீழ்ச்சிக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் தமது பதில்களை வழங்கியதாக தெரிவித்தனர்.

வெறுமனே ஒரு முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நள்ளிரவு வரை இளைஞர்களை விசாரித்தது மிகத்தவறான விடயம். ஒரு முறைப்பாட்டை ஆராயாமல் இவ்வாறு நடந்துகொண்டது மிகப்பிழை. ஒரு மனநோயாளி இதே போன்ற முறைப்பாட்டை வைத்தாலும் இவ்வாறு தான் தொடருமா?

தமது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுனையும் இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் இரவில் விசாரணைக்கு அழைப்பதையும் நள்ளிரவு வரை காவல் நிலையத்தில் வைத்திருப்பதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

http://www.tamilkingdom.com/2016/12/a47.html

நேரகாலம் பாராது அழைத்து தமிழர்களை கொடுமைப்படுவதில் சிங்கள போலீஸ் பயங்கரவாதிகள் எப்போதும் பின்னிப்பதில்லை.

சிவமோகனின் ***********    ********************* வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது! 

  • கருத்துக்கள உறவுகள்

கூரை ஏறி.... கோழி பிடிக்க முடியாத,  சிவமோகனுக்கு, 
நோ(பல்)  பரிசு காத்திருக்கு. :grin:

காந்தி சிலை மட்டுமல்ல தமிழரல்லாத எந்தவொரு வட இந்தியனினதும் சிலைகள் இங்கு தேவையில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.