Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம்

Featured Replies

எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம்

 

 
எஸ்.பி.பி 50 பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் பேசும் போது | படம்: எல்.சீனிவாசன்
எஸ்.பி.பி 50 பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் பேசும் போது | படம்: எல்.சீனிவாசன்
 
 

எஸ்.பி.பி தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார் என பாடகர் யேசுதாஸ் புகழாரம் சூட்டினார்.

திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள்.

இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு பாதபூஜை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய பாடகர் யேசுதாஸ் "எஸ்.பி.பி என்னுடைய தம்பி மட்டுமல்ல. நாங்கள் இருவரும் ஒருவரே. இசையால் ஒன்றிணைந்திருக்கிறோம். சரஸ்வதி தாயால் ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. அவர் எப்போதுமே இசையில் தனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார். அவர் அவ்வாறு சொல்லத் தேவையில்லை.

ஜென்ம ஜென்மமாக பல்வேறு அனுபவங்கள் மூலமாக விஷயங்களை கற்றுக் கொண்டு இசையில் இந்நிலைக்கு உயர்ந்துள்ளார். தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார். ஆகையால் அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லக் கூடாது. அனைவருக்குமே அவர் எவ்வளவு பெரிய பாடகர் என்பது தெரியும்.

spbjesu1_3110868a.jpg

(யேசுதாஸ் பேசும் போது பல இடங்களில் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார் எஸ்.பி.பி.)

இங்கு எனது பாலுவுக்காக மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். எனது மன ஆழத்தில் இருந்து பாலுவின் குடும்பத்தை ஆசிர்வதிக்கிறேன். அவர் இன்னும் பல்லாண்டு காலங்கள் இசைக்காக வாழ வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்புக்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவுகூர விரும்புகிறேன்.

பாரீஸில் ஒரு கச்சேரி முடிந்தவுடன், யாருமே இல்லை. தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் இல்லை. எனது வாழ்க்கையில் சாப்பாடு இன்றி 3 நாட்கள் வரை இருந்துள்ளேன். பாரீஸில் அன்றிரவு ஒரே ஒரு ஆப்பிளை சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன். அப்போது என் அறைக்கு வெளியே 'ரூம் சர்வீஸ்' என்று சத்தம் கேட்டது. அது பாலுவின் சத்தம்தான் என எனக்குத் தெரியும். நான் அறையைத் திறந்தவுடன் சாதம், ரசத்துடன் பாலு நின்று கொண்டிருந்தார். இன்னொரு கர்ப்பத்தில் பிறந்தால்தான் தம்பியாக முடியுமா என்ன?. அந்த அளவுக்கு நேர்மையானவர் என் பாலு. அந்த சாப்பாட்டை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசி நிறைந்தது.

எனக்கு நிறைய தம்பிகள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு ரொம்பப் பிடித்த தம்பி என் பாலு. இன்னும் மேலும் பல ஆண்டுகள் வலுவாகவும், சந்தோஷமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்" என்று பேசினார் பாடகர் யேசுதாஸ்.

யேசுதாஸ் பேசி முடித்தவுடன் கிளம்பினார். அப்போது செருப்பை விட்டுவிட்டேன் என தான் இருந்த இருக்கையை நோக்கி நடந்தார். அதற்குள் எஸ்.பி.பி, யேசுதாஸின் செருப்பைத் தூக்கிக் கொண்டு, 'வாருங்கள்' எனச் சொல்ல, 'கூடாது' என செருப்பைக் கீழே போடச் சொல்லி மாட்டிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி - யேசுதாஸ் இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள்

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/எஸ்பிபி-50-பாடும்-நிலாவை-உருகவைத்த-யேசுதாஸின்-புகழாரம்/article9451588.ece?homepage=true

  • தொடங்கியவர்

என் தாய்மொழி இசை; குரு யேசுதாஸ்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நெகிழ்ச்சி

 

 
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | கோப்பு படம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | கோப்பு படம்
 
 

என் தாய்மொழி இசை, என் குரு யேசுதாஸ் என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள்.

இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு பாத பூஜை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் "பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாகப் பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள்.

என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடகர் முஹம்மது ரஃபி. அவருக்குப் பிறகு எனக்கு மிகவும் நெருக்கம் என் அண்ணா ஸ்ரீயேசுதாஸ் தான். அவருடைய ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. என் குரு யேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம்.

நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, ‘‘நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்’’ என்று சொன்னார். அப்படித் தான் சினிமாவில் முயற்சி செய்து பாடகரானேன்.

அதனைத் தொடர்ந்து என்னை விட பல சீனியர் பாடகர்கள் நான் வளர்வதற்கு பெரும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போதும், எனக்கு மைக் முன்னாடி எப்படிப் பாடுகிறேன் என்று கேட்டால் தெரியாது. ரஜினி, கமல், அனில் கபூர் உள்ளிட்ட பலருக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறேன். எனக்காக பலரும் வேடங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன்.

நிறைய தயாரிப்பாளர்கள், நான்தான் பாட வேண்டும் என பாடல்கள் கொடுத்தவர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக்கருவி வாசித்த எத்தனையோ நல்லவர்கள், பதிவு செய்தவர்கள், நன்றாக நடித்த நடிகர்கள் மற்றும் இசையைக் கேட்டு ரசித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/என்-தாய்மொழி-இசை-குரு-யேசுதாஸ்-எஸ்பிபாலசுப்பிரமணியம்-நெகிழ்ச்சி/article9453030.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.