Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஹிம்சா வாதியாகிய காந்தி தனி மனிதனாகப் போராடி தன்னுயிரையும் துறந்தார் -சிவமோகன்

Featured Replies

மகாத்மா காந்தி, அணு ஆயுதங்களை விட மனோ திடம் கொண்ட அஹிம்சைப் போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டிய மகான். இந்த வகையில் அவருக்கு வந்த மகாத்மா காந்தியின் சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவத்தை கண்டிக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

குறித்த சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று(31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அந்த அறிக்கையில், தென்னாபிரிக்காவில் தொடங்கிய அவரது அஹிம்சைப் போராட்டம் இந்தியாவில் விரிவடைந்த போது அது ஆசிய விடுதலையாக வெற்றியுடன் உருப்பெற்றது. அவர் எடுத்துக்கொண்ட அஹிம்சை என்ற ஆயுதம் உலகெங்கும் அவரை அஹிம்சையின் தந்தையாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

அதனால் தான் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் காந்தி அடிகளது உருவச் சிலைகள் வைத்து போற்றப்படுகிறது. அவரது தென்னாபிரிக்க இன ஒதுக்கல் கொள்கைக்கெதிரான போராட்டம் இன்று அங்கு ஒரு இன விடுதலையைத் தந்துள்ளது.

இந்தியாவில் அவர் நடத்திய ஆங்கிலேயரின் உப்பு வரிக்கு எதிரான அஹிம்சை போராட்டம், வெள்ளையனே வெளியேறு அஹிம்சை போராட்டம், அவரது ஒத்துழையாமை இயக்கம் போன்றவை இறுதியில் இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுக்கு விடுதலையைத் தேடித் தந்தது. தேசிய தலைவர்.வே.பிரபாகரனும் சில சந்தர்ப்பங்களில் காந்தியின் வழி அஹிம்சைப் போராட்டங்களை ஊக்குவித்திருக்கிறார். அதன் வழியே திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும் அமைந்தது.

முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைப்பு விடயம் 2016 வருட ஆரம்பத்தில் இருந்தே பகிரங்கமாக மாவட்ட இணைப்புக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட விடயம். 16.05.2016 அன்று மாவட்ட செயலர் ஒப்பமிட்டு MU/DPS/DCB/2015 எனும் இலக்கமிடப்பட்ட பிரதேச செயலர் கரைதுறைப்பற்றுக்கு தலைப்பிட்டு எழுதிய கடிதத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு வேலைத்திட்டத்தை 15.09.2016 இற்கு முன் முடிவுறுத்துமாறு பணித்துள்ளார்.

எனவே மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குத் தெரியப்படுத்தப்படாமல் மத்திய அரசின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்ட சில மதம் தொடர்பான சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கையில் அதனை முறைப்படியான காந்தி சிலை வைப்பு நடவடிக்கையுடன் ஒப்பிட்டு கருத்துக்கள் வெளியாகியது துரதிஷ்டம் எனலாம்.

மேலும் சிலை வைப்பு விடயம் அரச அதிகாரிகளால் அரச சட்டங்களுக்கு அமைவாக செயல்படுத்தப்பட வேண்டிய விடயம். அதில் 2016 மார்கழி 31 இற்கு முன் செயல்படுத்தப்பட வேண்டியது என்பதால் இறுதி நடைமுறைகள் சில செயற்படுத்த தாமதம் ஏற்பட்டிருந்தது. எனவே இறுதியாக 19.12.2016 நடைபெற்ற முல்லை மாவட்ட இணைப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டு சிலை அமைப்புக்கான தழுவல் அனுமதியும் வழங்கப்பட்டது.

அப்படியிருக்க அடையாளம் காணப்படாத விசமிகள் சிலர் அமைக்கப்பட்டு வந்த மகாத்மா காந்தியின் சிலையை உடைத்தது அநாகரீகமான செயல். மேற்படி விடயத்தில் ஈழத் தமிழர்கள் மீது பழி சுமத்தும், ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். எனவே இந்தச் செயலை யார் செய்திருந்தாலும் பகிரங்கமாக கண்டிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/community/01/130047?ref=home

இந்த செம்பு தூக்கிகளின் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லை. தியாக தீபம் தீலீபன் அண்ணாவை விட உந்த காந்தி எந்த விதத்தில் உயர்ந்தவர்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் எங்களது தமிழினத்தின் இழிவுகள்

இவர்களுக்குத் தெரியாது பகத்சிங்கை தூக்கில் போடுவதற்கு பிரிட்டிஸ்காரருக்கு நாள் பார்த்துக்கொடுத்தது காந்தி என் லோகமான்ய பாலகங்காதரத் திலகர் சிறையில் அடபட்டபோது அவரை விடுவிக்க எதுவித கண்டனமும் செய்யாதவர் காந்தி என.

இளம் பெண்கள் பலருடன் நிர்வானமாகத் தனித்துக் களியாட்டமிட்டதை யாரோ பார்த்தவிடத்தில் அப்போது நான் சத்திய சோதனையில் ஈடுபட்டிருந்தேன் எனப் புலுடாவிட்டவர்

தென்னாபிரிக்காவில் வாழ்ந்ககலத்தில் அங்கு வெள்ளையருக்கும் கறுப்பருக்கும் வேற் வேறாக அமைக்கப்பட்டிருந்த தபாலகத்தில்  நான் இந்தியன் கறுப்பர்களுக்கான கருமபீடத்தை நான் பாவிக்கமுடியாது இந்தியர்களுக்கு பிறிதொரு கருமபீடம் அமைக்கவேண்டும் என பிரிட்டோரியா அரசாங்கத்துக்கு மனுப்போட்டவர் காந்தி
 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Surveyor said:

மகாத்மா காந்தி, அணு ஆயுதங்களை விட மனோ திடம் கொண்ட அஹிம்சைப் போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டிய மகான். இந்த வகையில் அவருக்கு வந்த மகாத்மா காந்தியின் சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவத்தை கண்டிக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

குறித்த சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று(31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

போராடி செத்தாரா?

அவர் ஆளே

அவரைச்சுட செத்தார் காந்தி.

நம் கண் முன்னே வேற ஒருத்தரும்

போராடி சாகவில்லைப்போலும்...

இவர்கள் போன்றவர்களின் வரலாற்று மறைப்புக்களுக்கு பின்னால் பெரும் வேசங்களும் அழிவுகளும் இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.