Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்வி.....! துணை சபாநாயகர் நெறிமுறைகளை காற்றில் பறக்க விடுகிறாரா தம்பிதுரை? பார்லி., புத்தகம் சொல்வது என்ன?

Featured Replies

கேள்வி.....!
துணை சபாநாயகர் நெறிமுறைகளை
காற்றில் பறக்க விடுகிறாரா தம்பிதுரை?
பார்லி., புத்தகம் சொல்வது என்ன?
 
 
 

'தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை தவிர்க்க வேண்டுமென்பது மட்டுமல்ல; தான் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்' என்ற, பார்லிமென்ட் நெறிமுறைகளை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, காற்றில் பறக்க விடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tamil_News_large_1683270_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் ஆக வேண்டுமென வலியுறுத்தி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரை அறிக்கை வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ளவர்கள், 'அரசியல் பேசலாமா, கூடாதா' என்ற கேள்வி எழுந்துள்ளது; இதற்கு, சட்ட விதிமுறைகள் என, தனியாக இல்லையென்றாலும், பார்லி., வழிகாட்டுதல் நெறிமுறை விளக்க புத்தகத்தில், விரிவான பதிலளிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா செயலகம் சார்பில் வெளியிடப்பட்டதும், மல்கோத்ரா என்பவரை ஆசிரியராக வைத்து எழுதப்பட்டதுமான, 'பிராக்ட்டீஸ் அன்ட் புரொசீஜர் ஆப் பார்லிமென்ட்' என்ற தலைப்பிலான புத்தகம் தான், லோக்சபா நடைமுறைகளின் வேதப் புத்தகமாக கருதப்படுகிறது.

இந்த புத்தகத்தின், 125, 126, 127 ஆகிய பக்கங்களில், துணை சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கண்ணியம், அந்த பதவிக்கான தார்மீக நெறிமுறைகள் விளக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
துணை சபாநாயகர் பதவி, சபாநாயகர் பதவிக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. சபாநாயகரை போலவே, எம்.பி.,க்களால், இவரும் தேர்வு செய்யப்படுகிறார்; சபையின் ஆதரவு உள்ளவரை, அந்த பதவியில் அவர் நீடிக்க முடியும்.
 

அரசியல் நடவடிக்கை


சபாநாயகர் இல்லாத நேரங்களில், துணை சபாநாயகரே, சபையின் தலைவராக செயல்படுகிறார். பல முக்கிய முடிவுகளையும், இவரது தலைமையின் கீழ் எடுக்கலாம்.

சபாநாயகரை போல் அல்லாமல், இவர் சபையில் பேசலாம்.
விவாதங்களில் பங்கேற்று, எம்.பி., என்ற முறையில் பேசலாம். சர்ச்சைக்குரிய வகையிலோ, கட்சி அடையாளம் தெரியும் வகையிலோ, அவரது பேச்சு இருக்கக் கூடாது.
தான் சார்ந்துள்ள கட்சிக்காக, அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அவருக்கு உரிமை இருந்தாலும், முடிந்தவரை, தீவிர அரசியல் அலுவல்களில் இருந்தும், சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.
தான் வகிக்கும் துணைசபாநாயகர் பதவியின் கண்ணியம் கருதி, அந்த பதவிக்கான நடுநிலை தவறாத மாண்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்.

சபையின் முழுநேர அதிகாரி என்பதால், இவருக்கு என, தனித் தொழில், வர்த்தகம், சுய சார்புடைய வேறெந்த பணிகளிலுமே ஈடுபடக் கூடாது.கடந்த, 1953ல், அப்போதைய சபாநாயகர், மாவ்லங்கர் தலைமையில், மத்திய, மாநில மாகாண சபைகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது; அதில், 'துணை சபாநாயகர், ஒரு சாதாரண, எம்.பி.,யைப் போல, விவாதங்களில் பங்கெடுப்பதும், அரசாங்கத்தை விமர்சித்துப் பேசுவதும் சரியா' என்ற மிக முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது.

மிக நீண்ட விவாதம் நடந்து, அந்த மாநாட்டை முடித்து வைத்து, மவ்லாங்கர் அளித்த பதிலுரை தான், துணை சபாநாயகர் குறித்த கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது.

மாவ்லங்கர், தன் உரையில் கூறியதாவது: தங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இந்த கேள்வியை, ஒவ்வொரு துணை சபாநாயகரும், தங்களை தாங்களே சுயமாக பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும்.
துணை சபாநாயகர் என்பவர், ஒரு எம்.பி., தான். ஆனால், தாங்கள் ஒரு மாபெரும் சபைக்கு தலைமை தாங்கும் இருக்கையில் அமரக் கூடியவர்கள் என்பதை, அவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.
விவாதங்களின் போது, தங்கள் நடத்தை எவ்வாறு அமைய வேண்டுமென்பதில், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சபைக்குள், எம்.பி.,க்கள் மத்தியில், தன் மீது, கட்சி அடையாளம் விழ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கட்டுப்பாடு, சபைக்கு உள்ளேமட்டுமல்லாமல், சபைக்கு வெளியிலும், தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை அவர் தவிர்க்க வேண்டும். மேலும், தான் வெளிப்படுத்தும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என, மாவ்லங்கர் உரையில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு

 

உள்ளது.இந்த நெறிமுறைகளை மீறும் வகையில், தம்பிதுரையின், சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளனவா என்ற கேள்வி, தற்போது எழுந்துள்ளது.
 

இது நியாயம் தானா?


இந்த விவகாரம் குறித்து, பார்லி., வட்டாரங்கள் கூறியதாவது:தார்மீக நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் தான், அரசியல் சாசன பதவிகளுக்கே பெருமை. பி.எம்.சயீத், 15 ஆண்டுகளுக்கு மேல் துணை சபாநாயகராக இருந்தார்; அவர், கட்சி சார்ந்து அரசியல் பேசுவதை தவிர்த்தே வந்தார்.ஆனால், தான் வகிப்பது அரசியல் சாசன பதவி என்பது தெரிந்திருந்தும், தன்னை போலவே, மற்றொரு அரசியல் சாசன பதவி வகிக்கும் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், தம்பிதுரை பேசுவது ஏற்புடையது அல்ல.
ஒருமுறை, தானும் சபையில் பேச வேண்டுமென தம்பிதுரை கேட்க, அவரது பதவிக்கு, அது பொருத்தமானது அல்ல எனக்கூறி, சபாநாயகர் சுமித்ரா மறுத்தார். ஆனாலும், வலியுறுத்தி அனுமதி பெற்று பேசிய தம்பிதுரை, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.அப்போது, அது சர்ச்சையானது. துணை சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே, மத்திய அரசை விமர்சித்ததால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடுதான், பல முறை தம்பிதுரை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டபோதெல்லாம், பிரதமர் தராததற்கு காரணம்.
தற்போது, மீண்டும் தன் அரசியல் நடவடிக்கைகள் மூலம், மவ்லாங்கர் வகுத்து அளித்துள்ள நெறிமுறைகளை, தம்பிதுரை காற்றில் பறக்க விட்டுள்ளார்.
தன் அரசியல் தலைமையை திருப்திபடுத்த, அரசியல் சாசன பதவியை பயன்படுத்தி இருக்கக் கூடாது. குறைந்தபட்சம், துணை சபாநாயகர், 'லெட்டர் பேடில்' அறிக்கை விட்டதையாவது, அவர் தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683270

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.