Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா எனது தாய்.. தமிழக முதல்வராக்கியே தீருவோம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி

Featured Replies

சசிகலா எனது தாய்.. தமிழக முதல்வராக்கியே தீருவோம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி

 

சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு "சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம்" என்று ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமார் மகன் தீபக் 

 

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா எனது அம்மா போன்றவர் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார்

Sasikala will become CM of Tamilnadu: Jayalalithaa's nephew Deepak

 

இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் தொலைபேசி வழியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு தீபக் பதிலளித்துள்ளார்.

உங்களுக்கு சசிகலா மீது முழு நம்பிக்கையுள்ளதா? எந்த வகையான உறவு முறை உங்களுடையது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக், "அவர் எனது அம்மா போன்றவர்" என்றார்.

சசிகலாவுடன் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டா என்ற கேள்விக்கு "அவர் எனது தாய். பிறகு எதற்காக அவ்வப்போது பேசிக்கொள்ள வேண்டும்" என்றார் தீபக்.

சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு "சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம்" என்றார்.

தீபக்கின் சகோதரியான தீபா, தன்னைத்தான் அதிமுகவின் அடுத்த வாரிசு என கூறிவருகிறார். அவரை சசிகலாவுக்கு எதிராக களமிறக்க அதிமுகவின் ஒரு பிரிவு முயன்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தீபக் இவ்வாறு கூறியுள்ளது தீபா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-will-become-cm-tamilnadu-jayalalithaa-nephew-deepak-271044.html
 

  • தொடங்கியவர்

"சசி அத்தை... சசி அத்தை" என்று கூறிய தீபக் திடீரென "அம்மா" என கூறுவது ஏன்??

வாய்க்கு வாய் சசி அத்தை என்று கூறி வந்த மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், திடீரென சசிகலாவை தாய் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சசி அத்தை என்று வாய் நிறையக் கூறுகிறார் தீபக்... இது தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் பேட்டியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவை எப்படி அழைப்பார் என்று நெறியாளர் ரங்கநாத் பாண்டே கூறியது. ஆனால் இப்போது அதே தீபக் சசிகலாவை தாய் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

இத்தனை நாட்களாக அத்தை என்று கூறி வந்தவர் திடீரென அம்மா என்று அழைக்க ஆரம்பித்திருப்பதன் பொருள் என்ன என்ற பெரும் விவாதம் வெடித்துக் கிளம்பியுள்ளது.

Why Jayakumar's son Deepak says Sasikala is his mother?

 

அதிமுகவின் அடுத்த வாரிசாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் தீபக்கின் சகோதரி தீபா தீவிரமாக உள்ள நிலையில் அதை முறியடிக்க சசிகலா தரப்பு தீபக்குக்கு இப்படி கூறுமாறு குறிப்பு ஏதேனும் கொடுத்துக் களம் இறக்கி விட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தீபக்கையும் தன்னுடேயே தனது கஸ்டடியில் வைத்திருந்தார் சசிகலா. இதுவும் கூட அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில், சசிகலா எனது அம்மா போன்றவர். அவர் எனது தாய். எனவே அவருடன் பேசிக் கொள்வீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தந்தி டிவிக்கு தீபா ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரை பேட்டி கண்ட ரங்கநாத் பாண்டே கூறுகையில் வாய்க்கு வாய் சசி அத்தை சசி அத்தை என்று கூறுகிறார் தீபக் என்று கூறியிருந்தார். ஆனால் தீபக்கோ சசிகலாவை தனது தாய் என்று கூறியுள்ளார். அத்தை எப்படி திடீரென அன்னை ஆனார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-jayakumar-s-son-deepak-says-sasikala-is-his-mother-271053.html

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.