Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொசோவோவின் சுதந்திரத்திற்கான திட்டத்தை ஐ.நா.வெளியிட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[05 - February - 2007] [Font Size - A - A - A]

* சேர்பியா கடும் எதிர்ப்பு

கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது.

கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன.

கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய நாடுகளின் ஆவணம் தனது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார். கொசோவோ சுதந்திர நாடாக மாறும் என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளன.

கொசோவோ அமைச்சரவை இதனை கொண்டாடியுள்ளது.

இதேவேளை, சேர்பிய ஜனாதிபதி பொறிஸ் டடிக் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் ஆவணம் கொசோவோவின் சுதந்திரத்திற்கான வழியையேற்படுத்துகின்றது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், சேர்பியாவோ, தானோ கொசோவோவின் சுதந்திரத்தை ஏற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சேர்பிய பிரதமர் ஐக்கிய நாடுகள் பிரதிநிதி சேர்பிய எதிர்ப்பு உணர்வுள்ளவர் எனத் தெரிவித்து அவரை சந்திக்க மறுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் திட்டம் கொசோவோவிற்கு சர்வதேச அமைப்புகளில் இடம்பெறுவதற்கான அனுமதியை வழங்குகின்றது.

மேலும், சேர்பியா தனது கொடியையும் தேசிய கீதத்தையும் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

மேலும், இது சர்வதேச பிரதிநிதியொருவர் இதனை மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவின் தலைமையிலான சமாதான படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு தீர்மானம் தான் இலங்கைத்தீவுக்கும் தேவை. வட கிழக்கு மக்கள் சுதந்திர இறைமையுள்ள மக்கள் என்பதை ஐ.நா சொல்ல வேண்டும்.

புலம் பெயர் மக்கள் தான் இதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். போராளிகள் தங்கள் நிலப்பிரதேசத்தை வரையறுத்து எல்லையில் நிற்கிறார்கள்.இதையே மீண்டும் ஓர் படை எடுப்பு எடுத்து மக்களை அழித்து நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும்.

[05 - February - 2007] [Font Size - A - A - A]

* சேர்பியா கடும் எதிர்ப்பு

கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது.

கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன.

கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய நாடுகளின் ஆவணம் தனது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார். கொசோவோ சுதந்திர நாடாக மாறும் என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளன.

கொசோவோ அமைச்சரவை இதனை கொண்டாடியுள்ளது.

இதேவேளை, சேர்பிய ஜனாதிபதி பொறிஸ் டடிக் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் ஆவணம் கொசோவோவின் சுதந்திரத்திற்கான வழியையேற்படுத்துகின்றது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், சேர்பியாவோ, தானோ கொசோவோவின் சுதந்திரத்தை ஏற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சேர்பிய பிரதமர் ஐக்கிய நாடுகள் பிரதிநிதி சேர்பிய எதிர்ப்பு உணர்வுள்ளவர் எனத் தெரிவித்து அவரை சந்திக்க மறுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் திட்டம் கொசோவோவிற்கு சர்வதேச அமைப்புகளில் இடம்பெறுவதற்கான அனுமதியை வழங்குகின்றது.

மேலும், சேர்பியா தனது கொடியையும் தேசிய கீதத்தையும் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

மேலும், இது சர்வதேச பிரதிநிதியொருவர் இதனை மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவின் தலைமையிலான சமாதான படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது போராட்டத்தின் இறுதி அத்தியாயமும் ஒரு மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரத்தில் கிடைத்த அங்கீகாரமாகத்தான் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அதற்கு முதல் இறுதி யுத்தம் நடக்க வேண்டும். அது தொடங்க முதல் நடக்கிறதற்கு கனக்க இருக்கு.

சிறீலங்கா படைகளின் கிழக்கு ஆக்கிரமிப்பு என்பது இந்த மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரம் என்ற இறுதி அத்தியாயத்தில் எமக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு சில தயார்ப்படுத்தல்களை செய்ய நடத்தப்படுகிறது இன்று.

அதாவது புலிகள் இறுதி யுத்தத்தை ஆரம்பித்து வெற்றி கண்டால் எமது போராட்டம் அதற்கு அடுத்தாக என்ன நிலைக்கு செல்லும் என்று கணிப்பிட்டு அதில் நாம்மை எப்படி எதிர்கொள்ளலாம் முடக்கலாம் என்பது பற்றி சிங்களமும் சர்வதேசமும் சிந்தித்து செயலாற்றுகிறது இன்று.

அதாவது தமிழர் தாயகத்தினை இறுதி மண்மீட்பு யுத்தத்தில் முழுப்பகுதிகளை மீட்டாலோ அல்லது கேந்திர முக்கியத்துவப் பகுதிகளை மாத்திரம் வெற்றி கொண்டாலும் அங்கீகாரத்திற்கு பிரிந்து செல்வது பற்றி தேர்தல் ஒன்று நடத்த வேண்டி நிலை வரும். அந்த தேர்தலின் முடிவுகள் பிரிவுக்கு சாதகமாக இருந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று சிங்களம் இன்றே சிந்திக்கிறது.

இதன் ஒரு அங்கமாகத்தான் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி தமிழர்கள் 4 வீதம் தான் என்ற சிறீலங்காவின் புதியவாதம்.

தேர்தல் முடிவுகள் எந்தளவிற்கு ஜனநாயகரீதியில் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாது பக்கச்சார்பாக நடந்து கொள்ளும் பயங்காரவாத சர்வதேச ஒழுங்கில் இன்று இருக்கிறோம் என்பது கமாசின் தேர்தல் வெற்றிக்கு பலஸ்தீனர்கள் இன்று அனுபவிப்பவை எடுத்துக் காட்டு.

கமாஸ் பலஸ்தீன நிர்வாகத்திற்கு சமாந்தரமாக ஒரு நிழல் அரசை தேர்தலிற்கு முன்னர் திறம்பட நடத்தி வந்தது. அதில் பயன் பெற்ற மக்கள் அதன் வினைத்திறனைக் மெச்சித்தான் தேர்தலில் கமாசை வெற்றி பெற வைத்தார்கள். பலஸ்தீன மக்களிற்கு விசுவாசமாக உழைத்த கமாசை எவ்வாறு சர்வதேசம் உடைக்க முற்படுகிறது என்பதை இன்று காணலாம். ஒரு நேர்காணலில் கமாசின் ஒரு நிர்வாக அதிகாரி சொன்னார், தாம் முழுப் பொறுப்பையும் ஏற்றிருக்காது நிழல் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த பொழுது தமது செலவுகள் வெறும் 1.6மில்லியன் டொலர்களாக இருந்தது. அதுவே முழுப் பொறுப்பும் அவர்களிற்கு மாற்றப்பட்டவுடன் 160 மில்லியன் டொலர்களாக ஏறிவிட்டது. சர்வதேசமும் இப்படி ஒரு பொருளாதார அழுத்தத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லையாம்.

கிட்டத்தட்ட அதே நிலை எமக்கும் உண்டு. எமது இன்றய நிழல் நிர்வாகக் கட்டமைப்புகளின் சவால்கள் தேவைகள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறும் முழுமையான சுதந்திரத்தை நோக்கி நகரும் பொழுது. முக்கியமாக அடிப்படை உணவு சுகாதாரம் போன்றவையே பெரிய பழுவாக இருக்கும். இதற்கு எந்தளவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பங்களிக்கத் தயார்? பலஸ்தீனத்தில் ஊழல் ஆடம்பரம் சம்பளம் என்று விரையமாகிறது என்று வைப்போம். எனவே அவர்கள் போல் 100 மடங்காக அதிகரிக்காது, 10 மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தால் அதை எதிர்கொள்ள புலம்பெயர்ந்த நாம் தயாரா?

இன்று கிடைக்கும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களின் உதவிகள் கூட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு எம்மோடு பேரம் பேசப்பட்டு நெருக்கடிகள் தரப்பட்டால் ஆச்சரியம இல்லை. இது ஆபிரிக்காவில் நடக்கும் பட்டினிச் சாவு போன்ற அவலத்தை உருவாக்கும் நிலைக்கும் போகலாம். எனவே இன்று புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் பங்களிப்பில் இருந்து குறைந்தது 10 மடங்கு அதிகரித்த பங்களிப்பை பேரம் பேசி இழுத்தடிக்கப்படும் என்று எதிர்பார்க்கக் கூடி சில வருடங்களிற்காகுதல் வழங்க தயாராகி விட்டோமா? இங்கு தான் தமிழ்நாட்டி எழுச்சி ஆதரவு என்பது இன்னொரு வழியில் முக்கியமாகிறது. பணத்தை திரட்டினாலும் வழங்கல்களை பெற்றுக் கொள்ளக் கூடி தூரத்தில் இருக்கிறது என்பதால் கொஞ்சம் அவலத்தை எல்லை மீறிப் போகாது பார்த்துக் கொள்ளும்.

இது போன்ற வரலாறு காணாத சவால்களை எதிர்கொள்ளக் கூடி நிலைக்கு நாம் எல்லோரும் என்று தயாரோ அது பற்றிய தெளிவுகள் வருகுதோ கடமைகளை உணர்கிறமோ அதற்கு பின்னர் தான் இறுதி யுத்தத்தை எதிர்பார்க்கலாம்.

பிரிந்து செல்வதற்காகத்தான் விடுதலைப் போர் நடக்கிறது. போரில் வெற்றிபெற்றால் பிரிந்து செல்வதற்கு தேர்தல் நடக்குமாம். :)

இராணுவ ஆக்கிரமிப்பினால் தான் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களை மேற்கொள்ள முடியாமலுள்ளது. ஆகவே ஆபிரிக்காவுடன் தமிழீழத்தை ஒப்பிட முடியாது. இப்போதுமட்டுமென்ன அரசாங்கம் பொருட்களை அள்ளி வழங்குகிறதா ?

இப்போதைய செலவு 10 மடங்காகினால் அதை எதிர்கொள்ள புலம் பெயர்ந்த நாம் தயாரா என்று கேட்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதோ தெரியாது. ஆனால் விடுதலைப் புலிகள் புலிகள் நாங்கள் கொடுக்கும் பணத்தை மட்டும் நம்பி நிர்வாகம் நடத்தவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.