Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – ஜனாதிபதி

Featured Replies

அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – ஜனாதிபதி

maithiri54_CI.jpg
அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே எனவும்  இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்த கனவு வெறும் கனவாகவே நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வு நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/12765

இவரே தேர்தல் முடிவு வரும்போது தென்னம்தோட்ட தென்னம்மட்டை போடும் அறைக்குள் நடுங்கியபடி ரேடியோவை கேட்டுக்கொண்டு இருந்தவர் அரசியலில் எதுவும் எப்பவும் என்னவும் நடக்கலாம் .

  • தொடங்கியவர்

2020 ஆம் ஆண்டுவரையில் ஆட்சியை அசைக்க முடியாது

p23-a5e4f5243e9282880e91c1928255dd2873a7cf95.jpg

 

ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்; சிலர் கனவு காண்பதாகவும் பரிகாசம்
(எம்.எம்.மின்ஹாஜ்)

2017 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்கு கனவு காண்­ப­வர்­க­ளுக்கு நான் ஒன்றை

கூற விருப்­பு­கின்றேன். 2020 ஆம் ஆண்டு வரைக்கும் நல்­லாட்சி அர­சாங்­கமே ஆட்­சியில் இருக்கும். எமது ஆட்­சியை கவிழ்க்­கவோ அல்­லது அசைத்­துப்­பார்க்­கவோ எவ­ராலும் முடி­யாது. சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்கு நான் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்தார். 

அத்­துடன் நாட்டின் இறை­யாண்­மைக்கு பாதிப்ப‍ை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு தீர்­மா­னத்தை நான் எடுக்க மாட்டேன். அர­சி­ய­ல­மைப்பு முர­ணான முடி­வு­களை எடுக்­க­மாட்டேன். அம்­பாந்­தோட்டை துறை­முக தொடர்­பாக ஒப்­பந்தம் இது­வரை தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. எமது அர­சாங்கம் எந்­த­வொரு திட்­டத்தை அந்­த­ரங்­க­மாக செய்­யாது. அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே கைச்­சாத்­தி­டப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை ஒலிப்­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் பொன்­விழா முன்­னிட்டு புதிய கட்­ட­டத்­தொ­கு­தியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. கட்­ட­டத்தை திறந்து வைத்த பின்னர் கூட்­டுத்­தா­ப­னத்தின் குமா­ர­துங்க கலை­ய­ரங்­கத்தில் பொன்­வி­ழாவை முன்­னிட்டு விசேட முத்­தி­ரையும் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நிகழ்­வில் ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க, தபால் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் , பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்கை ஒலிப்­ப­ரப்பு கூட்­டுத்­தா­பனம் வானொலி வர­லாற்றில் உன்­னத சேவையை செய்த ஊடக நிறு­வ­ன­மாகும். முன்­னைய காலங்­களில் தொலைக்­காட்சி வச­திகள் ஒன்றும் இல்­லாத யுகத்தில் தேர்தல் முடி­வு­களை நாம் இலங்கை ஒலிப்­ப­ரப்பு சேவையின் ஊடா­கவே கேட்போம். சமூக வளர்ச்­சிக்கும் நாட்­டிற்கு பாரிய சேவைக்கும் பாரிய சேவை­களை செய்து வரு­கின்­றது.இதன்­பி­ர­காரம் இலங்கை ஒலிப்­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­தினை மேலும் நாம் வளர்ச்­சிக்­குட்­ப­டுத்­துவோம்.

அத்­துடன் கலை­ஞர்கள் பலர் என்­னிடம் வந்து ஊட­கங்கள் சில எமது உடை­மை­களை கொள்­ளை­யி­டு­வ­தாக முறை­யிட்­டனர். எமது பாடல்கள் உள்­ளிட்ட திற­மை­யி­லான சொத்­துக்­களை எமக்­கு­ரிய பெறு­ம­தி­க­ளுக்­கு­ரிய பணம் பெற்­று­த­ராமல் மிகவும் மனி­தா­பி­மானம் அற்ற முறையில் கொள்­ளை­யி­டு­கின்­றனர். இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என முறை­யிட்­டனர். காலை முதல் மாலை வரையில் ஊழல்,மோச­டிகள் பற்றி கூறும் ஊடக நிறு­வ­னங்கள் இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஊடக நிறு­வ­னங்­களும் ,ஊடக நிறு­வன உரி­மை­யா­ளர்­களும் மனி­தா­பி­மானம் அற்ற முறையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இது தொடர்பில் சட்டம் இயற்­றப்­பட்ட வேண்டும்.இதற்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் கவனம் எடுக்க வேண்டும்.

மேலும் காலை பொழுதில் பாட­சா­லை­க­ளுக்கு ச‍ெல்லும் மாண­வர்கள், தொழி­லுக்கு செல்வோர், அர­சியல் வாதிகள் அனை­வரும் காலையில் பய­ணிக்கும் வாக­னங்­களில் வானொ­லி­களை செவி­ம­டுப்­ப­தற்கு அதிக அவ­தானம் ச‍ெலுத்­து­கின்­றனர். இதன்­போது வனொ­லி­களில் காலை பொழுதில் பூஜை வழி­பா­டுகள் தொடர்­பான நிகழ்ச்சி நிரல் நிறை­வ­டைந்­த­வுடன் நாட்டு மக்கள் மத்­தியில் குரோ­தங்­க­ளையும் இன­வாதம் மத­வா­தத்­தையும் போஷிக்கும் வகை­யி­லான நிகழ்ச்சி நிரல்­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். ஏன் இவ்­வாறு செய்­கின்­றனர். காலையில் பாட­சா­லைக்கு படிக்க செல்லும் மாண­வர்கள் மத்­தி­யிலும், தொழில் செல்வோர் மத்­தி­யிலும் குரோ­தத்தை வளர்க்கும் செய­லையே முன்­னெ­டுக்­கின்­றனர். இதனால் மாண­வர்கள் முதல் பெரி­ய­வர்கள் வரையில் குரோ­தமே வளர்க்­கப்­படும்.

வனொ­லி­களில் பத்­தி­ரிகை செய்தி வாசிப்பின் போது செய்­தி­களை மாத்­திரம் வாசிப்­ப­தனை விட்டு அதற்கு அர்த்தம் கற்­பிக்கும் பணி­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றனர். இதன்­போது அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நியா­ய­மற்ற முறையில் குற்­றச்­சாட்­டு­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்­கின்­றனர். இவற்றை கட்­டுப்­ப­டுத்தும் சட்­டங்கள் எதுவும் நாட்டில் இல்லை. ஆனாலும் ஊட­கங்கள் இது தொடர்பில் உரிய அவ­தானம் செலுத்த வேண்டும்.

அத்­துடன் தற்­போது சிலர் தமக்கு வாய்க்கு வந்த மாதிரி வார்த்தை பிர­யோ­கங்­களை செய்து வரு­கின்­றனர். 2017 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்­ப­தாக வீர வச­னங்கள் பேசு­கின்­றனர். ஆட்சி கவிழ்க்கும் கனவில் உள்­ள­வர்­க­ளுக்கு நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். இந்த ஆட்­சியை 2020 ஆம் ஆண்டு வரைக்கும் கவிழ்க்­கவோ, அசைத்து பார்க்­கவோ எவ­ருக்கும் முடி­யாது. 2020 ஆம் ஆண்டு வரைக்கும் நல்­லாட்சி நிலைத்து நிற்கும். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்கு நான் ஒரு­போதும் நான் இட­ம­ளிக்க மாட்டேன். நினைத்த மாதிரி எவ­ராலும் செயற்­பட முடி­யாது. 2017 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய பொரு­ளா­தார மற்றும் அபி­வி­ருத்தி புரட்­சியை ஏற்­ப­டுத்தும் வரு­ட­மாகும். இந்த வரு­டத்தில் ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­படும் வரு­ட­மாகும்.

அதே­போன்று அம்­பாந்­தோட்டை காணி­க­ளையும் துறை­மு­கத்­தையும் வெளி­நாட்டு தாரை வார்க்க போவ­தாக சிலர் போராட்­டங்­களில் ஈடுப்­ப­டு­கின்­றனர். நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். நாட்டின் இறை­யாண்­மையை பாதிக்கும் தீர்­மா­னத்­தையோ அல்­லது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான எந்­த­வொரு தீர்­மா­னத்­தையோ நான் எடுக்க மாட்டேன். அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்பில் இது­வ­ரையில் எந்­த­வொரு ஒப்­பந்­தமும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக சட்டவல்லுனர்களின் அறிக்கையை பெறுவதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். இவர்களின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பித்து பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். அதனை மீறி அந்தரங்கமான முறையில் அரசாங்கம் என்ற வகையில் நாம் எதனையும் செய்யமாட்டோம்.

எனவே இது தொடர்பில் ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான செய்திகளை பிரசுரித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பார்க்கின்றனர். ஜனவரி 7 ஆம் திகதி எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படாது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.