Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ

Featured Replies

“அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ

வைகோ,நெடுமாறன்,நடராஜன்

'மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுகிறது' என்று திடீரென அறிவித்து  அதிரடி அரசியல் காட்டினார் வைகோ. 'அ.தி.மு.க-வின்  தலைமையோடு வைகோவுக்கு இருக்கும் நெருக்கம்தான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதற்கு காரணம்' என்றப் பேச்சுக்கள் பலமாக அடிப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவின்  கணவர் நடராஜனும் வைகோவும் நண்பர்கள் என்பதால் இந்த கருத்தின் உறுதித்தன்மைக்கு வலுசேர்த்தது. 

அ.தி.மு.க தரப்பிலோ அல்லது ம.தி.மு.க கட்சியினரோ, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்த எந்தத் தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய 'தம்பி ஜெயந்த்துக்கு...' நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில், வைகோ-வும் , பழ.நெடுமாறனும்  நடராஜனும் கலந்து கொண்டனர். ஒரே மேடையில், வைகோ நுாலை வெளியிட அதை நடராஜன் பெற்றுக்கொண்ட நிகழ்வு அரங்கேறியது. அதே மேடையில், ''தனி ஈழம் என்பதுதான் வைகோவின் ஒரே கோரிக்கை. கண்டிப்பாக ஒரு நாள் அது நடந்தேறும்.'' என்று உணர்ச்சிப் பிழம்பான வைகோ தொடர்ந்து, “நான் நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வைகோ பேசும் போது, “இந்த நூலை பெற்றவர் அன்பு சகோதரர் நடராசன் அவர்கள். நான் நன்றியுள்ளவன். தமிழரின் சுவடுகளே இல்லாமல் இந்திய அரசு ஈழத்தை அழித்ததே, எந்த புலிக்கொடி  தஞ்சையில்  பறந்ததோ, அதே தஞ்சையில்  முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அமைப்பதற்கு பழ.நெடுமாறனோடு துணை நின்று இடமும் கொடுத்தவர் நடராஜன். அதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொடியை கையில் ஏந்திக்கொண்டு மாணவத்தலைவனாக நின்ற இந்த நடராஜனை நான் நினைத்துப் பார்க்கின்றேன். எனது திருமணம் குற்றாலத்தில் நடைபெற்ற போது எனது திருமணத்துக்கு மூன்று நாட்கள் துணையாக இருந்து உதவி செய்தது இந்த நடராஜன்தான் என்று எத்தனை பேருக்கு தெரியும். நான் நன்றியுள்ளவன். நன்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன். 

நடராஜனைப் பாராட்டி பேசியதை நாளை ஊடகங்கள் திரித்து சொல்லலாம். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஐடோன்ட் கேர்” என்றார் ஆவேசமாக.நடராஜனோ “நான் அரசியல் பேசப் போவதில்லை. ஆனால், ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்'' என்று சுருக்கமாகப் பேசி முடித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/76998-i-am-very-thankful-to-natarajan--vaiko.art

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரில் வீழ்ந்தவன் எதையாவது பிடித்து கரை சேர எண்ணுவது இயல்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.