Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.பி. நவரத்தினத்தின் முத்திரை ரத்து கோரிக்கை நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்.பி. நவரத்தினத்தின் முத்திரை ரத்து கோரிக்கை நிராகரிப்பு

[புதன்கிழமை, 7 பெப்ரவரி 2007, 01:49 ஈழம்] [காவலூர் கவிதன்]

காவலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி.நவரத்தினத்தின் நினைவாக, கனடாவில் அவரது படத்துடன்கூடிய முத்திரையொன்று வெளியிடப்பட்டது.

சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பிரச்சாரக்குழு, கனடிய தூதரக தொடர்புகளுடாக, இதை கடுமையாக எதிர்த்ததுடன், இந்த முத்திரை வெளியீட்டை நிராகரித்து, மீளப்பெறுமாறு கோரிக்கை விடுத்தது.

இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே சிறீலங்கா இனப் பிரச்சனைக்கு தீர்வொன்று கிடைக்குமென்று கூறியதன் மூலம், இவர் பயங்கரவாதத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கியதாகக் கூறிய இந்த பரப்புரையாளர்கள், இந்த முத்திரை வெளியாகியதன் மூலம், தமிழர் அரசியல் அபிலாசைகளுக்கு கனடிய தபால் இலாகா உதவியிருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த கனடிய தபால் திணைக்களம், இந்த முத்திரையை கனடிய அரசு வெளியிடவில்லை என்றும், கனடாவில் வழமையாக நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இந்த முத்திரையும் வெளிவந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட கனடிய முத்திரை வெளியீட்டுத் திட்ட அதிகாரி ஜிம் பிஃலிப்ஸ், திரு.நவரத்தினத்தின் அரசியல் வாழ்வுக்கும் முத்திரை வெளியீட்டிற்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.

விரும்பிய குடும்ப உறவினர்கள் இந்த கனடிய முத்திரைகளைப் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நவரத்தினத்தின் மகன், தனது விருப்பத்தின் பேரில் இந்த முத்திரைகளை வெளியிட கோரிக்கை விடுத்து, உரிய தொகையைக் கட்டினார். அதன் அடிப்படையில் 150 முத்திரைகள் வெளியிடப்பட்டன என்று அவர் விளக்கமளித்தார்.

கடந்த நொவம்பர் 22ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில், தமது 97வது வயதில் காலமான திரு.வி.நவரத்தினம் அவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராவார்.

யாழ். காவலூர், கரம்பனில் கடந்த 1910 ஒக்ரோபர் 18 ஆம் நாள் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லு}ரியில் பயின்று, பின்னர் 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாக பணியாற்றினார். சமூக சிந்தனையாளரும், எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளரும், அரசியல்வாதியுமான திரு.நவரத்தினம் அவர்கள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, லத்தீன், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு மொழியியலாளர்.

இலங்கை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது என்ற நு}லை 1956 ஆம் ஆண்டு எழுதினார். தமிழ்த் தேசியத்தின் எழுச்சி தொடர்பாக 1995 ஆம் ஆண்டு மற்றொரு நு}லை எழுதினார். இவை தவிர, 2004ல் திருவெம்பாவை என்ற நூலை எழுதினார்.

2006ம் ஆண்டு ல் 732 பக்கங்கள் கொண்ட தமிழர் பூர்வீக சரித்திரம் என்ற தமிழ் வரலாற்று நூலை யாழ் பல்கலைக்கழக வெளியீடாக இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதுடன், தமிழ் மொழிபெயர்ப்புக்கும், யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கினார்.

அமரர் வி.நவரத்தினத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கௌரவித்தனர்.

1969 இலேயே 'தனித் தமிழ் நாட்டின்' அவசியம் பற்றி நவரத்தினம் அவர்கள் எடுத்தியம்பியதாகக் கூறும் விடுதலைப் புலிகளின் கௌரவ உரையில், தீர்க்கதரிசனமான பார்வையும், சிந்தனையும் மிக்கவரான இவர் தனது நடைமுறை வாழ்க்கை வரலாற்றை, தான் நேரில் கண்டவற்றை, கேட்டவற்றை தமிழ் இளைய தலைமுறைக்கு மட்டுமல்லாது சர்வதேச சமூகத்திற்கும் புரியத்தக்க வழியில் நு}லாக்கம் செய்யும் அருந்தொண்டாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும்" எனவும் "மறுபிறப்பொன்றென்று இருக்குமானால் மீண்டுமொரு தமிழனாக தமிழீழத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்" எனவும் மேல் நாடொன்றிலிருந்து கடைசி வரை உரைத்த அவரது தேசபக்திக்கு சிரம் தாழ்த்துகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசியுரையில் விதந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=30733

சர்வசாதரணமான ஒரு விடயத்துக்கே இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து இலங்கை அரசு செயல்படுகிறது என்பதை ஈழத்து அபிமானிகளே உணருங்கள்

நம்வகையில் எல்லாவற்றையுமே கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறோம். பரப்புரை போதாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.