Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர்களே வீதியில் செல்லமுடியாத நிலை -அமைச்சர் ஜெயராஜ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களே வீதியில் செல்லமுடியாத நிலை

மனம் வெதும்புகின்றார் அமைச்சர் ஜெயராஜ்!

அவரது காரையே தட்டித் தர்பார் நடத்தினராம் பொலிஸார்

கொழும்பு, பெப். 07

அமைச்சரொருவருக்குக் கூட இன்று வீதியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.

நேற்று நாடாளுமன்றம் சபாநாயக்கர் ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியபோது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சிறப்புரிமைப் பிரச்சினை யொன்றை எழுப்பி உரையாற்றினார். அவர் அங்கு கூறியதாவது:

இன்று காலை பௌத்தலோக மாவத்தை வழியாக நான் நாடாளுமன்றத்துக்கு எனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். அச்சமயம், எனக்குப்பின்னால் வாகனத் தொடரணி ஒன்று வந்தது. இந்த வாகனத்தொடரணிக்கு முன்னிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் ஏசியவண்ணம் எமது காரை தட்டித்தாக்கினர். இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும்.

வாகனத்தொடரணியில் வந்தவர் ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கவேண்டும். அல்லது பிரதியமைச்சராக இருக்கவேண்டும். நாடாளுமன்றத்துக்கு வந்துக்கொண்டிருக்கும் எம்.பியொருவரையோ அமைச்சரொருவரையோ தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். நான் எனது வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது இந்த வாகனத்தொடரணி எனது வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோதே தொடரணிக்கு முன்னால் சென்ற பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டனர். இத்தனைக்கும் எனது வாகனத்தில் கறுப்புக் கண்ணாடிகள் போடப்பட்டிருக்கவில்லை. நான் வாகனத்தில் அமர்ந்திருப்பதை பார்க்கக்கூடியதாகவே இருக்கும்.

நான் உடனடியாக இச்சம்பவம் குறித்து ஜனாதிபதியின் செயலாளருக்கு தொலைபேசிமூலம் இது தொடர்பாக தெரிவித்தேன். பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அவர் குளித்துக் கொண்டிருக்கின்றார் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் அவர் அதன்பின் இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.

இதேவேளை, நேற்று சரணவீதி முழுதாக மூடப்பட்டிருந்தது. எனது வீடு அந்த வீதியில்தான் இருக்கிறது. நேற்று வாகனங்கள் சரண வீதியால் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் எனது நாளாந்தக் கடமைகள் பாதிக்கப்பட்டன. இது குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

- சுடர் ஒளி

இப்படியான சந்தர்பத்தை பயன்படுத்தி தமிழ் எம்பீமார் தங்கள்பரப்புரையை செய்யவேண்டும்

உங்களுக்கே இந்தக்கதிஎனில் எங்கள்கதிஎன்ன சாதாரண தமிழ் மக்கள்கதிஎன்ன என்று அந்தஇடத்திலேயே கதைத்துபரப்புரை செய்யலாம் செய்யவேண்டும்

Edited by vvsiva

அமைச்சரொருவருக்குக் கூட இன்று வீதியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

பொது மக்கள் நிலை: அவலம் - மரணம்.

கெட்டவார்த்தையால் திட்டியதற்கே உனக்க இத்தனை ஆத்திரம். ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் என்று முறையிடுகிறாய். சாதரண பிரஜைகள் உங்கள் பாதுகாப்புத்தரப்பால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் யாரிடம் சென்று முறையிடுவது?

நீ நாடாளுமன்றம் சென்றால் என்ன? அல்லது நடுவீதியில் நாய் போல செத்தால்தான் எமக்கென்ன?

புதன் 07-02-2007 17:05 மணி தமிழீழம் [சிறீதரன்]

ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளையின் வாகனம் வழிமறித்தவர்கள் பாதுகாப்புத் தரப்பினரே - பெர்னான்டோ புள்ளோ

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டா புள்ளேயின் வாகனத் தொடரணியினை பாதுகாப்பு தரப்பினர் வழிமறித்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ன

நேற்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ சென்று கொண்டிருந்த போது அவருடைய வாகனத் தொடரணியின் பின்னால் வந்த பாதுகாப்பு தரப்பினரால் அவருடைய வாகனம் வீதியோரத்திற்கு பலவந்தமாக நகர்தப்பட்டுள்ளது

அதன் போது அமைச்சரின் வாகனச்சாரதி பாதுகாப்பு தரப்பினரால் தகாதா வார்தைகளால் எச்சரிக்கப்பட்டுள்ளார்

இந்த நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளே காரணம் என்று தெரியவந்துள்ளது

இது குறித்து சபாநாயகரிடம் முறையிட்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தனது வாகனத்தை பலவந்தமாக தடுத்து நிறுத்தியமை குறித்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் கோரியுள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளே காரணம் என்று தெரியவந்துள்ளது

மகிந்த தனது குடும்பத்தினர் எல்லாரையும் அரசியலில் இறக்க தனது பதவிக்காலத்தை தக்க தருணமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.