Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே இன்று ரணில் கொண்டு வர தயாராகின்றார் – சந்திரிக்கா

Featured Replies

அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே இன்று ரணில் கொண்டு வர தயாராகின்றார் – சந்திரிக்கா

 

 

அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே இன்று ரணில் கொண்டு வர தயாராகின்றார் – சந்திரிக்கா
 

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே தற்போது ரணில் விக்ரமசிங்க கொண்டு வர தயாராகின்றார். எமது கட்சி மீண்டும் வெற்றிபெறும் என்ற அச்சத்தினாலேயே அன்று வேண்டாம் என கூறினார். நான் இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பேன் என்று அஞ்சினார். இறுதியில் அவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வர நான் உதவி புரிந்தேன். தலைமைத்துவத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினேன். பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டு மேலும் சிலர் ஜனாதிபதியான பின்னர் அன்று கூறியவற்றை இன்று கூறுகின்றனர். எனினும், அந்த காலத்தில் சுமார் இருபது வருட காலம் நாடு அழிவடைந்தது. தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அதனை ஏற்றுக்கொள்கின்றது. அந்த தலைமைத்துவம் ஏற்றுக்கொள்கின்றது. அன்று ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம் என சிந்திக்கின்றனர். அந்த தவறை தற்போதாவது சிந்திக்கின்றமை வரவேற்கத்தக்கது.

 

 

 

http://newsfirst.lk/tamil/2017/01/அன்று-நாம்-கூறிய-அரசியலம/

  • தொடங்கியவர்

ரணிலுக்கு நேரடியாகவும் மஹிந்தவுக்கு மறைமுகமாகவும் அடித்தார் சந்திரிகா
 
 

article_1484106142-aa.jpgஅழகன் கனகராஜ்  

தனக்கு இடமளித்திருந்தால், ஆகக்கூடிய அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கியிருப்பேன் எனக்கூறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அதற்கு ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கவில்லை என்றும், தான் செய்ததையே இப்போது அவர் செய்கின்றார் என்றும் கூறினார். 

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

கேள்வி நேரத்தின் போது, “நீங்கள் (சந்திரிகா) தயாரித்திருக்கும் புதிய அரசியலமைப்பு நல்லது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அன்று தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, உங்களது அரசியலமைப்புக்குக் கடும் எதிர்ப்பினைக் காட்டினார். இன்று புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது சாத்தியமாகுமா?” என்று வினவினர்.  

கேள்விக்குப் பதிலளித்த சந்திரிகா, “அதுதான் மனித தன்மையாகும். என்னுடைய அரசியலமைப்பை அன்று வேண்டாமெனக் கூறிய ரணில் தான், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இன்று முயல்கிறார். 

“என்னால் தயாரிக்கப்பட்ட அரசிலமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், இன்னும் நான் அதிகாரத்தில் இருந்திருப்பேன். ஆனால், ரணிலை அதிகாரத்துக்கு கொண்டுவந்து, பிரதமராக்கியதுடன், மற்றுமொருவரை ஜனாதிபதியாக்கினேன்.  

“அதிகாரப் பகிர்வு விடயத்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் 25 சதவீதமான ஆதரவே கிடைத்தது. எனினும், என்னுடைய வேலைத்திட்டங்களினால் அந்த ஆதரவை 68 சதவீதமான அதிகரித்தேன். சிறுபான்மையின மக்களின் ஆதரவையும் திரட்டியிருந்தால், அதிகார பகிர்வுக்கு 85 சதவீதமான ஆதரவு கிடைத்திருக்கும். ஜனநாயக நாடொன்றில், ஒரு சிறு பிரிவினர் எதிர்ப்பை வெளிக்காட்டுவது பிரச்சினையில்லை.  

“எனினும், தான் அன்று உருவாக்கவிருந்த அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்” என்றும் கூறினார்.  

“என்னுடைய காலத்தில் இருந்ததைவிடவும் பிரிவினைவாதம் தற்போது கூடியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியே, அந்தப் பிரிவுக்கு தலைவராக இருந்துகொண்டிருக்கின்றார்” என்றும் சந்திரிகா குற்றஞ்சாட்டினார்.
(இதன்போது அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை குறிப்பிடாமலே இக்கருத்தை வெளிப்படுத்தினார்).  

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க கூடாதுதென்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எவ்விதமான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தானே, கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்றும் சந்திரிகா இதன்போது கூறினார்.  

- See more at: http://www.tamilmirror.lk/189608/ரண-ல-க-க-ந-ரட-ய-கவ-ம-மஹ-ந-தவ-க-க-மற-ம-கம-கவ-ம-அட-த-த-ர-சந-த-ர-க-#sthash.HoelF9Hr.dpuf


Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘புலி இருந்தபோது நானே செய்தேன்’
 
11-01-2017 09:22 AM
Comments - 0       Views - 30

article_1484106773-chandrika-kumaratungaஅழகன் கனகராஜ்  

“தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் போதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை, நாட்டுக்குள் நான் முன்னெடுத்தேன் என்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.  

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

கேள்வி நேரத்தின் போது, “புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை நீங்கள் கைப்பற்றினீர்கள். புலிகள் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்டிருக்காவிட்டாலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை உங்களால் முன்னெடுத்திருக்க முடியுமா?” என்று வினவினார்.  

“ஆம். முடியும். ஏன், புலிகள் இருந்த காலத்திலும் நல்லிணக்கத்துக்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்திருந்தேன். வீடுவீடாகச் சென்று, பாய்களில் படுத்திருந்து மரவள்ளிக்கிழங்குகளை அவித்துச் சாப்பிட்டுக்கொண்டு, நல்லிணக்கத்துக்கான வேலைகளை முன்னெடுத்தேன். இந்த விவகாரம் யாருக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் குழப்பியிருப்பார்கள்.  

“யுத்தத்தை நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற சிந்தனையை, சிங்கள மக்களிடத்தில் கொண்டுசென்றேன்.  

“வெண்தாமரை இயக்கத்தை உருவாக்கி, அதனூடாகவே இந்த வேலைத்திட்டத்தை நான் முன்னெடுத்தேன். யுத்தமொழியிலேயே பலரும் பேசினர். சமாதான மொழியிலேயே நான் பேசுகின்றேன்.  

“எங்களுடைய அமைச்சர்களுக்கு முதுகெலும்பு இல்லை. அரசியல் செய்வதற்காகவே சிலர், நல்லிணக்கத்துக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.  

“தூண்டிவிட்டு அரசியல் செய்யும் கொள்கை என்னிடம் இல்லை. அதேபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அந்தக் கொள்கை இல்லை” என்றார்.  

- See more at: http://www.tamilmirror.lk/189614/-ப-ல-இர-ந-தப-த-ந-ன-ச-ய-த-ன-#sthash.Z3IS3FT1.dpuf
  • தொடங்கியவர்

பரிந்துரைகளை நிராகரித்தமை பிழை
 
11-01-2017 09:23 AM
Comments - 0       Views - 50

article_1484106888-aa.jpgஅழகன் கனகராஜ்  

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவையை, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது என்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். 

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னதாகக் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், “11 பேர் அடங்கிய நல்லிணக்கப் பொறிமுறைகளுகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி (சீ.டி.எப்), தனது இறுதியறிக்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும்; வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும்; விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ஒவ்வோர் அமர்விலும், வெளிநாட்டு பிரதிநிதியொருவர் பிரசன்னமாய் இருக்கவேண்டும் ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரிந்துரைகளை, நீதியமைச்சர் விஜயதாஸ நிராகரித்துள்ளார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என்றார்.

இதற்குப் பதிலளித்த சந்திரிகா, “இந்தச் செயலணியை நான் உருவாக்கவில்லை. என்னுடைய அலுவலகமும் செய்யவில்லை. அரசாங்கத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அமைச்சரவையின் அங்கிகாரத்துடனேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. 

“அரசியலமைப்பு, யுத்தக்குற்றம் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்து பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனினும், இந்தச் செயலணிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம், பரிந்துரைகளை செய்யமுடியாது. 

“அரசாங்கம் என்ன செய்யவேண்டுமென்று நான் கூறமுடியாது. எனினும், இந்தப் பரிந்துரைகளை நீதியமைச்சர் வியஜதாஸ ராஜபக்‌ஷ நிராகரித்தமை பிழையானது.  

“பரிந்துரைகளின் பிரகாரம் யுத்தக்குற்றம், வெளிநாட்டு கண்காணிப்பாளர் உள்ளிட்ட பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/189615/பர-ந-த-ர-கள-ந-ர-கர-த-தம-ப-ழ-#sthash.7tMNmDJa.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.