Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைகளின் சரணாலயமாக மாறிவிட்டது அரசு; வீரவன்ஸவின் கிண்டலால் சபையில் சலசலப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யானைகளின் சரணாலயமாக மாறிவிட்டது அரசு; வீரவன்ஸவின் கிண்டலால் சபையில் சலசலப்பு!

அரசு இன்று யானைகளின் சரணாலயமாகவே மாறிவிட்டது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கிண்டலுடன் விமர்சித்தார்.

இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. விமல் வீரவன்ஸவின் இந்த விமர்சனம் எதிர்க்கட்சி அணியிலிருந்து ஆளும் கட்சியின் பக்கம் தாவியவர்களைத் தர்ம சங்கடமான நிலைக்குத்தள்ளியது. அவர்கள் விளக்கெண்ணெய் குடித்தவர்கள்போல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு அசடு வழிய அமைதியாக இருந்தனர். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது.

எம்.பியாகப் பதவியேற்ற அமைச்சர்!

முதற்கட்டமாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று சபாநாயகரின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அமைச்சர்களாக ஜனாதிபதியின்முன் பதவிப் பிரமாணம் செய்துகொள்வர்.

ஆனால், ஜாதிக ஹெல உறுமய உறுப்பினரான சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியின் முன் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர் நேற்றுத்தான் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பக்கம் அனைத்து ஆசனங்களும் அமைச்சர்களால் நிரம்பி வழிந்தன.

கட்சிவிட்டுக் கட்சி தாவி அமைச்சர்களானவர்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க, அரசுக்கும் ஐதேகட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததோடு அக் கட்சியின் எம்.பிக்கள் அமைதியாகினர்.

எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில்கூட குத்துக்கரணம் அடித்தவர்கள் தொடர்பாக ஒரு வார்த்தைகூட கூறப்படவில்லை. தனது கட்சியினரைப் பிய்த்து எடுத்துக்கொண்ட ஜனாதிபதியின் பக்கம் கைகாட்டிவிட்டு அரசியல் நாகரிகத்துடன் நடந்துகொண்டார் ரணில்.

கதிரைச் சிக்கல்!

என்றாலும்கூட அமைச்சர்களுக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை சபை நடவடிக்கைகளை 45 நிமிடங்கள் இடைநிறுத்தவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆரம்பம் முதல் சிரேஷ்ட அமைச்சர்களாக முன்வரிசையில் இடம்பிடித்திருந்த பலர் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அதேவேளை, குத்துக்கரணம் அடித்து அமைச்சர்களானவர்கள் முன்வரிசையில் இடம்பிடித்திருந்தனர். இது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சிரேஷ்ட அமைச்சரான தினேஷ் குணவர்த்தன இதனை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படும்போது கடைப்பிடிக்கப்படவேண்டிய சில வழிமுறைகள் உள்ளன. ஆனால், இன்று ஆசனங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை சபாநாயகர் தெளிவுபடுத்தவேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார்.

அமைச்சரின் இக்கேள்வி சபாநாயகரை சிறிது திடுக்கிட வைத்துவிட்டது என்பதை அவரது பதில் மூலம் அறிய முடிந்தது. ""கௌரவ அமைச்சர் இரண்டாவது வரிசையில் இருந்து இப்படிப் பேசுவது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது'' என்று சபாநாயகர் கூறினார்.

இது எதிர்த்தரப்பில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சியினருக்கும் ஜே.வி.பியினருக்கும் ஒரு பிடியாக அமைந்துவிட்டது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டனர். ஜே.வி.பி. உறுப்பினரான விமல் வீரவன்ஸ, ஐ.தே.க. உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, மகேஸ்வரன், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் சரமாரியாக எழுப்பிய கேள்விகள் சபாநாயகரைத் திக்குமுக்காட வைத்துவிட்டன.

வழமையாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும்போது கட்சித் தலைவர்களுக்கு முன் வரிசையில் ஆசனம் வழங்கப்படவேண்டும். ஆனால், கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்த்தன, பேரியல் அஷ்ரப், டி.யூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டமை ஏன் என்று விமல் வீரவன்ஸ சர்ச்சையை எழுப்பினார்.

அரசில் எத்தனை கட்சிகள்?

இந்தச் சந்தர்ப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது ஆளும் தரப்பில் இப்பொழுது எத்தனை கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகளின் தலைவர்கள் யாவர் என்பதை சபாநாயகர் சபையில் அறிவிப்பாரா? என எதிர்க்கட்சிக் கொரடாவான ஜோஸப் மைக்கல் பெரேரா கேள்வி எழுப்பினார்.

""ஐயா தெரியாதையா. இப்போது எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது எனக்கே தெரியவில்லை, அறிந்து கூறுகின்றேன்'' என்றார் சபாநாயகர்.

என்றாலும்கூட ஆசன ஒதுக்கீடு தொடர்பாக மாலையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசித் தீர்க்கலாம் என ஆலோசனை ஒன்றையும் சபாநாயகர் முன்வைத்தார்.

ஆனால், எதிர்க்கட்சியினர் இதனை ஏற்பதாக இல்லை. பிற்பகல் 2.30 மணிவரை பிற்போட முடியாது. உடனடியாகத் தீர்வு தேவை என்றார் விமல் வீரவன்ஸ.

அதேவேளை ஆசன ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம் ஒன்று நடத்தப்படவேண்டும் என ஐ.தே.க. உறுப்பினரான லக்ஷ்மன் கிரியல்ல கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

ஆசனத்தைத் தேடிய செல்லச்சாமி எம்.பி.!

சபை இப்படி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த

Edited by கந்தப்பு

சபை அலுவல்கள் 40 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம்

- ஏ.ரஜீவன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -

அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்குவதில் எந்தவிதமான நடைமுறை பின்பற்றப்படுகின்றதென அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியதையடுத்து சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

சபாநாயகரின் அனுமதியுடன் இக்கேள்வியை எழுப்பிய அமைச்சர் இதற்கு உடனடியாகப் பதிலளிக்கப் படவேண்டுமெனவும் கோரினார்.

தினேஷ் குணவர்தனவின் கேள்வியையடுத்து சபையில் குறுக்கீடுகள் அதிகரிக்கவே பாராளுமன்ற உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் தொடந்து உரையாற்றிய அமைச்சர் தினேஷ்,

அமைச்சராகிய நான் ஒரு கட்சித் தலைவனுமாவேன், பாராளுமன்றத்தில் எந்தவொரு ஆசனத்தில் அமருவதற்கும் நான் தயாராகவுள்ளேன். இங்கு எங்கு அமருவது என்பது பிரச்சினையில்லை. ஆனால், எந்த நடைமுறையின் கீழ் அமைச்சர்களுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டதென்பது புதிதாகவுள்ளது.

சபாநாயகர் விளக்கம்

ஆளும் தரப்பு வரிசையில் மூப்புரிமை அடிப்படையிலேயே அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்கப்படுகிறது என சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார விளக்கம் அளித்தார்.

எதிர்க்கட்சி கொரடா குறிக்கீடு

இதன்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி கொரடா ஜோசப்மைக்கல் பெரரோ அமைச்சர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டின்போது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப் படவில்லையென்றார்.

அத்துடன் அமைச்சர்களுக்குரிய ஆசன ஒதுக்கீடு தொடர்பில் எதிர்க்கட்சிக்கு கேள்வியெழுப்ப உரிமை உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

விமல்வீரவன்ச குறுக்கீடு

இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ,

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் போன்ற சமஷ்டிவாதிகள் ஆளும்தரப்பின் முதலாவது வரிசையில் அமர்ந்திருக்க ஒற்றையாட்சியே வேண்டுமெனக் கூறும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இரண்டாவது வரிசையில் அமர்ந்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர், மூப்புரிமை அடிப்படையிலேயே அமைச்சர்களுக்கு ஆசனம் ஒதுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் மீண்டும் குறுக்கிட்ட விமல்வீரவன்ச,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு பங்காற்றிய அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், தினேஷ் குணவர்தன ஆகியோர் இரண்டாவது வரிசையிலும், கட்சித் தலைவர்கள் மூன்றாவது வரிசையிலும் அமர்ந்திருப்பது வேடிக்கையாக உள்ளதென்றார்.

இதன்போது சபையில் குறுக்கீடுகளும் கூக்குரல்களும் அதிகரித்த நிலையில் அமைச்சர்களுக்கான ஆசன ஒதுக்கீடு விவகாரம் குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமெனவும், இதன்பொருட்டு சபை அலுவல்களை ஒத்தி வைப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதையடுத்து 10.20 மணிக்கு சபை அலுவல்கள் இடைநிறுத்தப்பட்டது. 40 நிமிடங்களின்பின் மீண்டும் சபை 11 மணியளவில் கூடியபோது நாளை (இன்று) அமைச்சர்களுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிப்பதாக கூறிய சபாநாயகர் ஒரேநாளில் சகல விடயங்களும் சீரமைக்கப்பட்டு விடாதெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர்களுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து ஒழுங்குப் பிரச்சினையெழுப்பிய அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சிலர் அமைதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.

சபாநாயகரின் அமைச்சர்களுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்த அறிவிப்பையடுத்து சபை நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியது.

http://www.thinakkural.com/news/2007/2/7/i...s_page20906.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.