Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கல் தினத்தை முன்னிட்டு முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி வழங்கல்

Featured Replies

வவுனியா - பனிக்க நீராவி கிராமத்தில் வசித்த முன்னாள் போராளியான தேவசகாயம் மரியதாஸ் அண்மையில் திடீரென மரணித்த நிலையில், கஷ்டத்துடன் வாழ்ந்த அவரது குடும்பத்திற்கு இன்று(13) உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த உதவியை வழங்கியுள்ளது.

அத்துடன், மிகுந்த கஷ்டத்துடன் வாழ்ந்து வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியும், அவரது குடும்பத்திற்கு புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், 15 நாட்களுக்கான உலர் உணவு பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உதவி திட்டம் சாந்த நாயகி நற்பணி மன்றத்தின் நிதி உதவியில் தமிழ் விருட்சம் அமைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதில் அந்த அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக சேவையாளர் சபாநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131650?ref=home

  • தொடங்கியவர்

நரிப்புல் தோட்ட தாய்மார்களுக்கு பொங்கல் உதவி

புலம் பெயர் ஐரோப்பிய தமிழ் மக்களின் ஆதரவில் கிராம அபிவிருத்தி அமைப்பினால் தைப்பொங்கலைச் சிறப்பிக்கும் முகமாக நரிப்புல் தோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தாய்மாருக்கு பொங்களுலுக்குத் தேவையான பொருட்களும், கணவனை இழந்த பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நரிப்புல் தோட்டம், மகிழவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஆதரவுடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த வருடம் நடைபெற்ற உயர் தரப் பரீட்சையில் தோற்றி பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மேகநாதன் சரோஜனும் அவரது கல்வி நடவடிக்கைகளுக்கான முதல் தொகையாக 10ஆயிரம் ரூபா வழங்கி தந்தையுடன் கௌரவிக்கப்பட்டார்.

நரிப்புல் தோட்டம் பல்தேவைக்கட்டத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் இளையதம்பி அன்பழகன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன்போது, மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், ஓய்வு நிலை அதிபர் க.பாக்கியராஜா, ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.விமலநாதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நரிப்புல் தோட்டம், மகிழவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாக, புலம்பெயர் ஐரோப்பிய தமிழ் மக்களின் ஆதரவில் மாணவர்கள் குறைவால் மூடப்படும் பாடசாலைகளின் நிலைமை கருதிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த வகையில், பிரதேச மக்களின் பிறப்பு வீதத்தினை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக கடந்த ஒக்ரோபர் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 தாய் மார்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா வழங்கி குழந்தையின் 18 வயது வரையில் மாதாந்தம் 1000 ரூபா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதன் அடுத்த கட்டமாக குறித்த தாய்மார்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. அத்துடன், இப்பிரதேசத்தினைச் சேர்ந்த 28 தாய்மார்களுக்கு புதிய சேலைகள் வழங்கப்பட்டன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பின்தங்கிய இப்பிரதேசத்திலிருந்து கல்விப் பொதுத்தராதர, உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் தோற்றி பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செயயப்பட்டுள்ள மாணவனும் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல்லூர், கெழுத்திமடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக இது போன்ற செயற்திட்டம் எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.tamilwin.com/community/01/131659?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.