Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி

Featured Replies

எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி

P5-b479e18531b39bd766ca93daeeffdffe6dd3d4e1.jpg

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரி­ஸினால் கடந்த 17 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் புதிய முறைப்­படி நடத்த இருப்­ப­தாக மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.

உள்­ளூராட்சி தேர்­தலில் புதிய முறை­மையில் உள்ள குறை­பா­டுகள் மற்றும் விமர்­ச­னங்­களை கவ­னத்தில் கொள்­ளா­மலும், எல்லை நிர்­ணய குழு­வி­னரின் அறிக்­கையில் தேவை­யான சட்­டத்­தி­ருத்­தங்­களை செய்­யா­மலும் அவ­ச­ர­மாக வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிப்­பது சிறு­பான்­மை­யி­ன­ருக்கும், சிறிய கட்­சி­க­ளுக்கும் செய்­கின்ற அநீ­தி­யாகும் என்று சிறு­பான்­மை­யினக் கட்­சி­களும், சிறிய கட்­சி­களும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன.

உள்­ளூராட்சி மன்­றங்­களின் தேர்­தலை நடத்­து­வ­தற்கு மாகாண சபைகள், உள்ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­தபா அடிக்­கடி திக­தி­களை குறிப்­பிட்டுக் கொண்டே வந்­தா­ரே­யன்றி தீர்க்­க­மான அறி­விப்பைச் செய்­ய­வில்லை. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை வட்­டார அடிப்­ப­டையில் புதிய தேர்தல் முறை ஒன்றின் மூல­மாக நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்டு வந்­த­மையே தேர்­தலை நடத்­து­வதில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­தற்கு கார­ண­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆயினும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் காணப்­படும் உள்­ளக முரண்­பா­டு­க­ளி­னா­லேயே உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­து­வ­தற்கு கால­தா­ம­தங்கள் ஏற்­பட்­ட­மைக்கு பிர­தான கார­ண­மாகும்.

இதேவேளை, உள்­ளூ­ராட்சி தேர்­தலை புதிய முறைப்­படி நடத்­து­வ­தற்கு எல்லை நிர்­ண­யங்கள் செய்­யப்­பட்டு வட்­டா­ரங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த வட்­டார எல்லை பிரிப்பு கடந்த அர­சாங்­கத்தின் காலத்திற் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை இலக்­காகக் கொண்டே வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதே வேளை, வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாரிய வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் வகை­யில்தான் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிறு­பான்மைக் கட்­சிகள் சுட்டிக் காட்­டி­யுள்­ளன. குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த பிரச்­சி­னையை அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றி­ருந்தார். ஆயினும், இவரின் இந்த கோரிக்­கையை அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­ள­வில்லை.

சிறு­பான்மைச் சமூ­கங்­களும், சிறிய கட்­சி­களும் பாதிக்­கப்­ப­டு­கின்ற வகையில் எல்லை நிர்­ண­யங்கள் அமைந்­துள்­ளன. இந்த சர்ச்­சை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்வைக் கண்டு விட்­டுத்தான் வர்த்­த­மா­னியில் அது பிர­சு­ரிக்­கப்­பட வேண்டும். தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஏற்­க­னவே 56 இடங்­களில் திருத்­தங்கள் அவ­சி­ய­மென்று விதந்­து­ரை­களைச் செய்­தி­ருக்­கின்றார். மேலும், நாங்­களும் தெரிவு முறையில் காணப்­ப­டக்­கூ­டிய பாரிய பாதிப்­புகள் பற்றி ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றோம். எனவே, சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளோடும், சிறிய கட்­சி­க­ளோடும், ஏனைய கட்சித் தலை­வர்­க­ளோடும் போதிய கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு ஒரு­மித்த நிலைப்­பாடு எட்­டப்­பட்­டதன் பின்னர் இது­பற்­றிய தீர்க்­க­மான முடிவை எடுப்­ப­துதான் சிறந்­த­தாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை புதிய முறைப்­படி நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே அமைச்­ச­ரவை அங்­கி­காரம் வழங்­கி­யி­ருந்­தது. அமைச்­ச­ர­வையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யுதீன் உட்­பட தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் உள்­ளார்கள். புதிய முறைப்­படி தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய அங்­கி­கா­ரத்தை வழங்­கு­வ­தற்கு முன்­ன­தாக அதி­லுள்ள குறை­பா­டு­களை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய அழுத்­தங்­களை கொடுத்­தி­ருக்க வேண்டும். தாங்கள் எதிர்­பார்க்கும் மாற்­றங்கள் இடம்­பெற்­றி­ருந்தால் மாத்­தி­ரமே அமைச்­ச­ர­வையில் உள்ள தமிழ், முஸ்­லிம்கள், அமைச்­சர்கள் அதற்­கான அங்­கி­கா­ரத்தை வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத­னை­வி­டுத்து, அங்­கி­கா­ரத்­தினை வழங்­கி­விட்டு வர்த்­த­­மா­னியில் அவ­ச­ர­மாக பிர­சு­ரிப்­பது அநி­யாயம் என்று குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­பது சிறு­பான்­மை­யி­னரை ஏமாற்றும் செய­லாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யத்தில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பாரிய அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ரவூப் ஹக்கீம் பல தட­வைகள் சுட்டிக் காட்­டி­யுள்ளார். அவற்­றினை தீர்க்­காது போனால் அதனை ஏற்றுக் கொள்­ள­மாட்டோம் என்றும் அவர் சூளு­ரைத்­தி­ருந்தார். ஆனால், தற்­போது எல்லை நிர்­ண­யத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குறை­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் கருத்திற் கொள்­ளாது நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் இறங்­கி­யுள்­ளது. அர­சாங்­கத்தின் இந்­ந­ட­வ­டிக்­கையால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் வெகு­வாகக் குறை­வ­டைந்­து­விடும். இதனால், முஸ்லிம் பிர­தே­சங்கள் மிகப் பெரிய பாதிப்­புக்­களை எதிர் கொள்ளும் என்­பதில் ஐய­மில்லை.

ஒரு பிர­தே­சத்தில் உள்ள இன­வி­கி­தா­சாரம், நிலத் தொடர்­புகள் போன்­ற­வை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­காது பெரும்­பான்­மை­யினம் அதிக உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வட்­டா­ரங்­களின் எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களைப் பொறுத்த வரை திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கந்­தளாய், மூதூர் ஆகிய உள்­ளூராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றார்கள். இங்கு முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கும் வகையில் எல்­லைகள் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளன.

புத்­தளம் மாவட்­டத்தில் புத்­தளம் நகர சபை மற்றும் பிர­தேச சபை, கற்­பிட்டி பிர­தேச சபை, ஆராய்ச்­சிக்­கட்டு பிர­தேச சபை, வண்­ணாத்­தி­வில்லு பிர­தேச சபை, சிலாபம் நகர சபை மற்றும் பிர­தேச சபை, நாத்­தாண்­டியா பிர­தேச சபை ஆகி­ய­வற்­றிலும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்­ப­தற்­காக திட்­ட­மிட்ட வகையில் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளன.

கண்டி மாவட்­டத்தில் அக்­கு­றணை பிர­தேச சபை, பாத்­த­ஹே­வ­ஹட்டை பிர­தேச சபை, பாத்­த­தும்­பறை பிர­தேச சபை­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இது போன்று வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள எல்லா மாவட்­டங்­க­ளிலும் உள்ள உள்­ளூராட்சி மன்­றங்­களில் முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைப்­ப­தற்கு சதிகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவற்­றிக்­கு­ரிய தீர்­வு­களை அர­சாங்கம் முன் வைக்­காத நிலையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ண­யத்­தினை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுப்­பது முஸ்­லிம்­களின் மீது வேண்­டு­மென்று மேற்­கொள்­ளப்­படும் அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கை­யா­கவே இருக்­கின்­றது. இதனால், முஸ்லிம் கட்­சி­களும், அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இவற்றில் போதிய கவனம் செலுத்­துதல் வேண்டும். இன்று விடும் தவறு முஸ்­லிம்­களின் எதிர்காலத்தை அலங்­கோ­லப்­ப­டுத்­தி­விடும்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள முஸ்லிம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லை­களை நிர்­ணயம் செய்­வதில் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளி­னதும் விருப்பு வெறுப்­புக்­க­ளுக்கு ஏற்­ற­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமது அர­சியல் எதிரி அல்­லது கட்­சியை தோற்­க­டிக்க வேண்­டு­மென்­ப­தற்­காக எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

1981ஆம் ஆண்­டிற்கு முன்னர் உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்கு வட்­டார அடிப்­ப­டை­யி­லேயே உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். ஒவ்­வொரு வட்­டா­ரத்­திற்கும் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்டு பின்னர் அவர்கள் ஒன்று கூடி தமது உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்­கான தலைவர், துணைத்­த­லை­வர்­களை தெரிவு செய்யும் முறை இருந்து வந்­துள்­ளது. இத்­தேர்தல் முறை 1989ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட உள்­ளு­ராட்சி தேர்தல் அதி­கார சபையின் சட்­டத்­தினால் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. இதன் பின்னர் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லேயே உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். தற்­போது அர­சாங்­கத்­தினால் முன் வைக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளு­ராட்சி தேர்தல் முறை­யா­னது 1981ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்த வட்­டார முறை­யையும், 1989ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட விகி­தா­சார முறை­யையும் கலப்­பாகக் கொண்­ட­தொரு தேர்தல் முறையை அறி­முகம் செய்­ய­வுள்­ளது.

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளி­னதும், பொதுத் தேர்தல் முறை­யிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் சட்ட மூலம் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் தேர்­தலை வட்­டார முறைப்­படி நடாத்­து­வ­தென்று முடிவு செய்­யப்­பட்­டது. இம்­மு­றையில் 70வீதம் வட்­டார அடிப்­ப­டை­யிலும் 30 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது சிறு­பான்மைக் கட்­சிகள் தங்­க­ளது இனங்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டையும் என்று சுட்டிக் காட்­டின. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹஸன்­அலி 60 வீதம் வட்­டார அடிப்­ப­டை­யிலும், 40 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்று கேட்டுக் கொண்டார். இதனை அன்­றைய அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டது. ஆனால், தற்­போ­தைய அர­சாங்கம் 70இற்கு 30 என்ற அடிப்­ப­டை­யில்தான் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­ய­வுள்­ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டைந்து போகும் வகையில் எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் பிர­தே­சங்கள் பெரும்­பான்மை சிங்­கள பிர­தே­சங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால், முஸ்­லிம்­க­ளினால் அந்­த­கைய வட்­டா­ரங்­களின் தமது பிர­தி­நி­தியைப் பெற்றுக் கொள்ள முடி­யாது போய்­விடும்.

மொத்த ஆசன ஒதுக்­கீட்டில் 25 வீதம் பெண்­க­ளுக்கும், இளை­ஞர்­க­ளுக்கும் ஒதுக்­கீடு செய்­யப்­பட வேண்டும். உள்ளுராட்சி மன்றமொன்றின் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி ஒன்று 5 ஆயிரம் ரூபாவும் , சுயேட்சைக் குழு 20ஆயிரம் ரூபாவும் செலுத்துதல் வேண்டும். 05வீத வெட்டுப் புள்ளியும் நடைமுறையில் இருக்குமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மிகவும் குறைவாகும். அரசாங்கம் உள்ளுராட்சி சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை கொண்டுள்ளன. இதனால், உள்ளுராட்சி சபைகள் பொது நலன்கள் சார்ந்த துறைகளில் குறிப்பாக பொதுச் சுகாதாரம், கழிவகற்றல் போன்ற கருமங்களை செய்து கொண்டு வந்தள்ளன. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிறைவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கு நாடுகளில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் முழுமையான சுயாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அங்குள்ள உள்ளுராட்சி அமைப்புகள் தமது பிரதேசத்திற்குரிய கல்வி, காவல்துறை, சமூக சேவைகள் என்பவற்றில் அதிகாரங்களைக்; கொண்டுள்ளன. இதனால், அங்குள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் மக்களுக்கு பல அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இலங்கையிலும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால், பொது மக்கள் தமது பல தேவைகளை உள்ளுராட்சி சபைகளின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.