Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்த உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கவ­னத்தை ஈர்த்த உண்­ணா­வி­ரதப் போராட்டம்

 

முழு­நாட்­டி­னதும் தமிழ் பேசும் மக்­களின் கவ­னத்­தையும் அவ­தா­னத்­தையும் ஈர்த்த காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் உண்­ணா ­வி­ர­தப்­போ­ராட்டம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­த­னவின் எழுத்­து­மூல உத்­த­ர­வா­தத்தை அடுத்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை முதல் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் மேற்­கொண்­டு­வந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் நாட்டு மக்கள் மத்­தியில் பர­ப­ரப்­பான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் என்ற அறி­விப்­பா­னது அனைவர் மத்­தி­யிலும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் பாதிக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் சளைக்­காமல் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நிலைமை மோச­மா­வதை உணர்ந்த அர­சாங்கம் உட­ன­டி­யாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரை உண்­ணா­வி­ரதம் இடம்­பெறும் இடத்­திற்கு அனுப்பி அந்த மக்­க­ளுக்கு எழுத்­து­மூல வாக்­கு­றுதி அளித்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்­துள்­ளது. விசே­ட­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் சந்­திப்பை நடத்­து­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­வ­தாக வழங்­கப்­பட்ட எழுத்து மூல உத்­த­ர­வா­தத்தை அடுத்தே உண்­ணா­வி­ரதப் போராட்டம் கைவி­டப்­பட்­டது. உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து பல்­வேறு தரப்­பி­னரும் ஆத­ரவு வெளி­யிட்டு வந்­தனர். குறிப்­பாக அர­சி­யல்­வா­திகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், மதத்­த­லை­வர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு ஆத­ரவைத் தெரி­வித்­துள்­ள­துடன் உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­தப்­படும் ஸ்தலத்­திற்கும் சென்று ஆத­ரவை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

அது­மட்­டு­மன்றி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பல்­வேறு பிர­தே­சங்­களில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. காணா­மல்­போன தமது உற­வு­களை தொலைத்­து­விட்டு தவிக்­கின்ற மக்­க­ளுக்கு விடிவைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் இறு­தி­யாக அர­சாங்கம் இந்த விட­யத்தில் தலை­யிட்டு தற்­போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்­துள்­ளது. இவ்­வாறு போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­துள்ள அர­சாங்­க­மா­னது தொடர்ச்­சி­யாக அது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இந்த மக்­களின் தவிப்­புக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

யுத்­த­கா­லத்­திலும் அதற்குப் பின்­னரும் காணா­மல்­போன மக்­களின் எண்­ணிக்கை மிகவும் அதி­க­மா­ன­தாகும். தற்­போ­தைய நிலை­மையில் வடக்கு, கிழக்கு உட்­பட நாட­ளா­வி­ய ­ரீ­தியில் காணா­மல்­போனோர் தொடர்பில் சுமார் 19 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால், இவற்றில் எந்­த­வொரு முறைப்­பாடு தொடர்­பிலும் இது­வரை தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் விசேட பொறி­முறை ஒன்று அமைக்­கப்­பட்டு காணா­மல்­போ­னோ­ரது பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய கடந்த அர­சாங்­கத்­தினால் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்டு கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து சாட்­சி­யங்கள் பெறப்­பட்­டன. அந்த சாட்­சி­யங்­களில் அதி­க­மா­னவை காணா­மல்­போனோர் தொடர்­பி­லேயே பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தன. அந்த ஆணைக்­குழு முன்­பாக சாட்­சி­ய­ம­ளிக்க வந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் காணா­மல்­போன தமது உற­வி­னர்கள் தொடர்பில் கதறி அழுது சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.

அதன்­பின்னர் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அந்த அறிக்­கையில் காணா­மல்­போனோர் தொடர்பில் விசேட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தது. எனினும் அதன் பின்­னரும் கூட காணா­மல்­போனோர் தொடர்பில் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்கும் வகை­யி­லான எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதன்­பின்னர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் ஜெனிவா மனி­த­உ­ரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக பிரே­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. அந்தப் பிரே­ர­ணை­களில் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் மிக விசே­ட­மான பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அந்த சந்­தர்ப்­பத்தில் சர்­வ­தேச அழுத்­தங்கள் அதி­க­ரித்ததன் கார­ண­மாக கடந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் ஓய்­வு­பெற்ற மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தலை­மையில் காணா­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்றை 2013 ஆம் ஆண்டு இறு­திப்­ ப­குதியில் நிய­மித்­தி­ருந்தது. பர­ண­கம ஆணைக்­கு­ழுவும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் விசா­ரணை அமர்­வு­களை நடத்தி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து சாட்­சி­யங்­களை பெற்­றி­ருந்­தது. அந்­த­வ­கையில் அந்த ஆணைக்­கு­ழு­விற்கு காணா­மல்­போனோர் தொடர்பில் சுமார் 19 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தன.

இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரி­மைப்­பே­ர­வையில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை விவ­காரம் தொடர்பில் சர்­வ­தே­ச­மட்­டத்­தி­லான விசா­ர­ணை­யொன்றை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. அந்த விசா­ரணை செயற்­பாட்­டிலும் காணா­மல்­போனோர் விவ­காரம் முக்­கிய இடத்தைப் பெற்­றி­ருந்­தது. அதன்­பின்னர் 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து ஐ.நா.வின் விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அந்த விசா­ரணை அறிக்­கை­யிலும் காணா­மல்­போனோர் தொடர்பில் முக்­கி­ய­மான பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதனைத் தொடர்ந்து 2015 ஒக்­டோபர் மாதம் இலங்கை விவ­காரம் தொடர்பில் மற்­று­மொரு பிரே­ரணை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணை­யிலும் காணாமல் போனோர் விவ­காரம் பிர­தான இடத்தை வகித்­தி­ருந்­தது. அந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்த அர­சாங்கம் இலங்­கையில் காணா­மல்­போனோர் தொடர்பில் நிரந்­தர அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தது. அதன்­படி அதற்­கான ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு அது தொடர்­பான சட்­ட­மூ­லமும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால், இது­வரை அந்த அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச மேடையில் அர­சாங்கம் இந்த அலு­வ­லகம் தொடர்பில் பெரு­மை­யுடன் மார்­தட்­டிக்­கொள்­கின்ற போதிலும் அந்த அலு­வ­லகம் இது­வரை இலங்­கையில் நிறு­வப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும். எப்­போது அந்த அலு­வ­லகம் நிறு­வப்­பட்டு காணா­மல்­போ­னோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­ப­டு­மென இது­வரை உறு­தி­யான நிலைப்பாடுகள் எதுவும் வெளிக்­காட்­டப்­ப­ட­வில்லை என்­பதே யதார்த்­த­மாகும்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் தொடர்ந்து வாக்­கு­று­தி­க­ளு­டனும் கவர்ச்­சி­க­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளு­டனும் காலம் தாழ்த்­தப்­பட்டு வரு­கின்­றதே தவிர, யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் ஆகப்­போ­கின்ற நிலை­யிலும் காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை. தமது உற­வு­களை தொலைத்­து­விட்டு பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்து அழு­த­வண்­ணமும், திண்­டாட்­டங்­களை எதிர்­கொண்­ட­வண்­ண­முமே வாழ்ந்து வரு­கின்­றனர். அந்த மக்­களின் இந்தப் பிரச்­சி­னைக்கு விடிவு கிட்­டாத நிலைமை தொடர்­கி­றது. இந்த நிலை­யி­லேயே பொறு­மை­யி­ழந்த காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் இவ்­வாறு வவு­னி­யாவில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

தற்­போது அர­சாங்கம் தலை­யிட்டு உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை இடை­நி­றுத்­தி­யுள்­ளது. அந்த கட்­டத்­துடன் நின்­று­வி­டாமல் இந்தப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வைக் காணும் நோக்கில் விசேட பொறி­மு­றை­யொன்றை விரை­வாக முன்­வைக்­க­வேண்டும். அதா­வது காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை தெரிந்­து­கொள்­ள­வேண்­டிய உரிமை பொது­மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. அதனை யாரும் மறுக்க முடி­யாது.

காணா­மல்­போ­ன­வர்கள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா என்­பது கூடத் தெரி­யாமல் அவர்­களின் உற­வி­னர்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வ­கை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதை விப­ரிக்­க­வேண்­டிய அவசியம் இல்லை. இதனை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும். இந்த காணாமல் போனோர் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சரவைப் பேச்சாளரும் தெரிவித்த கருத்துக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர்களுக்கு நம்பிக்கையீனத்தை தோற்றுவிப்பதாகவும் அமைந்திருந்தன.

எனவே, அரசாங்கம் தொடர்ந்தும் இந்த மக்களின் பிரச்சினைகளுடன் விளையாடாமல் தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில் விரைவாக விசேட பொறிமுறையொன்றை உருவாக்கி இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் வகையிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகவே நிறுத்தியுள்ளனர் என்பதையும் இந்தப் போராட்டத்திற்கு நாட்டில் பாரிய ஆதரவு தோற்றம் பெற்றது என்பதையும் அனைத்துத் தரப்பினரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களை வீதிக்கு இழுத்துவிடாமல் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண முன்வரவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.