Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் !

Featured Replies

சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் !

 

- பைஸ் -

உண்­மையில் இங்கு கவலை என்­ன­வெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏரா­ள­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அவற்­றுக்குத் தீர்வு காணவோ அல்­லது அவை பற்றி சண்டை பிடிக்­கவோ எவரும் முன்­வ­ர­வில்லை. மாறாக தத்­த­மது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக போரா­டு­வ­தி­லேயே அனை­வரும் கண்­ணுங்­க­ருத்­து­மாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால், அவற்றுக்காக சண்டை பிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும்.

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்லிம் தனித்­துவக் கட்­சியின் இன்­றைய நிலை சந்தி சிரிப்­ப­தா­கவே அமைந்­துள்­ளது. அதன் உயர் மட்ட தலை­வர்­க­ளுக்­கி­டையில் உக்­கி­ர­ம­டைந்­துள்ள தனி நபர் அர­சியல் போட்­டியின் விளை­வாக அக் கட்சி இன்று அத­ல­பா­தா­ளத்தை நோக்கிச் சென்று கொண்­டி­ருப்­பது முஸ்லிம் அர­சி­யலின் செல்­நெ­றி­களை கூர்ந்து அவ­தா­னிப்­ப­வர்­களை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை அதன் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் உரு­வாக்­கி­யதன் நோக்கம் இந்த நாட்டில் வாழும் முஸ்­லிம்­களும் தனித்­துவம் வாய்ந்த இன அடை­யா­ளத்தைக் கொண்­ட­வர்கள், அவர்­க­ளுக்கும் உரி­மை­களும் சலு­கை­களும் வழங்­கப்­பட வேண்டும் என்­பதை முஸ்லிம் மக்­களின் வாக்குப் பலம் ஊடாக நிரூ­பித்துக் காட்­டு­வ­தற்­கே­யாகும். அந்த வகையில் அவர் தனது மரணம் வரைக்கும் அதனை மிகச் சரி­யா­கவே செய்து காட்­டினார். குறிப்­பிட்டுக் கூறக் கூடி­யதும் நீடித்து நிலைக்­கத்­தக்­க­து­மான உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் அவர் தனது சமூ­கத்­திற்குப் பெற்றுக் கொடுத்தார். துர­திஷ்­ட­வ­ச­மாக அவ­ரது மர­ணத்­திற்குப் பிற்­பாடு சமூ­கத்தின் நலன்­களைப் பாது­காப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட கட்சி தனி நபர்­களின் நலன்­களைப் பாது­காப்­ப­தற்­கான கோட்­டை­யாக மாற்­றப்­பட்­டமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அதன் வெளிப்­பாடே இன்­றைய சந்­தி­சி­ரிக்கும் நிலை­யாகும். அஷ்­ரபின் மர­ணத்தைத் தொடர்ந்து முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய தலை­மைத்­துவப் பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்­தது. எனினும் பலத்த சர்ச்­சை­க­ளுக்குப் பிற்­பாடு ரவூப் ஹக்கீம் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். பேரியல் அஷ்ரப் மு.கா.வின் மற்­று­மொரு அர­சியல் பரி­மா­ண­மாக விளங்­கிய நுஆ கட்­சியின் தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்டார்.

எனினும் முஸ்லிம் காங்­கி­ரஸில் ரவூப் ஹக்­கீமின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இருக்க விரும்­பாத அதா­வுல்லாஹ் தேசிய காங்­கிரஸ் எனும் கட்­சியை ஸ்தாபித்துக் கொண்டு வெளி­யே­றினார். அதே போன்று ரிஷாத் பதி­யு­தீனும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எனும் கட்­சியை ஸ்தாபித்துக் கொண்டு தன்­னுடன் வேறு சில­ரையும் இணைத்து வெளி­யே­றினார். ஹிஸ்­புல்லாஹ் போன்­ற­வர்­களும் வேறு கட்­சி­க­ளுக்குத் தாவினர். இன்று வரைக்கும் பலர் மு.கா.வினுள் வரு­வதும் போவ­து­மான அதன் அர­சியல் பயணம் அஷ்­ர­பிற்குப் பிற்­பாடு கடந்த 17 வரு­டங்­க­ளாக தள்­ளாடிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஆனால் இன்று கட்­சியை பிள­வு­ப­டுத்தி வெளி­யேறிச் செல்­வது என்ற வழக்­க­மான பாணியைத் தவிர்த்து கட்­சிக்குள் இருந்து கொண்டே தமது நலன்­களை முன்­னி­றுத்­திய போராட்­டங்­களை சிலர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதில் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் செய­லாளர் ஹசன் அலி ஆகியோர் பிர­தா­ன­மா­ன­வர்கள்.

இறு­தி­யாக இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பிற்­பாடு தனக்கு தேசியப் பட்­டியல் எம்.பி. பதவி வழங்­கப்­ப­டாமை, செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்­டமை எனும் கார­ணங்­களை முன்­னி­றுத்தி ஹசன் அலி தலை­மை­யோடு முரண்­பட்டார். இந்த முரண்­பாடு கட்­சியை சட்ட ரீதி­யான சிக்­கல்­க­ளுக்குள் தள்ளக் கூடிய நிலை தோற்றம் பெற்­றதால் தேர்­தல்கள் ஆணைக்­குழு தலை­வரின் ஆலோ­ச­னை­யுடன் ஹக்கீம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தனர். இதனைத் தொடர்ந்து ஹசன் அலிக்கு எம்.பி. பதவி வழங்­கு­வ­தாக ஹக்கீம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

எனினும் செய­லாளர் ஹசன் அலி விட­யத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்­னெ­டுத்த காய்­ந­கர்த்­தல்கள் ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­வை­யல்ல. ஹசன் அலி அதி­காரம் பொருந்­திய செய­லா­ள­ராக இருப்­பதை ஹக்கீம் விரும்­ப­வில்லை. அவ்­வா­றி­ருப்­ப­தா­னது தனது தலை­மைத்­துவ நலன்­க­ளுக்கும் அதி­கா­ரங்­களும் குந்­த­க­மாக அமை­யலாம் என ஹக்கீம் கரு­தினார். இதன் கார­ண­மாக மிகவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து அதி­கா­ரங்­களை பிடுங்கி 'உயர்­பீட செய­லாளர்' எனும் புதிய பத­விக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தாக அறி­வித்தார். ஆனாலும் மறை­மு­க­மாக அந்த அதி­கா­ரங்­களை தன்­வ­சமே அவர் கொண்டு வந்தார் என்­பதே யதார்த்­த­மாகும்.

இது கிட்­டத்­தட்ட சர்வ அதி­கா­ரமும் பொருந்­திய தலைவர் எனும் நிலைக்கு ரவூப் ஹக்­கீமை உயர்த்­தி­யது. இன்று வரைக்கும் கட்­சியின் சகல வித­மான விட­யங்­க­ளையும் தீர்­மா­னிக்­கின்ற அதி­காரம் ஹக்கீம் வசமே இருக்­கி­றது. அதா­வது அஷ்ரப் தலை­வ­ராக இருந்த சமயம் கொண்­டி­ராத அதி­கா­ரங்­களைக் கூட இன்று ஹக்கீம் தன்­வசம் கொண்­டுள்ளார் எனு­ம­ள­வுக்கு நிலைமை மாறி­யி­ருக்­கி­றது.

ஆனாலும் இவ்­வா­றான அதி­காரப் போட்டி மற்றும் எம்.பி. பதவி விவ­காரம் என்­ப­வற்றை ஹசன் அலி மிகவும் நிதா­ன­மா­கவும் அமை­தி­யா­க­வுமே அணு­கினார். 'கிழக்கின் எழுச்சி' எனும் கோஷத்தின் பின்­ன­ணியில் ஹசன் அலி இருக்­கிறார் என்ற பகி­ரங்க குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் அத­னுடன் அவரைத் தொடர்­பு­ப­டுத்திப் பார்க்க முடி­யா­த­ள­வுக்கே ஹசன் அலி நடந்து கொண்டார். தனது அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்ட விட­யத்தில் நீதி­மன்­றத்தை நாடும் பட்­சத்தில் ஹசன் அலிக்கு சாத­க­மாக தீர்ப்புக் கிடைக்கும் என்ற நிலை இருந்த போதிலும் '' நான் கட்­டிக்­காத்த கட்­சியை நீதி­மன்றப் படிக்­கட்­டுக்­களில் ஏற்ற மாட்டேன்'' என்ற கொள்­கையில் அவர் உறு­தி­யாக இருந்தார்.

ஆனால் தவி­சாளர் பஷீ­ருக்கும் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்­கு­மி­டை­யி­லான முரண்­பாடு என்­பது வித்­தி­யா­ச­மா­னது. அதுதான் இன்று முஸ்லிம் அர­சியல் பரப்பில் அதிகம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

பஷீர் சேகு­தா­வூதை கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யி­டா­த­படி ஹக்கீம் வியூகம் அமைத்­த­துடன் தேசியப் பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்றம் செல்லும் வாயி­லையும் அடைத்தார். இது பஷீரின் அர­சியல் வாழ்­வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஹக்­கீமின் பிர­தான காய்­ந­கர்த்­தல்­களில் ஒன்­றாகும். இத­னால்தான் தான் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முற்­றாக ஒதுங்கிக் கொள்­வ­தாக கடந்த வருடம் பஷீரை பகி­ரங்­க­மாக அறி­விப்­ப­தற்கு நிர்ப்­பந்­தித்­தது.

இதி­லி­ருந்தே இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் வலுப் பெறத் தொடங்­கின. இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் பகி­ரங்க மேடை­களில் விமர்­சிக்­கின்ற நிலை தோற்றம் பெற்­றது. குறிப்­பாக ஹக்­கீ­முக்கு எதி­ராக பஷீர் சேகு­தாவூத் அடிக்­கடி ஊடக அறிக்­கை­களை வெளி­யிட்­ட­துடன் தேசிய மற்றும் முஸ்லிம் அர­சியல் நகர்­வு­களில் ஹக்கீம் தவ­றி­ழைப்­ப­தாக சுட்­டிக்­காட்டி வந்தார். இந்த முரண்­பா­டுகள் கட்­சியின் உயர்­பீடக் கூட்­டங்­க­ளிலும் கடு­மை­யாக வெடித்­தன. சில சம­யங்­களில் ஹக்கீம் அணி - பஷீர் அணி என இரு அணிகள் தோற்றம் பெற்று முரண்­படும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தது. இவ்­வா­றான சர்ச்­சைகள் தொடர்ந்து கொண்­டி­ருந்த நிலை­யில்தான் கடந்த இரு வார காலத்­திற்குள் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் தலைவர் ஹக்­கீ­முக்கு எதி­ராக பகி­ரங்க போர் ஒன்றை ஆரம்­பித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற பஷீர் சேகு­தாவூத், ரவூப் ஹக்கீம் தொடர்­பான பல குற்­றச்­சாட்­டுக்­களை அள்ளி வீசினார். இது பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதில் ஜனா­தி­பதித் தேர்­தலின் போதான பணக் கொடுக்கல் வாங்கல் பற்றி விடயம் ஒன்றை பஷீர் இறைவன் மீது ஆணை­யிட்டுக் கூறி­யி­ருந்தார். இந்த விடயம் பற்­றிய சல­ச­லப்­புகள் குறை­வ­தற்­கி­டையில் தனது முகநூல் வாயி­லாக ரவூப் ஹக்­கீமை தனிப்­பட்ட வகையில் குறி­வைத்து பல குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பஷீர் முன்­வைத்­தி­ருப்­ப­துடன் அவை ஹக்­கீமின் தனிப்­பட்ட வாழ்க்­கை­யுடன் தொடர்­பு­பட்­டவை என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். இது சமூக ஊடக பரப்பில் பலத்த வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு வித்­திட்­டுள்­ளது.

ஹக்­கீமின் கடந்த கால தவறுகளுக்கு தானும் உடந்தையாக இருந்துவிட்டு இன்று அவற்றைப் பொது வெளியில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனும் விமர்சனத்தை பலர் பஷீர் மீது முன்வைத்துள்ளனர். இதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் பஷீர் தனது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் கோவைகளாவும் வீடியோ காட்சிகள் அடங்கிய சீ.டி.க்களாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டு அவற்றின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

எனினும் தற்போது நடந்து கொண்டிருக்கும் விடயங்களால் முஸ்லிம் சமூகத்திற்கும் அதன் அரசியல் எதிர்காலத்திற்கும் ஏதேனும் நன்மைகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே தனி நபர்களின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த போட்டிகளின் வெளிப்பாடே அன்றி வேறில்லை எனலாம்.

உண்­மையில் இங்கு கவலை என்­ன­வெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏரா­ள­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அவற்­றுக்குத் தீர்வு காணவோ அல்­லது அவை பற்றி சண்டை பிடிக்­கவோ எவரும் முன்­வ­ர­வில்லை. மாறாக தத்­த­மது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக போரா­டு­வ­தி­லேயே அனை­வரும் கண்­ணுங்­க­ருத்­து­மாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால் அவற்றுக்காக சண்டைபிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும்.

முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரை தனிப்­பட்ட ரீதியில் குறி வைத்து கடந்த காலங்­க­ளிலும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவ­ரது அர­சியல் எதி­ரி­களால் மிகவும் திட்­ட­மிட்ட வகையில் அவை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டன. இன்றும் அவ்­வா­றா­ன­தொரு அச்­சு­றுத்­தலே அவ­ருக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­சியின் தலை­மை­ய­க­மாக தாருஸ் ஸலாமின் சொத்­துக்­களை கையாளும் விட­யத்தில் தலைவர் ஹக்கீம் நியா­ய­மற்ற முறையில் முன்­வைப்­ப­தாக குற்­றம்­சாட்டி தாருஸ் ஸலாம் மீட்பு முன்­னணி எனும் பெயரில் நூல் ஒன்று வெ ளியி­டப்­பட்ட விவ­காரம் குறித்து அண்­மையில் இப் பத்­தியில் குறிப்­பிட்­டி­ருந்தோம். இது பற்றி கடந்த வாரம் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்­டி­ருந்தார்.

'' இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கெல்லாம் தான் பயப்­படப் போவ­தில்லை என அண்­மையில் நிந்­த­வூரில் நடை­பெற்ற கூட்டம் ஒன்றில் உரை­யாற்­றிய சமயம் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். ''முஸ்லிம் காங்­கிரஸ் எனும் நமது பேரி­யக்­கத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு கட்­சிக்கு உள்­ளே­யி­ருக்கும் சில நய­வஞ்­ச­கத்­தனம் கொண்­ட­வர்கள் முயற்­சிக்­கின்ற போதிலும் சிறி­தேனும் இவர்­க­ளது நோக்கு நிறை­வேற இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

நாட்டு முஸ்லிம் களின் பேரி­யக்­க­மான முஸ்லிம் காங்­கிரஸ் இன்று மத்­திய அர­சிலும் மாகாண அர­சிலும் பல­மா­க­வே­யுள்­ளது. ஆனாலும் நமது இந்தப் பலத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு இன்று கட்­சிக்­குள்­ளேயே இருந்து சில நய­வஞ்­ச­கர்கள் முனைந்து வரு­கின்­றனர்.

இத்­த­கைய நய­வஞ்­ச­கர்கள் பொய் புரட்­டு­களைக் கூறி முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை மீது சேறு­பூ­சவும் கட்­சியை மலி­னப்­ப­டுத்­தவும் முனைந்­துள்­ளனர். இந்த அடிப்­ப­டையில் கட்­சியின் அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில் பேசி முடிக்­கப்­பட்ட கட்சித் தலை­மை­யகம் தொடர்­பான விட­யத்தை அனா­ம­தேய புத்­த­க­மா­கவும் வெளி­யிட்­டுள்­ளனர். இத்­த­கைய புல்­லு­ரு­வி­களைக் காப்­பாற்­று­வ­தற்­காக அன்று உச்ச பீடக் கூட்­டத்­தையே இடையில் முடிக்க வேண்­டிய நிலை­மையும் எனக்கு ஏற்­பட்­டது. எது எப்­ப­டி­யி­ருப்­பினும் நம் கட்­சியைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு எந்­த­வ­கை­யிலும் இட­ம­ளிக்க முடி­யாது. தலை­மை­யான எனது நேர்­மை­யி­லி­ருந்து தவ­றவோ என் மீதான நம்­ப­கத்­தன்மை பாதிக்­கப்­ப­டவோ இட­ம­ளிக்க முடி­யாது.

எம்­மீ­தான பச்சை அபாண்­டங்­களைச் சுமத்தி கூலிக்கு அமர்த்­தப்­பட்ட சிலர் எழுதி வரு­கின்­றனர். எந்தத் தூண்­டு­தலில் எதற்­காக இவர்கள் எழு­து­கின்­றனர் என்­பது புரி­ய­வில்லை. எனினும் ஊடக நம்­ப­கத்­தன்மை பற்றி இவர்கள் புரிந்து செயற்­பட வேண்டும். எனது பொறு­மைக்கும் ஓர் எல்­லை­யுண்டு. சாது­மி­ரண்டால் என்ன நடக்­கு­மென்­பதைக் கட்­சியைப் பல­வீ­னப்­ப­டுத்த மனப்பால் குடிப்போர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் காங்­கிரஸ் உறு­தி­யாகப் பய­ணிப்­பதில் நமது போரா­ளி­களின் வீரியம் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது. இந்த வகையில் எதிர்­வரும் கட்­சியின் பேராளர் மாநாட்டின் போது கட்­சிக்குத் துரோ­க­மி­ழைத்­து­வரும் புல்­லு­ரு­வி­க­ளுக்கு போரா­ளிகள் தக்க பாடம் புகட்­டுவர். நய­வஞ்­ச­கத்­த­னத்தின் மொத்த உரு­வ­மாக கட்­சிக்­குள்­ளேயே இருந்து கொண்டு திகழும் இவர்­களின் நய­வஞ்­சகச் செயற்­பா­டுகள் பேரா­ளர்­க­ளான போரா­ளிகள் இன்னும் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். சொன்னதைச் செய்வேன். எல்லோருக்கும் எல்லாம் நடக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். முஸ்லிம் காங்கிரஸ் எனும் நம் இயக்கம் தனிநபர்களை விடவும் முக்கியமானது என்பதில் உறுதியாகச் செயற்படுவேன்” இவ்வாறு ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். தனக்கு எதிரான இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹக்கீம் அலட்டிக் கொள்ளவில்லை என்ற பாணியில் கருத்து வெளியிட்டாலும் இந்த விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாகும்.

இதனை தனி நபர்களுக்கிடையிலான பிரச்சினை என விட்டு விடவும் முடியாது. ஏனெனில் இதன் பிரதிபலிப்புகள் நிச்சயமாக முஸ்லிம் சமூகத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிச்சயம் பாதிக்கும். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கம் பலவீனப்படுவதுடன் அது வேறு சக்திகளுக்கு வாய்ப்பாகவும் மாறும்.

எனவேதான் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலான நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்றேல் முஸ்லிம் தனித்துவ அரசியல் இயக்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-04#page-4

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம் சமுகத்துக்கு இருப்பதாக மேற்படி கட்டுரையின் ஆசிரியர் கோடுபோட்டு காட்ட எண்ணும் அரசியல் பிரச்சினையிலும் பார்க்க பலமடங்கு பாரதூரமான பிரச்சினைகள் தமிழினத்திற்கு உண்டு. இலங்கையில் முஸ்லிம்கள் அன்றுதொட்டு இன்றுவரை அரசியல் காய்நகர்த்தலில் மிகவும் சாதுரியமாகவே செயற்பட்டுவந்திருக்கிறார்கள். இது போன்ற கட்டுரைகள் தீர்வுகளைக் குழப்பியடிக்கவும் தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கென்றே  தீய சக்திகளால் திட்டமிட்டு பதியப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.