Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

Featured Replies

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

 

 

வவுனியா மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (10) காலை 9.30 மணியளவில் ஒன்றிணைந்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

unnamed.jpg

தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மைத்திரி-ரணில் அரசு ஏன் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் உள்ளது என்பது பற்றி உரிய தரப்புக்கள் வாய் திறந்து கேள்வி எழுப்புதல் வேண்டும் என்று தெரிவித்து இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை வவுனியாவில் நடாத்தியுள்ளார்கள்.

unnamed__11_.jpg

கேப்பாப்புலவு மக்களுக்கு நீதிவேண்டும், வேண்டும் வேண்டும் காணி நிலம் வேண்டும், மக்களின் நிலங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, கேப்பாப்புலவு மக்கள் இலங்கையர் இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன?, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், பயங்கரவாதச்சட்டத்தை இரத்துச் செய், மைத்திரி ரணில் அரசே அரசியல் வாக்குறுதி என்னாச்சு? தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ன? நாட்டில் நடப்பது நல்லாட்சியா? அல்லது காட்டாட்சியா?  நல்லாட்சியில் மக்களுக்கு கிடைத்தது என்ன? போன்ற கோசங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டதுடன் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் கலந்து கொண்டனர்.

unnamed__10_.jpg

தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்பிலவு மக்கள் விமானப்படைத் தளத்திற்கு முன்பாக அமர்ந்து பத்தாவது நாளாக தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed__9_.jpg

unnamed__8_.jpg

unnamed__7_.jpg

unnamed__6_.jpg

unnamed__5_.jpg

unnamed__4_.jpg

unnamed__3_.jpg

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

http://www.virakesari.lk/article/16467

  • தொடங்கியவர்

கேப்பாப்புலவு மக்களுக்கு முல்லைத்தீவு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்  ஒன்றியம் ஆதரவு! (படங்கள்)

 

 

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமென தெரிவித்து முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

unnamed__12_.jpg

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவினை  தெரிவிக்கும்   நோக்கில் முல்லைத்தீவு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கேப்பாபுலவு  பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத்தந்தனர்.

unnamed__8_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்த மாணவர்கள் தொடர்ந்து  வெற்றி கிட்டும் வரை போராடுமாறும் தெரிவித்துள்ளனர்.

unnamed__11_.jpg

அதுமாத்திரமின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக நாம் எப்போது குரல் கொடுப்போம் எனவும், இனிவரும் நாட்களில் இந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை எனில் தொடர் போராட்டங்களில் மக்களோடு இணைந்து நாமும் முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

unnamed__10_.jpg

unnamed__9_.jpg

 
 

http://www.virakesari.lk/article/16497

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.