Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான 'பூகோள போர்' விடுதலைப் புலிகளை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவிப்பு

Featured Replies

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான 'பூகோள போர்' விடுதலைப் புலிகளை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது

 

முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவிப்பு

லியோ நிரோஷ தர்ஷன்

விடு­தலைப் புலி­களின் கடு­மை­யான எறி­கணைத் தாக்­கு­ தல்கள், இரா­ணு­வத்­துக்கு பேர­ ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஆட்­டி லறி மற்றும் மோட்­டார்­க­ளி னால் பாது­காப்பு தரப்­பு கடு­மை ­யான இழப்­பு­களைச் சந்­தித்­தது. இது 50 வீதத்­துக்கும் அதி­க­மாவே காணப்­பட்­டது என முன்னாள் கடற்­படை தள­பதி அட்­மிரல் ஜெயநாத் கொலம்­பகே தெரி­வித்­துள்ளார்.

இதனால் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆயுத மற்றும் வெடி­பொருள் வழங்­கலை துண்­டிக்க வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா ன­தா­கவுமிருந்தது. எனவே அமெ­ரிக்­காவின் தீவி­ர­வா­தத் துக்கு எதி­ரான பூகோள போரை பயன்ப­டுத்தி,  அமெ­ரிக்கத் தூதுவர் மற்றும் தூத­ரக பாது­காப்பு ஆலோ­ச­க­ரிடம் உதவி கோரப்­பட்­டது. இதுவெ போர் வெற்­றிக்கும் கார­ண­மா­னது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஜெயநாத் கொலம்­பகே, அண்­மையில் வெளி­யிட்­டுள்ள Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற நூலி­லேயே இலங்­கையின் உள் நாட்டு போர் வெற்­றியில் அமெ­ரிக்­காவின் பங்­க­ளிப்பு குறித்து குறிப்­பிட்­டுள்ளார்.

விடு­தலைப் புலி­களின் மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யங்­களை கடற்­படை அழிப்­ப­தற்கும் ஆயுதக் கப்­பல்கள் நட­மாடும் இடத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தவும் முக்­கி­ய­மான செய்­மதிப் படங்­களை அமெ­ரிக்கா எவ்­வாறு வழங்கி உத­வி­யது போன்ற விப­ரங்­க­ளையும் அந்த நூலில் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

நான்­கா­வது கட்ட ஈழப்­போரில் கடற்­படை கடலில் வெற்றி பெறு­வ­தற்கும், இரா­ணுவம் தரைப் போரில் வெற்­றியைப் பெறு­வ­தற்கும், விமா­னப்­படை சுட்­டு­வீழ்த்­தப்­படும் ஆபத்து பற்­றிய அச்­ச­மின்றி தரை இலக்­கு­களை தாக்­கு­வ­தற்கும் புலி­களின் ஆயுதக் கப்­பல்­களின் அழிப்பு உத­வி­யாக அமைந்­தது.

மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யங்­களின் அழிவு, புலி­களின் ஆயுத மற்றும் வெடி­பொ­ருட்கள் வழங்கல் வலைப்­பின்­னல்­களை முடக்க உத­வி­யது. தரையில் போர் வல­யத்தில் சுற்­றி­வ­ளைப்பு ஆபத்தில் இருந்து புலிகள் தப்பிப் பிழைப்­ப­தற்கு இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யங்கள் முக்­கி­ய­மான பங்கை வகித்­தன.

சமச்­சீ­ரற்ற தரைப் போர் நடந்து கொண்­டி­ருந்த போது, விடு­தலைப் புலிகள், ஆட்­க­ளையோ, துப்­பாக்­கி­க­ளையோ பயன்­ப­டுத்­தாமல், ஆட்­டி­ல­றிகள் மற்றும் மோட்­டார்கள் போன்­ற­வற்றைப் பயன்­ப­டுத்தி, தாக்­கு­தல்­களை நடத்தி வந்­தனர்.

மர­பு­வழி இரா­ணு­வங்கள் பொது­வாக தமது வெடி­பொ­ருட்­களைப் பயன்­ப­டுத்­து­வதில் வழக்­க­மாக கடைப்­பி­டிக்கும் கட்­டுப்­பாட்டை புலிகள் கடைப்­பி­டிக்­க­வில்லை. இரா­ணு­வத்­தினர் ஒரு எறி­க­ணையை வீசினால், நாம் 20 எறி­க­ணை­களை வீசுவோம் ஆட்­டி­லறி, மோட்­டார்கள் மூலம் நாம் அதி­க­ளவு எறி­க­ணை­களை வீசுவோம் என்று முன்னாள் கடற்­பு­லி­யான சீலன் என்­பவர், கூறி­யி­ருந்தார். 

விடு­தலைப் புலி­களின் கடு­மை­யான எறி­கணைத் தாக்­கு­தல்கள், இரா­ணு­வத்­துக்கு பேர­ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஆட்­டி­லறி மற்றும் மோட்­டார்­க­ளினால் எமது தரப்­புக்கு கடு­மை­யான இழப்­புகள் ஏற்­பட்­டன. இது 50 வீதத்­துக்கும் அதி­க­மாவே இருந்­தது. இதனால் விடு­தலைப் புலி­களின் ஆயுத மற்றும் வெடி­பொருள் வழங்­கலை கடற்­படை துண்­டிக்க வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக மாறி­யது. 

விடு­தலைப் புலிகள் தமது வெடி­பொ­ருட்­களை சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் பிர­தான கப்பல் பாதை­க­ளுக்கு அப்பால் மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யங்­களில், சேமித்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போது, அமெ­ரிக்­காவின் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான பூகோள போரை பயன்­ப­டுத்தி, அமெ­ரிக்கத் தூதுவர் மற்றும் அமெ­ரிக்க தூத­ரக பாது­காப்பு ஆலோ­ச­க­ரிடம் உதவி கோரப்­பட்­டது.

இந்த மிதக்கும் ஆயு­தக்­க­ளஞ்­சி­யங்­களை தாக்­கு­வ­தற்கு, கடற்­படை கையாளும் உத்­திகள் மற்றும் முறைகள் குறித்து பரி­சீ­லித்த பின்னர், இலக்­குகள் தொடர்­பான தேவை­யான தக­வல்­களை வழங்க அவர்கள் இணங்­கி­னார்கள். எனினும், எந்­த­வொரு சிவி­லியன் கப்­பலை நாம் தாக்கக் கூடாது, 100 வீதம் புலிப் போரா­ளிகள் இருந்தால் மட்­டுமே, அதனை தாக்க வேண்டும் என்ற உத்­த­ர­வா­தத்தை அமெ­ரிக்கத் தரப்பு கோரி­யது. மீண்டும் நடை­மு­றை­களை விளக்­கிய பின்னர், அவர்கள் திருப்­தி­ய­டைந்­தனர். நாம் அவர்­க­ளுக்கு வழங்­கிய பிர­தே­சத்தை மையப்­ப­டுத்தி செய்­ம­தியை நிலைப்­ப­டுத்­தினோம். 

2007 செப்­டெம்பர் மாதம் எமக்கு கிடைக்­கப்­பெற்ற புல­னாய்வு தக­வ­லுக்கு அமை­வாக குறித்த பகு­தியில் சந்­தே­கத்­திற்கு இட­மான சில கப்­பல்­களை அமெ­ரிக்­ககர் கண்­ட­றிந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அப்­போது கடற்­ப­டைக்கு ஒரு பெரும் சவால் எழுந்­தது. அந்­த­ளவு தூரத்தை எவ்­வாறு சென்­ற­டை­வது, மீண்டும் தளம் திரும்­பு­வது போன்ற நெருக்­க­டி­யான நிலை­மைகள் காணப்­பட்­டது. 

விடு­தலைப் புலி­க­ளுக்கு தகவல் கசிந்து விடும் என்­பதால், வெளி­நாட்டுத் துறை­மு­கங்­களில் எரி­பொருள் மீள் நிரப்­பு­வது குறித்தோ மேல­திக ஒத்­து­ழைப்­பு­களை பெற்றுக் கொள்­வது குறித்தோ சிந்­திக்­கவே இல்லை. இந்­நி­லையில் உரிய இலக்கை அடையும் நோக்கில் கடல் அமை­தி­யாக இருக்கும் போது ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்கள் விநி­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்கு தயார் நிலையில் வைக்­கப்­பட்­டன. 

பாரிய கலிபர் பீரங்­கி­களோ, கப்­பல்­க­ளுக்கு எதி­ரான ஏவு­க­ணை­களோ ஆழ்­கடல் ரோந்துப் பட­கு­களில் இல்­லாத நிலையில், அவற்றில் உள்ள ஆயு­தங்­க­ளையே பயன்­ப­டுத்­து­வ­தென முடிவு செய்­யப்­பட்­டது. இவற்­றுக்குத் துணை­யாக சிறப்பு படகு படை­ய­ணியின் பட­கு­களை ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்­களில் ஏற்றிச் செல்­லவும் திட்­ட­மி­டப்­பட்­டது. 2007 செப்­டெம்பர் 10ஆம் மற்றும் 11ஆம் திக­தி­களில் விடு­தலைப் புலி­களின் மூன்று கப்­பல்கள் அழிக்­கப்­பட்­டன. 2007 ஒக்­டோபர் 17ஆம் திகதி மற்­று­மொரு கப்­பலும் மூழ்­க­டிக்­கப்­பட்­டது. 

2006 ஆம் ஆண்டு தொடக்­கத்தில் இலங்­கையின் தென்­கி­ழக்கில் கல்­மு­னைக்கு அப்பால், விடு­தலைப் புலி­களின் கப்பல் ஒன்று மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. 2007ஆம் ஆண்டு தொடக்­கத்தில் மற்­றொரு கப்பல் தென்­ப­கு­தியில் தெய்­வேந்­திர முனைக்கு அப்பால் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.

வெற்­றி­க­ளுடன் தளம் திரும்­பிய கடற்­ப­டைக்கு, மேலும் கட­லுக்குள் சென்று இது போன்ற கப்­பல்­களை வேட்­டை­யாட வேண்டும் என்ற ஊக்கம் கிடைத்­தது. 1500 கடல் மைல்­க­ளுக்கு அப்பால் இந்­தோ­னே­சியா வரை அவர்கள் சென்­றி­ருந்­தனர். ஆனால், இது போன்று துணி­க­ர­மாகச் செயற்­ப­டு­வ­தற்கு பய­னுள்ள புல­னாய்வுத் தகவல் தேவைப்­பட்­டது. எனவே, 2007 ஆம் ஆண்டில் அமெ­ரிக்­கா­விடம் புல­னாய்வுத் தகவல் உத­விகள் மேலும் கோரப்­பட்­டன.

கடற்­ப­டையின் முன்னாள் புல­னாய்வுப் பணிப்­பா­ளரின் தக­வல்­களின் படி, அழிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில், புலிகள் பெருமளவிலான 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ ஆட்டிலறி குண்டுகளையும், 120 மி.மீ மோட்டார் குண்டுகளையும் ஏனைய வெடிபொருட்களையும் ஏற்றி வைத்திருந்தனர்.

2007 செப்டெம்பரில் அழிக்கப்பட்ட ஆஏ முழளாயை கப்பலில், 29,000 ஆட்டிலறி குண்டுகள் இருந்தன. இலத்திரனியல் போர்முறை மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், உயர்வலு வெளியிணைப்பு இயந்திரங்கள், நீரில் பயணிக்கும் ஸ்கூட்டர்கள், நீச்சல் பயன்பாட்டுக்கான வாகனங்கள், ரேடர்கள், புவிநிலைகாட்டிகள், ஏனைய போர்த் தளபாடங்களையும் விடுதலைப் புலிகள் இழந்தனர் என மேலும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-12#page-1

  • தொடங்கியவர்
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?
 
 
 
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?
நான்காம் கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு இலங்கை கட ற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியி ட்டுள்ளார்.
 
விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை இலங்கை கடற்படை அழிப்பதற்கு, ஆயுதக் கப்பல்கள் நடமாடும் இடத்தை அடையாளப்படுத்தும், முக்கியமான செய்மதிப் படங்களை அமெரிக்கா எவ்வாறு வழங்கி  உதவியது என்று  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, அண்மையில் வெளியிட்டுள்ள Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.
 
நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை கடலில் வெற்றி பெறுவதற்கும்,இராணுவம் தரைப் போரில் வெற்றியைப் பெறுவதற்கும்,  விமானப்படை சுட்டுவீழ்த்தப்படும் ஆபத்து பற்றிய அச்சமின்றி தரை இலக்குகளை தாக்குவதற்கும் இந்த ஆயுதக் கப்பல்களின் அழிப்பு உதவியாக அமைந்தது.
 
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு, கலாநிதிப் படிப்புக்கான ஆய்வுக்காக அட்மிரல் கொலம்பகே சமர்ப்பித்திருந்த இந்த ஆய்வு,  அமெரிக்கா புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டது, போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்தது, புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அவரது சகாக்களையும்  பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கொண்டு செல்ல முயன்றது என்று, சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் பொதுவாக உள்ள கருத்தை, ஒழிப்பதற்கு உதவுகிறது.
 
“மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிவு புலிகளின் ஆயுத மற்றும் வெடிபொருட்கள் வழங்கல் வலைப்பின்னல்களை முடக்க உதவியது. தரையில் போர் வலயத்தில் சுற்றிவளைப்பு ஆபத்தில் இருந்து புலிகள் தப்பிப் பிழைப்பதற்கு இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் முக்கியமான பங்கை வகித்தன.
 
இலங்கையில் சமச்சீரற்ற தரைப் போர் நடந்து கொண்டிருந்த போது,  விடுதலைப் புலிகள், ஆட்களையோ, துப்பாக்கிகளையோ பயன்படுத்தாமல்,  ஆட்லறிகள் மற்றும் மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
 
மரபுவழி இராணுவங்கள் பொதுவாக தமது வெடிபொருட்களைப் பயன்படுத்துவதில் வழக்கமாக கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
 
“இராணுவத்தினர் ஒரு எறிகணையை வீசினால், நாம் 20 எறிகணைகளை வீசுவோம்  ஆட்லறி, மோட்டார்கள் மூலம் நாம் அதிகளவு எறிகணைகளை வீசுவோம்” என்று முன்னாள்  கடற்புலியான சீலன் என்பவர், கூறினார்.
978-3-659-86575-6-full.jpg
விடுதலைப் புலிகளின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள்,  இராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது.  ஆட்லறி மற்றும் மோட்டார்களினால் எமது தரப்புக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. இது 50 வீதத்துக்கும் அதிகம் என்று நான் நினைக்கிறேன் என்று  முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
 
இதனால் விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் வெடிபொருள் வழங்கலை  கடற்படை துண்டிக்க வேண்டியது மிகவும் முக்கியமா னதாக மாறியது.
 
விடுதலைப் புலிகள் தமது வெடிபொருட்களை சர்வதேச  கடற்பரப்பில் பிரதான கப்பல் பாதைகளுக்கு அப்பால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில், சேமித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட போது, அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான  பூகோள போரை  பயன்படுத்தி, அமெரிக்கத் தூதுவர் மற்றும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகரிடம் உதவி கோரப்பட்டது.
 
இந்த மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை தாக்குவதற்கு,  கடற்படை கையாளும் உத்திகள் மற்றும் முறைகள் குறித்து பரிசீலித்த பின்னர், இலக்குகள் தொடர்பான தேவையான தகவல்களை வழங்க அவர்கள் இணங்கினார்கள்.
 
எனினும், எந்தவொரு அப்பாவி கப்பலையோ அல்லது சிவிலியன் கப்பலையோ நாம் தாக்கக் கூடாது, 100 வீதம் புலிப் போராளிகள் இருந்தால் மட்டுமே, அதனை தாக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கத் தரப்பு கோரியது. மீண்டும் நடைமுறைகளை விளக்கிய பின்னர், அவர்கள் திருப்தியடைந்தனர். நாம் அவர்களுக்கு வழங்கிய பிரதேசத்தை மையப்படுத்தி செய்மதியை நிலைப்படுத்தினர்.
 
2007 செப்ரெம்பர் மாதம் ஒரு நாள், எமக்கு ஒரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது, அந்தப் பகுதியில்  சந்தேகத்துக்குரிய சில கப்பல்களை அமெரிக்கர்கள் கண்டறிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறியது.
 
ஆனால் அப்போது  கடற்படைக்கு ஒரு பெரும் சவால் எழுந்தது.  அந்தளவு தூரத்தை எவ்வாறு சென்றடைவது, தரித்து நிற்பது, மீண்டும்  தளம் திரும்புவது எவ்வாறு என்ற வினா எழுந்தது.
 
போதுமாளனவு எரிபொருள், உணவு, ஆயுதங்களை கப்பலில் ஏற்றிச் செல்ல வேண்டும்.  கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் பயன்படுத்திய நிலையிலேயே வாங்கப்பட்டவை. அவை பழையவையாக இருந்ததால்,  நீண்டநாட்கள் பயணிப்பதால் சிக்கல்கள் வரலாம்.
 
கடற்கொந்தளிப்பினால், பழுதுகளும் ஏற்படலாம்.  விடுதலைப் புலிகளுக்கு தகவல் கசிந்து விடும் என்பதால்,  வெளிநாட்டுத் துறைமுகங்களில் எரிபொருள் மீள் நிரப்புவது குறித்து யோசிக்கப்படவேயில்லை.
 
கடல் அமைதியாக இருக்கும் போது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இறக்கப்பட்டு, தேவைப்படும் போது, விநியோகங்களை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன.
 
பாரிய கலிபர் பீரங்கிகளோ,  கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளோ ஆழ்கடல் ரோந்துப் படகுகளில் இல்லாத நிலையில், அவற்றில் உள்ள ஆயுதங்களையே பயன்படுத்துவதென் முடிவு செய்யப்பட்டது. இவற்றுக்குத் துணையாக சிறப்பு படகு படை யணியின் படகுகளை  ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் ஏற்றிச் செல்லவும் திட்டமிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்ப ல்களை எடுத்து வர இந்தப் படகுகள் அனுப்பப்படவிருந்தன.
 
சண்டைக்கான இறப்பர் படகுகளில்  விடுதலைப் புலிகளின் கப்பல்களை நெருங்கிச் சென்று ஆர்பிஜி தாக்குதல் நடத்தி மூழ்கடி ப்பதெனவும் திட்டமிடப்பட்டது.
 
2007 செப்ரெம்பர் 10ஆம் 11ஆம் நாள்களுக்கு இடையில், விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் அழிக்கப்பட்டன. 2007 ஒக்ரோபர் 17ஆம் நாள், இன்னொரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
 
முன்னதாக, 2006இன் தொடக்கத்தில்  இலங்கையின் தென்கிழக்கில் கல்முனைக்கு அப்பால்,  விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டிருந்தது. 2007ஆம் ஆண்டு தொடக்கத்தில் மற்றொரு கப்பல்  இலங்கையின் தென்பகுதியில் தெய்வேந்திர முனைக்கு அப்பால் மூழ்கடிக்கப்பட்டது.
 
வெற்றிகளுடன் தளம் திரும்பிய கடற்படைக்கு, மேலும் கடலுக்குள் சென்று இது போன்ற  கப்பல்களை வேட்டையாட வேண்டும் என்ற ஊக்கம் கிடைத்தது. 1500 கடல் மைல்களுக்கு, இந்தோனேசியா வரை  அவர்கள் சென்றிருந்தனர். ஆனால், இது போன்று துணிகரமாகச் செயற்படுவதற்கு பயனுள்ள புலனாய்வுத் தகவல் தேவைப்பட்டது. எனவே, 2007இல் அமெரிக்காவிடம் புலனாய்வுத் தகவல்கள் கோரப்பட்டன.
 
கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் தகவல்களின் படி, அழிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில், புலிகள் பெருமளவிலான 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ ஆட்டிலறி குண்டுகளையும், 120 மி.மீ மோட்டார் குண்டுகளையும் ஏனைய வெடிபொருட்களையும் ஏற்றி வைத்திருந்தனர்.
 
2007 செப்ரெம்பரில் அழிக்கப்பட்ட MV Koshia கப்பலில், 29,000 ஆட்லறி குண்டுகள் இருந்தன. இலத்திரனியல் போர்முறை மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், உயர்வலு வெளியிணைப்பு இயந்திரங்கள், நீரில் பயணிக்கும் ஸ்கூட்டர்கள், நீச்சல் பயன்பாட்டு க்கான வாகனங்கள், ரேடர்கள், புவிநிலைகாட்டிகள், ஏனைய போர்த் தளபாடங்களையும் விடுதலைப் புலிகள் இழந்தனர்.
 
MV Matsushima கப்பலில், டோபிடோக்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், இலகு ரக விமானம், மற்றும் தொன் கணக்கான வெடி பொருட்கள், ஆட்லறிக் குண்டுகள் என்பன ஏற்றப்பட்டிருந்தன.
 
மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிப்பு அனைத்துலக அளவில் புயலை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால்,  கடற்படை புலிக ளின் ஆயுதக்கப்பல்களையே அழித்தது,  சிவிலியன் கப்பல்களை தாக்கவில்லை என்று உலகம் அறிந்திருந்தது” என்றும் அவர் கூறி யுள்ளார்.
- முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே

http://www.onlineuthayan.com/article/270

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.