Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையா? பதவியா?

Featured Replies

gallerye_23574636_1710244.jpg

 

  • gallerye_223924557_1710244.jpg

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஆசையில் உள்ள, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட், இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு, சசிகலாவுக்கு சிறையா; முதல்வர் பதவியா என்பதை தீர்மானிக்க உள்ளதால், மன்னார்குடி கூட்டமும், அவருக்கு ஜால்ரா அடிக்கும் அமைச்சர்களும் பீதியில் உறைந்துள்ளனர்.

இதற்கிடையில், கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா நேற்று அங்கேயே தங்கினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது அண்ணி இளவரசி, ஜெ.,யின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர், வருமானத்துக்கு மீறி, 66 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, 1996ல் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, பல்வேறு தடைகள், இடையூறுகளுக்கு பின், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி, மைக்கேல் டி குன்ஹா, நான்கு பேரும் குற்றவாளிகள் என, 2014, செப்., 27ல் தீர்ப்பு வழங்கினார். நால்வருக்கும், தலா, நான்காண்டுகள் சிறை தண்டனையும்; ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய்; மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார்.
 

ஜாமினில் வெளி வந்தனர்



இதையடுத்து, நால்வரும் உடனடியாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, 21 நாட்களுக்கு பின், ஜாமினில் வெளிவந்தனர்.குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்டோர், பெங்களூரு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நால்வரையும் விடுதலை செய்து, 2015, மே, 11ல் தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து, கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. விசாரித்த, நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் அமர்வு, 2016, ஜூன், 7ல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இதற்கிடையில், உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா மரணமடைந்தார். அவர் வகித்து வந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும், பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்க முயற்சித்து வருகிறார்.
கட்சியின் பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தனக்கு உள்ளதாகவும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படியும், கவர்னருக்கு, சசிகலா நெருக்கடி கொடுத்து வருகிறார்.
ஆனால், சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை இருந்ததால், சசிகலாவுக்கு அழைப்பு விடுக்காமல், கவர்னர் வித்யாசாகர் ராவ் அமைதி காத்து வந்தார்.
 

காலை 10.30 மணிக்கு தீர்ப்பு


இந்நிலையில், 20 ஆண்டுகளாக, பல்வேறு நீதிமன்றங்களை கடந்து வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் இன்று காலை, 10:30 மணிக்குஅறிவிக்கிறது.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், இந்த தீர்ப்பு வெளியாக உள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படாது. சசிகலா உள்ளிட்ட மற்ற

மூவருக்குமான தீர்ப்பு அளிக்கப்படும்.

அதே நேரத்தில், 'சிறையா, பதவியா' என, சசிகலாவின் எதிர்காலத்தை இந்த தீர்ப்பு நிர்ணயிக்க உள்ளது. பெங்களூரு சிறப்பு கோர்ட் அளித்த தண்டனை உறுதி செய்யப்பட்டால், சசிகலா உடனே சிறையில் அடைக்கப்படுவார். அத்துடன், தண்டனை பெற்ற காலம் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு, அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால், 'தீர்ப்பு எப்படி இருக்குமோ' என, சசிகலாவின் மன்னார்குடி உறவுகளும், அவருக்கு ஜால்ரா தட்டி வரும் அமைச்சர்களும், கடும் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையில் கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், அங்கு சென்ற சசிகலா, இரவு அங்கேயே தங்கினார்.
 

தமிழக அரசியலை புரட்டி போடும்!



உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக இருக்கும்.கடந்த, 2014ல், சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டதால், ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்தார். முதல்வராக, பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.
மேல்முறையீட்டில், கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, முதல்வரானார் ஜெயலலிதா.இதற்கிடையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பரில் மறைந்தார். தற்போது, முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா இடையே பதவி போட்டி நடக்கும் சூழலில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு, தமிழக அரசியலில், பல்வேறு அதிரடி திருப்பங்களைஏற்படுத்தும்.
 

சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை


* 1996 ஜூன், 14 - தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன்சாமி, கவர்னரிடம் புகார் மனு அளித்தார்.

* ஜூன், 18 - அப்போதைய, தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதாவுக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது
* 1997 ஜூன், 4 - ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

* 2001 மே, 14 - ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது
* 2003 பிப்., 28 - நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்யும் வகையில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி, தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்

* நவ., 18 - வழக்கு விசாரணையை, கர்நாடக மாநிலம் பெங்களூரு கோர்ட்டுக்கு மாற்றி,

 

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

* 2005 மார்ச்சில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், விசாரணை துவங்கியது

* 2014 செப்., 27 - ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரையும், 'குற்றவாளிகள்' என, பெங்களூரு கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அன்றே, பரப்பன அக்ரஹாரா சிறையில், அனைவரும் அடைக்கப்பட்டனர்

* செப்., 29 - ஜெயலலிதா சார்பில், கர்நாடகா ஐகோர்ட்டில், அப்பீல் மனுவும், ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது

* அக்., 7 - ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை, கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

* அக்., 17 - ஜெயலலிதா உட்பட நால்வருக்கும், சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது

* அக்., 18 - ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரும், 21 நாள் சிறை வாசத்திற்குப் பின், ஜாமினில் வெளிவந்தனர்

* 2015 மே, 11 - ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்து, கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பளித்தது

* ஜூன், 23 - கர்நாடகா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அந்த மாநில அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது

* மே, 23 - அ.தி.மு.க., தமிழக சட்டசபை தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது; ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார்

* 2016 செப்., 22 - உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

* டிச., 5 - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, மரணம் அடைந்தார்

* 2017 பிப்., 13 - கடந்த, 2016 ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு, இன்று அறிவிக்கப்படுகிறது.

 

தீர்ப்பு எப்படி அமையும்?




சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது.
சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட், இன்று தீர்ப்பளிக்கிறது.

தீர்ப்பு இப்படி தான் இருக்கும் என, யாரும் உறுதியாக கூற முடியாது. ஆனால், எந்தெந்த வகையில் வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி, சட்ட நிபுணர்கள் கூறியதாவது:

* கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யலாம்; அதாவது, நால்வரையும் விடுதலை செய்ததை உறுதி செய்யலாம்

* உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யலாம். அதாவது, தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்யலாம்

* உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்பலாம். அப்போது, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு அமலில் இருக்கும். ஜாமின் பெற்றிருப்பதால் சிறை செல்ல வேண்டியதில்லை

* உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும், ஒருமித்த உத்தரவை பிறப்பிக்காமல் வெவ்வேறு உத்தரவையும் பிறப்பிக்க முடியும். அப்படி வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், மூன்று நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரணைக்கு செல்லும்

* சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் திருப்பி அனுப்பலாம். அப்போது, மறுபடியும் முதலில் இருந்து விசாரணை துவங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710244

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.