Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி ..

 
உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா? லக்னோ:ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும், கட்சிகளின் தேர்தல் வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில், உ.பி., தேர்தல் களம் அமைந்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்க வுள்ள தேர்தலில், இரண்டு கட்டம் முடிந்துள்ளது. உ.பி., சட்டசபைக்கு, கடந்த இரு முறை நடந்த, தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யும் போது, ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறிய மாற்றமும், கட்சிகளின் வெற்றி வாய்ப்பில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.தற்போது, ஆளும் சமாஜ்வாதி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.,வும் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.கடந்த, 2007 சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ், 30 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைத்தது. 


சமாஜ்வாதி, 26 சதவீதம், பா.ஜ., 17 சதவீதம் மற்றும் காங்., 8.5 சதவீத ஓட்டுகளை பெற்றன. அதே நேரத்தில், 2012ல், சமாஜ்வாதி யின் ஓட்டு சதவீதம், 3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால், முந்தைய தேர்தலில், 97 இடங்களை வென்ற அந்த கட்சி, 224 தொகுதிகளில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் ஓட்டு, 4.5 சதவீதம் மட்டுமே குறைந்தது. ஆனால், அதன் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, 
206ல் இருந்து, 80 ஆக குறைந்தது.கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், 27.42 சதவீத ஓட்டுகளுடன், பகுஜன் சமாஜ், 20 தொகுதிகளில் வென்றது. 

காங்., 18.25 சதவீத ஓட்டுகளுடன், 21 தொகுதிகளி லும்; பா.ஜ., 17.5 சதவீத ஓட்டுகளுடன், 10 தொகுதி களிலும் வென்றன. அந்த தேர்தலில், சமாஜ்வாதி, 23.26 சதவீத ஓட்டுகளுடன், 23 தொகுதிகளை கைப்பற்றியது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது, உ.பி., யில்,பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 42.6 சதவீதமாக உயர்ந்து, 71 தொகுதிகளில் வென்றது. அதாவது, மொத்தமுள்ள லோக்சபா தொகுதிகளில், 90 சதவீத இடங்கள், பா.ஜ.,வுக்கு கிடைத்தன.
 
202 தொகுதிகளில்

லோக்சபா தேர்தலில், 403 சட்டசபை தொகுதி வாரி யாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதத்தை பார்கும் போது, 80 சதவீத தொகுதிகளில், மற்ற கட்சிகளை விட, அதிக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைத்தன.
தற்போதைய நிலையில், கடந்த லோக்சபா தேர்த லில் பெற்றதை விட, சட்ட சபை தொகுதி வாரியாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 10 சதவீதம் குறைந்தா லும், தனிப் பெரும்பான்மைக்கு தேவையான, 202 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற முடியும் என, தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், இந்த தேர்தலில் சிறிய கட்சிகளும், ஒவ்வொரு ஜாதி பிரிவினரின் ஓட்டுகளும், தேர்தல் முடிவை மாற்றக் கூடிய சக்திகளாக உள்ளன. அதே போல், நடுநிலையாளர்களின் ஓட்டுகளும், அடுத்தது ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை முடிவு செய்யும் நிலையில் உள்ளது.
 
பிரியங்கா பிரசாரம் செய்யாதது ஏன்?

உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதிக்கு உட் பட்ட, சட்டசபை தொகுதிகளில், காங்., வேட்பாளர் களை ஆதரித்து, காங்., துணைத் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா,பிரசாரம் செய்யாததற்கான காரணம் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார். 

இது குறித்து, ஸ்மிருதி கூறியதாவது:
உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆளும் சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, மக்களை சந்திக்க பயம். எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம், காங்., துணைத் தலைவர் ராகுலை அழைத்துச் செல்கிறார். ஆனால், லோக்சபா தேர்தலில், ராகுல் வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்களை சந்திப்பதில், காங்கிரசினருக்கு பயம். ஏனென்றால், தேர்தல் பிரசாரத்தின் போது, அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை. இதனால் தான், ராகுலின் சகோதரி பிரியங்கா, அமேதி தொகுதியில் பிரசாரம் செய்ய மறுக்கிறார். 

லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிவதால் தான், என்னால் இங்கு தைரியமாக பிரசாரம் செய்ய வர முடிகிறது.சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, உ.பி.,யில், பா.ஜ., தலைமையி லான ஆட்சி அமைய வேண்டும் என்பதே, ஒவ்வொரு தொண்டனின் விருப்பம். அதற்கா கவே, அனைவரும் பாடுபட்டு உழைக் கிறோம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
 
பிரசாரம் இன்று ஓய்வு


உ.பி.,யில், ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல், 19ல் நடக்க உள்ளது. அதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் முடிகிறது. மாநிலத்தின், 12 மாவட்டங்களில் உள்ள, 69 தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்க உள்ளது. 2012 சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி, 55 தொகுதிகளில் வென்றது.

http://namathu.blogspot.ca/2017/02/blog-post_830.html

  • 3 weeks later...

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

 

 
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள் | படம்: சந்தீப் சக்சேனா.
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள் | படம்: சந்தீப் சக்சேனா.
 
 

கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது.

மாலை 5 மணிக்குள் முழு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தப்பக்கத்தை அவ்வப்போது ரிபிரெஷ் செய்யவும்..

தற்போதைய முன்னிலை நிலவரம்:

உத்தரப் பிரதேசம்:

 

கட்சிகள்

பாஜக

எஸ்.பி.-காங்.,கூட்டணி

பி.எஸ்.பி

மற்றவை

மொத்தம் 403 தொகுதிகள்

304

70

24

5

 

பஞ்சாப்:

 

கட்சிகள்

காங்கிரஸ்

ஆம் ஆத்மி

அகாலி தளம்- பாஜக கூட்டணி

மொத்தம் 117 தொகுதிகள்

71

27

19

 

கோவா:

கட்சிகள்

காங்கிரஸ்

பாஜக

ஆம் ஆத்மி / மற்றவை

மொத்தம் 40 தொகுதிகள்

11

8

0 / 4

 

மணிப்பூர்:

கட்சிகள்

காங்கிரஸ்

பாஜக

இடதுசாரிகள்

மொத்தம் 60 தொகுதிகள்

22

14

2

 

உத்தரகாண்ட்:

கட்சிகள்

பாஜக

காங்கிரஸ்

பிஎஸ்பி / மற்றவை

மொத்தம் 70 தொகுதிகள்

51

16

0 / 3

11.40AM: கோவா: முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர், மாந்த்ரெம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்தேயிடம் தோல்வி அடைந்தார்.

11.30AM: உத்தரப் பிரதேச தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியை குற்றம் சொல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷக் மனு சிங்வி கூறியுள்ளார். | உ.பி தேர்தல் தோல்விக்கு ராகுலை குற்றம் சொல்ல வேண்டாம்: அபிஷேக் மனு சிங்வி |

11.05AM: பசு இறைச்சி வைத்திருந்ததாக இக்லக் என்பவர் கொல்லப்பட்ட தாத்ரி தொகுதியில் பாஜக வேட்பாளர் தேஜ்பால் சிங் நாகர் பகுஜன் வேட்பாளரைக் காட்டிலும் 8147 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். | மோடி அலையே காரணம்: உ.பி. பாஜக தலைவர்கள் உற்சாக கோஷம் |

10.45AM: உ.பி: தோல்வி எதிரொலியால் வாரணாசியில் அர்தாலி பஜாரில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. மோடியின் சொந்தத் தொகுதியான இங்கு அவரது 3 நாள் கடுமையான பிரச்சாரத்தை எதிர்த்து அகிலேஷ்-ராகுல் கூட்டணியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக வாரணாசி பாஜக அலுவலகத்தில் ‘ஹர் ஹர் மோடி, ஜெய் ஸ்ரீராம் என்று பாஜக தொண்டர்கள் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.

10.34AM: டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் கோலாகலம் துவங்கி விட்டது. உபி, உத்தராகண்டில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்கும் அளவிலான முன்னிலை கிடைத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு: | டெல்லி பாஜக அலுவலகத்தில் கோலாகலம்: உபி, உத்தராகண்டில் வெற்றிமுகம் பெற்றதால் உற்சாகம் |

10.30AM: உ.பி.யில் ராம்நகர் மற்றும் அயோத்தியா தொகுதிகளில் பாஜக முன்னிலை

10:20 AM: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் முன்னிலை

10.10 AM: கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் காங்கிரஸ் வேட்பாளரை விட 1000 வாக்குகள் பின்னிலை.

10.05.AM: உ.பி. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் முன்னிலை

10.02 AM: உ.பி.: சமாஜ்வாதி தலைவர் ஷிவ்பால் யாதவ் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிஷ் யாதவ்வை காட்டிலும் 5,742 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வின் வெற்றி மாநிலங்களவையில் அதன் வலுவைக் கூட்டும், மாநிலங்களவையில் தங்கள் எண்ணிக்கை மூலம் காங்கிரஸ் கட்சி பாஜக-வின் பல மசோதாக்களுக்கு சிக்கல்களை எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

முசாபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் ரானா ஷாம்லி தொகுதியில் 2,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக வேட்பாளர் ரிதா ஜோஷியிடம் பின்னடைவு.

 

3 அடுக்கு பாதுகாப்பு:

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 20,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 70 தொகுதிகளை கொண்ட உத்தராகண்டில் 15 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/india/5-மாநில-சட்டப்பேரவைத்-தேர்தல்-முடிவுகள்/article9580567.ece?homepage=true

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கே வாக்கு விழுந்தது: மாயாவதி குற்றச்சாட்டு

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/11142247/1073140/Press-any-button-vote-goes-to-BJP-Mayawati.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.