Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது

Featured Replies

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது

 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம குழு ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக பொலிஸில் நடிகை பாவனா முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். 

இதுதொடர்பாக, பாவனாவின் கார் சாரதியான மார்ட்டினை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்துடன்  தொடர்புடைய 6 பேரை கேரளா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

‘ரூ.30 லட்சம் கொடு... இல்லையெனில்..?!' பாவனாவுக்கு மிரட்டல்

தமிழ், மலையாள சினிமா உலகின் முன்னணி கதாநாயகியான பாவனாவை, காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், அவரிடம் டிரைவராகப் பணியாற்றியவரே முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது.

பாவனாவுக்கு மிரட்டல்

நடிகை பாவனா தற்போது ஜீன்போல்லால் இயக்கும் ‘ஹனிபி–2’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 17–ம் தேதி திருச்சூரில் படப்பிடிப்பை முடித்து விட்டு, ‘டப்பிங்’ பணிக்காக இரவு 8 மணி அளவில், படக்குழுவினர் ஏற்பாடுசெய்த காரில் கொச்சிக்குச் சென்று கொண்டிருந்தார். மார்ட்டின் என்பவர் காரை ஓட்டியுள்ளார். நெடும்பஞ்சேரி அருகே பாவனா சென்ற கார், மற்றொரு கார் மீது மோதியது. ஓட்டுநர் மார்ட்டின் காரை விட்டு இறங்கியுள்ளார். மற்றொரு காரில் வந்தவர்கள் மார்ட்டினை அடித்து, அவரைத் தங்கள் காரில் ஏற்றினர். 

பின்னர் தங்கள் காரை ஓட்டுமாறு மார்ட்டினிடம் சொல்லிவிட்டு, பாவனா இருந்த காரில் ஏறிக் கொண்டனர். பின்னர் பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதனை வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘இதை இணையத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும்’ என பாவனாவை மிரட்டியுள்ளனர். பலரிவட்டம் அருகே வந்ததும் பாவானாவின் காரில் இருந்து இறங்கி, மார்ட்டின் ஓட்டி வந்த தங்கள் காரில் ஏறி தப்பி விட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களிடம் பாவனா போராடியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாவனா, இயக்குநர் லாலுக்கு போனில் கதறியுள்ளார். அவர் நெடுமஞ்சேரி காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். 

பாவனாவுக்கு மிரட்டல்

நெடுமஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, பாவனாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. போலீஸ் விசாரணையில், இந்த சம்பவத்தில் பாவானாவின் டிரைவர் மார்ட்டினுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சுனில் குமார் என்ற பல்சர் சுனி, வடிவேல் பிரதீப், மணிகண்டன், பிஜேஷ், சலீம் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

சுனில்குமார் தான் இந்த கும்பலுக்குத் தலைவன். இவர் பாவனாவின் முன்னாள் டிரைவர். இவர் மீது பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. சுனில்குமாரின் கிரிமினல் பின்புலம் தெரிய வந்ததும் பாவனா அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளார். அதன்பின், மார்ட்டின் பாவனாவிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கொடுமை என்னவெனில் மார்ட்டின், சுனில்குமாரின் நண்பர். மார்ட்டின் பின்புலத்தை ஆராய்ந்த போலீசார், இந்த சம்பத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர். 

விசாரணையை முடுக்கிய போலீஸார், டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவர் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டனர். சுனில் குமார் இன்னும் பிடிபடவில்லை. ஆனால், அவரது போன் உரையாடல்களை ஆராய்ந்தபோது, இந்த சம்பவத்துக்குப் பின், கேரளத் திரையுலகின் ஆறு முக்கிய பிரமுகர்களிடம் அவர் பேசியது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் முன்னணி தயாரிப்பாளர். எனவே, இதில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

நடிகை பாவானாவிடம் அத்துமீறி நடந்துவிட்டு, இந்தக் கும்பல் இரண்டாகப் பிரிந்துள்ளது. ஒரு குழு தமிழகத்துக்கு வந்துள்ளது. சுனில்குமார் உள்ளிட்ட மூன்று பேர் கேரளாவில்தான் பதுங்கியுள்ளனர். இவர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாக துன்புறத்தி, அதைப் படம் எடுத்து அதைக்காட்டியே 'பிளாக் மெயில்' செய்து பணம் பறிப்பதே  இந்தக் கும்பலின் நோக்கம். தனக்குக் கிடைக்கும் பணத்தில் ரூ.15 லட்சத்தை மற்றவர்களுக்கு பங்கிட்டுத் தருவதாக சுனில்குமார் ஆசை காட்டியுள்ளார். அதனால், மற்றவர்களும் சுனில்குமாருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால், பாவனா தைரியமாக போலீசை அணுகியதால், கும்பலின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. 

பாவனாவுக்கு மிரட்டல்

முக்கிய குற்றவாளியான சுனில்குமார் 17 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர். குடும்பத்துடன் தொடர்பில்லை. எப்போதாவதுதான் சொந்த ஊருக்குச் செல்வார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அதன்பின் அங்கு செல்லவில்லை. ஆனால், மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகர், நடிகைகளிடம் டிரைவராக பணி புரிந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் முகேஷிடமும் சுனில் குமார் டிரைவராக பணிபுரிந்துள்ளார். முகேஷ் , 'சுனில் குமாரின் கிரிமினல் பின்புலம் எனக்குத் தெரியாது' என இப்போது கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு மலையாள திரைப்பட சங்கத் தலைவர் நடிகர் இன்னசென்ட், நடிகர் மம்முட்டி, மோகன்லால், நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் 'குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/81395-reason-behind-bhavana-molested.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.