Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சயனைட் அருந்தி தற்கொலை: ராஜூவ் காந்தி கொலைக்கும் அதுவே காரணம்

Featured Replies

குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பிர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக மேஜர் ஷெனன் சிங்குக்கு இலங்கை இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங் எழுதி வெளியிட்டுள்ள நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mission overseas - daring operations by the indian military என்ற தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிட்டப்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1987ஆம் ஆண்டு பவன் என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்த நூலில் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்திய அமைதி காக்கும் படையினர் வசம் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 13 பேரையும், இலங்கை இராணுவத்திடம் ஒப்டைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த 13 பேரையும் தடுத்து வைத்திருந்த பலாலி உணவகத்தின் பாகாப்பை இலங்கை இராணுவத்தினரிடன் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை 10 மணியளவில் இலங்கை இராணுவுத்தின் 54ஆவது படைப்பிரிவில் இருந்து இந்த தகவல் வழங்கப்பட்டது.

எனினும், இந்த தகவல், இந்திய அமைதி காக்கும் படைக்கு மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியை எற்படுத்தியிருந்தாகவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், குறித்த 13 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீண்டும் கையளிப்பது முறையல்ல எனவும், மேஜர் ஷெனன் சிங் கருதினார்.

அத்துடன், குறித்த 13 பேரும் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் அடிப்பணியாது என விடுதலைப்புலிகள் நம்பியிருந்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதயைடுத்து, இலங்கை இராணுவத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை டெல்லிக்கு தெரியப்படுத்திய போது குறித்த 13 பேரையும் இலங்கை இராணுவத்திடம் கையளிக்குமாறு மேஜர் ஷெனன் சிங்குக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

இதனைக்கேட்டு தெரிந்து கொண்ட முன்னாள் போராளி குமரப்பா, ”ஏன் இப்படி செய்கின்றீர்கள்..? எங்களை இலங்கை இராணுவத்திடம் கையளித்தால் அதுவே எமது கடைசி நாளாக அமையும். இதனை எங்கள் தலைவர்கள் கூறியிருக்கின்றார்கள்” என மேஜர் ஷெனன் சிங்கிடம் தெரிவித்தார்.

எனினும், குறித்த 13 பேரையும் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைய அன்று மாலை 4 மணிக்கு இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், சிறிது நேரத்தின் பின்னர் மேஜர் ஷெனன் சிங்கை தொடர்பு கொண்ட இலங்கை இராணுவத்தினர் குறித்த 13 பேரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியில் குறித்த விடயமானது இந்தியாவின் முன்னாள் பிராமர் ராஜூவ் காந்தியை கொலை செய்வதற்கு காரணமாக அமைந்தது என அந்த புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/special/01/137410?ref=top-popular

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.