Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலப்பு நீதிமன்றம் இலங்கையில் சாத்தியமற்றது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவே மாற்றுவழி என்கிறார் பிரதமர் ரணில்

Featured Replies

கலப்பு நீதிமன்றம் இலங்கையில் சாத்தியமற்றது

p15-6d8930ec414872827b33825a3b4ca5050a44b1f9.jpg

 

உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவே மாற்­று­வழி என்­கிறார் பிர­தமர் ரணில்

(க.கம­ல­நாதன்)

கலப்பு நீதி­மன்ற கட்­ட­மைப்­பினை எமது நாட்­டினுள் நிறு­வு­வது சாத்­தி­யப்­ப­டாது. அதனை நிறுவ­வேண்­டு­மாயின் பொது வாக்­கெ­டுப்­புக்குச் சென்று மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­வேண்டும். ஆகவே மாற்று வழி­யாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை விரைவில் நிறு­வ­வுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சட்ட வாரத்­தினை முன்­னிட்டு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் தற்­போது நல்­லாட்சி உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் வரையில் நாட்டின் நீதிக் கட்­ட­மைப்­புக்­களை வலுப்­ப­டுத்­து­வது குறித்து தற்­போது சிந்­தித்து வரு­கின்றோம். 

அதன் பிர­காரம் தற்­போது சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் நீதி­மன்ற கட்­ட­மைப்பும் அதன் பணி­களை சிறப்­பா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் முன்­னெ­டுத்து வரு­கின்­றன. தற்­போது நாம் புதி­ய­தொரு நீதி­ய­ர­சரை தேர்வு செய்­துள்ளோம் அவரின் பணி­களும் சிறப்­பாக அமைய வேண்டும் என்று வாழத்­து­கின்றோம்.

அதேபோல் கடந்த இரண்டு வருட ஆட்­சியில் நாட்டின் நீதி கட்­ட­மைப்பு உள்­ளிட்ட சட்ட விவ­காரம் சார்ந்த ஸ்தலங்கள் மற்றும் ஊட­கங்கள் ஆகி­ய­வைக்கு வெகு­வான சுதந்­தி­ரத்­தினை நாங்கள் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம்.

கலப்பு நீதி­மன்ற கட்­ட­மைப்­பினை எமது நாட்­டினுல் நிறு­வு­வது சாத்­தி­யப்­ப­டாது. கலப்பு நீதி­மன்­றத்­தினை நிறு­வேண்­டு­மாயின் பொது வாக்­கெ­டுப்­புக்குச் சென்று மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யினை பெற வேண்­டி­யி­ருக்கும் வேண்­டி­யி­ருக்கும்.இந்த நிலைப்­பாட்­டினை உரிய தரப்­புக்­க­ளி­டத்தில் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். எனவே மாற்று வழி­யினை நாட வேண்டும்.

எனவே கலப்பு நீதி மன்­றத்­திற்கு மாற்று முறை­யாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை விரைவில் நிறு­வ­வுள்ளோம் மேற்­படி கலப்பு நீதி­மன்ற கட்­ட­மைப்­பினை நாம் நிறுவ முற்­பட்டால் அதற்­காக பொது வாக்­கெ­டுப்­பொன்­றினை நடத்த வேண்­டி­யி­ருக்கும்.

அதனால் இதற்கு மாற்­று­வ­ழி­யொன்­றினை கண்­ட­றிய வேண்­டிய தேவை எமக்கு ஏற்­பட்­டுள்­ளது எனவே விரைவில் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வினை நிறுவி அதன் பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். அது மாத்­தி­ர­மன்றி காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­திற்­கான அலோ­சகர் ஒரு­வரும் விரை­வி­லேயே நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.

எவ்வாறாயினும் இன்று நீதிதுறை சுயாதீனமாக இயங்கி வருகின்றது. வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவதை கருத்திற்கொண்டு அவற்றை துரிதப்படுத்துவதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன அதற்கான சட்ட நி்புணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்வோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-04#page-1

51 minutes ago, நவீனன் said:

கலப்பு நீதி­மன்ற கட்­ட­மைப்­பினை எமது நாட்­டினுள் நிறு­வு­வது சாத்­தி­யப்­ப­டாது. அதனை நிறுவ­வேண்­டு­மாயின் பொது வாக்­கெ­டுப்­புக்குச் சென்று மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­வேண்டும். ஆகவே மாற்று வழி­யாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை விரைவில் நிறு­வ­வுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

தமிழ் ஈழமே தமிழருக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டுமொருமுறை நீண்ட காலமாக தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் ஐக்கிய தேசியக் கட்சி எனப்படும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் தற்போதைய தலைவர் ரணிலால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.